Saturday, May 22, 2010

பலே ஜெயலலிதா மேடம்

மின்சார வெட்டுக்கள், விலைவாசி உயர்வுகள், குள ஆக்கிரமிப்புகள், காலாவதி அதிர்ச்சிகள் என்று மக்களுக்கு நாளுக்கு நாள் அதிர்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்க, புதியதாய் மாபெரும் விஷயத்தை கையெலெடுத்து போரட்டம் செய்ய தன் படைகைளை ஏவியிருக்கிறார், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியின் தலைவர், தமிழ் நாட்டை இரு முறை ஆண்ட செல்வி ஜெயலலிதா அவர்கள். என்ன போராட்டம், தலைமைசெயலக ஊழியர்கள் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் தாக்கியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பது..(ஏனைய பெரும் போராட்டங்கள் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்துகொண்டிருப்பீர்கள்)

இன்னமும் குளிர் அறையில் இருந்து உலகம் பார்த்து அரசியல் நடத்துகிறார் பாவம், கடந்த நாடாளுமன்ற தேர்தல் தந்த பாடம் கூட இன்னும் சுட்டிக்காட்டபடவில்லையோ என்னவோ.

சிறிதாவூர் நில ஆக்கிரமிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா அவர்களை விடுவித்திருக்கிறார்கள். தாசில்தாரர் இடம் மாற்றிய போது, ஆட்சியில் யார் இருந்தார்கள்? அவனவன் ஒரு கார்பரேட் கம்பெனி போல ஒவ்வொரு ஆண்டு தனது நிறுவனத்தின் மதிப்பை கூட்ட 'என்னவெல்லாமோ' செய்துகொண்டிருக்க, இன்னும் காக்கை உட்கார பனம் பழம் விழுமா, ராஜிவ் இறப்பில் மகுடம் சூட்டியது போல காத்திருப்பது விந்தைக்குறியது.

தனெக்கென்று ஒரு சேனல் வைத்துகொண்டு அதில் தன்னை பற்றியே பேசிக்கொண்டு, கிணற்று தவளை மாதிரி இருப்பது, இப்படியொரு ஆலமர கட்சி அடிசாய போகிறதே என்று, லட்சக்கணக்கான அநுதாபிகள் கண்ணீர் விடுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதை தான் குறிக்கிறது.

எதிர்கட்சி சிறந்திருந்தால்,செயல்பாட்டோடு இருந்தால் நிச்சயம் மக்கள் நலம் பெறுவர். பெறுவோமா?

2 பின்னூட்டங்கள்:

said...

கார்த்தி..

என்ன திடீர்ன்னு இன்னிக்கு மேட்டரெல்லாம் தூள் பறக்குது..?

அம்மா.. இனிமே அவ்ளோதான்..! அடுத்த முறை பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்குமா என்பதுகூட சந்தேகந்தான்.

said...

//எதிர்கட்சி சிறந்திருந்தால்,செயல்பாட்டோடு இருந்தால் நிச்சயம் மக்கள் நலம் பெறுவர். பெறுவோமா?//
ஜெயலலிதா அரசியலில் இருக்கும்வரை சாத்தியமில்லை.
சரியான எதிர்கட்சி தலைவர் அமையாதது நமது துரதிருஷ்டம்தான்.