இப்படியும் நடந்து இருக்கலாமோ - அஜித்தும் நடிகர் சங்க உண்ணாவிரதமும்
புரட்சி புண்ணாக்கு எழுதிய இந்த கட்டுரையை படியுங்கள், நீங்கள் சொல்வீர்கள் இப்படியும் நடந்திருக்கலாமோ என்று
இது காற்றோடு வந்த கதைகளையும், நேற்றோடு ஆரம்பித்த வசந்தங்களையும், நாள் என்னும் நாளின் ஆசைகளையும் பதியமிடும் உலகம்
புரட்சி புண்ணாக்கு எழுதிய இந்த கட்டுரையை படியுங்கள், நீங்கள் சொல்வீர்கள் இப்படியும் நடந்திருக்கலாமோ என்று
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
12:09 PM
7
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, திரைப்படம்
கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் சார்பாக இந்த வாரம் கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லாவை திரையிடுகிறார்கள்.. டிக்கட்களுக்கு, சங்கத்தின் செயலாளர் சரவணகுமாரை (740 549 3707) அணுகவும்.
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
11:07 AM
8
பின்னூட்டங்கள்
Labels: அமெரிக்கா, அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்
நீண்ட நெடு நாட்களாக எனக்கு சந்தேகம். கோயிலில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்கிறார்களே, தமிழிலும் செய்யலாமே என்று. அர்ச்சனை என்னவோ கடவுளுக்குத் தான் செய்கின்றோம், ஆனால் என்ன சொல்லி செய்கிறார்கள் என்று தெரிந்தால், கும்பிட வந்தவர்களுக்கு அதனோடு ஒன்றி, மனசு உருகி சுவாமியை தரிசனம் பண்ணமுடியும். இல்லையென்றால், பூஜை செய்பவர் அவர் பாட்டுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்ல, ஒன்றும் புரியாமல் கை குவித்து நாம் அவரையும் சாமியையும் பார்த்து முழித்து கொண்டிருக்க வேண்டும். சமீப காலங்களில், தமிழில் அர்ச்சனை என்பது ஒரளவுக்கு பரவி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, வேளச்சேரியில் இருக்கும் சிம்ம நரசிம்மர் கோயிலில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்கிறார்கள் (நான் அறிந்த வரையில்). ஆண்டாள் திருப்பாவையெல்லாம் அவர்கள் பாடும் போதும் நமக்கும், நமக்குள்ளும் அந்த பரவசம் தொற்றிக்கொள்கிறது என்பது உண்மை தான். அதில் நான் பல நாட்கள் உருகியதும் உண்மைதான்.
சரி, இதில் எங்கே பில்லா படம் வருகிறது என்று கேட்கின்றீர்களா. விஷயத்திற்கு வருகிறேன். படத்தில் முருகனை போற்றிப் பாடி ஒரு பாடல் இருக்கிறது, விஜய் யேசுதாஸ் குரலில். அதில், பாடல் முடியும் போதும் தமிழ் கடவுள் முருகன், அவருக்கு தமிழில் அர்ச்சனை செய்யலாமே என்று அர்த்தம் தரும் பாடல் வரி வருகிறது. கேட்கும் போதும் சட்டென்று கவனத்தை ஈர்த்த வரிகள். பாடலாசிரியர் பா. விஜய், கிடைத்த தருணத்தை அழகாக பயன்படுத்தியிருக்கிறார். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். நெஞ்சுருக வேண்டி ஆண்டவனை வழிபடும் ஒரு இடத்தில், புரியாமல் நின்று தலையசைப்பது சரியாகுமா என்று கேட்டால் இல்லை.. தமிழில் அர்ச்சனை என்பதை இன்னும் சற்று அதிகமான குரலில் முழக்கமிட வேண்டும். கிறித்துவ மதம் இந்தியாவில் இவ்வளவு விரைவாக பரவியதற்கு ஒரு காரணம், அதன் மொழியாக்கமும் மக்களை சென்று அவர்கள் விஷயங்களை கொண்டு சேர்த்தவிதமும் தான். மக்களுக்கு, பக்தர்களுக்கு புரிந்தால் தான் அந்த வேண்டுதல், பக்தி மனசுக்குள் நிற்கும். இவ்வாறு நிறைய அர்த்தமுள்ள விஷயங்களை பாடலாசிரியர்கள் பாடல்களில் ஏற்றினால், மக்களை சென்று சுலபமாக கருத்துகள் சென்று சேரும்.
கொசுறு : பில்லா பாடல்கள் அடங்கிய கேசட், சிடிக்கள், சிவாஜிக்கு அடுத்து இந்த வருடத்தில் அதிகமாக விற்று இருக்கின்றன.
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
1:21 PM
15
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்
தீபாவளி படங்களில் எதுவும் சூப்பர் ஹிட் இல்லை என்று முடிவு செய்த விநியோகஸ்தர்கள், இப்போது ஆவலுடன் எதிர்பார்ப்பது ரஜினியை தனித்து அடையாளம் காட்டிய பில்லாவின் ரீமேக் தான்.. தீபாவளிக்கு வரவிருந்த படம், பிற்தயாரிப்பு (நன்றி : PIT) வேலைகளினால் தற்போது தள்ளிப்போய்விட்டது. இப்போது, ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். படத்தின் முன்னோட்ட வடிவம் தீபாவளி அன்று முதன் முதலாய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
இதுவரை யாரும் காட்டாத வகையில் அஜித்தை ஸ்டைலாக அமர்க்களமாக காட்டியிருக்கிறார்கள். பிண்னணி இசையில் யுவன் பட்டையை கிளப்பியிருக்கிறார். இந்த வருடத்தில் இந்தப்படமாவது அவருக்கு கைகொடுக்கட்டும்.. நயன் அதிரடியாய் இளமையாய், ஆக்ரோஷ ஆப்பிளாய் ஜொலிக்கிறார்.. படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்திருப்பதாய் சொல்கிறார் விஷ்ணுவர்தன்.
படம் வசூலை குவித்தால், எல்லாப் புகழும் விஷ்ணுவுக்கே..
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
10:36 AM
6
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம், யூ டியூப்
ஹலோ கார்த்தியா.. நான் ஏஞ்சல் பேசுறேன்..
(ஏஞ்சலா? குரலே தேன்ல குழச்ச மாதிரி இருக்கே.. நம்ம வாழ்கையிலும் வசந்தமா..வெயிட் வெயிட்.. இது எங்கயோ கேட்ட குரலா இருக்கே..ஆஹா.. நம்ம சிட்டுக்குருவி லவ்வர் வாய்ஸ்ல.. அடப்பாவி.. )
எப்படி இருக்க ஏஞ்சல்.. நம்ம சி.குவுக்கு என்ன ஆச்சு.. நீ பேசுற..
கார்த்தி..மொதல்ல சி.குன்னு கூப்பிடறதா நிறுத்துறியா? ஏதோ லக்கிமேன்ல, எமன் வேஷத்துல வர்ற கவுண்டமணி சித்ரகுபதனா வர்ற செந்தில் ஷார்ட்டா சி.குன்னு கூப்பிடுற மாதிரி இருக்கு..
இல்ல ஏஞ்சல்.. பாசமா சுருக்கமா கூப்பிட்டேன்..
அதுக்குத் தான், ப்ரின்ஸ்ன்னு பேர் வச்சிருக்கோம்ல.. அதை வச்சு கூப்டா போதும்..
சொல்லவே இல்ல..
நீ கேக்கவே இல்லியேப்பா..
உன் பிளாக் நண்பர்கள்கிட்ட மட்டும் கேட்ட..எங்க கிட்ட கேட்டியா.. அது தான் நாங்க எங்களுக்கே புது பேர் வச்சிருக்கோம்.. சரி.. அதைவிடு.. இன்னைக்கு சாயந்தரம் உங்க வீட்டுக்கு கும்மி அடிக்க வர்றோம்.. நம்ம ஸ்பெஷல் தெரியும்ல ரெடியா இருக்கணும் என்ன என்று சொல்லிட்டு, என் பதிலுக்கு கூட காத்திருக்காம டொக்குன்னு போனை வச்சது ஏஞ்சல்..
எல்லாம் நம்ம நேரந்தான்னு நினச்சுகிட்டேன்..
சாயங்கால வேளை..
நம்ம சிட்டுக்குருவிகள் ரெண்டு பேருமே வெஜ் ஆளுக.. அதனால இந்த தடவை நம்ம ஊரு பாசி பயறை ஊற வச்சு, குக்கர்ல ஒரு விசில் வச்சு, தேன் ஊத்தி வச்சிருக்கேன்.. இது ஏஞ்சலுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு நம்ம சிட்டுக்குருவி சொல்லியிருக்கு..பேருக்கேத்த மாதிரி தான் ரெண்டு பேரும் வந்திருந்தாங்க... ஏஞ்சல், வின்ங்க்-லெஸ் (ஸ்லீவ்-லெஸ்) ரெட் ஜாக்கெட் போட்டுகிட்டு, பாரதிராஜா பட தேவதை மாதிரியும், நம்மாளு கேப், கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுகிட்டு வந்தாங்க.. அப்படியே ஜோதிகா-சூர்யா மாதிரி இருந்தாங்க.. ஆனா அவங்க கிட்ட சொல்லல.. ரொம்ப மேல ஏறிக்குவாங்க ரெண்டு பேரும் (பொறாமைபடாதடா கார்த்தி)
இன்னைக்கு என் டார்லிங் தான் எல்லா சினிநியுஸும் சொல்லப்போறா.. பயங்கர பிரிபரேஷன்ல வந்திருக்கா.. (கல்யாணம் ஆன பிறகு மனுஷங்களை மாதிரி நீயும் பெண்டாட்டி முன்னால பேசுறத நிறுத்திட்டியேப்பா குருவி)
தொண்டையை கனச்சுகிட்டு ஏஞ்சல் மேட்டரை சொல்ல ஆரம்பிச்சது..
ரொம்ப ஆவலா எதிர்பார்த்த ஷங்கர்-ஷாரூக் காம்பினேஷனோட ரோபட் சொத்துன்னு ஆயிடுச்சு.. ஷாரூக் அந்த படத்திலிருந்து விலகிட்டதா சொல்லிட்டார்.. இனி ஷங்கர் அடுத்த நடிகர் கிட்ட போவாரா இந்த கதையோட இல்ல வேற கதை ரெடி பண்ண போறாரான்னு தெரில..
இதை விட பெரிய நியூஸ், நம்ம ஷ்ரேயா (என்னை மாதிரி கியூட்டா இருக்கும்ல அந்த பொண்ணுன்னு ஏஞ்சல் சொல்ல, நம்ம சிட்டு குருவி அதை கொஞ்ச..கட் கட் கட்.. நம்ம ஸ்டொமக் பேர்னிங் சாமி) ஹாலிவுட் படத்துல நடிக்க போறாங்களாம்.. அதுவும் ஹிரோயினா.. அவங்க காட்ல மழை தான்.. தமிழ்நாட்ல சூப்பர் ஸ்டார் முதல் வைகை புயல் வரை ஆட்டம் போட்டாச்சு.. இப்போ அமெரிக்க பக்கம்..ம்ம்
சிம்பு தன்னோட கெட்டவன் படத்தை இப்போதைக்கு தள்ளி வச்சுட்டாராம்.. அடுத்து சிலம்பாட்டம் படத்துல நடிக்க போறாராம்.. அனேகமா வல்லவன் படத்துக்கு பிறகு அவருக்கு எந்த படமும் வரலைனு நினைக்கிறேன்.. காள எப்போ தியேட்டரை முட்ட வருதோ தெரியல..
ஒரு வழியா தசாவதாரம் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சது.. இப்போ கடைசி கட்ட தொழில்நுட்ப வேலைகள் நடக்க ஆரம்பிச்சிடுச்சு.. அதனால, கமல் தன்னோட அடுத்த படத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டார்.. படத்தோட பேர் மர்மயோகி.. பழைய எம்.ஜி.ஆர் படத் தலைப்பு தான்.. இந்த வரலாற்று படத்தை கமலே இயக்குகிறார், ரிலையன்ஸ் நிறுவனதிற்காக..
ம்ம்..கார்த்தி..உங்க தலயோட பில்லா படம் நவம்பர் 30க்கு தான் வருதாம்..பாட்டெல்லாம் நவம்பர் 15 வெளியிட பிளான் பண்ணியிருக்காங்க.. இன்னைக்கு எல்லா திரைப்பட தளங்கள்லயும் பில்லா படத்தோட ஸ்டைலானா ஸ்டில்கள் தான்.. படமெல்லாம் அசத்தல வந்திருக்காம்.. சந்தோசமா (நான் சிரித்தேன்)
இன்று வெளியான சில பில்லா ஸ்டில்கள்




இன்னைக்கு தான உன் அசினோட பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டியா இல்லியா.. சொல்லாம இருப்பியா.. உன் கனவுல அசின் வந்து முதமெல்லாம் வாங்கி கிட்டதா என் பிரின்ஸ் கிட்ட சொன்னியா.. என் பிரின்ஸ் சரியான ஏமாளி.. நீ சொன்னதை நம்பிகிட்டு ஊரெல்லாம் சொல்லுது.. (உன்னை.. ஏஞ்சலை அடிக்க கை ஓங்கினேன்)
அசின் பிறந்தநாளிற்காக...


பேசிக்கொண்டிருந்த போதே சிட்டுக்குருவி மெதுவா ஏஞ்சலை கிள்ளியது.. என்னடான்னு கேட்டா, அடுத்த அப்பாயிண்ட்மென்ட் அவங்களோட நண்பர் வீட்ல டின்னராம்.. சொல்லிகிட்டே சிறகடிச்சு பறந்து போயின இரண்டும்..ம்ம்.. காதல் பறவைகள்
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
10:55 AM
15
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சிட்டுக்குருவி, சினிமா, தமிழ், திரைப்படம்
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
8:57 AM
12
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்

தல அஜித்தின் ரசிகர்கள் அவரை பில்லா படத்தின் ஷூட்டிங்கில் சந்தித்துள்ளனர். அந்த படம் தான் கீழே.. தல அசத்தலா இருக்கார்ல.. என்ன சொல்றீங்க (கூட இருப்பது ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ்)
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
8:09 AM
9
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்

நாளை உலகமெங்கும் தல அஜித்தின் கிரீடம் வெளியாகிறது. படம் மலையாளப் படத்தின் மறு வடிவம் என்றாலும், ஏற்கனவே இது ஹிந்தியிலும் தெலுங்கிலும் (எவனாயிருந்தா எனக்கென்ன என்று ராஜசேகர் நடித்து வெளியானது என்று எங்கோ படித்தேன்) மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தேவையில்லாத பில்டப், மாஸ் ஹீரோ போன்று பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இல்லாமல் இருக்கும் என்று நம்பலாம். அதுவும் அப்பா வேடத்தில் ராஜ்கிரணும் அம்மா வேடத்தில் சரண்யாவும் நன்றாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். படத்தின் போஸ்டர்களில் அழகாக இளமையாக முகவரி படம் வெளி வந்த காலத்தில் இருப்பதை போல அஜித் இருக்கிறார். அஜித், திரிஷா ஜோடி பார்ப்பதற்கு அழகு.. போட்டோக்களில் பதுமையாக இருக்கிறார் திரிஷா. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும்படி நன்றாக இருக்கிறது. ஆழ்வாரின் சறுக்கலுக்கு பிறகு தன்னை நிமிர்த்திக் கொள்ள அஜித்திற்கு இந்த படம் உதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
எப்போதுமே சிஃபியின் விமர்சனங்களை நான் ரொம்பவும் நம்புவதில்லை. அடி வாங்கிய படங்களுக்கு பைசா வசூல் என்று எழுதுபவர்கள். வரலாறின் முதல் நாள் விமர்சனம் பரவாயில்லை எனவும் மறு நாள் நல்ல படம் என்றும் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. கிரீடதிற்கு, இது போன்று ஒரு நல்ல படம் வருவது மிகவும் குறைவு என்று விமர்சனம் தந்திருக்கிறார்கள். சென்னையில், ஏற்கனவே கிட்டதட்ட இந்த வாரயிறுதிக்கான முன் பதிவுகள் முடிந்து கிட்டதட்ட முப்பது லட்சங்கள் வசூலாகி இருக்கின்றன. இது, அஜித், முதல் வார வசூலரசன் என்று அஜித்தை மறுபடியும் நிரூபித்திருக்கிறது.
படத்தின் போஸ்டர்களில் அழகாக இளமையாக முகவரி படம் வெளி வந்த காலத்தில் இருப்பதை போல அஜித் இருக்கிறார். திருவின் (நீர்களுக்கு நடுவில் அந்த சின்ன இடத்தில் இரண்டு தென்னை மரங்களோடு இவர் எழுதிய அழகான கவிதை பாடல், இவர் பெயர் பேசும் சிறிது நாளைக்கு) கண்களில், ஆன்டனியின் கத்திரியில், நா. முத்துகுமாரின் பாடல் வரிகளில், ஜி.வி.பிரகாஷின் இசையில், விஜய்யின் இயக்கத்தில் கிரீடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன். இயக்குநர் பிரியதர்ஷனின் சீடர். இந்த படம் சுரேஷ் பாலாஜி மற்றும் ரிலையன்ஸின் அட்லாப்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொசுறு : இந்த படத்திலும் அஜித்தின் மாமாவாக (அக்கா கணவராக) விவேக், சிவாஜியில் ரஜினிக்கு போல..
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
9:43 AM
16
பின்னூட்டங்கள்
ஏதாவது விசித்திரமாக பண்ணுவதென்பது மன்சூர் அலிகானின் வேலை.. தனது படத்திற்கு 43 எழுத்துகளில் தலைப்பு வைத்து (ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ குலோதுங்க கிரிஷ்ண காமராஜன்.. சரியான்னும் தெரில?) இப்படி இவர் செய்த விஷயங்கள் அதிகம். அதை விட, தனியாக சில தவறுகள் செய்து போலீஸில் உதை வாங்கியது தனிப்பட்ட விஷயம். இப்போது இவர் நடித்து தயாரித்து வெளிவந்திருக்கும் படம் 'என்னைப் பார் யோகம் வரும்". நிச்சயம் படம் ஒன்றும் பெரிதாக இருக்கப் போவதில்லை. இந்த தலைப்பையும் பல பேர் நிறைய கடைகளில், இரண்டு கழுதைகள் கொண்ட ஒரு போட்டோவில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.இப்போது இந்த படம் வெளியிடப்பட்டு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களை கவருவதற்காக அவர் அடித்த போஸ்டரை பாருங்களேன்.. பைசா செலவில்லாமல் அஜித்தின் அடுத்த படமான கிரீடதிற்கு கிடைத்த விளம்பரம் இது.
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
3:43 PM
13
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்
போன முறை, இதே நாளில் 'தல'க்கு பரமசிவனும் திருப்பதியும் வந்த நேரம். ஒரு மனிதன் தன்னை இந்த அளவுக்கு மாற்றிகொள்ள முடியுமா என்று வியந்த விஷயம். ரெட் படத்தில் ஏற்றப்பட்ட உடம்பு எங்கே, இப்படி இளகி இளைத்து மறு அவதாரம் எடுத்த பரமசிவன் எங்கே என்று நனவு என்று தெரிந்தும் நான் என்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். திருப்பதியில் பேரரசு போதைக்கு ஊறுகாய் ஆனாலும், வரலாறு தீபாவளிக்கு வந்து படைத்த வரலாற்றில் தல அஜித் தலை நிமிர்ந்தார்.
(தனது 29வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடிய போது)
இன்னமும் கேலி பேசாதோர் இல்லை.. சன் மியூஸிக்கில் வேண்டுமென்றே அஜித் பாடல்களை போடாமல் அஜித் ஓரங்கட்டப்பட்டார்.. (அஜித், சன் டிவி கலாநிதிமாறனை சந்தித்ததாக படித்தேன் ஒரு இதழில்.. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று) பொங்கலுக்கு வந்த ஆழ்வாரும் சற்றே அவருக்கு சோதனை தந்தது. இப்படி போன வருடம் ஏற்றங்களையும் இறக்கங்களையும் அஜித்திற்கு தந்த வருடம்.
இந்த வருடம் கிரீடமும், பில்லாவும் காத்திருக்கிறது. தல, உங்கள் படங்களை உங்களை விட நாங்கள் அதிகமாய் எதிர்பாக்குறொம்.. நீங்க கலக்குங்க தலைவா.. நாங்கள் துணையிருக்கிறோம்..
இத்தனை துயர்கள் வந்தாலும் உறவுகள் போல அஜித்திற்கு உறுதுணை, அவரது ரசிகர்கள் தான்.. தோளுக்கு தோளாய் அவருக்கு ஆதரவும் வெற்றிகளின் போது கைகள் குலுக்கி வாணவேடிக்கையும் தரும் அதே நேரம், தோல்விகளின் போது தோளாக நின்று அவருக்கு பெரும்படைகளாக இருக்கின்றனர்..
தன்னம்பிக்கை கொண்டு, கீழே விழுந்தாலும் எழுந்து ஓடும் குதிரையாய் இருக்கும் தல அஜித், நடிக்கும் படங்களின் கதைகளை மட்டும் ஒழுங்கா கேட்டு நடித்தால் இன்னும் தொடலாம் சிகரத்தை..
தல, பல வெற்றிப்படிகள் ஏறி சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள் தல...
தல, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
8:42 AM
27
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்

அஜித், விஜய் (நடிகர் விஜய் அல்ல.. தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் விஜய்) இயக்கத்தில் நடிக்கும் கிரீடம் படத்திற்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷாவும், அப்பா அம்மாவாக ராஜ்கிரண் சரண்யாவும் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை ஜி.வி.ப்ரகாஷ்.
படம் மே 1, தல பிறந்த நாளன்று ரிலீஸ் செய்வதாக முடிவு செய்து நூறுக்கும் குறைவான நாட்களிலேயே திட்டமிட்டு படப்பிடிப்பை முடித்தார்கள். ஆனால், இப்போது படத்தை மே 1 அன்று வெளியிடப்பட முடியாத சூழ்நிலை. 
சிவாஜி மே 17 அன்று ரிலீஸ் ஆவதால், தயாரிப்பாளர்களுக்கு படத்தை திரையிட தியேட்டர் வாங்குவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடைபட்ட காலதிற்குள் படத்தின் மூலம் லாபத்தை ஈட்டமுடியுமா என்று கவலை. அதனால், படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
தலைவரின் சந்திரமுகி வெளியானபோது போட்டிக்கு விஜய் சச்சினை வெளியிட்டு சூடு வாங்கிகொண்டதை போல, அஜித்தும் கிரீடம் தயாரிப்பளர்களும் செய்யாதது நல்லதே..
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
7:27 AM
12
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்
கிரீடம் படப்பிடிப்பில் சண்டை காட்சியினை படமாக்கும் போது, ஏற்பட்ட வலியில் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, 'தல' அஜித் சீக்கிரம் குணமடைந்து நலமுடன் மறுபடியும் சூட்டிங்கில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான தல ரசிகர்களின் சார்பாக இறைவனை வேண்டுகிறேன்.
அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று அவரது மனைவி ஷாலினி சொல்லிருந்தது போல், அப்படி நடக்காமல் இருந்தால் மிகவும் சந்தோசமே..
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
11:47 PM
14
பின்னூட்டங்கள்
பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் நிறுவனம் புதியதாக அவரின் மகன் சுரேஷ் பாலாஜியின் கீழ், மும்பை அட்லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம், கிரீடம். இதில் ஜி படத்திற்கு பிறகு அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேருகிறார். அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரணும் அம்மாவாக சரண்யாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் வி.எல். அழகப்பனின் மகன் விஜய் இயக்குகிறார். இந்தப் படம் மலையாளத்தில் திலகன், மோஹன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் படத்தின் தழுவல்.
இந்த படம் கிட்டதட்ட 60% ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்துக்கு வெயில் அறிமுக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு பொறுப்பை திரு ஏற்று இருக்க, எடிட்டிங்கை ஆண்டனி செய்கிறார்.
ஒரு தந்தை மகனுக்கு இடையிலான பாசத்தை சொல்லும் அழகான குடும்ப, ஆக்க்ஷன் படமாக வேகமாக வளர்ந்து வருகிறது கிரீடம்.
போக்கிரியின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகனின் ஷூட்டிங் நேற்றிலிருந்து தொடங்கியது. படத்தை மசாலா இயக்குநர் தரணியின் அசிஸ்ட்டண்ட் பரதன் இயக்க, படத்திற்கு இசை அலங்காரம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்க, இன்னொரு நாயகியாக நமீதா வேஷம் கட்டுகிறார்.
இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
9:03 AM
23
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம், விஜய்
இப்போதெல்லாம் தமிழ் சினிமா படத்துக்காக இல்லாமல், அந்த படத்தில் நடித்த நடிகருக்காகவும், அதற்கு தரப்படுகிற விளம்பரத்துக்காகவும் தான் ஓடுகிறது.. அந்த படத்திற்காக செலவு செய்த, உழைக்கின்ற பலபேரை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நான் இப்படி சொல்வதற்கு சில எடுத்துக்காட்டுகள்..
தீபாவளிக்கு அஜித்தின் வரலாறு வெளிவந்தது. அதற்கு உலக தொலைக்கட்சியில் முதன் முறையாக என்று மார்தட்டி நிகழ்ச்சிகள் நடத்தும் சன் தொலைக்கட்சி கடைசி வரை வல்லவனை முதலிடத்திலும் வரலாறை இரண்டாம் இடத்திலும் வைத்தது. போன வருடம் 2006-இன் அதிக வசூலை குவித்தது என்று இந்தியா டுடே நாளிதழும் விநியோகஸ்தர்களும் சொன்ன ஒரு படம், சன் தொலைக்காட்சியில் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுகிறது.. இது நியாயமா.. இதே, சன் டிவியை தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர்கள் விநியோகஸ்தர்கள் தொடர்பு கொண்ட படமாய் இருந்தால், அது எப்பேர்ப்பட்ட படமாய் இருந்தாலும் முதலிடம் தான்.. அது தெலுங்கு படத்தை அப்படியே அச்சு அசலாக நகலெடுத்த இளையதளபதி விஜயின் படமாக இருந்தாலும் சரி, ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படமாக இருந்தாலும் சரி, சர் சரென்று கைகளால் கபடி விளையாடி நடிக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் படமாக இருந்தாலும் சரி.. முதலிடம் தான்.. ஏகபோக பாராட்டுக்கள் தான்.. இது தான் நடுநிலைமை தவறாமல் நடத்தப்படும் நிகழ்ச்சியா..
இது மட்டுமல்ல, மாதம் இரண்டு முறை படித்துவிட்டீர்களா குங்குமம் புத்தகத்தில் தும்மினால் கூட போட்டு விளம்பரங்கள் செய்வதுவும் நடக்கிறது. இதெல்லாம் செய்வது தவறில்லை. ஆனால் இவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வராத நடிகர்கள், இயக்குநர்கள் பற்றி அவர்கள் எழுதியது தன் செய்திகள், அவர்களின் செய்தி தரும் ஊடகங்களில்..
இதற்கு அடுத்து நெட்டில் புகழ் பரப்பும் நம்ம சிஃபி இணையதளம். வரலாறை வெற்றி என்று அறிவிக்க அவர்களுக்கு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது. ஆனால் போக்கிரியை மூன்று நாட்களில் வெற்றி என்று பறைசாற்றி இருக்கிறார்கள். வரலாறைவிட குறைந்த லாபமே ஈட்டிய வேட்டையாடு விளையாடு கடைசியில் பிளாக்பஸ்டர் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி வரை வரலாறு சூப்பர் ஹிட்டாகவே இருந்தது.
இப்போது தான் ஆழ்வார் படம் பார்த்தேன். இ-மெயில்களிலும் வார்த்தை வழிகளிலும் சொல்லப்படுகின்ற மாதிரி..இல்லை இல்லை.. பரப்பப்படுகின்ற அளவு படம் மோசம் இல்லை. முதல் முறை இயக்குவதால் இயக்குநர் செல்லா சில தவுறுகளை செய்திருக்கிறார். ஆனால் எல்லோரும் சொல்வது போல் இல்லை. அஜித் இது போன்று புது இயக்குநர்களுக்கு ஆதரவு தந்தது போன்று வேறு யாராவது தந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள்.. கிட்டதட்ட பதினெட்டு படங்கள் அஜித்திற்கு புது இயக்குநர்கள் இயக்கியது தான். சும்மா அடுத்தவர் ஜெயித்ததிலே, அவர்களை நகலெடுத்து நடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தன்னை போன்றே வெற்றி பெற துடிக்கும் பல பேருக்கு வாய்ப்பு தந்தவர் அஜித். எஸ்.ஜே.சூர்யா முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை புதுமுகங்கள் தான், அவர்கள் முதல் படங்களை எடுக்கும் போது. இவர்களை எல்லாம் நம்பிக்கையோடு அரவணைத்திருக்காவிட்டால் இவர்கள் இன்று முகம் காட்டியிருக்க முடியுமா? அப்படி கொடுத்தது தான் செல்லாவுக்கும் வாய்ப்பு. அந்த வாய்ப்பையும் அவர் சரியாகத் தான் பயன்படுத்தி இருக்கிறார். (படத்தின் விமர்சனம் தனியாக)
எனது ஊர் நண்பர்களுக்கு போன் செய்து கேட்டபோது, பொங்கலன்று, போக்கிரி சரியில்லை என்றார்கள். ஆழ்வார் நன்றாக இருக்கிறது என்றார்கள்.. மற்ற எல்லா நண்பர்களும் போக்கிரி விமர்சனத்தில் குறியிருப்பது போல், தெலுங்கு போக்கிரி படத்தை மட்டுமல்ல, அதன் நாயகனின் நடை உடை பாவனையையும் அப்படியே காப்பி அடித்திருக்கிறார்களாம்.. நான் மற்றவர்களை குறை சொல்லவில்லை. ஆனால் இப்படி தனியாக எந்த விளம்பரங்களும் இல்லாமல் முன்னேறும் ஒருவருக்கு இப்படியா வதந்திகள் மூலம் படத்தை ஓடவிடாமல் செய்வது.
இதற்கு மேல் வாதம் செய்தால் அது ஏதோ தனிமனித துவேஷம் ஆகிவிடும். விமர்சனம் எழுதும் நண்பர்களே, உண்மையை எழுதுங்கள். உங்கள் நடைக்கேற்ப சுவைபட எழுதுங்கள். ஆனால் உன்மையை எழுதுங்கள்.
நான் அஜித்தின் ரசிகன் என்பது உலககுக்கே தெரியும். அதனால் தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன் என்று நினைக்காதீர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரையும் கேட்டால் அஜித்தின் தன்னம்பிக்கையும், அவருக்கும் மட்டும் ஏனிப்படி நடக்கிறது என்ற கவலையும் உண்டு. எனக்கும் தான். நிச்சயம் விரைவில் தலை நிமிர்ந்து நிற்பார். அவரை பாக்க எல்லோரும் கழுத்து சுளுக்கி பாக்காணும். இது ஏதோ எப்பவும் பேசும் வசனங்கள் இல்லை. ஒரு நம்பிக்கை.
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
1:31 AM
54
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்
அஜித் மறுபடியும் படம் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதாவது பரமசிவன், திருப்பதி போன்ற படங்களின் பாடல்கள் எதுவும் ரொம்பவும் ரசிக்கும் படியாக இருந்ததில்லை. ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வந்திருக்கும் ஆழ்வார் பாடல்கள் கொஞ்சம் நம்பிக்கையை தந்திருக்கிறது. அஜித்துக்கும் தேவாவுக்கும் ஒரு ராசி இருந்திருக்கிறது. இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வந்த பாடல்கள் ரசிக்கும் படியாகவும் இன்றும் கேட்கும்படியாகவும் இருக்கிறது. உதாரணமாக வாலி, முகவரி படங்களைச் சொல்லலாம். அந்த ராசி ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் உண்டோ என்று தோன்றவைக்கிறது ஆழ்வாரின் படப் பாடல்கள்
சொல்லித் தரவா
பாடியவர்கள் : சாதனா சர்கம், முகமத் சாலமத்
குத்து பாட்டு மாதிரி ஆரம்பிக்கும் இந்தப் பாடல் மெல்ல ஒரு அழகிய மெல்லிசை பாடலாக விரிந்து மனசை நிரப்புகிறது. வெறும் உள்ளூர் வாத்தியங்களுடன் ஆரம்பித்து அப்படியே வெஸ்டர்ன் இசையோடு கலந்து அழகாக வந்திருக்கு.. முதல் முறை கேட்கும் போதே மனசுல நிற்கும் மெட்டைப் போட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. முகமதின் குரலும் அஜித் குரலோடு ஒத்துப் போவதும், சாதனா சர்கத்தின் தேன் குரலும் இந்தப் பாட்டிற்கு தூண்கள்.. வழக்கம் போல "தல தல தல தாழாது உந்தன் தல"ன்னு தூக்கி வைக்கின்ற வைர வரிகளும் வாலியின் பேனாவில் இருந்து வந்திருக்கிறது.. இதோடு மிதமான வயலின் இசை மெலடி பாடல் கேட்பவர்களுக்கு நிச்சயம் கொஞ்சம் மயக்கமூட்டும். ஆனால் ஏன் முகமத் தமிழை அப்படி உச்சரிக்கிறார் என்று தெரியவில்லை.. முகமத் தமிழ் தெரியாதவர் போலத் தெரிகிறது.. இன்னொரு உதித் நாராயணன்?
பிடிக்கும் உனைப் பிடிக்கும்
பாடியவர் : மதுரஸ்ரீ
மதுரஸ்ரீயின் உற்சாகமான குரல் இந்தப் பாட்டுக்கு மிகப் பெரிய வலிமை. வாலியின் வார்த்தை விளையாடல்கள் கொண்ட பல்லவிக்கு, ஸ்ரீ காந்தின் இசை மெருகூட்டி இருக்கிறது. உச்சதஸ்தாயில் மதுரஸ்ரீ பாடும்போது கேட்கவே நன்றாக இருக்கிறது. மதுரஸ்ரீ உச்சரிக்கும் வார்த்தைகளே எல்லாவிதமான உணர்ச்சிகளையும் தந்துவிடுகிறது. அவரது குரல் இந்த பாட்டிற்கு பலம்.
பல்லாண்டு பல்லாண்டு
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், செந்தில்தாஸ்
டிசம்பர் சீசனுக்கு ஏற்ற பாட்டு. மகாநதியில் வரும் ஸ்ரீரங்க ரங்கநாதரின் பாட்டைப் போலவே செமி-கிளாசிக்காக வந்திருக்கிறது. உன்னி கிருஷ்ணனின் குரலையும் அவரது ஏற்ற இறக்கங்களையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். உன்னி கிருஷ்ணனுக்கு செந்தில்தாஸ் நேர்த்தியாக கம்பெனி கொடுத்திருக்கிறார். வைஷ்ணவ கோயிலகளில் பாடப் பெறுகின்ற பாடல் போல் தெரிகிறது. கண்மூடிக் கேட்டால் ஏதோ பக்தி பாடல் மாதிரி கன கச்சிதமாக இருக்கிறது.. ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பாராட்டுக்கள். இப்படி ஒரு அருமையான கர்னாடிக் பாடலை ஸ்ரீகாந்த் தேவாவால் எப்படி தர முடிந்தது என்று இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது.. இது படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி என்று சொல்லப்படுகிறது. மற்ற பாடல்களை பார்த்தால் வேறு எதுவும் அறிமுகப் பாடல் இருப்பது போலத் தெரியவில்லை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு அறிமுகப் பாடல் எடுபடுமா?
அன்புள்ள காதலிக்கு
பாடியவர்கள் : குணால், குஷ்பூ
தீனாவில் வரும் 'நெஞ்சில் என்றும்' என ஆரம்பிக்கும் பாட்டின் சாயல் ஆரம்பத்தில் இருந்தாலும் போகப்போக அதிலிருந்து பாடல் பாதை மாறிவிடுகிறது. ரொம்பவும் ஸ்பீடான பாட்டு இது. இப்படி ஒரு ஸ்பீடான டூயட் ஒவ்வொரு படத்துக்கும் தேவை என்றாகிவிட்டது. குஷ்பூவின் குரல் நம்மை அவரின் வேகத்துக்கு அழைத்தே செல்கிறது.
மயிலே மயிலே
பாடியவர்கள் : ஸ்ரீகாந்த் தேவா, செந்தில்தாஸ், ரோஷிணி, சுருதிப்ப்ரியா, அர்ஜூன் தாமஸ், சுஜவிதா
பரபரன்னு உங்கள் கால்களை ஆடவைத்து, கூடவே உங்களையும் பாடவைக்கும் ஒரு குத்துப் பாடல். இளமையான பாடகர்களின் (சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தேர்தேடுக்கப் பட்டவர்களா எல்லோரும்?) குரலைகளை பயன்படுத்தி வேகப் பாடலை கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. இதுவும் படத்துக்கு ஒரு குத்துப் பாட்டு, வேகப் பாட்டு அவசியம் என்னும் பார்முலாவில் வந்திருக்கிறது. இந்தபாட்டு முன் வரிசைக்காரர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.
ஆஹா..ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ஆழ்வார் பாடல்கள் இல்லை என்றாலும், கர்னாடிக் ரசிகர்களுக்கு ஒரு பாட்டு, குத்துப் பாட்டு ரசிகர்களுக்கென ஒரு பாட்டு, மெலடி காதலர்களுக்கென ஒரு பாட்டு என கொடுத்து எல்லா ரசிகர்களையும் ஆளவே முயற்சித்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. ஓரளவு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
போக்கிரி பாடல்கள் விமர்சனம்
பருத்திவீரன் பாடல்கள் விமர்சனம்
பதிவிட்டது
மு.கார்த்திகேயன்
at
9:12 PM
28
பின்னூட்டங்கள்
Labels: அஜித், சினிமா, தமிழ், திரைப்படம்