Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Wednesday, September 05, 2007

ஜீரோ ரூபாய் - கொடுக்கமாட்டேன் லஞ்சம்

எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க, லஞ்சம் கொடுக்காமல் இருக்க. சென்னையை சேர்ந்த ஐந்தாவது தூண் என்னும் நிறுவனம் இதற்கான சமூகப்பணிகளை செய்து வருகிறது. இவர்கள் அச்சு அசலாக ஆயிரம் ரூபாயை போன்ற ஒரு காகிதத்தை அச்சடித்துள்ளார்கள். (இதற்கு ரிசர்வ் பேங்க் எப்படி அனுமதி தந்தது என்பது விளங்காத விஷயம்) ஆயிரம் எண்ணிற்கு பதிலாக இதில் பூஜ்ஜியம் இருக்கும். ரிசர்வ் வங்கி பெயருக்கு பதிலாக "எல்லா நிலையிலும் லஞ்சத்தை ஓழிக்க வேண்டும்" என்னும் வாசகம் இருக்கிறது. (கீழிருக்கும் படம் பார்க்க)



லஞ்சம் கேட்கும் இடங்களில் இப்படி ஒரு பணத்தை கொடுத்தால் பலனுள்ளது என்று சொல்கிறார் இந்த இயக்கத்தின் நிறுவனர் விஜய் ஆனந்த். மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்க



எப்படியோ நல்லது நடந்தால் சரி.. இது போன்று ஒரு லட்சம் நோட்டுகளை அடுத்த வாரம் மும்பையில் வெளியிட முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்

Monday, April 23, 2007

ஆட்டை திருமணம் செய்துகொண்ட சூடான் வாலிபர்

இது போல சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. சூடானில் ஒரு மனிதன் ஆட்டை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். ஏன்? இதை நான் விளக்குவதை விட, பிபிசி செய்தியை படித்தே நீங்களும் விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நிச்சயமா, நீங்களும் என்ன கொடுமை இது சரவணா என்று சொல்லத்தான் போகிறீர்கள்!
இந்த சுட்டியை தந்த நண்பன் வெங்கிட்டிற்கு நன்றி!