Showing posts with label பூங்கா. Show all posts
Showing posts with label பூங்கா. Show all posts

Monday, February 19, 2007

இந்த வார தமிழ்மணம் பூங்காவில்...

இந்த வாரம், தமிழ்மணம் பூங்கா வார இதழில், வெளியிடப்பட்ட பதிவு, இங்கே தர்மபுரியில் வேளாண்மை கல்லூரி மானவிகளை எரித்த சம்பவத்திற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து எழுதிய தர்மபுரி எரிப்பு சாம்பலில் தர்மம் வென்றது

உற்சாகம் தந்த எல்லோருக்கும் நன்றி!

Saturday, January 27, 2007

தேன்குட்டையில் ஒரு சுள்ளெறும்பு

எனது கிராமத்தை பற்றியும், அங்கு நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் எத்தனையோ பதிவுகளில் எழுதப்பட்டு வருவதை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த பதிவுகளை நான் தமிழ்மணத்தில் ஏற்றம் செய்யும் பொழுது, கவனித்த தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழு, இவனின் எழுத்தின் மீது நம்பிக்கை கொண்டு, குருவியின் தலையில் பனங்காய் வைப்பது போன்றொரு பணியினை தந்தார்கள். தமிழ்மண பூங்காவில் வாரந்தோறும் வெளியிடுமாறு ஒரு தொடர், கிராமத்தை பற்றியும் மக்களின் பழக்க வழக்கங்களை பற்றியும் எழுதி தருமாறு ஒரு வாய்ப்பினை தந்தார்கள்.

எனக்கு இது ஒரு பெரிய வேலை. எப்படி ஆரம்பிப்பது, எதை பற்றி எழுதுவது என்று ஒரே குழப்பம். கணினியில் எழுதியதால் ஆயிரம் தாள்கள் வீணாகவில்லை. அத்தனை முறை அடித்து திருத்தி எழுதினேன். எழுதி முடித்த பிறகு மனசுக்கள் சந்தோசப் பூ இருந்தது. ஆனால் திருப்தி இல்லை. இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ என்று ஒரு தவிப்பு இருந்தது. அப்போது தான் எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. உள்ளத்தில் தேடல் உள்ளவனுக்கு எந்த விஷயத்திலும் எல்லை இல்லை என்று. மனதை சமாதானபடுத்திவிட்டு, எழுதியதை நானே இருபது தடவை படித்துவிட்டு அனுப்பி வைத்தேன் பூங்கா குழுவினருக்கு.

இப்போது அந்த தொடரை இரண்டு வாரத்திற்கு ஒரு முறையென பூங்கா பொங்கல் முதல் வெளியிட்டு வருகிறது. கடவுளையும் காதலையும் கவிதையாக சொன்ன பதிவை அவர்கள் வெளியிட்ட அந்த நாளிலே தான் எனது தொடரும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அதனை கவனிக்கவில்லை. இன்று காலையில் தான் பார்த்தே. பார்த்தவுடன், இரை தேடி சுவற்றின் மீதும், நீரைக் கடந்தும் படையெடுக்கும் ஒரு சுள்ளெறும்பை மெதுவாக பிடித்து, ஒரு தேன் குட்டையில் விட்டால் எப்படியொரு மகிழ்வு கொள்ளுமோ, அதன் மனசு எப்படி உவகை கொள்ளுமோ, அந்த ஒரு சந்தோசம் எனது இதயத்திலும் பரவிக்கிடக்கிறது.

இந்த ஜனவரி மாதம் என் உள்ளத்தில் புதுவித சந்தோசங்களையும், எனக்குள் புத்துணர்ச்சியையும் தந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து என்னை பாராட்டி, என்னை உற்சாகப்படுத்தியது எல்லாம் எனது நண்பர்களாகிய நீங்கள் தான். இப்படி ஒரு நண்பர் கூட்டம் வாய்த்தவனுக்கு, இமயமும் தொட்டுவிடும் தூரம் தான். நன்றி நண்பர்களே.

கிராமத்தை எழுதிய அந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்க நீங்கள் இங்கே சுட்டுங்கள்.

இந்த தொடரை வெளியிட்ட தமிழ்மண பூங்கா ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றிகள். பூங்கா இதழ் தொடங்கப்பட்ட நேரத்தில் நமது பதிவுகள் அதில் வரும் காலம் என்னாளோ என்று ஏங்கிய காலம் உண்டு. அந்த ஏக்கத்தை துடைத்துவிட்டதற்கு நன்றி.

Wednesday, January 24, 2007

உள்ளமெல்லாம் இன்ப மயம்

இந்த வாரம் எப்பவும் படிப்பது போல் தமிழ்மணத்தின் பூங்கா இதழைத் திறந்தால் இன்ப அதிர்சியாய் இங்கே எழுதிய கிராமத்து பொங்கல் பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாட்டங்கள் என்னும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கபட்டுள்ளது.

இந்த புது வருசத்தில் அதிகம் சினிமாவை பற்றி எழுதக்கூடாது என்று முடிவு செய்து, எழுத்து நடையை மாற்றியது நல்ல பலனை கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்குள் உறங்கி கிடந்த ஆற்றலை வெளிகொண்டு வந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தமிழ்மண பூங்கா ஆசிரியர் குழுவுக்கு நன்றி..நன்றி..நன்றி

Monday, January 15, 2007

பொங்கல் போனஸ்

நண்பர்களே, பொங்கல் போனஸ் செய்தியா இங்கே பதிவிடப்பட்ட கவி கட்டுரையை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள் தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழுவினர். அந்த பதிவு இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

என்றும் இவனை ஆதரித்து எழுத்துகளை படித்து, மனசுக்கு உற்சாக பின்னூட்டங்கள் தந்து வரும் எனது நண்பர்களாகிய, உங்கள் அனைவருக்கும் எனது இமயம் தொட்டு இதயம் தொடும் இதமான நன்றிகள்.. இந்த இடத்தை, இவனை அடைய வைத்தது தங்களின் நம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகள் தான் நண்பர்களே.

சிறிய எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டி அவர்களின் தரமான எழுத்துக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அவர்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.. மேலும் இந்த பதிவை வெளியிட தேர்ந்தெடுத்தற்கு அவர்களுக்கு என் மகிழ்வான நன்றிகள்..