Thursday, February 15, 2007

400வது பதிவிற்காக ஒரு சின்ன சர்வே

ஆமாங்க.. சும்மா ஒரு சின்ன சர்வே தான்..
இதுவரைக்கும் நாம இங்கே நடத்தினதே இல்லேல..அதுனால..


1.இதுவரை இங்கே பதிவிடப்பட்டதில், உங்களுக்கு பிடித்தது எது?
(டக்குன்னு மனசுக்குள்ள வரணும்.. அப்படி ஏதும் இல்லைன்னாலும் பரவாயில்ல.. இ.பி.கோ செக்க்ஷன் 333 படி, அப்படின்னு எந்த போன்டா சட்டமும் உங்க மேல பாயாது..)

2.பிடித்த வகைகள்?
அ. சினிமா
ஆ. கதை
இ. கவிதை
ஈ. அனுபவச் சிதறல்கள்


இந்த ரெண்டு கேள்வியை யோசிக்கவே நான் வேதாளம் பிடிக்க போன விக்ரம் (ஹிஹிஹி.. விக்கிரமாதித்தன் கொஞ்சம் சுருக்கமா) மாதிரி ஆகிட்டேன்..

அப்படியே வழக்கம் போல பின்னூட்டத்துல சொல்லுங்களப்பா...

அட.. சர்வே மட்டும் போட்டா என்ன ஆகுறது, அது தான் உங்களுக்கு தேங்காய் உடைக்கணும்னு ஆகிடுச்சு.. அத இப்படி கவிதைல இருந்து ஆரம்பிப்போமே

மனம்
ஒரு குரங்குன்னு
சொன்னவன்
யாரென்று
தெரிந்தால்
என்னிடம் சொல்லுங்கள்..

அவளை
கண்டவுடன்
நாய் மாதிரி
வாலாட்டியும்,
குதிரை மாதிரி
கடிவாளம் போட்டும்,
பூனையைப் போல
பதுங்கி பதுங்கி
நடக்கிறதே
என் மனசு?

75 பின்னூட்டங்கள்:

said...

me the first-uu again??
;-)

said...

சர்வேயில் நான் கண்டிப்பாக கலந்துக்கிறேன்..

1- என்னை மிகவும் கவர்ந்தது "ஈயடிச்சான் காப்பி" என்கிற போஸ்ட்தான். மோமெண்டோ கதையை வலையுலகில் தேடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக இந்த போச்ட்டை படித்தேன். ரொம்பவும் அழகாகவும் அட்ரெக்டிவ்-ஆகவும் இருந்துச்சு. உண்மையில் சொல்ல போனால், என்னை தமிழில் ப்ளாக் எழுத தூண்டிய போஸ்டே இதுதான்.

அதுக்கப்புறம்தான் தலைவரே நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி எப்படி தமிழில் எழுதுறதுன்னு உங்க கிட்ட கேட்டேன்.. ;-)

ரரொம்ப நீண்டுருச்சி.. அடுத்த சர்வேக்கான பதில் அடுத்த பின்னூட்டத்தில்.. :-)

said...

//.இதுவரை இங்கே பதிவிடப்பட்டதில், உங்களுக்கு பிடித்தது எது?
//

இந்தப் பதிவுதான்!

காரணம்

//நான் வேதாளம் பிடிக்க போன விக்ரம் (ஹிஹிஹி.. விக்கிரமாதித்தன் கொஞ்சம் சுருக்கமா) மாதிரி ஆகிட்டேன்..
//
இதுதான்!

2. பிடித்த வகைகள்?

கார்த்திக் 65
கார்த்திக் சூப்
கார்த்திக்க் கைமா!

said...

தலைவரே இன்னைக்கு முதலில் பின்னூட்டமிட்டதுக்கும், முதலில் சர்வே அழுதியதுக்கும் என்ன பரிசு தர போகிறீர்கள்? ;-)

said...

1. ஏப்ரல் ஃபூல் காதல்
http://mkarthik.blogspot.com/2006/10/blog-post_03.html
(ஹாஹா...)

2. அனுபவச் சிதறல்கள்

said...

Welcome back from the small comercial break..

இரண்டாவது கேள்விக்கான பதில்:

of course என்னுடைய முதல் ஓட்டு சினிமா பததிவுக்கு்த்தான்.. சிட்டுக் குருவி கலக்கிருச்சுல.. ;-) தலைவரே, சிட்டுக் குருவி வெளியூர் போயிருச்சா? ஆளையே காணோமே!!

அது மட்டுமா!! எத்தனை பதிவுகள் தல பத்தியும் அசின் பத்தியும்.. மறக்க முடியுமா?

இரண்டாவது ஓட்டு உங்களுடைய அனுபவ சிதறல்கள். அதிலும் முக்கியமா சொல்லனும்ன்னா உங்க ஊர் கதை.. உறவு கதை..

இதிலேயும் எல்லாமே சூப்பர்.. நான் ஏதாவது ஸ்பெஸிஃபிக்-ஆ சொல்லனும்ன்னு நீங்க அடம் பிடிச்சீங்கன்னா நான் சொல்லப்போறது உங்களை உங்க ஊரே அமெரிக்காவும் வழி அனுப்பி வச்சாங்களே.. அந்த கதைதான்.

கதை கவிதையும் அருமைதான்.. ஆனாலும், மேலே உள்ள ரெண்டு்தான் கலக்கலோ கலக்கல்.. (இப்பகூட உங்க பதிவையெல்லாம் திரும்ப திரும்ப படிக்கிறேன்..)

;-)

said...

ஏங்க சர்வே என்று சொல்லிட்டு Click Option இல்லாமல் வெறுமனே செய்திட்டீங்களே!!

முடிந்தால் மாற்றவம்.. நிறைய பேர் கலந்துகொள்வார்கள்.

நன்றி

said...

பிடித்தது
அமெரிக்காவுக்கு ஊரே வழியனுப்ப வந்த கதை

பிடித்த வகை
அனுபவச் சிதறல்கள்

said...

//me the first-uu again??//

athe athe :-)

said...

/என்னை மிகவும் கவர்ந்தது "ஈயடிச்சான் காப்பி" என்கிற போஸ்ட்தான். மோமெண்டோ கதையை வலையுலகில் தேடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக இந்த போச்ட்டை படித்தேன். ரொம்பவும் அழகாகவும் அட்ரெக்டிவ்-ஆகவும் இருந்துச்சு. உண்மையில் சொல்ல போனால், என்னை தமிழில் ப்ளாக் எழுத தூண்டிய போஸ்டே இதுதான்.//


இது நான் மறந்துவிட்ட பதிவு.. நினைவிற்கு கொண்டுவந்ததற்கு நன்றி மை பிரண்ட்

said...

//கார்த்திக் 65
கார்த்திக் சூப்
கார்த்திக்க் கைமா//

ஆஹா.. உங்க புனைபெயருக்கும் இந்த வகைகளுக்கும் 'பயங்கர' சம்பந்தம் இருக்கும் போல..

பயமா இருக்குங்கோவ்..

said...

//தலைவரே இன்னைக்கு முதலில் பின்னூட்டமிட்டதுக்கும், முதலில் சர்வே அழுதியதுக்கும் என்ன பரிசு தர போகிறீர்கள்? //

பரிசு? இதுக்கு நீங்களே ஏதாவது சர்வே வையுங்களேன் மைபிரண்ட்

said...

//1. ஏப்ரல் ஃபூல் காதல்
http://mkarthik.blogspot.com/2006/10/blog-post_03.html
(ஹாஹா...)//

ம்ம்ம்.. நான் பதிவில் எழுதிய முதல் கதைனு நினைக்கிறேன்..

இந்த கேள்வி எனக்கு பழைய பதிவுகளையும், உங்க எல்லோருடைய எண்ணங்களை கண்டுகொள்ள உதவும்னு நினைக்கிறேன் அரசி..

நன்றி, சர்வேல பதில் சொன்னதுக்கு

said...

//என்னுடைய முதல் ஓட்டு சினிமா பததிவுக்கு்த்தான்.. சிட்டுக் குருவி கலக்கிருச்சுல.. ;-) தலைவரே, சிட்டுக் குருவி வெளியூர் போயிருச்சா? ஆளையே காணோமே!!

அது மட்டுமா!! எத்தனை பதிவுகள் தல பத்தியும் அசின் பத்தியும்.. மறக்க முடியுமா?

இரண்டாவது ஓட்டு உங்களுடைய அனுபவ சிதறல்கள். அதிலும் முக்கியமா சொல்லனும்ன்னா உங்க ஊர் கதை.. உறவு கதை..
//


சிட்டுக்குருவி.. நீண்ட விடுமுறைல போயிருக்கு.. அநேகமா அடுத்த வாரம் வந்துடும்னு நினைக்கிறேன் மை பிரண்ட்..

எனக்கும் புடுச்சபதிவுல அதுவும் ஒண்ணு, மை பிரண்ட்

said...

//ஏங்க சர்வே என்று சொல்லிட்டு Click Option இல்லாமல் வெறுமனே செய்திட்டீங்களே!!

முடிந்தால் மாற்றவம்.. நிறைய பேர் கலந்துகொள்வார்கள்.
//

முதல் கேள்விக்கு குறிப்பிட்டு ஏதும் சொல்ல முடிகிற ஆப்சன்கள் இல்லாததால் கிளிக் ஆப்ஷன் வைக்கவில்லை சிவபாலன்

said...

//பிடித்தது
அமெரிக்காவுக்கு ஊரே வழியனுப்ப வந்த கதை

பிடித்த வகை
அனுபவச் சிதறல்கள்//

சர்வேல வந்ததற்கு நன்றி மணிகண்டன்..

அவ்வளவு நாளா படிக்கிறீங்களா நம்ம பதிவை..

said...

ரெண்டாவது கேள்விக்கு கிளிக் ஆப்ஷன் வைக்கலாமே

said...

1. கடவுளும் காதலியும்.... அப்டீன்னு ஒரு கவிக்கட்டுரை..

2. அனுபவச் சிதறல்கள்...

said...

adhukulla 16a?? :(

said...

enakku pidicha padhivu idhaan :))

apram 2nd question, anubhava sidaralgal thaan! next kadhai kavidhai. cos cinema news ku ellam neenga thaan venum nu illa paarunga! :) seri qns answer pannitten, soda anupunga!

said...

idhu vera ore conpeesan! munnadi potta comment vandhaacha? :-/

said...

விடைகள்

1. இந்த பதிவு!

2. கவிதை

said...

அடடா! கவித கலக்குது! எப்படி கார்த்தி! கலக்குங்க!

said...

அப்புறம் உங்க அனுபவ சிதறல்களும் பிடிக்கும்!

said...

1) konja naal munnadi pota kavikkaturai supera irundadhu

2) anubava katturai nalla anubavichu ezhudureenga. kavithais puriyura maathiri irukku. so indha rendume thaan ennoda ans :)

solla maranduttene... sittukuruvi cinema news is always fun too :)

said...

//ரெண்டாவது கேள்விக்கு கிளிக் ஆப்ஷன் வைக்கலாமே //

வைக்கலாம்.. பாதி பேர் வந்துட்டு போயிட்டாங்களே, அரசி!

said...

//adhukulla 16a?? //

:-)

said...

//enakku pidicha padhivu idhaan :))

//

ரியலி?

லொள்ளுங்க உங்களுக்கு, பொற்கொடி

said...

/seri qns answer pannitten, soda anupunga!
//
சோடாவா.. தோடா

said...

என்னது! 400 பதிவா! நமக்கு 40 பதிவுக்குள்ளேயே மூச்சு வாங்குது.வாழ்த்துக்கள்.

said...

//idhu vera ore conpeesan! munnadi potta comment vandhaacha? :-/ //

கவலையே வேண்டாம் பொற்கொடி.. சூப்பரா வந்துடுச்சு

said...

//விடைகள்

1. இந்த பதிவு!

2. கவிதை//

1. இந்த பதிவு! - > ரியலி ட்ரீம்ஸ்

said...

கார்த்திகேயன,

பொதுவாக உங்க பதிவு எல்லாம் நல்ல பதிவே! படிக்க சுவாரசியமாக இருக்கு!

குறிப்பாக சினிமா மற்றும் உங்க அனுபங்கள் சுவை பட எழுதுகிறீர்கள்!!

வாழ்த்துக்கள்!!

தொடர்ந்து எழுதுங்கள்!

said...

Chittu kuruvi ..

Cinema news.

said...

//அடடா! கவித கலக்குது! எப்படி கார்த்தி! கலக்குங்க!//

//அப்புறம் உங்க அனுபவ சிதறல்களும் பிடிக்கும்! //


நன்றி நன்றி ட்ரீம்ஸ்!

said...

//1) konja naal munnadi pota kavikkaturai supera irundadhu

2) anubava katturai nalla anubavichu ezhudureenga. kavithais puriyura maathiri irukku. so indha rendume thaan ennoda ans :)

solla maranduttene... sittukuruvi cinema news is always fun too :)

//

Thanks Arun..

I think I can resume the cinema news again :-)

said...

//என்னது! 400 பதிவா! நமக்கு 40 பதிவுக்குள்ளேயே மூச்சு வாங்குது.வாழ்த்துக்கள்.

//

வாழ்த்துகளுக்கு நன்றி ஜோ

said...

//பொதுவாக உங்க பதிவு எல்லாம் நல்ல பதிவே! படிக்க சுவாரசியமாக இருக்கு!

குறிப்பாக சினிமா மற்றும் உங்க அனுபங்கள் சுவை பட எழுதுகிறீர்கள்!!

வாழ்த்துக்கள்!!

தொடர்ந்து எழுதுங்கள்!
//

உற்சாக வாழ்த்துகளுக்கு நன்றி சிவபாலன் :-)

said...

//Chittu kuruvi ..

Cinema news//

Hey madhu.. marupadiyum pOttuttaa pochchu..

said...

1.அமெரிக்காவுக்கு ஊரே வழியனுப்பிய கதை.. simply superb. romba sarichathu.

2.அனுபவச் சிதறல்கள் - antha flow, classa eluthivinganna, nijathula nerla ketkara mathiri irukum.

said...

உங்களுடைய பழைய பதிவுகளை மீண்டும் வாசிக்க இப்படி ஒரு உத்தியா?

எல்லாவற்றையும் இன்னொருமுறை படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்.
:-)))

said...

mine is mudhalamaichar mu.ka and adi bhavana kaiya taatu :)

rendavathu answer is all the above :)

said...

//அவளை
கண்டவுடன்
நாய் மாதிரி
வாலாட்டியும்,
குதிரை மாதிரி
கடிவாளம் போட்டும்,
பூனையைப் போல
பதுங்கி பதுங்கி
நடக்கிறதே
என் மனசு?//...yes..yes..adhe dhaan Maams :)

said...

400??? :O U meant 40? :P Or 400?
400'na unmayavey periya vishayam :) Great! And congrats! 500'ku vizha vechuduvoma ;)

Enaku pudichathu.. Posts reminiscing abt olden days..Like the pongal post unga oora pathi ellam potruntheengaley..Apram tht road post abt the sculptures.. :)

said...

survey idea super thala...naamala improve panna vaikka nalla chance

unga post la pidithadhu kavidhai nadai dhaan...pinreenga...nalla karpanaigal...a dedicated writing in thamiz. adhukkae ungalukku oru HATS OFF.

keep writing...ungalukku engal aaadharavu eppavum undu

said...

என்னது 400 ரா ... நம்ப முடியவில்லை !
அப்ப அப்ப வந்து போவதுண்டு ... அனுபவ சிதறல்கள் பிடிக்கும்

said...

ஈ. அனுபவச் சிதறல்கள்
is my pashtu choice. nestu kavithais.

said...

//1. ஹிஹி என்னை பத்தி போட்ட பதிவு:)ஆனாலும் உங்க அனுபவங்களை பத்தின பதிவுகள் எல்லாமே ரொம்ப பிடிக்கும் கார்த்திக்:)

2. நீங்க எழுதறதுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது கவிதை தான் :)ஏன்னா உங்களால கவிதை மட்டும் எழுதாம இருக்க முடியாது சரியா? அதை நிரூபிக்கிற மாதிரி இங்கேயும் ஒரு கவிதை எழுதியிருக்கீங்க:)

//


ஹிஹிஹி..நல்ல தேர்வுக்கு நன்றிங்க கொ.ப.செ

said...

//எனக்கு மனதில் நிற்கும் இரண்டு பதிவுகள் இவை தான் கார்த்திக்,

ஒரு பிச்சைக்காரன் என் நண்பன் ஆகிறான்

நான் உணர்ந்த கடவுளும், என்னுள் விளைந்த காதலும் //

வாவ்.. எனக்கும் வேதா.

said...

//அனுபவச் சிதறல்கள் - antha flow, classa eluthivinganna, nijathula nerla ketkara mathiri irukum. //


ஓ.. நன்றிம்மா தங்கச்சி..

said...

//உங்களுடைய பழைய பதிவுகளை மீண்டும் வாசிக்க இப்படி ஒரு உத்தியா?

எல்லாவற்றையும் இன்னொருமுறை படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்//

பாலராஜகீதா,

மறுபடியும் எல்லாவற்றையும் படிக்கிறீங்களா..

நன்றிங்க

said...

/mine is mudhalamaichar mu.ka and adi bhavana kaiya taatu :)//

appadip podu, mapla..

//rendavathu answer is all the above :) //

hehehe..thanks mapla

said...

//yes..yes..adhe dhaan Maams//

:-)

said...

//Enaku pudichathu.. Posts reminiscing abt olden days..Like the pongal post unga oora pathi ellam potruntheengaley..Apram tht road post abt the sculptures.. //

நன்றிங்க பொன்னா.. எப்படி ஞாபகம் வச்சு சொல்ற அளவுக்காவது நம்ம பதிவுகள் இருக்கே..

said...

/survey idea super thala...naamala improve panna vaikka nalla chance//

ஆமாங்க மாமு.. நம்மளோட நிறைகள் தெரியிறதை விட, குறைகளை தெரிஞ்சுக்கணும் இல்லையா, நம்மை நாமளே முன்னேற்ற :-)

said...

//என்னது 400 ரா ... நம்ப முடியவில்லை !
அப்ப அப்ப வந்து போவதுண்டு ... அனுபவ சிதறல்கள் பிடிக்கும் //

நன்றி சுந்தர்..

Anonymous said...

//மனம்
ஒரு குரங்குன்னு
சொன்னவன்
யாரென்று
தெரிந்தால்
என்னிடம் சொல்லுங்கள்..

அவளை
கண்டவுடன்
நாய் மாதிரி
வாலாட்டியும்,
குதிரை மாதிரி
கடிவாளம் போட்டும்,
பூனையைப் போல
பதுங்கி பதுங்கி
நடக்கிறதே
என் மனசு? //

அப்போ உங்கள் மனசு ஒரு மிருகம் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்.

என்னே பெருந்தன்மை..
ஹிஹிஹி..

இது எப்படி இருக்கு?

said...

வணக்கம் தலைவா...
1. அம்மா அப்பாவும் ஒரு 4000 டாலரும்
http://mkarthik.blogspot.com/2006_12_01_archive.html
1.1 நடுங்கியபடி நான், நாணியபடி அவள் - காதலர் தின ஸ்பெஷல் 1

எனக்கு இதுதான் 2ம் தான் டக்குன்னு மனசுக்குள்ள வந்துச்சி...

2. ஈ. அனுபவச் சிதறல்கள்

பிறகு சினிமா...

said...

//ஈ. அனுபவச் சிதறல்கள்
is my pashtu choice. nestu kavithais//

ஓ.. நன்றி அம்பி..

உங்க அனுபவமெல்லாம் எப்படி போகுது அம்பி :-)

said...

//அப்போ உங்கள் மனசு ஒரு மிருகம் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்.
//

காதல் கொண்ட மனசு..ஒன்று குழந்தையாகும்.. இல்லையெனில் மிருகமாகும்.. சொன்னது சரி தான் அனான்.. உங்க பேரை சொல்லலாமே அனான்

said...

/வணக்கம் தலைவா...
1. அம்மா அப்பாவும் ஒரு 4000 டாலரும்
http://mkarthik.blogspot.com/2006_12_01_archive.html
1.1 நடுங்கியபடி நான், நாணியபடி அவள் - காதலர் தின ஸ்பெஷல் 1

எனக்கு இதுதான் 2ம் தான் டக்குன்னு மனசுக்குள்ள வந்துச்சி...

2. ஈ. அனுபவச் சிதறல்கள்

பிறகு சினிமா...

//


நான் இதெல்லாம் எழுதினேனா என்று மறந்தே போய்விட்டது கோபி.. நினைவில் கொண்டுவந்தமைக்கு நன்றி கோபி

said...

ம்ம்ம், காதலர் தினத்தன்னிக்கு வந்து பார்த்தேன் ஒண்ணுமே இல்லை, அப்புறம் வரலாம்னு போயிட்டேன். நேத்து வர முடியலை. ஒரு முக்கியமான வேலை இருந்தது. உங்க போஸ்ட்களிலே உங்களோட அனுபவங்கள் தான் என்னை ரொம்பவே கவர்ந்தது, இப்போ கவிதையும் ஆரம்பிச்சிருக்கீங்க, நல்லாவே வருது. கலக்குங்க கார்த்திக், புது ப்ளாக்கர், புதுக் கவிதை, பிரமாதம்!!!!!!! :D
400 பதிவுகள் போட்டதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள். மேன்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவார்.

said...

//400 பதிவுகள் போட்டதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள். மேன்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவார். //

ஒரு தலைவியிடம் இருந்து தொண்டனான எனக்கு வேறு என்ன வேண்டும்.. வாழ்த்துக்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றிங்க தலைவியே

said...

1- டக்குனு நியாபகத்துக்கு வரல :-)

2. அனுபவ சிதறல்கள், கதை :-)

said...

நான் 400ல ஒரு 50-60 தான் படிச்சிருப்பேன். அதுல உங்கள ஊரே வழியனுப்பிய பதிவு பிடித்தது.
மற்றும் பயணப் பதிவுகள் எல்லாம்.

2வது - அனுபவப் பதிவுகள்

பிடிக்காதது (may be little strong, shall I say disinterested): அஜித்துக்கு கொடுக்கும் hype (IMHO).

Cheers
SLN

Anonymous said...

ஊர் பற்றிய நினைவுகள்...பொதுவாக உங்கள் அனுபவப்பதிவுகளில் எனக்கு நாட்டம் அதிகம்... வாழ்த்துக்கள் கார்த்தி

said...

சந்தேகமென்ன அனுபவச்சிதறல்கள்தான்

கடைசியில் பொட்டிப் பாம்பாக அடங்கியும்விடுகிறதே அவளப்பார்த்தால் அதைச் சொல்லவே இல்லயே.
வாழ்த்துக்கள்

said...

//1- டக்குனு நியாபகத்துக்கு வரல :-)

2. அனுபவ சிதறல்கள், கதை :-) //

ஷ்யாம், உங்க குறும்பே குறும்பு

said...

//பிடிக்காதது (may be little strong, shall I say disinterested): அஜித்துக்கு கொடுக்கும் hype (IMHO).
//

நீங்கள் மனசுல பட்டதை சொன்னீங்க பாத்தீங்களே, அதுவே போதும் SLN. நிச்சயம் குறைச்சுக்கிறேன் சில சமயம் கொஞ்சம் மீறிட்டா பொறுத்துக்கோங்க SLN

said...

//ஊர் பற்றிய நினைவுகள்...பொதுவாக உங்கள் அனுபவப்பதிவுகளில் எனக்கு நாட்டம் அதிகம்... வாழ்த்துக்கள் கார்த்தி//

நன்றிங்க தூயா!!

said...

//கடைசியில் பொட்டிப் பாம்பாக அடங்கியும்விடுகிறதே அவளப்பார்த்தால் அதைச் சொல்லவே இல்லயே.//
கல்யாணம் ஆகிருந்தால் இப்படி சொல்லியிருப்பேனோ.. அனுபவசாலி நீங்கள் சொன்னால் சரியாத் தானிருக்கும்


//வாழ்த்துக்கள் ///
வாழ்த்துக்களுக்கு நன்றி தி.ர.சா

said...

அனுபவச்சிதறல்களும் சினிமாப்பதிவுகளும் தான். சினிமா பத்தின செய்திகள முந்தி தருவது கார்த்தியின் கனவுலகம். keep it up

said...

அது சரி. அது யாரு ஆவி அம்மணி-நமக்கு போட்டியா??

said...

//அனுபவச்சிதறல்களும் சினிமாப்பதிவுகளும் தான். சினிமா பத்தின செய்திகள முந்தி தருவது கார்த்தியின் கனவுலகம். keep it up //

ஹிஹிஹி.. நன்றிங்க சின்ன அம்மணி

said...

/அது சரி. அது யாரு ஆவி அம்மணி-நமக்கு போட்டியா?? //

அது தானே.. யாருப்பா அது?