Saturday, May 22, 2010

பலே ஜெயலலிதா மேடம்

மின்சார வெட்டுக்கள், விலைவாசி உயர்வுகள், குள ஆக்கிரமிப்புகள், காலாவதி அதிர்ச்சிகள் என்று மக்களுக்கு நாளுக்கு நாள் அதிர்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்க, புதியதாய் மாபெரும் விஷயத்தை கையெலெடுத்து போரட்டம் செய்ய தன் படைகைளை ஏவியிருக்கிறார், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியின் தலைவர், தமிழ் நாட்டை இரு முறை ஆண்ட செல்வி ஜெயலலிதா அவர்கள். என்ன போராட்டம், தலைமைசெயலக ஊழியர்கள் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் தாக்கியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பது..(ஏனைய பெரும் போராட்டங்கள் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்துகொண்டிருப்பீர்கள்)

இன்னமும் குளிர் அறையில் இருந்து உலகம் பார்த்து அரசியல் நடத்துகிறார் பாவம், கடந்த நாடாளுமன்ற தேர்தல் தந்த பாடம் கூட இன்னும் சுட்டிக்காட்டபடவில்லையோ என்னவோ.

சிறிதாவூர் நில ஆக்கிரமிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா அவர்களை விடுவித்திருக்கிறார்கள். தாசில்தாரர் இடம் மாற்றிய போது, ஆட்சியில் யார் இருந்தார்கள்? அவனவன் ஒரு கார்பரேட் கம்பெனி போல ஒவ்வொரு ஆண்டு தனது நிறுவனத்தின் மதிப்பை கூட்ட 'என்னவெல்லாமோ' செய்துகொண்டிருக்க, இன்னும் காக்கை உட்கார பனம் பழம் விழுமா, ராஜிவ் இறப்பில் மகுடம் சூட்டியது போல காத்திருப்பது விந்தைக்குறியது.

தனெக்கென்று ஒரு சேனல் வைத்துகொண்டு அதில் தன்னை பற்றியே பேசிக்கொண்டு, கிணற்று தவளை மாதிரி இருப்பது, இப்படியொரு ஆலமர கட்சி அடிசாய போகிறதே என்று, லட்சக்கணக்கான அநுதாபிகள் கண்ணீர் விடுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதை தான் குறிக்கிறது.

எதிர்கட்சி சிறந்திருந்தால்,செயல்பாட்டோடு இருந்தால் நிச்சயம் மக்கள் நலம் பெறுவர். பெறுவோமா?

நடிகர் விஜயின் 'தல'க்கு மேல் கத்தி


அடுத்தடுத்து ஆதி முதல் சுறா வரை (போக்கிரி மட்டும் இதில் விதிவிலக்கு) மொக்கை படங்களாய், அரசியல் ஆசை காரணமாய் அவசர அவசரமாய் எடுத்த எல்லா படங்களும், செல்போன் நிறுவனங்களுக்கு மட்டும் லாபம் தந்து, தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு போட வைத்ததால், இன்று கூடும் அதன் சங்க உரிமையாளர்கள் மிகவும் முக்கியமான முடிவுக்கு (தங்கள் சங்கத்திற்கு இலவசமாக ஒரு படம் இல்லை ரெட் கார்டு) வர இருக்கின்றனர். ஏற்கனவே ஆதி படத்தின் போது இதே போல ஒரு பிரச்சினை ஏற்பட்டது. எப்படியோ சமரசம் செய்து, சரிசெய்தார்கள். இப்போது மறுபடியும்?

ஒவ்வொரு முறையும் அடுத்த படத்தில் சம்பாதித்து விடலாம் என்றும் ரசிகர்களை போல நம்பிக்கொண்டிருந்த இவர்களுக்கு, சுறா பெரிய ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் வேலைக்கு ஆகாது இன்று நினைத்து விஜய்க்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருகின்றனர்.

தியேட்டர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கும், இவ்வளவு காலமா என்ன பாஸ் பண்ணிகிட்டு இருந்தீங்க? சுறாவுக்குமா அதிக விலை கொடுத்தீங்க?

விஜய் சார், தியேட்டர் ஆபரேட்டர் முதல் உங்கள் 'குட்டி' ரசிகர்கள் வரை எல்லோரும் கடுப்பாகி இருக்கின்றனர்.. வித்தியாசமா ஏதாவது பண்ணுங்கண்ணா..

கௌதம் சாருக்கு திருப்பாச்சி, சிவகாசி டிவிடி பாக்கத்தானே கொடுத்தீங்க?
ஆமா, ராகுல் கிட்ட உங்கப்பாவுக்கு கவர்னர் போஸ்ட் கேட்டீங்களாமே, உண்மையா.. பாத்துங்கண்ணா உங்களை பத்தி இப்படித்தான் நிறைய நியூஸ் வருது..

இனிமேலாவது நல்ல படம் கொடுங்கண்ணா..

Friday, May 21, 2010

ரஜினியின் ஆங்கிலம்

ரஜினியின் படங்களில், ஆரம்பித்தில் இருந்து இன்று வரை பல விஷயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும், பாம்பு, கராத்தே ஸ்டைல், முக்கியமாக ஆங்கிலம் பேசுற ஸ்டைல் என்று பெரிய பட்டியல் நீளும்.

ரஜினியின் ஆங்கிலம் பேசும் விதத்தில், இன்னமும் மனசில் நிலைத்த படம் குரு சிஷ்யன். படம் நெடுக ரஜினி காமெடி சரவெடி வெடித்துக் கொண்டிருப்பார். இன்னமும் குரு சிஷ்யன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்தால், சேனல் மாற்றாமல் ரசிப்பது உண்டு. ஒவ்வொரு முறையும் அவர் ஆங்கிலம் தெரிந்த மாதிரி எதையாவது பேச, மற்றவர்கள் முழிக்க, அப்படியொரு படம் வந்தே நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்து இன்றும் மனதில் நிற்கும் வசனம் "Mr. Paramasivam, I want to know, No or Yes". படம் பாருங்கள் நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.

குரு சிஷ்யன் தவிர, வேலைக்காரன் வசனம் "I can talk English, I can walk English, I can swim English" மிகவும் பிரபலமானது.

அண்ணாமலை, உழைப்பாளி போன்ற படங்களில் ரஜினி ஆங்கிலம் பேசுவதும், அதை அவர் குழப்பி அடிப்பதும் எல்லோராலும் ரசித்த ஒன்று. இப்படி இவர் படங்களில் ஆங்கிலத்தை குழப்பி அடிக்க, ஷங்கரின் சிவாஜி என்னை ஆச்சரியப்படவைத்தது. ஆம். நுனி நாக்கில் ரஜினி ஆங்கிலம் பேசியது முற்றிலும் வித்தியாசம் தான். எப்படி அவர் ஆங்கிலம் பேசத் திணறியது மிகவும் ரசிக்கப்பட்டதோ அதே போல், அவரின் சரள ஆங்கிலம் வெகுவாக ரசிக்கப்பட்டது என்பது உண்மை. Cool Buddy!

சிவாஜியிலே அப்படி என்றால், எந்திரனில். எல்லா ரசிகர்களுடன் நானும் எதிர்பார்ப்பில்.

Wednesday, May 19, 2010

சென்னை குளிர்கிறது

வரப்போகிறது, விரைவில் வந்துவிடும் என்று எதை சொன்னார்களோ அது இப்போது வந்துவிட்டது என்றே நினைகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அனலாய் சுட்டெறித்த அக்னிக் கோடை, லைலா (பெயர் தான் காரணமோ) என்ற புயல் வந்து சென்ற பிறகு குளிர்கிறது. உண்மையாய் இந்த இரவு என்னால் போர்வை உதவி இல்லாமல் உறங்க முடியவில்லை. தட்ப வெட்ப சூழ்நிலை மெதுவாய் மாற ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி அனலாய் தகிக்கும் என்று நினைக்கிறேன்
பெரிய்ய்ய்ய்ய பதிவு இடமுடியவில்லை என்றாலும் இதுமாதிரி சிறிதாய் எழுதலாமென்ற எண்ணத்தில் மறுபடியும் ஆரம்பிக்கிறேன்.
எல்லோருக்கும் எனது வணக்கங்கள்