Showing posts with label சிட்டுக்குருவி. Show all posts
Showing posts with label சிட்டுக்குருவி. Show all posts

Friday, October 26, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 20 [சூடான சினிமா பகுதி]

ஹலோ கார்த்தியா.. நான் ஏஞ்சல் பேசுறேன்..

(ஏஞ்சலா? குரலே தேன்ல குழச்ச மாதிரி இருக்கே.. நம்ம வாழ்கையிலும் வசந்தமா..வெயிட் வெயிட்.. இது எங்கயோ கேட்ட குரலா இருக்கே..ஆஹா.. நம்ம சிட்டுக்குருவி லவ்வர் வாய்ஸ்ல.. அடப்பாவி.. )

எப்படி இருக்க ஏஞ்சல்.. நம்ம சி.குவுக்கு என்ன ஆச்சு.. நீ பேசுற..

கார்த்தி..மொதல்ல சி.குன்னு கூப்பிடறதா நிறுத்துறியா? ஏதோ லக்கிமேன்ல, எமன் வேஷத்துல வர்ற கவுண்டமணி சித்ரகுபதனா வர்ற செந்தில் ஷார்ட்டா சி.குன்னு கூப்பிடுற மாதிரி இருக்கு..

இல்ல ஏஞ்சல்.. பாசமா சுருக்கமா கூப்பிட்டேன்..

அதுக்குத் தான், ப்ரின்ஸ்ன்னு பேர் வச்சிருக்கோம்ல.. அதை வச்சு கூப்டா போதும்..

சொல்லவே இல்ல..

நீ கேக்கவே இல்லியேப்பா..

உன் பிளாக் நண்பர்கள்கிட்ட மட்டும் கேட்ட..எங்க கிட்ட கேட்டியா.. அது தான் நாங்க எங்களுக்கே புது பேர் வச்சிருக்கோம்.. சரி.. அதைவிடு.. இன்னைக்கு சாயந்தரம் உங்க வீட்டுக்கு கும்மி அடிக்க வர்றோம்.. நம்ம ஸ்பெஷல் தெரியும்ல ரெடியா இருக்கணும் என்ன என்று சொல்லிட்டு, என் பதிலுக்கு கூட காத்திருக்காம டொக்குன்னு போனை வச்சது ஏஞ்சல்..

எல்லாம் நம்ம நேரந்தான்னு நினச்சுகிட்டேன்..

சாயங்கால வேளை..

நம்ம சிட்டுக்குருவிகள் ரெண்டு பேருமே வெஜ் ஆளுக.. அதனால இந்த தடவை நம்ம ஊரு பாசி பயறை ஊற வச்சு, குக்கர்ல ஒரு விசில் வச்சு, தேன் ஊத்தி வச்சிருக்கேன்.. இது ஏஞ்சலுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு நம்ம சிட்டுக்குருவி சொல்லியிருக்கு..பேருக்கேத்த மாதிரி தான் ரெண்டு பேரும் வந்திருந்தாங்க... ஏஞ்சல், வின்ங்க்-லெஸ் (ஸ்லீவ்-லெஸ்) ரெட் ஜாக்கெட் போட்டுகிட்டு, பாரதிராஜா பட தேவதை மாதிரியும், நம்மாளு கேப், கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுகிட்டு வந்தாங்க.. அப்படியே ஜோதிகா-சூர்யா மாதிரி இருந்தாங்க.. ஆனா அவங்க கிட்ட சொல்லல.. ரொம்ப மேல ஏறிக்குவாங்க ரெண்டு பேரும் (பொறாமைபடாதடா கார்த்தி)

இன்னைக்கு என் டார்லிங் தான் எல்லா சினிநியுஸும் சொல்லப்போறா.. பயங்கர பிரிபரேஷன்ல வந்திருக்கா.. (கல்யாணம் ஆன பிறகு மனுஷங்களை மாதிரி நீயும் பெண்டாட்டி முன்னால பேசுறத நிறுத்திட்டியேப்பா குருவி)

தொண்டையை கனச்சுகிட்டு ஏஞ்சல் மேட்டரை சொல்ல ஆரம்பிச்சது..

ரொம்ப ஆவலா எதிர்பார்த்த ஷங்கர்-ஷாரூக் காம்பினேஷனோட ரோபட் சொத்துன்னு ஆயிடுச்சு.. ஷாரூக் அந்த படத்திலிருந்து விலகிட்டதா சொல்லிட்டார்.. இனி ஷங்கர் அடுத்த நடிகர் கிட்ட போவாரா இந்த கதையோட இல்ல வேற கதை ரெடி பண்ண போறாரான்னு தெரில..

இதை விட பெரிய நியூஸ், நம்ம ஷ்ரேயா (என்னை மாதிரி கியூட்டா இருக்கும்ல அந்த பொண்ணுன்னு ஏஞ்சல் சொல்ல, நம்ம சிட்டு குருவி அதை கொஞ்ச..கட் கட் கட்.. நம்ம ஸ்டொமக் பேர்னிங் சாமி) ஹாலிவுட் படத்துல நடிக்க போறாங்களாம்.. அதுவும் ஹிரோயினா.. அவங்க காட்ல மழை தான்.. தமிழ்நாட்ல சூப்பர் ஸ்டார் முதல் வைகை புயல் வரை ஆட்டம் போட்டாச்சு.. இப்போ அமெரிக்க பக்கம்..ம்ம்

சிம்பு தன்னோட கெட்டவன் படத்தை இப்போதைக்கு தள்ளி வச்சுட்டாராம்.. அடுத்து சிலம்பாட்டம் படத்துல நடிக்க போறாராம்.. அனேகமா வல்லவன் படத்துக்கு பிறகு அவருக்கு எந்த படமும் வரலைனு நினைக்கிறேன்.. காள எப்போ தியேட்டரை முட்ட வருதோ தெரியல..

ஒரு வழியா தசாவதாரம் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சது.. இப்போ கடைசி கட்ட தொழில்நுட்ப வேலைகள் நடக்க ஆரம்பிச்சிடுச்சு.. அதனால, கமல் தன்னோட அடுத்த படத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டார்.. படத்தோட பேர் மர்மயோகி.. பழைய எம்.ஜி.ஆர் படத் தலைப்பு தான்.. இந்த வரலாற்று படத்தை கமலே இயக்குகிறார், ரிலையன்ஸ் நிறுவனதிற்காக..

ம்ம்..கார்த்தி..உங்க தலயோட பில்லா படம் நவம்பர் 30க்கு தான் வருதாம்..பாட்டெல்லாம் நவம்பர் 15 வெளியிட பிளான் பண்ணியிருக்காங்க.. இன்னைக்கு எல்லா திரைப்பட தளங்கள்லயும் பில்லா படத்தோட ஸ்டைலானா ஸ்டில்கள் தான்.. படமெல்லாம் அசத்தல வந்திருக்காம்.. சந்தோசமா (நான் சிரித்தேன்)

இன்று வெளியான சில பில்லா ஸ்டில்கள்






இன்னைக்கு தான உன் அசினோட பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டியா இல்லியா.. சொல்லாம இருப்பியா.. உன் கனவுல அசின் வந்து முதமெல்லாம் வாங்கி கிட்டதா என் பிரின்ஸ் கிட்ட சொன்னியா.. என் பிரின்ஸ் சரியான ஏமாளி.. நீ சொன்னதை நம்பிகிட்டு ஊரெல்லாம் சொல்லுது.. (உன்னை.. ஏஞ்சலை அடிக்க கை ஓங்கினேன்)

அசின் பிறந்தநாளிற்காக...





பேசிக்கொண்டிருந்த போதே சிட்டுக்குருவி மெதுவா ஏஞ்சலை கிள்ளியது.. என்னடான்னு கேட்டா, அடுத்த அப்பாயிண்ட்மென்ட் அவங்களோட நண்பர் வீட்ல டின்னராம்.. சொல்லிகிட்டே சிறகடிச்சு பறந்து போயின இரண்டும்..ம்ம்.. காதல் பறவைகள்

Wednesday, April 25, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 19 [சூடான சினிமா பகுதி]

ரொம்ப நாள சிட்டுக்குருவி வராததால, நாமளே இன்னைக்கு ஏன் சினி பிட்ஸ் எழுதக்கூடாதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். எப்படித் தான் நான் யோசிச்சது சிட்டுக்குருவிக்கு தெரிஞ்சதோ தெரில, இன்னைக்கு வர்றேன்னு வாய்ஸ் மேஸேஜ் விட்டிருந்தது.. நம்ம குருவியோட பஞ்சுவாலிட்டி தான் தெரியுமே.. கரெக்டானா நேரத்துக்கு வந்தது.. அதுக்காக ஜன்னலை திறந்துவிட்டப்போ தான் அந்த ஆச்சரியமான இன்னொரு ஆளை பார்த்தேன்.. சிட்டுக்குருவியோட காதலி.. என் கிட்ட அறிமுகம் பண்ணிவைக்க சொன்னுச்சாம். அட! நாம அவ்வளவு பெரிய ஆளா என்று நினைக்கிறப்பவே நைசா காதுல வந்து சிட்டுக்குருவி சொன்னுச்சு..மகனே இன்னைக்கு உனக்கு ராடு தான்.. நீ அடிக்கடி எனக்கு போன் பண்ணி தொல்லை பண்றேன்னு, நம்மாளு கோபத்துல இருக்கு. உன்னை நேர்ல பாத்து நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்விகேட்கலாம்னு வந்திருக்கு.. என்ன கொடுமை இது ACE!

இன்னைக்கு எப்படியாவது சிட்டுக்குருவியோட கைல இருந்து தப்பிக்கணுமே.. புதுசா ஏதாவது திட்டம் போடுடா கார்த்தின்னு மனசு சொன்னுச்சு.. சரி.. ரெண்டு பேரும் புதுசா வந்திருக்காங்க.. ஏதாவது ட்ரீட் அரெஞ்ச் பண்ணி அசத்திடவேண்டியது தானேன்னு டக்குன்னு ஒரு பிளான் போட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் ஜோடியா வந்திருக்கீங்க.. உங்க ரெண்டு பேருக்கு இன்னைக்கு ட்ரீட் நான் தர்றேன் அப்படின்னி சொன்னேன்.. உடனே சிட்டுக்குருவியோட காதலி ஒரு லுக் விட்டுச்சு பாருங்க.. பக்கத்துல இருந்த டேபிள் லேம்ப் படார்ன்னு வெடிச்சது.. ஏன் ஏன் இந்த கோபம்னு கேட்டேன்.. நீங்க ட்ரீட் தர்ற லட்சணம் தான் இந்த உலகத்துக்கே தெரியுமே.. எல்லோருக்கும் ட்ரீட் தர்றேன்னு கூட்டிட்டு போய், நீங்களெள்ளாம் ரவுண்ட் கட்டி ஹோட்டலை காலி பண்ணிட்டு, பில்லை மட்டும் அந்த பச்சபுள்ள பில்லு பரணிகிட்ட கொடுத்துடுவீங்க.. அவனும் எத்தனை நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே உங்க பில்லையெல்லாம் கட்டுவான்னு நம்மளை பாத்து ஒரு கேள்வி கேட்டுச்சு.. இங்க பாருங்கடா! மாப்ள பரணி பில்லு ஆனது அகில உலக ஜீவராசிகள் எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கேன்னு நமக்கு ஒரு ஆச்சர்யம்!

சரி..சரி.. வந்த வேலையை கவனிங்க.. வெட்டியா இந்தாளு கூட என்ன பேச்சுன்னு (இவிங்க எப்பவுமே இப்படித் தான்) காதலி சொல்ல, பரபரப்பா நியுஸை சொல்ல ஆரம்பிச்சது சிட்டுகுருவி.. சரி.. நாம மக்களுக்காக எப்படி எல்லாம் உழைக்கிறோம்.. இத்தனை அடிகளான்னு நினச்சுகிட்டேன்..

முக்கியமான விஷயத்தை கடைசில சொல்றேன்ன்னு ஒரு சின்ன சஸ்பென்ஸோட ஆரம்பிச்சது சிட்டுக்குருவி.. நாம பல தடவை கேட்டும் அதை கடைசில தான் சொல்வேன் சொல்லிடுச்சு..

இந்த பாலா நான் கடவுளை எப்பத்தான் முடிப்பாரோ.. அந்த புராஜெக்டை விட்டு அஜித் வெளியேறி(யேற்றப்பட்டு) ஒரு வருஷம் ஆகப் போகுது.. இன்னும் படம் முடிஞ்சபாடு இல்லை.. கால்ஷீட்டெல்லாம் வேஸ்ட்டாகுதுன்னு (இல்லைனா, பில்லு பரணி மாப்ள கூடவாவது ஊர் சுத்தியிருப்பேன்) பாவனா சொல்ல, இப்ப புது ஹிரோயின்களை தேர்ந்தெடுக்கிறார் பாலா.. கூடிய விரைவில், அதற்கான அறிவிப்பு வரும் போல தெரியுது..

சூர்யா, கௌதமோட இயக்கத்துல வாரணம் ஆயிரம் படத்துல நடிக்கிறது எல்லாருக்கும் தெரியும். ஷூட்டிங் கூட ஸ்டார்ட் ஆகப்போகுது.. இதுக்கு இடைல, அதே நேரத்துல, ஹரியோட இயக்கத்துல வேல் படத்துலையும் நடிக்கப்போறார். கஜினி வெற்றிக்கு பிறகு அசின் ஜோடி சேர்றார் நம்ம அசின்.. கஜினியோட ரீமேக்ல அமீர் ஜோடியா அசின் நடிக்க போறது எல்லோருக்கும் தெரியும்.. மெல்ல நம்ம கோலியுட்டை விட்டு பாலிவுட்டுக்கு பறக்குது அசின் கிளி.. கிளிக்கு றெக்கை முழைச்சுடுச்சு.. பறந்துடுச்சுன்னு தமிழ் மக்கள் கதறப் போறாங்க.. நானும் அப்படின்னு சிட்டுக்கிருவி வழிய, பக்கத்துல உட்கார்ந்திருந்த சிட்டுக்குருவியோட லவ்வர், கைல கிடச்ச வாட்டர் கேனை தூக்கி எறிந்தது, செல்லமா.. (போடி..இந்த வழிசலுக்கு உனக்கு ஆப்பு இருக்குன்னு சிட்டுக்குருவியை பார்த்து சொன்னேன்)

இம்சை அரசனுக்கு பிறகு, இந்திரலோகத்தில் நா அப்பாசாமிங்கிற படத்துல வடிவேலு ஹீரோவா நடிக்கிறதா இருந்தது. பல காரணத்தினால அது தள்ளி போயி ட்ரொப்பும் ஆகிடுச்சு. இப்போ அந்த புராஜெக்டை செவந்த் சேனல் நாராயணன் தயாரிக்கப் போறார். அடுத்த மீழு நீள காமெடி படம் ரெடியாகப் போகுது..

இதை சொலி முடிச்சிட்டு பார்த்த சி.குவோட லவ்வர் கௌச்சுல நல்லா கால் நீட்டி தூங்க ஆரம்பிச்சிடுச்சு..

கமெர்சியல் டைரக்டர் (திருப்பதி, தர்மபுரிக்கு பிறகு அப்படி கூப்பிடலாமா) பேரரசு இப்போ பரத்தை வச்சு அடுத்த படத்தை எடுக்கிறார். படத்து பேரு பழநி.. (மக்களே.. உங்க ஊர் பெயரை அனுப்பி வையுங்க.. அடுத்த பட டைட்டிலுக்கு பேரரசு யோசிப்பார்). முக்கிய வேஷத்துல நடிக்க நதியாவை கேட்டிருக்காங்க.. படத்துக்கு இசை ப்ரூ காப்பி..சாரி..ஸ்ரீகாந்த் தேவா.. வரிசையா நல்ல படங்களை தந்து கேரியர் கிராப் நல்லா போயிகிட்டு இருக்க பரத்துக்கு இந்த படம் அடுத்த லெவலுக்கு ஏற்றுமான்னு பாக்கலாம்.. மறந்தே போயிட்டேன்.. இந்த படத்தோட டேக் லைன் கமர்ஷியல் பஞ்சாமிர்தம்..

நீங்க சொல்றதெல்லாம் இருக்கட்டும்.. ஜூன் மாசக் கடைசில ஜோதிகா அம்மா ஆகிறார்.. சூர்யா அப்பாவாகிறார்.. அடுத்த மாதம் தி.நகர்ல இருக்க அவங்க வீட்ல ஜோதிகாவுக்கு வளைகாப்பு நடக்குது.. இந்த நிகழ்ச்சில பாட்டு பாடுவாரா சூர்யா?

யாரு இது புதுசா நியூஸ் சொல்றதுன்னு பார்த்தா, அட நம்ம சிட்டுக்குருவியோட லவ்வர்.. அதுவும் சினி நியூஸ் சொல்ல ஆரம்பிச்சிடுச்சேன்னு ஒரு சந்தோசம் (எப்படி அது மனசு மாறுச்சுன்னு கேட்கப்படாது.. கிளைமாக்ஸ் வந்திடுச்சுல..)

இப்ப நான் சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னென்னா, சிவாஜி படம் மே 17-இல் ரிலீஸ் ஆகுறது உங்க எல்லோருக்கும் தெரியும்.. நம்ம கொலம்பஸ்லயும் படம் அதே நாள் ரிலீஸ் ஆகுது.. (ஷங்கர் மறுபடியும் டேட்டை தள்ளி வைக்காம இருந்தா) அருண், டிக்கட் வேணுமா.. இப்பவே சொல்லுப்பா.. சூடம் ஏத்தி தேங்காய் உடச்சு அமர்க்களம் பண்ணிடலாம், தலைவர் படத்துக்கு..

நாங்களும் வர்றோம் தலைவர் படம் பாக்கன்னு சி.குவோட லவ்வர் சொன்னுச்சு உற்சாகமா.. கொஞ்ச நேரம் மூணு பேரும் அரட்டை அடிச்சோம்.. இந்த தடவை சிட்டுக்குருவி ஜோடியா வந்ததுனால ரெண்டு பேருக்கும் செர்ந்து இந்தியன் ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்தேன்.. ஹிஹிஹி.. மாப்ள பரணி, கவலைப்படாதே.. பில்லை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.. நீ ரொம்ப நல்லவன்டாடாடாடாடா

Monday, March 12, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 18 [சூடான சினிமா பகுதி மீண்டும்]

இந்த வாரம் நேர்ல சிட்டுக்குருவியால நேர்ல வரமுடியாததால வரமுடியாததால, சிட்டுக்குருவி அனுப்பிய பேக்ஸ் சினி செய்திகள் சுடச் சுட உங்களுக்காக..

* அஜித்தின் பில்லா-2007-இல் பிரபு நடிக்கிறார். ஒரிஜினல் படத்தில் பாலாஜி நடித்த போலீஸ் வேஷத்தில் நடிக்கிறார் பிரபு.

* ரஜினியின் சிவாஜி படத்தின் வெளிநாட்டு உரிமையை லண்டனை சேர்ந்த அயன்காரன் நிறுவனம் 13 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது வரை, ஒரு சில ஹிந்தி படங்கள் மட்டுமே, இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. சந்திரமுகி 6 கோடி ரூபாய்க்கு விற்றது.

* திமிரு படத்தின் இயக்குநர் தருண்கோபி இயக்கத்தில் உருவாகம் காள என்ற படம் தான் சிம்புவின் அடுத்த படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது லிங்குசாமியின் அடுத்த படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சிம்புவிற்கும் நயனுக்கும் இடையில் நடந்து வரும் மோதல் ஐ.நா சபை வரைத் தெரியும். இப்போது சிபுவின் எதிரியான தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்தில் நயன் நடிப்பதால் சிம்புவால் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று டைட் செகியூரிட்டி போடப்பட்டுள்ளது.

* விரைவில் கில்லி கூட்டணியில், விஜய்-தரணி-வித்யாசாகர் கூட்டணியில் ஒரு புதுப் படம் வெளிவரப் போகிறது. இந்த படத்தை ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிக்கிறார்.

* ஜீவா இயக்கும், ஜெயம் ரவி நடிக்கும் தாம் தூம் படத்தில் முக்கிய வேடத்தில் இப்போது மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார்.

* ரிலையன்ஸ் நிறுவனம் அஜித்தை வைத்து கிரீடம் உட்பட ஐந்து படங்கள் எடுக்கவுள்ளது. அதற்காக 30 கோடி கொடுத்து அவரை புக் செய்துள்ளதாக சிட்டுக்குருவி சொல்கிறது.

* மணிரத்னத்தின் அசிஸ்டண்ட் கார்த்திக் இயக்கும் படத்தில் மம்மூட்டி நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவுள்ளார்.

சிட்டுக்குருவி சொந்த வேலையாக அடிக்கடி நமக்கு செய்திகள் தராமல் இருந்தது. இனிமேல் வாரம் ஒரு முறை வந்து செல்வதாக வாக்கு கொடுத்துள்லது. சிட்டுக்குருவியும் ரஜினி ரசிகர் என்பதால், ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி தான், என்று நம்புவோம் அதன் வாக்கை.

Tuesday, February 20, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 17 [சூடான சினிமா பகுதி மீண்டும்]

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிட்டுகுருவியின் சினி பிட்ஸ்..

வானத்தில் இருந்து பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுவதால், பறவைகள் இறக்கைகள் சுமையாகி பறக்க சிரமப்படும் காலம்.. நம்ம சிட்டுக்குருவி அந்த சின்ன இறக்கையை வைத்துகொண்டு என்ன செய்யும்.. பாவம்..அது தான் இத்தனை நாட்களாய் வெளில தலை காட்டல.. கிட்ட தட்ட 62 நாட்களுக்கு பிறகு மீண்டும் றெக்கை கட்டி வருதைய்யா.. இதுக்கு இடையில் எத்தனையோ விஷயங்கள் கோடம்பாக்கத்தில் நடந்திருந்தாலும், சிட்டுக்குருவி இல்லாததால் நமக்கென்னவோ எல்லாம் சப்பை மேட்டராத் தான் இருந்தது.. இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்னு தொலைபேசியிருந்தது.

போன தடவை நான் பிரசெண்ட் பண்ணின அழகான ஜெர்கினை போட்டுகிட்டு சர்ருன்னு வந்தது சிட்டுக்குருவி. அப்படியொரு சந்தோசம் அது முகத்துல..

என்ன சிட்டுக்குருவி.. இந்த நண்பனை பாத்தவுடன் இவ்வளவு சந்தோசமா உனக்கு.. எப்படிப்பா இருக்க.. அழகாய் சோபாவில் புகுந்து உட்கார்ந்த சிட்டுக்குருவியைப் பார்த்து கேட்டேன்.

[அய்யோ..இல்லைன்னு சொன்னா வாங்கி வச்ச பழத்தை எல்லாம் தரமாட்டான்] ஆமா.. ஆமா.. எவ்வளவு நாளாச்சு நண்பா உன்னைப் பாத்து.. அதைவிட ஒரு சந்தோசமான விஷயம். தலைவர் படம் சிவாஜி ஏப்ரல் 12க்கே ரிலீஸ் ஆகுதுல்ல.. எங்கே தள்ளி போயிடுமோன்னு படபடப்பா இருந்தது.. அன்னிக்கு தமிழ்நாட்டுல திருவிழா தானே.. அது தான் சந்தோசம்பா..

அட.. சூப்பர் மேட்டருப்பா.. உடனே நம்ம கொலம்பஸ் டிரெக்ஸல் தியேட்டர்ல டிக்கட்டுக்கு சொல்லிவைக்கணும்பா.. இந்த தடவை தலைவர் ரஜினிக்கு கொலம்பஸ்ல சூடம் காட்டவேண்டியது தான்.. சிட்டுக்குருவி சொன்ன மேட்டர்ல அதுகிட்ட இருந்த உற்சாகம் நமக்கும் தொத்திகிச்சு..

சரி..உன் தல நியூஸ் ஒண்ணும் சொல்லிடுறேன்..இல்லைனா உனக்கு சோறு உள்ளே இறங்காதே.. பில்லா ரீமேக் படத்தோட சூட்டிங் ஏப்ரல் 15-ல ஆரம்பிக்குது.. நயன்தாரா தான் பில்லி..

பில்லியா..என்னப்பா பனில வந்ததுல உனக்கு நாக்கு குழறுதோ..

நீ, சரியான டியூப் லைட் கார்த்தி..அஜித் பில்லான்னா, அவரோட ஜோடி நயன்தாரா பில்லி தானே.. [சொல்லிவிட்டு பெரிய ஜோக் அடிச்ச மாதிரி என்னை ஒரு லுக் விட்டு தன் ஜெர்கின் காலரை தூக்கி விட்டுக்கொண்டது சிட்டுக்குருவி.. ம்ம்.. எல்லாம் தலையெழுத்து கடவுளே]

அடக்குருவி.. என் காலை வாரலைனா உனக்கு தூக்கமே வராதே.. நாம ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ் நண்பர்கள்..

அடப்போப்பா.. ஒண்ணுக்குள் ஒண்ணா இருந்தா சிம்பு-நயன்தாராவே பிரிஞ்சு போயிட்டாங்க.. அதுவும் இல்லாமே அவங்க ரெண்டு பேரும் டேட்டிங் போனப்ப எடுத்த போட்டவையெல்லாம், பிரிஞ்ச கோபத்துல நெட்ல போட்டுட்டதா நயன்தாரா, சிம்பு மேல பயங்கர கோபத்துல இருக்காங்க.. [அந்தப் படங்கள் வேண்டாமே என்று தான் இங்கே போடவில்லை]..

அட! அப்புறம் என்னப்பா ஆச்சு!

மறுபடியும் சேரணும்னு சிம்பு விட்ட தூதையெல்லாம் நயன் கண்டுக்கவே இல்லையாம் [நயன் மனசுல நாட்டமை இருக்காரோ.. ஆனா என்ன பண்ண இவ்வளவு நாளா நாட்டாமை வெயிட் பண்ணி இப்போ நமீதாவுக்கு மாறிட்டரே..]

அட! சிம்புவை விடுப்பா.. இந்த ஜெயம் ரவிக்கு எப்படித்தான் இப்படி எல்லாம் லக் அடிக்கிறதோ.. படத்துக்கு படம் புது ஹீரோயின் தான்.. இப்போ ஜீவா இயக்குற தாம் தூம் படத்துல அவருக்கு ஜோடி மும்பை இறக்குமதி கங்கானா ரானட் என்னும் நடிகையாம்.. இவர் ஹிந்தி கேங்க்ஸ்டர் படத்துல நடிப்புல(?) வெளுத்து வாங்கி இருக்காராம்..

உனக்கு தான் உன் ஆள் இருக்குல.. அப்புறம் என்ன ஜெயம் ரவியை பார்த்து பொறாமை, சிட்டுக்குருவி

அட..ஆமா கார்த்தி.. உலகத்துல இந்த விஷயத்துல பொறமை படுற உரிமையை நீ தான் மொத்த கான்ராக்ட் எடுத்திருக்கியே..

ஆஹா.. வேற மேட்டர இருந்தா சொல்லு நீ.. என்னை கலாய்க்கிறதுன்ன உனக்கு நேரம் போறதே தெரியாதே..

அட..ஆமா நேரம் ஆயிடுச்சு கார்த்தி.. வர்றேன்.. என்று அதுக்காக வாங்கி வைத்திருந்த கருப்பு திராச்சைகளை கொத்திக்கொண்டது..

கார்த்தி.. இந்த பச்சைகிளி முத்துச்சரத்துல கருப்பா அழகா சரத்துக்கு ஜோடியா வருதுல ஆன்ட்ரியா பொண்ணு.. அது யாருன்னு தெரியுதா..

இல்லையேப்பா சிட்டுக்குருவி..

வேற யாருமில்லை.. வேட்டையாடு விளையாடுல கற்க கற்கன்னு பாடுச்சே அந்தப் பொண்ணுதாம்பா.. முதல்ல சோபனா நடிக்கிறதா இருந்து, தபுக்கு மாறி கடைசில இந்த பொண்ணுக்கு அந்த வாய்ப்பு கிடச்சதாம்.. சொல்லிவிட்டு இறக்கைகளை படபடன்னு அடிச்சுகிட்டு கிளம்பியது சிட்டுக்குருவி

Saturday, December 16, 2006

தாம் தூம் ஜெயம் ரவி, ரத்தக்கண்ணீர் சத்யராஜ்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 16

சிட்டுக்குருவிக்கு நேற்று ஒரு பார்சல் வந்தது அதோட லவ்வர்கிட்டயிருந்து.. ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு மறுபடியும் காதல் கோட்டை படத்தை ஓட்டுறாங்கப்பா.. அந்த பார்சலில், ஒரு அழகான ஸ்வெட்டர் இருந்தது.. ரோஸ் கலர்ல.. இதயப் பகுதில சிவப்பு கலர்ல ஒரு சின்ன இதயம் அழகா பின்னப்பட்டிருந்தது.. இப்போ எல்லாம் சிட்டுக்குருவி அந்த ஸ்வெட்டரோட தான் வாழ்க்கையை ஓட்டுது.. அது மட்டுமில்ல குளுருக்கு இதமா ஒரு சின்ன குல்லா.. அது வெள்ளை சிவப்பும் கலந்த வண்ணத்தில் இருந்தது.. கால்களுக்கு ரோஸ் கலர்ல சாக்ஸ் வேற.. சிட்டுக்குருவியை பாக்க அவ்ளோ க்யூட்டா இருக்குங்க. சே.. என்ன மாதிரி ஒரு லவ் இருந்தா இம்பூட்டு அழகா ஒரு ஸ்வெட்டரை அந்த லவ்வர் குருவி அனுப்பி இருக்கும்.. சே.. எப்படி பொறாமையாய் பாக்கதப்பான்னு சிட்டுக்குருவி நக்கல் வேற அடிக்குது.. ஹ்ம்ம்..நானும் பாரதி மாதிரி, வேற வழி இல்லாமல், நிற்பதுவே நடப்பதுவேன்னு இயற்கையை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

சரி இப்போ சில சினி பிட்ஸை கொறிக்கிற நேரம்...

ரீமேக் ஜூரம் இப்போ கோடம்பாக்கத்தில் ரொம்பவே பரவிகிடக்கு.. பில்லாவை அஜித்தும், முரட்டுக்காளையை விஜயும் ரீமேக் செய்வது ஊரே அறிஞ்ச ரகசியம்.. எப்போதும் வாய்சவடால் பேசும் சிம்பு, தான் மட்டும் என்ன அவர்களைவிட குறைவான்னு, தானும் ஒரு ரஜினி படத்தை கையில தூக்கிகிட்டு நடிக்க போறாராம்.. ஏற்கனவே இப்படி பேசிப் பேசியே வல்லவன்ல வாங்குன காயத்துக்கு மருந்து போட்டுகிட்டு இருக்கும்போதே.. மறுபடியுமா சிம்பு.. இப்போ விஷயம் அது இல்ல.. நம்ம சத்யராஜும் எம்.ஆர்.ராதா நடிச்சு பின்னு பின்னுனு பின்னின ரத்தக்கண்ணீரை ரீமேக் பண்றதுல நடிக்கப்போறாராம்.. ஹ்ம்ம். இன்னும் எத்தனை படம் ரீமேக் ஆகப்போகுதோ..

குத்து படத்துல சிம்பு கூட குத்தாட்டம் போட்ட ரம்யா, அதுக்கு பிறகு கிரில அர்ஜூன்கூட காதல் பண்ணிட்டு, ஒரு வாய்ப்பும் வராம கன்னடப் பக்கம் போயிட்டாரு.. அங்கே உடல் இளைச்சு ஸ்லிம் ஆகி, பெரிய நடிகர்களுடன் ஒரு ரவுன்டு வந்தா, நடிச்ச படமெல்லாம் செம்ம ஹிட்டு.. ஆனாலும் அவருக்கு கோலிவுட் மேல ஒரு கண்ணு இருந்துகிட்டே இருந்தது.. இப்போ அந்த கனவை டைரக்டர் கௌதமன் நினைவாக்கி வச்சிருக்கார். அவர் சூர்யாவை வச்சு எடுக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்கு அம்மணி தான் ஹீரோயின்..

இந்த வருஷம் கோலிவுட்ல கல்யாண சீசன் போல.. சூர்யா, ஜோதிகாவுக்கு தாலியை கட்ட, அந்தப் பக்கம் விஜயகுமார் மகன் அருண்குமார் திருமணம் முடிச்சார். இப்போ தான் பாரதிராஜா பையன் மனோஜுக்கு கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள செல்வராகவன்-சோனியா திருமணமும் முடிந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினி தலைமைல.. எல்லா தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். ஆனா சோனியா எப்பவும் போல மணமேடைல கூட ஒரு மாதிரி சோகமா இருக்காரே.. எனுங்க அம்மணி..நீங்க எப்பவுமே எப்படித்தானா?

இம்சை அரசனுக்குப் பிறகு மறுபடியும் வடிவேலு கதாநாயகனா வர்றார். படத்துக்கு பேர் இந்திரலோகத்துல நா அழகப்பன்.. இது சிவாஜி நடிச்சு வெளிவந்த ஒரு படத்தின் கதையாம்.. பூலோகத்துல இருக்க ஒருத்தன் இந்திரலோகம் போய் ரம்பையை காதலிக்கிற படமாம். இது ரம்பையா நடிக்க ஹிந்தி நடிகை ஷில்பா செட்டியை கேட்டிருப்பாங்க போல.. மறுபக்கம் சிம்ரனுக்கும் வலைவீச்சு நடக்குதாம்.. பார்ப்போம் இந்த அழகப்பன் எந்த ரம்பையோட ஆடப்போறாருன்னு.

இளமையா காட்சிகளை மட்டுமல்ல படத்தை கொடுப்பதிலும் ஜீவா பெரிய ஆளுதான்.. 12பி படத்துல ஷ்யாமை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தந்து உள்ளம் கேட்குமேல அசின், பூஜா, ஆர்யாவை (மூவரும் முதலில் ஒத்துக்கொண்ட படம் இது தான்) தந்து, இப்போ வெளிவரப் போகும் உன்னாலே உன்னாலே படத்துல வினய், தனிஷான்னு ஒரு ரெண்டு பேரை அறிமுகப் படுத்தி இருக்கார்.. இப்போ இவரோட அடுத்த படத்துல ஜெயம் ரவி தான் ஹீரோ.. படத்து பேர் தாம் தூம்... எப்பவும் போல படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் தான். படம் புக்கானதுல இருந்து ஜெயம் ரவி தாம் தூம்னு தான் வீட்ல குத்திக்கிறாரம்..

அப்புறம் இன்னொரு விஷயம். ஜெயம் ரவி வர்ற பொங்கல்ல தீபாவளி கொண்டாட போறார்..அட..இவரோட தீபாவளி படம் அப்போதானே ரிலீஸ் ஆகுது.. ஏற்கனவே நாலு படம் சேர்ந்து வந்தா ஓட்டடுறதுக்கு தியேட்டர் இல்ல.. இப்போ இந்த பொங்கலுக்கும் அதுக்குத் தான் பிரச்சனையே..அஜித் ஆழ்வாரா உங்களையெல்லாம் ஆள வர்றார்.. விஜய் போக்கிரியா வர்றார். இது இல்லாம எஸ்ஜே சூர்யா வியாபாரியா வர்றார்.. அட தியேட்டர் கிடைக்காதது அவங்க பிரச்சனை.. நாம எல்லாம் சக்கரை பொங்கல் வாயிக்கு மட்டுமல்ல, கண்ணுக்கும் கொடுப்போம்..

ஏங்க மேல ஒரு ஆறு சினிமா விஷயம் இருக்குமாங்க.. இதை சொல்லி முடிக்குறதுக்குள்ள எத்தனை தடவ அந்த ஸ்வெட்டரை தொட்டு பாக்குறது.. எத்தனை தடவை அதுக்கு முத்தம் கொடுக்குறது.. இருந்தாலும் இந்த சிட்டுக்குருவி பண்றது ரொம்பவே டூ மச்.. என்ன மாதிரி ஒரு மனுஷனை முன்னடி வச்சுகிட்டு இப்படி கடுப்பேத்தலாமா.. சே.. வேற வாழி இல்லாம நாலஞ்சு ஐஸ் கியூப்களை அப்படியே முழுங்கினேன்..ஹ்ம்ம்.. எரியிற வயிறை அணைக்கத் தான்.

(அடுத்த பதிவு - பாமரனின் போக்கிரி பாடல்கள் விமர்சனம்)

Thursday, December 07, 2006

நடிகை அசினுக்கு காலுல அடி..

அசினை பத்தி இப்படி எல்லாம் எழுதிட்டு ஒரு மன நிறைவா உட்கார்ந்தா நம்ம சினி பிட்ஸ் சிட்டுகுருவி.. ஒரு குண்டை தூக்கி போடுது

போக்கிரில டான்ஸ் ஆடினப்போ அசினுக்கு ஏதோ காலுல அடியாம்.. ஏதோ ஒரு குத்துப்பாட்டுக்கு காலுல ஷூவோ செருப்போ இல்லாம ஆடியிருக்காங்க.. கீழ கிடந்த ஒரு ஊசி அப்படியே காலை தச்சிடுச்சாம்.. ஏ.வி.எம் தளமே அதிர்ற மாதிரி வலில... பாவம் பொண்ணு கத்தியிருக்கு.. என்ன கல் மனசு அந்த ஊசிக்கு.. இல்ல அதுக்கு முத்தம் இப்படித்தான் கொடுக்கத் தெரியுமோ என்னமோ.. அவ்வளவு காதலாம் அதுக்குக்கு கூட அசின் மேல.. ஆனாலும் அசினோ பத்தே நிமிசத்துல மறுபடியும் ஆட ரெடின்னு சொல்ல டைரக்டர் பிரபுதேவாக்கு இன்ப அதிர்ச்சி.. இருந்தாலும் இவ்வளவு கடமை உணர்ச்சி இந்த பொண்ணுக்கு ஆகாது. அதுமட்டும் இல்லாம போற வழில ஹாஸ்பிட்டல் ஒரு ஊசிய போட்டுகிட்டு ஆழ்வார் டப்பிங்கலயும் ஆஜர்..

இந்த சின்சியாரிட்டிக்காகவே அசின் பெண்ணே திரையுலகில் இன்னும் பல காலம் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்க வாழ்த்துக்கள்..

Saturday, December 02, 2006

பில்லா ரீமேக்கில் அஜித் - சூடான சினிமா செய்திகள்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 15

மாறிவரும் தட்ப வெட்ப சூழ்நிலையில் நம்ம சிட்டுக்குருவி ரொம்ப அல்லாடிகிட்டு இருக்கு. குளிர்ல எங்க தங்குறதுன்னு அதுக்கு ஒரே பிரச்சனை. நம்ம கூட வந்து இந்த பனிகாலத்துல தங்கிக்கலாமான்னு கேட்டது.. நானும் ஓகே சொல்லிட்டேன்.. அதனால இனிமேல் சிட்டுக்குருவியோட நியுஸ் சுடச்சுட உங்களுக்கு கிடைக்கும். வழக்கம்போல இந்த தடவையும் அது நியுஸ் பேக்ஸ்ல அனுப்பிடுச்சு..

வதந்தியாக சொல்லப்பட்ட பில்லாவின் ரீமேக்கில் அஜித் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தை டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். எல்.சுரேஷ் ஆனந்த பிக்சர்ஸ்க்காக தயாரிக்க, யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய படம் மார்ச் 2007 ஆரம்பிக்கிறது. இதற்காக விஷ்ணு ஸ்க்ரிப்ட் எழுத தொடங்கிவிட்டார். ஒரிஜினல் படத்தின் இரண்டு புகழ் பெற்ற பாடல்களான 'மை நேம் இஸ் பில்லா'வும் 'வெத்தலையை போட்டேண்டி'யும் புதிய ஆக்கத்திலும் ரீமிக்ஸ் ஆக வரப் போகிறது. ரஜினியிடமும் இது பற்றி பேசி ஒப்புதல் வாங்கிவிட்டதாக தெரிகிறது.

ராஜீவ்காந்தி கொலையை மையப்படுத்தி ஆர்.கே.செல்வமணி தயாரித்து இயக்கிய குற்றப்பத்திரிக்கை படம் 14 ஆண்டுகளுக்கு பல சோதனைகளை தாண்டி இன்னும் ஒரு மாதத்தில் வெளிவருகிறது. சென்னை உயர்நீதி மன்றம் பல சர்சைக்குள்ள காட்சிகளை நீக்கிய பிறகு படத்துக்கு 'ஏ' சர்டிபிகட் கொடுத்து படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது.

வடிவேலுவை போலவே விவேக்கும் சொல்லி அடிப்பேன் படத்தில் நகைச்சுவை கதாநாயகனாய் நடித்து வருவது தெரியும். ஆனால் கிட்டதட்ட இரண்டு வருட காலமாக இழுத்துக்கொண்டிருந்த படம் வெளிச்சத்தை விரைவில் பார்க்கப்போகிறது. ரஜினி, ஷங்கர், பாலசந்தர் முன்னிலையில் இந்த படத்தின் ஆடியோ கேசட் வெளியானது.

இது சந்தானம் காலம்.. ஆம்.. லொள்ளு சபா சந்தானம் தற்போது மிக அதிக படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவரின் இயல்பான வசன உச்சரிப்பும் டைமிங் காமெடியும் ரசிகர்களை கவர்ந்திருப்பதாக தெரிகிறது. தர்போது கீரீடம் (மகுடம்), அழகிய தமிழ் மகன், வியாபாரி போன்ற பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இரட்டை அர்த்த கமெடியை தவிர்த்தால் முன்னுக்கு வரலாம் இந்த சந்தானம்.

இப்போதைக்கு இவ்ளோதாங்க நியுஸ். சிட்டுக்குருவி வீடு ஷிப்ட் பண்றதுல மும்மரமா இருக்கிறதால இப்போதைக்கு அப்பீட்..அப்புறம் ரிப்பீட்..

Sunday, November 12, 2006

ராவணன் வேஷத்தில் ரஜினிகாந்த்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 14

தமிழ் மக்கள் நாலு பேர் கூடிட்டாலே அவங்க பேசுறதுல கொஞ்சம் சினிமா இல்லாம இருக்காது.. அந்த அளவுக்கு சினிமா தமிழன் வாழ்வுல ஒரு விஷயமாகிடுச்சு.. எந்த வார, மாத புத்தகமா இருந்தாலும் சினிமாக்குன்னு சில பக்கங்கள் இல்லாம இருக்காது.. ஏன்னா சினிமா விஷயம் இருந்தால் தான் அந்த புத்தகமே முழுமையடையுது.. இது மட்டுமில்லாமல், சினிமா பத்திரிக்கைனே தனியா பல புத்தகங்கள் இருக்கு.. அதுலையும்.. நடிகர்களுக்குன்னு தனி புத்தகங்கள் வேறு இருக்கு.. பத்திரிக்கை மட்டுமில்லை..டிவிக்களும் தான்.. என்னிக்காவது ஒரு நாள் சினிமா நிகழ்ச்சி இல்லாம எந்த நிகழ்ச்சியாவது இருக்கா.. சுதந்திர தினம்னாலும் சினிமா ஆளுக தான் வந்து வாழ்த்து சொல்வாங்க.. பொங்கல்னாலும் அவங்க தான் வருவாங்க..

இப்படி இருக்கப்போ நாம மட்டும் விதி விலக்கா என்ன (ஏன் நம்ம பதிவுகள்ல சினிமா விஷயம் அதிகமா இருக்குன்னு நான் நினச்சப்போ வந்த சிந்தனைகள் (?).. இதே கேள்வி.. தலைவி கீதாவுக்கு வந்த மாதிரி உங்களுக்கும் வரலாம்ல..அது தான் இப்படி ஒரு தொடக்கம்)அதுவும் இல்லாம போன்ல எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு இந்த சிட்டுகுருவி எஸ்கேப் ஆகிடுச்சு..

ஒரு NRI ITA Films-ங்கிற பேனர்ல தயாரிக்கிற ராமேஸ்வரம்ங்கிற படத்துல முதன் முறையா ஜீவாவும் பாவனாவும் ஜோடி சேர்றாங்க.. படத்தை செல்வம் அப்படிங்கிற புது இயக்குநர் டைரக்ட் பண்றார். யுவன் இசை அமைக்கிற இந்த படத்தோட ஷூட்டிங் ஜனவரி 2007-இல் இருந்து ஆரம்பிக்குது.

ஆழ்வாருக்கு பிறகு அஜித் நடிக்கும் கிரீடம் படத்தோட பேர் மலையாளப் பேர் மாதிரி இருக்குறதால தமிழக அரசு வரி விலக்கு தருவாங்களோ அப்படின்னு படத்துக்கு மகுடம் பேர் வச்சிருக்காங்க.. ஆந்திராவில் டிசம்பர் முதல் வாரத்தில இருந்து படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்குது. ஆரம்பித்தில் யுவன் இசையமைப்பார் அப்படின்னு சொல்லப்பட்டது.. ஆனா இப்போ வெயில் படத்தோட இசையமைபாளர் G.V. பிரகாஷ் அந்த வேலையை செய்றார். திரிஷா அஜித் ஜோடியா ஆட்டம் போடுறார்.. ஆனா ஒரு பத்து வருஷதுக்கு முன்னாடி மகுடம்-ங்கிற படத்துல சத்யராஜ் நடிச்சிருக்கார். அதனால் பேரை மறுபடியும் மாத்துவதற்கான சாத்தியம் உண்டு. பார்ப்போம்.




உன்னை நினைத்து, பிரியமான தோழி படங்கள் சரியாக ஓடாததால் டைரக்டர் விக்ரமன் கொஞ்ச நாள் எந்த படமும் எடுக்காமல் இருந்தார். இப்பொழுது பரத், பாய்ஸ் ஜெனிலியா, இருவரையும் ஜோடியாக வைத்து சென்னைக் காதல் என்ற சிட்டியில் நடக்கும் ஒரு காதல் கதையை படமாக்கி வருகிறார். இந்த படத்தின் ஹைலைட்டான விஷயமே பரத்தும், ஜெனிலியாவும் உண்மையிலே காதல் வலையில் விழுந்துவிட்டனர் என்பது தான்.

ஆந்திராவை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவர் தனக்கும் ஸ்ரீதேவிக்கும் 1991-இல் கல்யாணம் நடந்தது என்றும், இப்போது சேர்ந்து வாழ விரும்புவதாக ஐகோர்ட்டில் ஒரு கேஸ் போட்டர். ஆனா அதை நீதிமன்றம் நிராகித்தது.

ஹிந்தியில் பெரிய அளவில் எடுக்கப்போகும் ராமாயணம் படத்தில் ராவணன் வேஷத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க போவதாக வந்த செய்தியை இப்போது ரஜினி தரப்பு மறுத்துவிட்டது. இதே மாதிரி மஹாபாரதம் திரைப்படத்தில் அஜித் சகுனியாக நடிக்கப்போவதாக ஒரு புரளியும் சுத்திகொண்டு இருக்கிறது.

இப்போதைக்கு இதுதான் சிட்டுக்குருவி சொன்ன சினிமா செய்திகள்.. அடுத்து சிட்டுக்குருவியோட பார்ப்போம்.

Monday, November 06, 2006

ஒரு கலக்கலான சந்திப்பு

புதுசா டெக்னிக்கல் தேனப்பனும் பாலிடிக்ஸ் பார்வதியும் வரப்போறாங்கன்னவுடனே சிட்டுக்குருவிக்கு தலகால் புரியல.. அவங்களுக்கு கொடுக்குறதுகுன்னே தனித்தனியா கிப்ட் வாங்கி வந்திருக்கு.. எவ்ளோ..நாளா நான் இங்க இருக்கேன்.. எனக்கு ஒரு குண்டூசி கூட வாங்கிட்டு வரலையேன்னு கீதா மேடம் மாதிரி மனசுகுள்ள ஒரே புலம்பல்.. அப்புறம் நீங்க சொன்னபேரை எல்லாம் சொல்லி, இன்னும் ஏன் பேரை நீ செலெக்ட் பண்ணலைன்னு கேட்டா அதுக்கு சர்ருன்னு அந்த சின்ன மூக்குல கோபம் வந்து உக்கார்ந்துகிச்சு. ஏன்னு கேட்ட டெக்னிக்கல் தேனப்பன் பாலிடிக்ஸ் பார்வதி மாதிரி தனக்கும் ஒரு ரிதமா பேர் வேணும்னு சண்டை.. எப்பா சாமி..உன்னை சமாதானப்படுத்த முடியாது..அதோ அவங்க ரெண்டு பேருமே வந்துட்டாங்க..முதல்ல இந்த மீட்டிங் முடியட்டும்..அப்புறம் உன் சண்டையை வச்சுக்கலாம்னு சமாதானப்படுத்திட்டு, அவங்க ரெண்டு பேரும் உள்ளே வர்றதுக்காக கதவை திறந்துவிட்டேன்.

வாங்க தேனப்பன் சார்..வாங்க மேடம்

ஹிம்..நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்..எங்க..எங்க நம்ம சிட்டுக்குருவியை காணோம்..னு தேனப்பன் கேக்க மூணு பேரும் சேர்ந்து சிட்டுகுருவியை தேடினா அது ஷோபாவுக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுகிடக்கு..என்னான்னு கேட்டா வெக்கமாம்..அடடே..சிட்டுக்குருவி சொல்லவே இல்லை..


வந்தவங்களுக்கு ஜில்லுன்னு ஜூஸ் கொடுத்துட்டு அப்படியே அரட்டை கச்சேரியை ஆரம்பித்தோம்.

வைகோவையே மிஞ்சப் போறார்..சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.. தேர்தலுக்கு முன்னடி, அதிமுகவுல சேர்ந்தவர், புது படம் ஷூடிங் கணக்கா, மேடைக்கு மேடை கருணாநிதியையும், தயாநிதி மாறனையும் சகட்டுமேனிக்கு பேசினார். ஆனா அதிமுக பெரிய அளவுல சீட் பிடிக்காததால, கொஞ்ச நாள் அடக்கி வாசிச்சார். இந்தப்பக்கம் தொடர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாம சன் டிவில தன் மனைவி ராதிகா புரோகிராம் பண்ண கடுப்பான அதிமுக ஜெயா டிவிக்கு அழைக்க அவரும் மறுக்க, கட்சியிலிருந்து தூக்கப்பட்டார். அதற்கும் மவுனம் காத்த சரத் உள்ளச்சியில் அதிமுக சிதரிப்போக..அதிமுகவிலும் எந்த பதவியும் கிடைக்காமல் போக மனம் வெதும்பினார். தீபாவளிக்கு வந்த தனது 100வது படம் தலைமகனும் படுத்துவிட.. இதுதான் சமயம் என்று அதிமுகவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். தனியாக கட்சி ஆரம்பிப்பதா இல்லை கேப்டனோட கைகோர்ப்பதா என்று அடுத்த வாரம் சொல்லப்போறாராம்..என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் பொலிடிக்ஸ் பார்வதி..

மேடம் அது சினிமாக்காரர் நியுஸ் நான்தான் சொல்லனும்..நீங்க எப்படி சொல்லலாம்னு சிட்டுக்குருவி சிணுங்கிகொண்டே வழக்கம் போல செய்திகளை கொட்ட ஆரம்பித்தது.

நியுஸ் ஒண்ணு..சிம்புவின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட வல்லவனின் மோசமான வசூலால் அதன் தயாரிப்பாளர் தேனப்பன் மிகவும் அதிர்ச்சியுடன், துவண்டு போயிருக்கிறார். இதனால் ஏற்கனவே இழுத்து கொண்டிருக்கும் பாலாவின் நான் கடவுள் கிடப்பில் போடப்படும் என்று தெரிகிறது. தங்களது தலயை பணம் கேட்டு மிரட்டிய பாலா தேனப்பனின் நிலைமை கண்டு அஜித் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருப்பதாக தெரிகிறது. வல்லவனின் கதை சிம்பு வாழ்கை கதை என்றும் சில பேர் சொல்லிவருகின்றனர். அதுவும் அந்த பள்ளி காச்சிகளை பார்த்தால் ரஜினியின் மகளை ஞாபகம் வைத்து எடுத்திருப்பதாக தெரிகிறது..வசனங்களை பார்த்தால் உண்மையோ என்றும் தோன்றுகிறது.. உண்மையா சிம்பு..

நியுஸ் ரெண்டு..பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த அஜித்தின் ஆழ்வார், வரலாறின் வசூலை கண்டு முன்னதாகவே, டிசம்பர் மாதம் 15-இல் வெளிவருகிறது. பொங்கலுக்கும் நிறைய படங்கள் வெளியாகி வசூலை பாதிக்கும் என்பதால், முன்னமே திரையிட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் முடிவெடுத்துள்ளார். இப்போது ஆழ்வாரின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நியுஸ் நம்பர் மூன்று..சர்வம் என்றொரு படம் முதலில் சூர்யாவின் சொந்த நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக விஷ்ணுவர்த்தனால் எடுக்கப்படுவதாக இருந்தது. சில்லுன்னு ஒரு காதல் தோல்விக்கு பிறகு, அதை கைவிட்டுவிட்டதாக டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பத்திரிகைகளுக்கு செய்தி தந்தார். மறுபடியும் ஒரு வாரத்துக்குள் இருவரும் சேர்ந்து அந்த படத்தை மறுபடியும் வேறு ஒரு தயாரிப்பாளரை கொண்டு எடுக்கப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் மறுபடியும் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டதாக இரு நாட்களுக்கு முன்னால் கூறியுள்ளனர். என்னாச்சு உண்மயில் இவர்கள் இருவருக்கிடையே.. ஏன் இந்த குழப்பம் சூர்யா.. இன்னும் கல்யாண மயக்கம் தீரவில்லையோ சூர்யாவுக்கு..

இப்போது கிடைத்த தகவல் படி, சூர்யா கௌதமன் இயக்கதில் உடல் பொருள் ஆவி என்னும் படத்தில் நடிக்கப் போகிறார். இப்போது சரத்-ஜோதிகா வைத்து தான் எடுத்து வரும் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துக்கு பிறகு இந்த புதிய படம் தொடங்க இருக்கிறது.

செய்தி நம்பர் நாலு.. ஹிந்தியில கஜினி எடுக்கிறப்போ அங்கேயும் கல்பனா கதாபாத்திரத்துல நடிக்க தன்னை தான் கூப்பிடுவாங்கன்னு இருந்த அசின் கனவுல மண்ணை போட்டுட்டாங்க.. அமீர்கான் ஜோடியா நடிக்க போறது பிரியாங்க சோப்ரா...

செய்தி நம்பர் ஐந்து..வல்லவனுக்கும் வரலாறுக்கும் சத்யம் தியேட்டரில் தீபாவளி முதல் ஆளுக்கு இரண்டு காட்சிகள் என்று முடிவானது. சத்யத்துல எல்லா காட்சிகளும் தன்னுடைய படமே ஓடும்..வரலாறு ஊத்திக்கும் என்று தனது நண்பர்களிடம் சொல்லி கனவு கண்டுகொண்டிருந்த சிம்பு, சத்யத்தில் இருந்து வல்லவனை தூக்கியதில் இப்போது அதிர்ச்சியில் இருக்கிறார்.

ஒன்று..இரண்டு..மூன்று என சினிமா செய்திகளை சொன்ன சிட்டுக்குருவி, ரவுண்டு நெக் T-ஷர்டா இருந்தாலும் காலர் இருக்கும் நினைப்பில் தூக்கிவிட்டுக்கொண்டது..

சிட்டுக்குருவியின் ஷேஷ்டையை பார்த்து சிரித்துகொண்டு இருந்த டெக்னிக்கல் கோவிந்தன்.. இன்னைக்கு நம்ம பிளாக் மக்களுக்கு பயன்படுற மாதிரி ஒரு செய்தி சொல்றேன்.. டெக்னோரடி என்னும் ஒரு வலைதளத்தில் உங்க பிளாக் பத்தி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இப்படித்தான் கார்த்தியோட கனவுகளை பத்தி இங்கே சுட்டி இருப்பதை நான் தெரிந்து கொண்டேன்..

இப்படி எல்லோரும் பேசி முடிச்ச பிறகு,வீட்ல பண்ண பிரியாணியை சாப்பிட்டு கிளம்பினாங்க. அதுக்குள்ள சிட்டுக்குருவி பாலிடிக்ஸ் பார்வதியோட பெட்டாகி, லேடிஸ்க்கு என்னன்ன பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டது, அதோட லவ்வருக்கு வாங்கித்தர.

முதல் தடவைங்கிறதால தான் மூணு பேரும் ஒண்ணா வந்திருக்காங்க.. இனிமேல் தனித்தனியாத்தான் வருவாங்க..

பாலிடிக்ஸ் பார்வதி பேக்ஸ் மூலம் அனுப்பின செய்தி

இன்னும் பதினைந்து நாளில் விஜயகாந்தின் திருமண மண்டபம் நெடுஞ்சாலைதுறையினால் இடிக்கப்படும் என்று அதற்கான மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறி இருக்கிறார். கோயம்பெடு அருகே கட்டப்படவுள்ள அடுக்கு மேம்பாலத்திற்காக இடிக்கப்படும் 150 கட்டிடங்களில் அவருடைய திருமண மண்டபமும் ஒன்று. இதனை பத்திரிக்கைகள் ஊதிப் பெரிதாக்காமல் இருந்தா சரி.

Saturday, October 28, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 12

சிட்டுக்குருவி, அதுக்கு நீங்க செலெக்ட் பண்ணின பேரை எல்லாம் இப்போதைக்கு தொடாதாம். ஏன்னா தன்னோட லவ்வர் அதோட பிரண்டு கல்யாணதுக்காக பாஸ்டன் சிட்டிக்கு போயிடுச்சாம்.. எப்பா, என் கூட சினிமா விஷயத்தை பேசுறப்ப கூட அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை போனை போட்டு, ஒரு இச் கொடுக்குது..ஒரு இச் வாங்குது.. சிட்டுக்குருவி லவ்வுங்குற பேர்ல பண்ற ரவுசு தாங்க முடியலப்பா..

சிட்டுக்குருவிக்கு தோள்ல அடிபட்டப்போ ஹாஸ்பிடலுல இருந்தது.. அங்கே சிட்டுகுருவியை கவனுச்சுக்க நர்ஸா வந்தது இந்த லவ்வர் குருவி.. அங்கே இருந்த ஏழு நாள்ல குருவிக்கு தோள்வலி குறைஞ்சதோ இல்லியோ, இவங்க காதல் யாரும் தண்ணி ஊத்தாம வளர்ந்தது.. இப்போ இப்படி இவங்க உறவு விட்டுப்பிரியாம இருக்கு.

நாம வேற சிங்கிளா இருக்கிறதால, அப்பப்போ நம்மளை ஓரக் கண்ணுல பாத்து லுக்கை போடுது..எல்லாம் நேரந்தான்..

நீங்க வாய்விட்டு சிரிக்கிற மாதிரி ஜோக் படிச்சு ரொம்ப நாள் ஆச்சுன்னா அருண்குமார் பதிவுல போட்டிருக்க தர்மபுரி விமர்சனத்தை படிங்க.. கேப்டனுக்கு இது தேவையா.. இந்த படம் மட்டும் தேர்தலுக்கு முன்னாடி வந்திருந்த கிடச்ச ஓட்டுகூட இல்லாம போயிருக்கும் போல..

ஓகே..இப்போ கொஞ்சம் சினிமா நியுஸ் பார்ப்போம்..

மாதவன், ரீமாசென் நடிக்க தனது மனைவி தயாரிப்பில் எடுக்கும் ரெண்டு படத்துக்கு பிறகு யாழ்ப்பாணம் என்ற திரைப்படத்தில் சுந்தர்.சி நடிக்கிறார். இதில் கோபிகா அவருக்கு ஜோடியாக நடிக்க, ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன் படத்தை டைரெக்ட் செய்கிறார். டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிக்கிறார்.

சர்வம் படத்தை சூர்யா நடிக்க பட்டியல் விஷ்ணுவர்தன் இயக்க போவதாக செய்திகள் முன்னே வெளியானது. இப்போ இருவரும் நட்பாக கைகுலுக்கி அந்த பிராஜெக்டில் இருந்து பிரிந்தனர். சூர்யா முன்னமே முடிவான படி கௌதம் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு கதைக்கு ஏற்ற அடுத்த நடிகரை தேடுகிறார் (விஷ்ணு.. இங்க நான் இருக்கேன்..ஹிஹிஹி)

செல்வராகவன் சூர்யாவோட தம்பி கார்த்தியை வச்சு படம் எடுக்க போறாருன்னு சொல்லி இருந்தோம்ல.. இப்ப அந்த படத்துக்கு பேர் வச்சாச்சு.. எல்லாம் இப்போ இருக்க டிரண்ட்.. நீளமான தலைப்பு.. இது மாலை நேரத்து மயக்கம்.. காதல் சந்தியா தான் ஜோடி.. விஷாலுக்காகவும் படம் எடுக்க டிஸ்கஷன் போயிகிட்டு இருக்கு..

தசாவதாரம் படத்துல கமல் பத்து வேஷம் போடுறது உங்களுக்கெல்லாம் தெரியும். அதுல ஒண்ணு அவர் ஒரு அழகிய இளம்பெண்ணாய் நடிக்கிறார்ங்கிறது தான்.. அதுமட்டும் அல்ல, டூரிஸ்ட் கைடா உதார் மணிங்கிற வேஷத்துல வேற வர்றார், நம்ம உலக நாயகன்...

வழக்கம் போல, ரஜினிக்கு சிவாஜில ஓபனிங்க் பாட்டு உண்டுன்னு முடிவு பண்ணி அந்த பாட்டுக்கு மட்டும் நயன்தாரா ஆடப்போறது எல்லோருக்கும் தெரியும்.. இப்போ நா. முத்துக்குமார் எழுதுற அந்த பாட்டை, SPB பாடி இருக்கார். இந்த பாட்டை புனே மற்றும் சுற்றியுள்ள கிரமாங்கள்ல ஷூட்டிங் எடுத்துகிட்டு இருக்காங்க..

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் னு சிட்டுக்குருவி, சிணுங்கிய மொபைல எடுத்து, அது லவ்வருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தது.. நான் இப்போ ஒரு லுக்கை போட..டார்லிங்க் இந்த கார்த்தி பொறாமைல பாக்குறான்..நான் வெளில வந்து பேசுறேன்னு ரூமை விட்டு பறந்தது..

Monday, October 16, 2006

சிட்டுக்குருவிக்கு பக்காவா ஒரு பேர் வைங்க

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 11

நல்ல ஊர் சுத்திட்டு ஒரு முப்பது கிராம் வெயிட் ஏறி கொழுக் மொழுக்குன்னு வந்திருக்கு சிட்டுக்குருவி. நான் அதை அப்படியே பாத்துகிட்டு இருக்க, ஓய்..கண்ணு போடாதேப்பா.. இப்போ தான் நான் ரொம்ப கியூட்டா இருக்கேன்னு என் டார்லிங் சொல்லியிருக்கா..ன்னு சந்தோசத்துல எகிற ஆரம்பிச்சது குருவி.. அப்பா, பெரியப்பா கூட இங்க செட்டில் ஆகிட்டாலும் அதுக்கு இந்தியாவுல நிறைய நண்பர்களும் சொந்தங்களும் உண்டாம்.. அதனால ஒவ்வொரு வருஷமும் இந்தியா போயிட்டு வந்திடுமாம் சிட்டுக்குருவி. இந்த தடவை தன் ஆசை காதலியோட.. அதானல இந்த டிரிப் அதுக்கு ரொம்ப விஷேசமானது. தாரை தப்பட்டை எல்லாம் அடித்து, மாலை எல்லாம் போட்டு அது பிரண்ட்ஸ் அமர்களப்படிதீட்டாங்களாம்.. ஒரே சந்தோசம் அதுக்கு.. அந்த பச்சப் பயிறு, நெல்லுமணி, குருனை அரிசின்னு மெனு வேற தினமும் ஒண்ணாம்.. நம்ம சிட்டுக்குருவோட காதலி அமெரிக்காவுலயே பிறந்து வளர்ந்ததால அதுக்கு இதெல்லாம் ரொம்பவே புதுசாம்.. நல்லா என்ஜாய் பண்ணிச்சாம்.. கூடவே வகை வகையான பழங்களை பாத்து ரொம்ப குஷியாகிடுச்சாம்.. தமிழ்க் குருவிகளோட உபசரிப்புல ரொம்பவே உச்சிகுளிர்ந்து போச்சாம்.. அய்யோ.. குருவியோட டிரிப் கதையை கேக்க கேக்க எனக்கு காதுல ரத்தம் வர ஆரம்பிச்சது.. இதை பாத்தவுடன் குருவி முறைத்து பாத்தபடி வந்த வேலையை ஆரம்பித்தது..

அஜித்தோட அடுத்த படமான கிரீடம் படத்துல திரிஷா தான் ஜோடியாம். இந்த படத்தின் மூலமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வசனகர்த்தா ஆகிறாராம்.

கமலோட தசாவதாரம் படத்துல கமல் பத்து வேடத்துல நடிக்கிறது தெரியும். அசின் ரெட்டை வேடத்துல நடிக்கிறாராம்.. உனக்கு தெரியுமா.. (எனக்கே அசின் பத்தின நியுஸா.. சிட்டுக்குருவி இதெல்லாம் ரொம்ப ஓவர்)

ரஜினியோட சிவாஜில ஓப்பனிங் பாட்டுல ஆடுறதுக்கு நயன்தாராவுக்கு சான்ஸ் கிடைச்சிருக்காம்.. ரொம்ப பேர் போட்டி போட்டதுல இப்போ நயனுக்கு தான் லக்காம்.

சொல்லிவிட்டு சிட்டுக்குருவி இரும, ஒரு டம்ளரில் சீரகம் போட்டு காய்ச்சின தண்ணியை ஊற்றிக் கொடுத்தேன்.. ஒரே கல்பில் அதை குடித்த குருவி மறுபடியும் ஆரம்பித்தது.

மணிரத்தினதுக்கு மதுரை திருமலை நாயக்கர் மஹால் மேல எப்பவுமே ஒரு பாசம் இருக்கும். கண்ணாளனே ன்னு மனிஷா பாடினது இங்கே தான்..அவர் தயாரிப்புல, சிம்ரன் மனம் விரும்புதேன்னு நேருக்கு நேர் சூர்யாவை பாத்து பாடினதும் இங்கே தான்.. இருவர் படத்துல மோஹன்லாலும் பிரகாஷ்ராஜும், எம்ஜியார் கருனாநிதியாய் வாழ்ந்ததும் இங்கே தான்.. இப்போ தன்னோட அடுத்த படமான குருவுக்காகவும் திருமலை நாயக்கர் மஹால்ல சில காட்சிகளை ஷூட் பண்றாராம் மணிரத்னம்.

அமீரோட பருத்திவீரன் படத்துல நடிச்சுகிட்டு இருக்க சூர்யாவோட தம்பி கார்த்தி, அடுத்து நடிக்க போற படம், செல்வராகவனோட படம். செல்வராகவன், யுவன், ஒளிப்பதிவாளர் அர்விந்த்கிருஷ்ணா, மூன்று பேரும் சேர்ந்து ஒயிட் எலிஃபான்ட்ஸ் ஒரு பட நிறுவனத்தை கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சாங்கள்ல அதுக்காக செல்வா இயக்குற படம்..

டிசம்பர் 15-இல் ரஜினியோட தலைமையில் நடக்க போற செல்வா-சோனியா கல்யாணாதுக்கு பிறகு, இந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்குமாம்.

கார்த்தி, இன்னும் ஜெட்லாக்ல இருந்து வெளில வரல..ரொம்ப டயர்டா இருக்கு..அதுவும் இல்லாம சென்னைல நடந்த தேர்தல் வன்முறைல மாட்டி அப்படி இப்படின்னு பறந்து, பிளைட் பிடிச்சு இங்கே வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. நீ ரொம்ப எதிர்பார்ப்பியேன்னு உடனே வந்தேன்.. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு அப்புறம் வர்றேன்..ஓகேயா..பைன்னு சொல்லிட்டு இறக்கையை விரித்து வானத்துல பறக்க ஆரம்பித்தது, நம்ம சிட்டுக்குருவி..

(நண்பர்களே.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவின்னு சொல்றது ரொம்பக் கஷ்டமா இருக்கு..அதுவும் தனக்கு ஒரு நல்ல பேர் இல்லியேன்னு அதுக்கும் ஒரு வருத்தம் நெஞ்சுக்குள்ள இருக்கு.. அதனால, நம்ம சிட்டுக்குருவிக்கும் அதோட லவ்வருக்கும் நீங்களே நல்ல பேரா வையுங்க..பாக்கலாம்.. பேர் கொஞ்சம் ஹீரோயிசமா இருந்தா நல்லா இருக்கும்னு சிட்டுக்குருவி ஃபீல் பண்ணுது.. நல்ல பேர் வச்சவங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தரப்படும்.. குருவியின் தீர்ப்பே இறுதியானது)

Monday, October 09, 2006

நீண்ண்ண்ண்ட தலைப்பு புதிய தமிழ் படங்கள்

[சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 10]

அழகிய தமிழ்மகன்


ஏற்கனவே வசீகராவுல எம்ஜியார் பாலிசில நடிச்சார் விஜய். பாடல்களில் நடனம் எல்லாம் எம்ஜியார் ஸ்டைல இருக்கும். புதிய கீதைல 'அண்ணாமலை தம்பி'ன்னு ஆடிப் பாடினாரு..இப்போ தன்னோட அடுத்த படத்துக்கு அழகிய தமிழ்மகன்னு பேர் வச்சிருக்கர், விஜய். இது ரிக்க்ஷாக்காரன் படத்துல எம்ஜியார் ஆடிப்பாடின பாட்டு. பச்சைக்கிளி முத்துச்சரம், அழகிய தமிழ்மகன் னு ஒரே எம்ஜியார் பாட்டுலையா தலைப்பு வைக்கிறாங்க.. ஆனா தமிழ்ல தலைப்பு வைச்சா வரிவிலக்கு தர்றேன்னு சொன்னது கலைஞர். பாத்துங்க முதல்வர் கோவிச்சுக்கபோறாரு..

தீவிர திமுக அனுதாபியான விஜய் இப்படி எம்ஜியார் இமேஜை படத்துக்காக பயன்படுத்துறார். ஒரு பக்கம் சன் டிவி, குங்குமம் என எல்லாத்துலையும் மாறி மாறி இவரோட பேட்டி, படச் செய்தின்னு வருது. இன்னொரு பக்கம் ரசிகர்களை கவர எம்ஜியார் இமேஜ்.

இதுவரை விஜய் இரட்டை வேடத்துல நடிச்சதில்லை.. அட! அப்ப இதை என்னான்னு சொல்றது.. அண்ணா, கலக்குறீங்கண்ணா..

பரட்டை என்கிற அழகுசுந்தரம்



தனுஷ் நாயகனா நடிக்கும், இந்த படத்தை நட இயக்குனர் ராஜூ சுந்தரம் டைரக்ட் பண்றதா இருந்தது. ஆனா, அவருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கவே நேரம் போதாததால, இப்போ இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் பண்றாரு.

கருப்பசாமி குத்தகைகாரன்

கொக்கி படத்துக்கு பிறகு, ஹீரோவாத் தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சு கரண் ஹீரோவா நடிக்கிற இந்த படத்துல, வடிவேல் காமெடி..கீமடிகளை செய்யப் போறாரு.

பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10:30 வரை



என்ன நினைச்சு இந்த மாதிரி படத்து பேர் வைக்கிறாங்கன்னு தெரில.. அதுவும் எல்லோரும் புது முகங்கள். பாரதிராஜா கிட்ட அசிஸ்டண்ட்டா இருந்தவர் இயக்குற படம். அள்ளி தந்த வானம் படத்துல சென்னை பட்டினம்னு ஆடி பாடுன அந்த சின்ன புள்ள இதுல ஹீரோயின்.. படத்துல டைட்டிலையும் இந்த பொண்ணையும் தவிர வேற எதுவும் விஷேசமா இல்லை

வெகசன்ல போயிருக்க சிட்டுக்குருவி பொறுப்பா சில செய்திகளை அனுப்புது. கலக்குது குருவி..

Wednesday, September 27, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 9

சிட்டுக்குருவி தெளிவா இருக்கு இப்போ.. தோள்பட்டை எல்லாம் சரியாகி கும்மாளமா இருக்கு. அடிபட்ட றெக்கையை சைட்ல காமிச்சு நம்மள பாத்து கிண்டலா ஒரு லுக் வேற.. எல்லாம் நம்ம நேரம்னு நினைச்சுகிட்டேன்..அப்புறம் சிட்டுக்குருவி எப்படி இருக்கன்னு கேட்டேன்.. நல்லாத்தான் இருக்கேன்.. ஏன்யா உனக்காகத் தானே காடு மேடு எல்லாம் அலைஞ்சு தெரிஞ்சு நியுஸ் கொண்டுவந்தேன். அதுல தானே அடியும் பட்டேன்.. என்னடா ஆனான்னு ஒரு பாசம் உண்டா.. என்னை பாக்க ஒரு நாள் கூட வரல நீ னு ஒரே கோபம்.. ஏ குருவி.. உன் பெரியப்பா வேற ஒரு டென்ஷன் பார்ட்டி.. அது தான் வரலைன்னு அதுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதா ஆயிடுச்சு..

நீ என்னை என்ன வேணும்னாலும் சமாதானம் பண்ணலாம்..ஆனா முருகதாஸை சமாதானம் பண்ண முடியாது.. உன் மேல பயங்கர கோபத்துல இருக்காரு.. அவர் மேல எப்படி நீ அபாண்டமா பழி சுமத்தலாம.. கமல் எடுத்த எந்த படமும் அவர் சொந்த சரக்கு இல்லியாம்.. எல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தோட தாக்கமாம்..முருகதாஸுக்கு பதிலா சிட்டுக்குருவி என்னை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சது.. சரி சிட்டுக்குருவி.. இதை இப்படியே விட்டுவிடுவோம்.. கமல் ரசிகர்களும் என்னை திட்ட வேண்டாம்.. மத்த சினிமா விஷயங்களை சொல்லு நீ.. என்று நான் சொன்னவுடன் பக்கத்தில் கப்பில் கூலா இருந்த ஆப்பிள் ஜூஸை மடமடன்னு குடித்து விட்டு, சிட்டுக்குருவி சொல்ல ஆரம்பித்தது..



கூடல் நகர்னு ஒரு படத்துல பரத் நடிக்கிறார்ல, அதுல அவருக்கு ரெண்டு வேடமாம். பாவனா, சந்தியான்னு ரெண்டு கதாநாயகிகள் வேற. படத்தோட கதை அந்த படத்தோட புதுமுக இயக்குனரோட சொந்தக் கதையாம்.. நிஜத்துல தோத்த காதலை படத்துல சேர்த்து வைக்கிறாராம்..

சென்னையில் துவங்கப்பட்டு இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய BIG 92.7 FM விளம்பரதிற்காக நடிகை அசின் ஒரு வருஷதுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப் பட்டு இருக்காங்க. தென்னிந்திய நடிகைகளிலே விளம்பரதுக்குன்னு இவ்வளவு தொகை வாங்குவது அசின் தானாம். அப்படி இருந்து நேற்று நடந்த அதன் துவக்க விழாவுக்கு அம்மணி போகலியாம்..

இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் சில காட்சிகளுக்காக திருமதி சூர்யா..அதாங்க..ஜோதிகா, மொழி மற்றும் சிலந்தி படத்துக்காக சில நாள்களை ஒதுக்கி உள்ளார். தேனிலவு முடிந்து வந்தவுடன் சில நாட்கள் இந்த படங்களின் ஷூட்டிங்கில் நடிப்பார்.

2006 தனக்கு சரியா இல்லாததால விஜய் தனது போக்கிரி படத்தை ரொம்ப பொறுமையா எடுக்கிறாராம்.. ஒரிஜினல் படத்தோட பிரதியை போட்டுப்பாத்து எப்படி வித்தியாசம எடுக்கலாம்னு ரொம்ப மெனக்கெட்டு எடுகிறாராம்.. ரொம்ப உஷாராயிட்டார் போல.. இல்ல பயமான்னும் தெரியல..

இன்னிக்கு இவ்வளவு தான்.. போயிட்டு வர்றேன்.. இன்னிக்கு தான் நான் என் சந்தியா கிட்ட காதலை சொன்ன நாள்.. அதனால அவள கூப்பிட்டுகிட்டு ஊர் சுத்தப் போறேன்.. உன்கூட வெட்டியா பேசி என்ன ஆகபோகுதுன்னு சிட்டுக்குருவி சர்ருன்னு பறந்துடுச்சு.. சே.. போற நேரத்துல நம்மள வேற அசிங்கபடுத்திட்டு போகுதே.. இந்நேரம் நமக்குன்னு ஒரு சிந்தியாவோ விந்தியவோ இருந்தா இப்படி அசிங்கப்படதேவையில்லியே.. இரு குருவி..அடுத்த தடவை வர்றப்போ உன் றெக்கையை பஞ்சர் பண்ணிவிடுறேன்..

Tuesday, September 19, 2006

சிட்டுக்குருவிக்கு ஆபரேஷன்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 8


சிட்டுக்குருவிக்கு உடம்பு சரி இல்ல.. றெக்கையில் ஏதோ சின்ன ஆபரேசனாம்.. பறந்து வர முடியாத நிலைமை. றெக்கைல புத்தூர் கட்டு போட்டு இருக்காங்க.. நான் போய் பாக்கலாம்னு நினைச்சா, அதை அவங்க அப்பா, பக்கத்து காட்டுல இருக்கிற அவங்க பெரியப்பா வீட்டுக்கு ஒய்வு எடுக்க அனுப்பிச்சிட்டார்..அவங்க பெரியப்பா குருவிகள் மிலிட்டரில இருந்தவராம். யாராவது மனுஷங்க குருவிகளை பிடிக்க வந்த அவங்க கிட்ட இருந்து குருவிகள் இனத்தை காத்தவராம்.. அதனால் அவருக்கு மனஷங்கள்னாவே புடிக்காதாம்.. சரி..எதுக்கு வம்புன்னு நான் இருந்துட்டேன்.. ஆனா பொறுபுள்ள நம்ம சிட்டுக்குருவியோ, சினி பிட்ஸை இமெயிலில் அனுப்பிசுட்டது. எல்லோரும் சிட்ட்க்குருவிக்கு சீக்கிரம் நல்ல ஆகனும்னு வேண்டிகிட்டே எல்லா நியுசையும் படிச்சு ரசிங்க..

அஜித் நடித்த காட்பாதர் படத்தை அரசோட வரிவிலக்கு காரணமா பேர் மாத்தி இருக்காங்க வரலாறுன்னு. படம் தீபாவளிக்கு ரிலீஸ்.. இந்த வருஷம் தல தீபாவளி தான்..

ஜோதிகா, இனி நடிக்க மாட்டேன்னு சொன்ன பிறகு, அவர் நடித்த சிலந்தி மற்றும் மொழி தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏன்னா, கல்யணமான ஹிரோயினை எல்லாம் பாக்க முடியாதுன்னு 75% மக்கள் சொல்லியிருக்காங்க..

இதுவரை பாட்டு மட்டுமே எழுதி வந்த பஞ்ச் டயலாக் பேரரசு, முதன் முறையா தர்மபுரி படத்துல ஒரு பாட்டு பாடி இருக்கார்.. திருப்பதில நடிச்சதயே பாக்க முடியல.. இப்போ பாட்டா.. என்ன கொடுமை இது சரவணா...

பிப்ரவரி 14 படத்துல அறிமுகமான நடிகை ரேணுகாமேனன், அமெரிக்கவுல வேலை பாக்குர கம்பியூட்டர் இஞ்சினியரை விரைவில் திருமணம் செய்கிறார்.. கேரளாவில் அவரது வீட்டில் போன வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.. (சத்தியமா நான் இல்லீங்கோ)

Saturday, September 09, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 7

நல்ல தூக்கத்தில் இருந்தேன்.. ஜன்னல் டொக் டொக்ன்னு தட்டுற சத்தம் கேட்டது.. சலிப்புடன் எழுந்து பாத்த நம்ம சிட்டுக்குருவி, முறைத்து பார்த்தவாறு நின்று இருந்தது. ஜன்னலை திறந்து அதை உள்ளே அழைத்தேன்.. எவ்வளவு அரும்பாடுபட்டு உனக்கு சினிமா செய்தி கொண்டுவந்தா நீ எப்படி தூங்குறியே ஒரே கத்தல்.. அது கோபத்தைக் குறைக்க கொஞ்சம் குறைக்க, தர்ப்பூசணி போட்டேன்.. இப்போ குளிர்ச்சி அடைஞ்சு, சினிமா நியுசா கொட்ட ஆரம்பிச்சது..

தொண்டையை கணைத்துகொண்டே.. நம்ம ஜேஜே பூஜா அவங்க கடவாப்பல்லு துறுத்துகிட்டே இருந்ததால அதை ஆபரேஷன் மூலமா எடுத்துட்டாங்க..ன்னு ஒரு அதிர்ச்சியான செய்தியோட ஆரம்பிச்சது.. பூஜா சிரிச்சாலே ஒரு அழகு தான் இல்லியானு நம்மளப் பாத்து சிட்டுக்குருவி நக்கல வேற பண்ணுது..

தமிழ் கத்துக்கொடுக்க நீ போறியான்னு குருவி கேட்டது.. யாருக்குன்னு கேட்டேன்.. வேற யாருக்கு.. இப்போதைக்கு தமிழ் ரசிகர்களோட கனவு 'கன்னி'வெடி நமீதாவுக்கு தான்.. அப்படின்னது.. நானும் ஹி..ஹின்னு தலையாட்டினேன்.. தனக்கு தமிழ் கத்துகொடுத்தவர் இறந்துட்டதால நமீதா புது தமிழ் வாத்தியார் தேடுறங்களாம்.. குருவி கையிலேயே என்னோட அப்பிளிகேஷனை கொடுத்தேன்.. அ..ஆன்னு நமீதாவுக்கு தமிழ் சொல்லி கொடுக்கலாமே அது தான்..

நம்ம தல அஜித், போன வாரம் ஏவிஎம் நிறுவனம் கொண்டாடிய திருப்பதியின் வெற்றி விழாவுக்கு, அழகாய், புதுசாய், புத்துணர்ச்சியாய், தனது மனைவி ஷாலினியுடன் வந்து எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தார். (குருவி:ச்ச்சோ சுவீட் தல..)



அஜித், தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜிக்காக நடிக்க இருக்கும் படத்திற்கு கிரீடம் என்று பெயர் சூட்டபட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் தொடங்கி அடுத்த வருடம் மேய் 1, அஜித் பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். ஜோடியாக ஷ்ரேயா அல்லது நயன்தார (குருவி: சிம்பு ஒகே சொல்லியச்சா.. என்ன நக்கல் பாருங்க இந்த குருவிக்கு) நடிக்கலாம். ஒளிப்பதிவை திரு கவனிக்க செல்வா கலையை கைப்பற்ற, ஆன்டனி எடிட்டிங் செய்கிறார். யுவன் இசை பொறுப்பை ஏற்றிருக்கிறார்.



லொள்ளு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஜொள்ளூ இயக்குனர் SJ சூர்யாவை கதாநாயகனாய் போட்டு ஒரு சொந்த படம் எடுக்கிறார். படத்தின் பெயர் வியாபாரி. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சென்னை சிட்டியை கலக்கி கொண்டிருப்பதாக கேள்வி. இந்த படத்தில் SJ சூர்யாவுக்கு ஜோடியாக நமீதா, மாளவிகா மற்றும் பக்கத்து மாநில நாயகி ஒருத்தரும் நடிக்கிறார்கள். ஒரு நல்ல போஸ்டர் மட்டும் இங்கே.. மற்ற ஜொள்ளு போஸ்டர்களுக்கு இங்கே செல்லவும். தாய்குலங்களும் இங்கே வருவதால் அது மாதிரி போஸ்டர் எப்போதுமே இங்கே தவிர்க்கப்படுகிறது. சே..என்னே சிட்டுகுருவியின் நல்ல எண்ணம்.

அடுத்த செய்தி என்னன்னா மெட்டி ஒலி தொடரின் இயக்குனர் திருமுருகன் இயக்கிய எம்டன் மகன்னு வித்தியாசமான தலைப்பை கொண்ட படத்தின் தலைப்பு எம் மகன் என்று மாற்றப்பட்டது. எல்லாம் வழக்கம் போல வரி விலக்கு காரணமாய் தான். எம்டன் என்பது இரண்டாம் உலகப் போரின் போது சென்னைக்கு அருகில் மூழ்கிப்போன ஒரு நீர்மூழ்கி கப்பலின் பெயர் என்பதால் வரி விலக்கிற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. படம் நன்றாக இருப்பதாய் கேள்வி.

ரொம்ப தூரம் பறந்து இந்த மாதிரி நியுஸ் எல்லாம் புடிக்கிறதால இறக்கை எல்லாம் வலிக்கிறது என்று சொல்லி என்னிடம் இருந்து ஐயோடெக்ஸ் வாங்கி கொண்டு சிட்டுக்குருவி பறந்தது.

Wednesday, August 30, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 6

ஜுனியர் விகடனுக்கு ஒரு கழுகு, வாரமலர் சினிமா பகுதிக்கு ஒரு கருப்பு பூனை இருப்பதை போல நமது சினி பகுதிக்கும் ஒரு செய்தி தொகுப்பாளர் இருந்தால் நல்லா இருக்கும் என்று, நேற்று ஒரு சிட்டுகுருவியைப் பிடித்தேன்.. சிட்டுகுருவி சின்ன இடங்களில் கூட நுழைய முடியும் என்பதால் அதையே ஏகமனதாக தேர்வு செய்தேன் (?) கொலம்பஸில் எங்கே சிட்டுக்குருவி என்று யாரும் பின்னூட்டம் இட வேன்டாம்..(குறிப்பா அம்பிக்கு) எப்படியோ கிடைத்தது.. நமக்கு தேவை ஒரு செய்தி தொகுப்பாளர்.. அவ்வளவு தான்.

பரட்டை என்கிற அழகு சுந்தரம்


இது எங்க ஊர்ல,பீடி குடிச்சுகிட்டு, யார் என்ன வேலை சொன்னாலும் செஞ்சுகிட்டு, கிடைக்கிற இடத்துல சாப்பிட்டுகிட்டு, ஊர் கோவிலுல தூங்கி பொழுதை கழிக்கிற ஆள் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மருமகன் தனுஷுக்காக, தமிழாக்கம் செய்யச் சொல்லி பரிந்துரை செய்த ஒரு கன்னட மொழி படத்தின் தமிழ் தலைப்பு. இதை நடன இயக்குநர் ராஜு சுந்தரம் இயக்குகிறார்.
சென்னைக்கு வேலை தேடி, கிராமத்தில் இருந்து வரும் தனுஷ் ஒரு தாதா ஆகிறார். அதற்கு, பிறகு அவரை தேடி அவர் அம்மா வருகிறார். அன்பான தாயுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் ஒரு பாச போராட்டமே இந்தக் கதை. தனுஷின் அம்மாவாக அர்ச்சனா நடிக்கிறார்

சிட்டுகுருவி - பரட்டை, எப்போ தாத்தா ஆகப்போறீங்க..

சபரி

புரட்சிகலைஞர் விஜயகாந்தின் அடுத்த படம், கம்பீரம், அரசு படங்களை இயக்கிய சுரேஷின், சபரி. இதில் விஜயகாந்த் ஒரு மருத்துவராக நடிக்கிறார். அவருக்கு இணையாக ஜோதிர்மயி மற்றும் மாளவிகா நடிகிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவமனைகள், அதில் எத்தனை மருத்துவர்கள் என்னும் புள்ளி விவரங்களை நீங்கள் இந்த படம் பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம். ஆனால் விஜயகாந்தின் பிரதான வசன எழுத்தாளர் லியாகத் அலிகான், கேட்ட பதவி தேமுதிகவில் கிடைக்கவில்லை என்பதால், அதிமுகவில் சேர்ந்த பிறகு, இவருக்கு மறுபடியும் எழுதுவாரா என்பது சந்தேகமே..

சிட்டுக்குருவி - கேப்டன், தமிழ்ல என்ன வேணும்னாலும், பேசுங்க.. இங்கிலீஷ்ல மட்டும் வேண்டாம்..

சூர்யா - ஜோ திருமண வரவேற்பு

சூர்யா - ஜோ திருமண வரவேற்பு, பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது. வரவேற்பு, செப்-11 ஆம் தேதி கல்யாணதிற்கு பிறகு, பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும்.

சிட்டுகுருவி - நமக்கு பிரச்சினை இல்ல.. பறந்து உள்ள போயிடலாம்

பெரியார்

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவதும், அதற்கு தமிழக அரசு 95 லட்ச ரூபாய் நிதியுதவி செய்ததும், உங்களுக்கெல்லாம் பழைய செய்தி தான். ஆனால் இப்போது பெரியாரின் மனைவியாக நடிக்க நடிகை குஷ்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை எதிர்த்து பாமக கட்சி எம் எல் ஏக்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்து எதிர்த்தனர். இருந்தாலும், குஷ்பு தான் நடிப்பார் என்று நமது சிட்டுகுருவி சத்தியம் செய்கிறது.

சிட்டுக்குருவி உங்களுக்காக கடைசியா ஏதோ சொல்லுது.. "இந்த முறை மட்டும் அல்ல, எப்போதுமே, செய்திகள் எல்லாம் போன்ற தளங்களிலிருந்தும், மற்ற வழியாகவும் தான் கிடைக்கிறது.. ஏன்னா எப்போ எதை எதையோ காப்பி அடிக்கிறாங்கோ.. அதனால உண்மையை உலகத்திற்கு முதல்ல சொல்லனும்ல..அது தான்"

அய்யோ..பயங்கரமா பசிக்கிது.. குளத்துமேட்டு கருவாயன் தோட்டத்துல திராட்சை இருக்கு.. சாப்பிட்டு வர்றேன்..