Showing posts with label வினாடி-வினா. Show all posts
Showing posts with label வினாடி-வினா. Show all posts

Wednesday, February 13, 2008

யார் இவர்? எதற்காக இந்த வேஷம்?





இது கமல் தான்.. தசவதாரதிற்கான வேடம்.. சரியாய் பதில் சொன்ன எல்லோருக்கும் ஒரு சபாஷ்

Thursday, July 12, 2007

சிவாஜிக்கும் ஹிந்தி நாயக்-கிற்கும் என்ன சம்பந்தம்

முதல்வனின் ஹிந்தி ரீமேக் படமான நாயக்கில் அனில் கபூரின் பெயர் என்ன?

இதில் என்ன பெரிய விஷயம்னு நினைகிறீங்களா.. பதில் தெரிஞ்சா, இந்நேரம் நீங்க அசந்து போயிடுவீங்க.. இல்லைனா, நாளைக்கு வாங்க ஆச்சர்யத்தில் மூழ்க..

Friday, May 04, 2007

திரைப்பட வினாடி-வினா 5

போன வாரம், இடியாப்ப சிக்கல் கேள்விகள் என்று நிறைய நண்பர்கள் கருத்து சொன்னதால் இந்தவாரம் நேரடி கேள்விகள்..

1.டாக்டர் மாத்ருபூதம் நடித்த முதல் தமிழ் திரைப்படம் எது?

2.சிம்ரனுடன், தேரே மேரே சப்னேவில் நடித்த இன்னொரு கதாநாயகி, தமிழில் நடித்த முதல் படம் எது?

3.எஸ்.ஏ.ராஜ்குமார் முத்ன் முதலில் சொந்த குரலில் பாடிய பாடல் இடம் பெற்ற படம் எது?

4.ராமராஜன் நடித்த முதல் தமிழ் சினிமா எது?

5.கே.எஸ்.ரவிகுமார் வில்லனாக நடித்த முதல் படம் எது?

வழக்கம்போல, திங்கட்கிழமை விடைகள்..

உங்க எல்லோருடைய ஆசியினால், நம்ம வலைப்பக்கம் ஒரு லட்சம் ரன்களை (ஹிட்டுகளை) அடிச்சிருக்கு..

நன்றி நண்பர்களே...

Friday, April 27, 2007

திரைப்பட வினாடி-வினா 4

இந்த வாரம் சற்று வித்யாசமான கேள்விகளோடு..

1. புரட்சித் தலைவர் கூட அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் யார்? இதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் எந்த நடிகை? இந்த இரண்டு நடிகைகளுக்கும் இடையிலான வித்தியாசம் எத்தனை படங்கள்?

2.இவர் ஒரு டைரக்டர். தனது குருவை விட்டு வந்து முதல் படம் எடுக்கும் போது திணறினாலும்(முதல் படமும் ஹிட்டே), அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரின் முதல் படத்திலும் குருவின் முதல் படத்திலும் ஒரே கதாநாயகனே. இவரின் முதல் படத்தில் தான் இந்த கதாநாயகனுக்கு புதிய பட்டம் கிடைத்தது. அது இன்றளவும் நிலைத்து நிற்கிறது. கேள்வி என்னவென்றால், இவரது குரு தனது முதல் படத்தின் கதாநாயகனின் சில படங்களில் அசிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றி இருக்கிறார். அதில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள்?

3.இவர் ஒரு இளம் நடிகர். முதலில் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், பின்னால் ஆசைப்பட்டு நடித்த சில படங்கள் எல்லாம் சொதப்பியது. இன்னும் அதிலிருந்து எழவே இல்லை. பிரபலமான நடிகையோடு காதலென்று கிசுகிசுக்கப்பட்டது இவர்களிருவரும் சில படங்களில் ஜோடியாக நடித்த போது. இப்போது தனது முதல் படத்தை இயக்கிய டைரக்டரின் படத்திலேயே நடிக்கிறார். இவரை அறிமுகப்படுத்திய இந்த டைரக்டரின் பெயர் இரண்டெழுத்து. இவர் தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்த வில்லன்-கம்-டைரக்டர் நடிகர் யார்?

கேள்விகள் ரொம்ப தலையை சுற்றுகிறது என்று எல்லோரும் கருத்து சொன்னதால், சில க்ளூக்கள்..

1.அதிகப் படங்கள் நடித்தவர், புரட்சித் தலைவர் இறக்கும் போதும் வகித்த பதவியில் இரண்டு முறை இருந்தவர். அடுத்தவர், புரட்சித் தலைவருக்கு ஆடத் தெரியாது என்று ஒரு முறை பத்திரிகைளில் பேட்டி கொடுத்து கலக்கியவர் இந்த கொஞ்சும் குரல் நடிகை..

2. அந்த நடிகருக்கு கிடைத்த புதிய பட்டம் தல

3. அந்த நடிகரோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகை ஸ்நேகா

வழக்கம் போல பதில்கள் திங்கள் கிழமை...

Friday, April 20, 2007

திரைப்பட வினாடி-வினா 3

இந்த வாரம் போன வாரத்தை விட கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிலோடு சொல்லுங்கள்.

1. இவர் ஒரு டைரக்டர். கமெர்ஷியல் மன்னர் என்று பெயர் வாங்கியவர். தனது படங்களில் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்துவிடுவார். இவர் எல்லா முன்ணனி நடிகர்களையும் வைத்து படம் எடுத்துவிட்டார். இவர் கேப்டனை வைத்து எடுத்த படத்தின் பெயர் என்ன?

2.கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே மர்லின் மன்றோ போல ஒரு பாடலுக்கு ஆடிய இந்த தொடையழகி நடிகை, தயாரித்த படத்தில் நடித்த நடிகைகள் யார் யார்? இவர் நடித்த முதல் படத்தின் டைரக்டர், சரத்குமாரை வைத்து இயக்கிய படத்தின் பெயர் என்ன?

3. பிரபுவும் குஷ்புவும் ஜோடியாக முதலில் நடித்த படத்தின் இன்னொரு கதாநாயகி, சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடித்த படத்தின் பெயர் என்ன?

4. இவர் ஒரு பிரபலமான நடிகை, ஒரு காலத்தில். இவர் பெயரில் பெண்களின் ஆபரண பொருட்கள் எல்லாம் விற்றன. அவ்வளவு பிரபலமான காலத்திலும் கூட இவர் கமல் கூட ஜோடியாக நடிக்கவில்லை. சமீபத்தில் கூட ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். இவர் ரஜினியின் ஜோடியாக நடித்த படத்தை இயக்கிய டைரக்டர், விஜயை வைத்து எடுத்த படத்தின் பெயர் என்ன?

எல்லாமே ஈசியா? அட அப்படின்னா பதிலை சொல்லுங்க நண்பர்களே.. வழக்கம் போல தங்களுடைய பதில்கள் திங்கள் காலை இந்திய நேரப்படி..

Friday, April 13, 2007

திரைப்பட வினாடி-வினா 2

இன்னைக்கு கேள்விகள் கொஞ்சம் வித்தியாசமான பாணில கேட்டிருக்கேன். எப்படி இருக்கிறதுன்னு தங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்க. முடிந்தவரை கேள்வி பெருசா இருந்தாலும் அதில் க்ளூ இருக்கும். இதற்கான பதிலோட உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

1. இவர் ஒரு டைரக்டர். இப்போதைய இளம் நடிகரின் தந்தையும் கூட. இவரது படங்களில் கோர்ட் சீன்கள் இல்லாமல் இருக்காது. கேப்டனுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலத்தை கொடுத்தது இவரது படங்கள் தான். இதற்காக கேப்டன் இவரின் சமீப படங்களில் கூட நடித்தார். ஒரு படத்தில் இவர் மகன் கூட, அண்ணனாக நடித்தார். அந்த மகன் நடிகரும், கேப்டனும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன? அதில் கேப்டனின் ஜோடியாக நடித்த நடிகை யார்?

2. இவரும் ஒரு மாபெரும் நடிகரின் மகன் தான். இவர் மற்ற பெரும்பாலான நடிகர்கள் கூட இணைந்து நடித்தவர். இவரும் பெரியார் படத்தில் பெரியாராக நடிக்கும் நடிகரும் சேர்ந்து அண்ணன் தம்பியாக நடித்த படத்தின் பெயர் என்ன? படத்தின் டைரக்டர் யார்?

3.இவர்கள் இரண்டு பேர். இரண்டு பேரும் நடிகர்களின் மகன்கள் தான். இவர்கள் இரண்டு பேரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்கள். இதில் ஒருவரின் 100வது படத்தையும், இவர்கள் இணைந்து நடித்த படத்தையும் இயக்கி உள்ளார் ஒரு டைரக்டர். இவர் ஒரு பாடலாசிரியரும் கூட. பெரும்பாலான இவரின் படங்களுக்கு இவரே பாடல் எழுதியுள்ளார். அவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சிவாஜி போன்றோரையும் வைத்து படங்கள் இயக்கியுள்ளார். அந்த டைரக்டர் சமீபத்தில் ஒரு நடிகரின் தம்பி முறை நடிகரை கதாநாயகனாக வைத்து டைரெக்ட் செய்தார். கேள்வி, அவர் மேல சொன்ன நடிகர்கள் ஒருவரின் 100 வது படத்தை இயக்கினார் அல்லவா. அந்த படத்தின் பெயர் என்ன? அவர் கடைசியாக இயக்கிய படத்தின் பெயரும், ரஜினியை வைத்து இயக்கிய படத்தின் பெயரும் என்ன?

நண்பர்கள், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் தங்களுக்கு எல்லா வளங்களையும் மகிழ்வையும் மன நிம்மதியையும் தர வேண்டுகிறேன்.

உலகத்தில் வெள்ளை பூக்கள் மலரட்டும். மகிழ்ச்சி கானங்கள் ஒலிக்கட்டும்!

Sunday, April 01, 2007

திரைப்பட வினாடி-வினா 1 - விடைகள்

முதல் தடவையா, வினாடி-வினா போட்டி நடத்தினதுக்கு, ஆதரவு கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு.. இம்புட்டு ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல.. இனிமேல் வாரவாரம் மக்களோட சினிமா ஞானத்தோட விளையாண்டு பாத்துடவேண்டியது தான்..சரி.. இப்போ அந்த கேள்விக்கான பதில்கள்..

1.சமீபத்தில், மாயக்கண்ணாடி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இளையராஜாவை பற்றி பாலுமகேந்திரா பேசிய போது, சொன்ன விஷயத்தை வைத்து தான் இந்த கேள்வியே. இளையராஜாவும் பாலு மகேந்திராவும் இணைந்த முதல் படம், அது இளையராஜாவின் நூறாவது படம், அது தான் மூடுபனி.. பாலுமகேந்திரா இயக்கிய கடைசிப் படம், தனுஷ்-ப்ரியாமணி நடித்த அது ஒரு கனாக்காலம். இது தான் முதல் கேள்விக்கான பதில்.

இந்த கேள்விக்கு பதில் சொன்னவர்களில், மணிகண்டன் பாரதிராஜா-கண்களால் கைது செய் எனவும், ஹரிஷ் மூடுபனியா என்ற கேள்வியோடும் நின்று விட்டனர். ஹரிஷ் அதே சந்தேகத்தோடு பாலுவின் கடைசி படத்தையும் சொல்லியிருக்கலாம். வினையூக்கி, பாக்யராஜ்-பாரிஜாதம் எனவும், DD மேடம் குரு எனவும் பதில் சொல்லி இருக்காங்க. சுப.செந்தில் மூடுபனி என்பது சரியாக சொல்லிவிட்டு அதோட டைரக்டர் ப்ரதாப் போத்தன் என்று முடிவு செய்து தவறான பதிலை தந்துள்ளார். நாகை சிவா பொய் என்றும், கோபிநாத் குரு-மணிரத்னம் எனவும் தவறானதொரு பதிலை தந்துள்ளார்கள்..

2. இரண்டாவது கேள்விக்கான பதில் எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கு. ஒரு காலத்தில் டிடி-1-இல் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது கே.ஜே.ஜேசுதாஸின் பேட்டி ஒன்று. அப்போ தான் எனக்கும் இந்த விஷயம் தெரியும். சரியான விடை பொம்மை என்னும் படம்.

பதில் அளித்தவர்களில், வினையூக்கி பொம்மலாட்டம் என்றும், ராகவன் பொம்மையா காதலிக்க நேரமில்லையா என்றும் தடுமாறியும் இருக்கின்றனர்.

3. இது மிகவும் கடினமான கேள்வி என்று பதில் சொன்னவர்களை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது. இதற்கு சரியான விடை ரஜினி, படம்-உழைப்பாளி. உழைப்பாளி படத்தின் எல்லா பாடலுக்கும் மெட்டுக்கள் இட்டவர் இளையராஜா தான். ஆனால் அப்போது அவர் முதல் முறையாக மேஸ்ட்ரோ இசையமைக்க சென்றுவிட்டதால் இந்த படத்தின் பிண்ணனி இசையை மட்டும் செய்தவர் கார்த்திக்ராஜா.

பெரும்பாலானவர்கள் பாண்டியன்-ரஜினி (CVற், வினையூக்கி, அமர், நாகை சிவா, கோபிநாத்) எனவும், சிலபேர் அலெக்க்ஷாண்டர் (ஜோ, DD, சுப.செந்தில்,ப்ரியா) எனவும் பதில் தந்துள்ளார்கள். ராகவன் பொன்னுமணி கார்த்திக்கா என்று சந்தேகத்தோடு பதில் தந்துள்ளார். மணிகண்டனும் ஹரிஷும் யுவன் ஷங்கர் ராஜவின் முதல் படமான அரவிந்தன் என்றும், அனலைஸ்ட் அஜித்-உல்லாசம் என்றும், பதில் தந்துள்ளார். சிலபேர் (கானா பிரபா)படத்தின் பெயரை சொல்லாமல் ரஜினி என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களின் பதில் சரியாக இருந்தாலும், படத்தின் பெயரையும் சேர்த்து சொன்னவர்களுக்கே வெற்றிபெறுவதில் முன்னுரிமை.. கார்த்திக்பிரபு மாதவனோ கார்த்திக்கோ என்று புதியதொரு பதிலை தந்துள்ளார். பாலராஜன்கீதாவும் டும் டும் டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த கேள்விக்கு, மாணிக்கம் என்று நினைத்து ராஜ்கிரன் பெயர் சொல்லியிருக்கிறார் மாப்ள பரணி.

பாண்டியன் கார்த்திக்ராஜா படலுக்கான இசையமைத்த முதல் படம். அந்த படத்திற்கு இளையராஜா தான் BGM செய்தார்.

4. இதற்கு, (படம்-நாயகன்-கடைசிப்படம்) மெல்ல திறந்தது கதவு-மோகன்-அன்புள்ளா காதலுக்கு, செந்தமிழ்ப் பாட்டு-பிரபு-குஸ்தி, செந்தமிழ்ச் செல்வன்-பிரசாந்த்-தகப்பன் சாமி, விஷ்வதுளசி-மம்மூட்டி-விஷ்வதுளசி, இதில் எந்த பதிலை சொல்லியிருந்தாலும் பாஸ் தான். இது கேள்வியை சரியாக நான் கேட்கமறந்ததால், உங்களுக்கு இந்த நாலு ஆப்சன்கள்.

ஜோவும் அனலிஸ்டும், மோகன் நடித்த உருவம் படத்தின் பெயரை சொல்லி இருக்கின்றார்கள். கானா பிரபு, படத்தின் பெயரை கணித்துவிட்டு கடைசி பெயரை சொல்ல மறந்துவிட்டார்.

5. இந்த கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல், சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பும் முன், விமான நிலயத்தில் வைத்து இந்த பாடலை கவியரசு எழுதியதாக ஒரு குறிப்பு இருக்கிறது.

Thursday, March 29, 2007

திரைப்பட வினாடி-வினா 1

எல்லா பதிவுலையும் போட்டிகள் வைக்கிறாங்க.. மக்களும் தங்களுக்கு தெரிஞ்சத சொல்லி கைதட்டு வாங்குறாங்க.. நாம இப்படியே கதை சொல்லிகிட்டே இருந்தா, வாய்யா வயசானவரேன்னு சொன்னாலும் சொல்வீங்க.. அது நமக்கும் நல்லது இல்லைன்னு முடிவு, பண்ணி உங்களையெல்லாம், சிந்திக்க வைக்க, சுவத்துல தலையை முட்டி யோசிக்க வைக்கத் தான் இந்த வினாடி-வினா (அதாம்பா, குவிஸ்) போட்டி..

ரெடியா.. ஸ்டார்ட் மியுஸிக்..

1. இசைஞானி இளையராஜாவோட 100வது படத்தை இயக்கிய இயக்குநரின் சமீபத்திய படம் எது?

2. பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் முதல் தமிழ் திரைப்பட பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் என்ன?

3. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா முதன் முதலில் பிண்ணனி இசையமைத்த படத்தின் கதாநாயகன் யார்?

4. இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து இசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?

5. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி திரைப்பட பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் நாயகன்-நாயகி பெயர் என்ன?

என்ன பாக்குறீங்க.. நாமதான் ஸ்டார்ட் மியுஸிக் சொன்னோம்ல... அது தான் எல்லாமே இசை சம்பந்தப்பட்ட கேள்விகள், இந்த முறை..

எல்லாம் ரெடியா.. எங்க பதிலை சொல்லுங்க பாக்கலாம்.. பதில் சொல்றது மட்டுமில்லாமல், கூட ரெண்டு பின்னூட்டமும் போடுங்கப்பா.. இதுக்கு பதில் சொன்னா என்ன தருவீங்கன்னு கேட்டா, பதில் அன்னிக்கும் ஒண்ணு தான்.. இன்னைக்கும் ஒண்ணுதான்.. அம்பி, ஊருக்கு போயிட்டு கொண்டுவர்ற அல்வா தான்..

பதில்கள் திங்கட்கிழமை வெளியாகும் (இந்த பில்டப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று முறைக்காதீங்க மக்கா)