Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Wednesday, March 19, 2008

நம்ம வீட்ல விஷேசங்க

மளமளவென வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு தயாராகிவிட்டேன்.. இப்போது தான் இந்தியா வந்த மாதிரி இருக்கிறது அதற்குள் இருபது நாட்கள் ஓடி விட்டது. நிற்க நேரமில்லை.. எனது பள்ளி கால நண்பர்களிலிருந்து பழைய அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்த நண்பர்கள் வரை, அவர்களின் தொடர்பு எண்களை வாங்கி குவிக்கிறேன்.. நேரமிருக்கும் போதெல்லாம் என் திருமணதிற்கு வர அவர்களை அழைக்கிறேன்.. திருமணம்? ஆமாம்.. நான் வந்த ஒரே வாரத்தில் எல்லாம் முடிவு செய்யப் பட்டு ஏப்பிரல் 11-இல் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் RR கம்யூனிட்டி ஹாலில், வத்தலகுண்டை சேர்ந்த ஹேமலதாவை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கிறேன்.. இதை படிக்கும் அனைவரும், நான் நேரில் வந்து அழைத்ததாய் எண்ணி எங்களை வாழ்த்த வருமாற் அழைக்கிறேன்..

இன்னும் திருமண அழைப்பிதழ் எனக்கு ஊரிலிருந்து வரவில்லை. வந்தவுடன் அழைப்பிதழுடன் உங்கள் அழைக்கிறேன் நண்பர்களே..

Friday, December 14, 2007

முருகனருள் பரப்பும் பில்லாவின் சேவல்கொடி பறக்குதய்யா


பில்லா பாடல்கள் வெளியான பிறகு பல தடவை, எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரமின்மையால் அந்த பாடல்களை பற்றி எழுத முடியவில்லை. சேவல் கொடி பாட்டில் வரும் இரண்டு வரிகளை பற்றி மட்டும் எழுதினேன். இன்று வலையுலகை ஆய்ந்து மேய்ந்து கொண்டிருந்த போது, முழுக்க முழுக்க படத்தின் கதாநாயகன் முருகன் அருள் வேண்டி பாடும் சேவல் கொடி பாட்டை, முருகனருள் பதிவில் அதன் வரி விளக்கங்களோடு படித்து என்னையே நான் மறந்துவிட்டேன்.. இந்த பாடல் முருகனை பற்றி வருவதாலும், நல்ல தாளங்களோடு கேட்பதற்கு இனிமையாய் இருப்பதாலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த பாட்டில் இவ்வளவு மறைமுக அர்த்தங்களா.. கண்ணபிரான் அவர்கள் இந்த பாடலை வரி விளக்கங்களோடு இங்கு எழுதியிருப்பதை படியுங்கள். நிச்சயம் நீங்களும் முருகனருள் பெற்று மெய்சிலிர்ப்பீர்கள்..

நன்றிங்க கண்ணபிரான் ரவிஷங்கர்!



நம்ம பதிவுல தல படத்தை போடலைனா எப்படி!

Friday, September 07, 2007

மறுப்பு அறிக்கை

எனக்கு கல்யணம் முடிஞ்சதா ஊரெல்லாம் பேச்சு..எனக்கு தெரியாம எனக்கா.. இதை இப்படியே விட்டா என் குழந்தைக்கு காதுகுத்து விழான்னு பிளாக்கில் போஸ்டர் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க நம்ம பாசக்கார நண்பர்கள்..இதற்கு நான் மறுப்பு அறிக்கை விட்டுத் தான் ஆகனும்.

பாசமிக்க அன்பு நண்பர்களே, அருண் மாதிரி, மற்ற கல்யாணமாகாத கன்னிபையங்க மாதிரி நான் இன்னும் பிரமச்சாரி தான்.. ஏற்கனவே எனது சொந்த ஊரில் எனக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணிற்கும் கல்யாணம் ஆகிவிட்டதா பேச்சு அடிபட்டு என் அப்பா அம்மா லைட்டா ஒரு உதறலோட தான் இருக்காங்க.. நானும் தலைவர் சிவாஜில சொன்ன மாதிரி, தமிழ் கலாசாரத்தோட ஒரு பொண்ண சம்சாரமா ஆக்கிகொள்ள தேடிகிட்டு தான் இருக்கேன்.. உங்களுக்கெல்லாம் சொல்லாம கல்யாண செய்துகொள்ள, நானென்ன நடிகர் ஸ்ரீகாந்தா என்ன? இல்ல இருபது பேரை மட்டும் கூப்பிட்டு கல்யாணம் செய்துகொள்ள அபிஷேக் பாச்சனா (ஹிஹி..சைட்ல ஐஸ் மாதிரி பொண்ணை தேடுறோனோன்னு உங்களுக்கு சந்தேகம் வந்த நான் பொறுபில்லை.) வெள்ளோடு வாழ் குடிமகன்.. அதனால, ஓரத்துல மஞ்சள் வச்ச கல்யாண பத்திரிக்கை வச்சு எல்லோரையும் அழைப்பேன், நண்பர்களே..

ஸ்ஸ்ஸ்.. அறிக்கை விட்டு ரொம்ப நாள் ஆனதால எப்படி விடுறதுங்குறது கூட மறந்து போயிடுச்சுப்பா

Monday, August 06, 2007

எல்லாம் சோம்பேறித் தனம்

காலைல கண்ணை முழிச்சாலே மடிக்கணினில ஒரு ஆங்கில படத்துல தான் முழிக்கிறது இப்போ எல்லாம். இங்க வந்த புதுசுல மாசத்துக்கு ஒரு படம்னு இருந்தது.. இடைல அது கூட இல்லாம இருந்தது.. இப்போ நாளைக்கு ஒண்ணு.. வரிசையா இந்தூரு நூலகத்துல முன்பதிவு செய்து எல்லாத்தையும் வாங்கி வச்சு வரிசை கட்டி படம் பாக்குறது. இது இல்லாம சின்சினாட்டிக்கு அருண் கூட போனப்ப அருண் நெட்ஃப்லிக்ஸ் பத்தி சொன்னவுடனே அதுலையும் சேர்ந்து தமிழ், ஆங்கிலம்னு விட்ட தொட்ட படத்தை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாசு.. நான் பாத்த படத்தை லிஸ்ட் கொடுத்தாலே வாரம் ஒரு பதிவு போட்ட மாதிரி ஆகிடும் போல அத்தனை படம்.. ஏற்கனவே பார்த்த படம்னாலும் மறுபடியும் பார்க்க ஆரம்பிச்சாசு..

இதோ கடந்த வாரம் பார்த்த படத்தோட பட்டியல்
(அடைப்புகுறிக்குள்ள நம்மளோட ரேட்டிங்)

தியேட்டரில் பார்த்தது

டிஸ்டர்பியா (7/10)
ஃபென்டாஸ்டிக் ஃபோர் (5.5/10)
ஷ்ரெக் மூன்று (7.2/10)
டிரான்ஃபார்மர் (6.8/10)
ஹாரி பார்ட்டர் (6.5/10)

டிவிடியில் பார்த்தது

மிஷன் இம்பாஸிபிள் 1
லார்ட் ஆப் தி ரிங்ஸ் - முதல் பாகம்
ஆலீஸ் இன் தி வொன்டர்வேர்ல்ட்
சிக்கன் லிட்டில்
போன் பூத்
கார்ஸ்

இது இல்லாம பிரண்ட்ஸ் நாடகத்தோட ஒன்பதாம் பாக டிவிடியில் சில எபிசோடுகள்.. இப்படி பொழப்பு போகுது நமக்கு.. நண்பர்கள் காறித் துப்பாத கதை தான். என்னடா நொய் நொய்னு முதல்ல எல்லாம் போன் பண்ணுவ.. இப்போ பண்றதில்லியேன்னு.. ஏற்கனவே சொன்னது மாதிரி, நாம மதுரையில இளநிலை படிச்சுகிட்டு இருந்தப்போ கிட்டதட்ட மாசத்துக்கு முப்பது படம் தியேட்டர்லயே பார்த்ததுண்டு.. இப்போ டிவிடியில் பார்த்ததை எல்லாம் சேர்த்தா அந்த நம்பரை தாண்டிடுவேன் போல..

நம்ம நண்பர் மணி தனது திருமணத்திற்காக இந்தியா கிளம்பிட்டார்.. அவரை பிரிய மனசில்லாம அருண் எழுதுன பாட்டை படிச்சா, எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது.. அருண், பட்டையை கிளப்பிட்டேல.. மணி, வாழ்துக்கள் பா

போன தடவை பில்டப் கொடுத்து அப்படி எழுதப்போறேன் இப்படி எழுதப்போறேன்னு பதிவு போட்ட பிறகு ஒண்ணும் எழுத முடியல.. இந்த தடவை நோ பில்டப்..பார்ப்போம் எழுத முடியுதான்னு.. இப்போதைக்கு இந்த பதிவு மூலமா உங்க எல்லோருக்கும் ஒரு வணக்கம் போட்டுக்குறேன் மக்களே.

Saturday, July 21, 2007

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்

கிட்டதட்ட ஒரு எட்டு மாதங்களுக்கு முன், தமிழ்ல எழுதுறதுக்கு நீங்க என்ன செய்றீங்க, எனக்கு அந்த வழியை சொல்றீங்களான்னு ஒரு இமெயில் வந்தது. நானும் ஐஐடி எழுதிய ஒரு ஃTMள் வழி தமிழாக்கத்தை ஜிப் செய்து கேட்டவங்களுக்கு அனுப்பினேன். அப்படி அவங்க போட்டு ஆரம்பித்த ஒரு புள்ளி இன்றைக்கு ஒரு கோலமா, மலேசியா பற்றி ஒரு தனி பக்கம்,பயமறியா பாவையர் சங்கம் என பல சங்கங்களில் போல சங்கங்களில் துடிப்பான உறுப்பினர்.

இவங்க சித்தார்த் என்னும் நடிகருக்கு கோயில் கட்டாத குறை தான். அவங்க பக்கத்துக்கு போனா, சின்ன சின்ன போட்டோக்களில் இருந்து சித்தார்த் பிரம்மாண்டமாகி உயர்ந்து நிற்பார்.

மலேசியா பற்றி உலகுக்கு படம் போட்டு காண்பிக்க நிறைய பதிவுகளை எழுதியுள்ளார். எழுதிக்கொண்டுள்ளார். மலேய மொழியை எங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த கிக்கு (செக்கு) இவங்க.

வ.வா.ச நடத்திய போட்டியில அதிரடி நகைசுவைப் பதிவுகள் தந்து காமெடி குவின் பட்டத்தையும் அள்ளியவர்.

இன்னைக்கும் என்னை பாசமுடன் தல என்று அழைத்து நட்புக்கரம் நீட்டி என்னை பெருமைப்படுத்தியவர்.

இதுக்கு மேலும் அவங்களை யார்னு நீங்க கண்டுபிடிக்கலைனா எப்படி.. அவங்க நம்ம மை பிரண்ட் தான். அவங்களுக்கு இன்னைக்கு பிறந்த நாள் ..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

(நண்பர்களே, இது எனது 500வது பதிவு.. இவ்ளோ டைமிங்கா மை பிரண்ட் பிறந்த நாள் பதிவா மாறும்னு நான் நினைக்கல.. இந்த பதிவுக்கு இது தான் சிறப்பான கருவா இருக்கும்னு நான் நம்புறேன்.. மகிழ்கிறேன்)

(கொஞ்சம் அவசர பதிவு தான்.. ஆனால் அவசிய பதிவு..)

Monday, June 25, 2007

மறுபடியும்.... நாங்க வந்திட்டோம்ல

தட தடன்னு ஒரு சின்ன கல்லை வேகமா கடக்குற ரயில் பெட்டிகள் போல, ஒவ்வொரு நாளும் என்னை கடந்து போயிடுச்சு.. எழுதுறது போதையாயிடுச்சுன்னெல்லாம் சொல்லி, நாளுக்கு நாளு போதையேத்திக்கிட்டு தெரிஞ்ச இவன், இப்போ ஒரு பதிவை போடுறதுக்கே இரண்டு மூன்று நா(ஆ)ட்களின் உதவியை நாட வேண்டியிருக்கு.. எனக்கு இங்க ஒரு மேனேஜர் இருக்கார்.. நம்மளை கண்டா அவருக்கு எப்படித் தான் இருக்குமோ தெரியாது..ஒரு நிமிஷம் யார் கூடவும் பேச விட மாட்டார்.. பேசினா போதும்..இருக்கிற வேலையோட இன்னும் ரெண்டு வேலையை கொடுத்திட்டு போயிடுவார்.. உங்களுக்கே நல்லாத் தெரியும்..நாம எப்படி கதை சொல்வோம்னு.. ஆனா எப்போ கதையும் பேசுறது இல்லை..கிசு கிசுவும் இல்ல..ஆணிக்கு மேல ஆணி..ஆப்புக்கு மேல ஆப்பு.. இப்படி நாம முள்படுக்கைல இருக்கப்போ, அண்ணன் அண்ணியோட ரவுண்டைக்க போயிட்டார்னு எல்லாப் பக்கமும் ஒரு வதந்தி வேற..அப்படி இருந்தா நக்கீரன் மாதிரி முதல்ல சந்தோசப்படுறவன் நான் தான்.. நமக்கு தான் நரிப் பொழப்பா போயிடுச்சே.. சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்னு..

இப்போ கொஞ்சம் வேலையெல்லாம் குறைஞ்சு இருக்கு... மறுபடியும் பழைய வேகத்தோட பதிவை போடலாம்னு நினைக்கிறேன்.. வழக்கம் போல உங்க பேராதரவை தந்து நமக்கு உற்சாகமூட்டுங்கள்.. பழைய படி உங்கள் வீட்டுக்கெல்லாம் வந்து கதவையும் தட்டுவேன்..

இனிவரும் நாட்களில்..

பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்லா - சிவாஜி விமர்சனம்
பிறந்தநாள் கலாட்டாக்கள் - உங்களுக்காக பிரத்தியோக வீடியோ
அமெரிக்காவின் கேரளா - மயாமி ஒரு சுற்றுலா தொடர் வண்ண புகைப்படங்களுடன்..
அனிதா வயிற்றில் ஆழமான கத்தி - சிலிர்க்கச் செய்யும் ஒரு கொலைக்கதை மொகிகன் பள்ளத்தாக்கு - கூடாரம் கட்டி வாழ்ந்த கதை
கொத்து புரோட்டா முதல் வாழைப்பழ அல்வா வரை - சமையல் தொடர்

இதற்கு இடைல, அப்பப்போ சினி தகவல்கள் வழக்கம் போல உங்களுக்காக சிட்டுக்குருவி இப்போ ஜோடியோட.

என்ன நீங்க ரெடியா?

Saturday, June 09, 2007

மனதின் பிரதிபலிப்புகள்

நானும் எப்படியாவது வாரத்துக்கு பழைய மாதிரி அஞ்சு பதிவாவது போட்டுடடும்னு பாக்குறேன்.. ஆனா முடியல.. ஆபீஸ் விட்டு கிளம்பவே ஆறு ஆறரை ஆகிடுது.. அப்படியே கிரிக்கட் விளையாட போனா, அப்படி இப்படின்னு நேரம் ஒன்பதரை ஆகிடுது.. அப்புறம் வீட்டுக்கு வந்து, குளிச்சு சாப்பிட்டு உட்கார்ந்தா கடிகாரத்துல சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒண்ணாய் சேர்ந்து இடக்குது.. அப்படியே மெதுவா படுக்கைல விழுற நிலமைல தான் தினமும் நம்ம பொழப்பு போகுது.. இதுக்கு இடையில, சரி பதிவு தான் போட முடியல, நண்பர்கள் பதிவுபக்கதிற்கு போய், பதிவை படிச்சோமா, ஒரு அட்டென்டன்ஸ் போட்டோமான்னு இருக்கவும் முடியல.. ஏன் எப்படின்னு பக்கதுல இருக்க சுவரு, பலகை எல்லத்துலையும் தலையை மோதி யோசிச்சேன்.. அப்பத் தான் புரிஞ்சது.. நான் இப்போ எல்லாம் ஆபீசுல அதிகமா வேலை பாக்குறேன்னு.. அதுக்கடுத்து, வீட்ல சன் டிவி கனெக்க்ஷன் இழுத்ததும் ஒரு காரணம். வீட்டுக்கு போனாவே போதும் கை தானா ரிமோட்டை தேடுது.. என்ன மொக்கை படம்னாலும், அப்படியே பார்க்க வேண்டியது..இந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு.. டிவி தமிழ்நாட்ல மட்டுமல்ல, இங்கேயும் வந்து நம்மள துரத்த ஆரம்பிச்சிடுச்சுப்பா..

ஒரு காலத்துல எழுத உட்கார்ந்தா, எதை எழுதுறதுன்னு யோசிக்கவே ரொம்ப நேரம் ஆகும்.. எழுதணும்னு நினச்ச தலைப்பை பத்தி எழுத ஆரம்பிச்ச, அட! பெரிய பதிவாப் போச்சே அப்படின்னு நாமளா முடிக்கிற அளவுக்கு ஒரு சக்தி இருந்தது.. இப்போ என்ன ஆச்சுன்னு தெரில.. ஒரு பதிவு போடுறதுக்கே ரெண்டு நாள் யோசிக்க வேண்டியது இருக்கு.. அதுக்கடுத்து அதை எழுத ரெண்டு நாள் ஆகுது.. அந்த சக்தி கொடுன்னு சூப்பர்ஸ்டார் மாதிரி பாடவும் முடியல, எனக்கு வேணும் ஆசை ஆசைன்னு தருமி மாதிரி புலம்பவும் முடியல.. ஆனா எப்படியும் பழைய மாதிரி எழுதிடுவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு.. ஒரு வேளை தொடர்ந்து இவ்வளவு நாள் விடாம கிறுக்கி வந்ததாலா, பழக பழக பாலும் புளிக்கும் மாதிரி நமக்கு இந்த பிளாக் புளிக்குதா.. தெரில.. எதை நினச்சாலும், ஆராஞ்சாலும் ஒரு முடிவுக்கு வர முடியல.. சரி அதை அப்படியே விட்டுடுவோம்..

அன்புடன் குழு(நமது தோழி சேதுக்கரசியும் இதில் ஒரு அங்கத்தினர். நமது கவிதைகளை பார்த்து என்னையும் கவிதை எழுத சொன்னார்.. ஆனா என்னமோ தெரில இந்த மாதிரி போட்டிக்கு எழுதணும்னு உட்கார்ந்தா வர்ற கவிதை நமக்கே புடிக்கிறது இல்லை..) நடத்திய பரிசு போட்டில நமது தோழியும் பி.மு.கவின் துணை முதல்வருமாகிய வேதா பரிசு வாங்கியிருக்காங்க. நிச்சயமாய் அவருக்கும், அவரது சிந்திக்கும் திறனுக்குமிது ஒரு நல்ல ஊட்டச் சத்தாய் இருக்கும்னு நினைக்கிறேன்.. தோழிக்கு எமது வாழ்த்துக்கள்!

தினமும் ஒரு திருகுறள்னு நவீனமயமா எழுதிவர்ற நமது கிட்டு மாமாவோட பதிவுகள் 250 என்ற ஒரு மைல்கல்லை தொட்டிருக்கு.

வாழ்த்துக்கள் கிட்டு மாமா.

இன்னும் நிறைய நண்பர்கள் பல தலைப்புகள்ல அருமையான தொடர்களை எழுதி வர்றாங்க.. அதெல்லாம் தொடர்ந்து சுடச் சுட படிக்க முடியலைனாலும், நேரம் கிடைக்கும் போது படிக்காமல் விட்டதில்லை.. அதில் CVR-இன் வானுக்குள் விரியும் அதிசயங்கள் தொடர், படித்தவுடன் என் கண்களை ஆச்சரியத்தில் விரியச் செய்தது. அதுவும் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் விளக்குவது, தொடர் பதிவு சற்று பெரிதாக இருந்தாலும் சலிப்பு தட்டாமல் கொண்டுசெல்கிறது. அருமையான தொடர்! பரந்து விரிந்த வான்மண்டலத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் உங்களுக்கு இருந்தால் தாராளமாக உள்ளே கால் வைக்கலாம்.

இதோ வர்றார், அதோ வர்றார்னு கிட்டதட்ட பதினெட்டு மாதங்களா பத்திரிக்கைகளுக்கும், ரசிகர்களுக்கும் செய்தி தீனி போட்ட சூப்பர்ஸ்டாரின் சிவாஜி வெளிவர இன்னும் ஐந்தே நாட்கள்! சூடம் ஏத்தி, பாலூத்தி, பேப்பர் கிழித்து விசில் சத்தம் தியேட்டர் அதிர படத்தை பார்க்கமுடியலைனாலும், நானும் இந்த மாதம் 24-இல் கொலம்பஸ்லயே படத்தை பாக்கபோறேன்.. பத்து நாள் கழிச்சு பாத்தாலும், நெருப்பு சூடு ஆறாமத் தானே இருக்கும்? என்ன நாஞ் சொல்றது.

Monday, May 14, 2007

பிறந்தநாள் புகைப்படங்கள்

FAIR & LOVELY இல்லீங்கோ.. கேக்கு தானுங்கோ




முட்டையபிஷேகம் இவனுக்கே..

யாரோ..தப்பா முட்டை தக்காளி எல்லாம் போட்டு ஆம்லேட் ரெடி பண்ண ட்ரை பண்ணிட்டாங்கப்பா




வாழ்த்த வந்த நண்பர்கள் கூட்டம்





தொலைபேசி மூலம் வாழ்த்து, உலகத்தின் பல நாடுகளில் இருந்து பாசத்தோடு வாழ்த்து, தாமத வாழ்த்து.. இப்படி இவனை வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. நன்றி..

இன்று தங்கமணியின் கரம் பற்றி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொட் தொடங்கும் அம்பிக்கு பிளாக் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

Saturday, May 12, 2007

அபிஷேக நேரத்தில்...

ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி, இங்க இருக்க யாருக்கவது ஒருத்தனுக்கு பிறந்தநாள்.. யாருக்கு பிறந்தநாள்னாலும் ராத்திரி பனிரெண்டு மணிக்கு, கேக் வெட்டுறது எங்க வழக்கம். எப்போ பாத்தாலும் சும்மா முழுகுவர்த்தி அணச்சு, கேக் வெட்டுறதுன்னு சின்னபுள்ளத்தனமா நடந்துகிட்டு இருந்தது.. வந்த புதுசுல நான் அமைதியா இருந்தேன்.. இங்க இருக்க மக்கள் நல்லா பழக்கமானங்க.. அவ்ளோ தான்.. அதுக்கு பிற்கு கேக் வெட்டின பிறகு, முட்டை, தக்காளி, தக்காளி சாஸ்.. இன்னும் என்ன என்ன கைல கிடைக்குதோ அதெல்லாம் அபிஷேகமாய் தலையில் இறங்கும்.. அடுத்து வந்த ஒவ்வொரு பிறந்த நாள்லயும் அது அதிக ஆச்சு.. ஷேவிங் கிரீம், கெட்டுப்போன வாழைப்பழம், அன்னிக்கு வச்ச குழம்புன்னு ஒரு பெரிய மசாலா ஐயிட்டங்களே இறங்கும்.. இவ்வளவு செஞ்ச நமக்கு, என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப்பாருங்க...

நேத்து நைட் சமயல் ரூம்ல என்ன என்ன இருக்கோ எல்லாம் நம்ம மேல பூசிட்டாங்க.. பாக்குறதுக்கு அந்நியன் படத்துல சிக்கன் 65 போடுறதுக்கு முன்னாடி ஒருத்தன் மசாலா ஐயிட்டங்கள் பூசி இருக்க மாதிரி நம்ம மேல கெட்ட ஐஸ்கிரீம், அழுகின வாழைப்பழம், சேவிங் கிரீம், தக்காளி சாம்பார் எல்லா அபிஷேகமும் நடந்தது.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு சும்மாவா சொல்றாங்க...

நேத்து இரவு புது நம்பரை காமிச்சுகிட்டு, ஒரு போன்கால்.. எடுத்தா ஒரு பொண்ணோட ஸ்வீட் வாய்ஸ்.. அட.. ஹலோ..யாருன்னு கண்டுபிடியுங்க.. ஆஹா! நம்மளை வச்சு காமெடி கீமடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே..
G3யா..
இல்ல..
மை பிரண்ட்..
தல..நானே தான்..
இப்படித்தான் நேத்து முழுக்க நமக்கு சர்பிரைஸ்.. நம்ம மேல பாசத்தை வச்சு வாழ்த்துச் சொன்னாங்க..

நம்ம பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

நம்ம தோழி மை பிரண்ட் நம்ம மேல பாசத்தை காட்டி போட்ட போஸ்டை பாருங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்கள் விரைவில்..

Wednesday, May 02, 2007

ஆணி ஆணி எங்கெங்கிலும் ஆணி



எல்லாரையும் ஆணியை புடுங்கச் சொன்னா, நம்மள அடிக்கச் சொல்றாங்கா.. ஒன்றா..ரெண்டா, அனுமார் வால் மாதிரி நீன்டுகிட்டே போகுது வேலைகள்.. அடியடின்னு அடிக்கிறேன்.. இன்னும் தீர்ந்தபாடில்லை..

எல்லா ஆணியையும் அடிச்ச பின்னாடி மறுபடியும் நம்மளையே புடுங்கவும் சொல்வாங்களோ..?

மக்களே.. இங்கே இப்படி ஆணி அடிக்கிறதால தான் உங்க பதிவுக்கெல்லாம் வந்து கும்மி அடிக்க முடியல..

கொசுறாய் ஒரு விளம்பரப் படம்

Sunday, April 29, 2007

மலாய் படிக்கலாம் வாங்க

நம்ம காமெடி குவின் மை பிரண்ட், தான் காமெடி குவின் மட்டுமல்ல, நல்ல டீச்சரும் கூடன்னு நிரூபிச்சு இருக்காங்க.. நீங்களும் மலாய் மொழியை எலிமெண்டரி லெவல்ல இருந்து கத்துக்கங்க.. ஹிஹிஹி.. நானும் அங்க ஒரு ஸ்டுடண்ட் தான்பா.. வாங்க எல்லோரும் சேர்ந்து படிக்கலாம்..

Thursday, April 12, 2007

அழகுகள் ஆயிரம்.. ஆயிரத்தில் ஆறு இங்கே

இன்று காலை அழகு அழகுன்னு CVR ஒரு பதிவை போட்டிருந்தார். அழகாய் தானே எழுதியிருக்கிறார் என்று பார்த்தால், தல, நீங்களும் எழுதுங்க நம்மளையும் எழுதச் சொன்னார். மறுபடியும் நம்ம நண்பர் அமிழ்தும் இந்த தொடரை எழுத சொல்லியிருந்தார். ஆறு தான் எழுதப் போறோம் ரெண்டு பேருக்கும் பிரிச்சு தந்தா, அதெல்லாம் முடியாது, ஞானபழத்தை முழுதா சாப்பிட்டா தான் நல்லதுன்னு சொல்லிடுவாங்களோன்னு தெரியல. இருந்தாலும் நண்பர்கள் ஆளுக்கு மூன்றா பிரிச்சுக்குவாங்கங்கிற நம்பிக்கைல இதோ நம்ம வண்டி தயார்...

இதோ நமக்கு பிடிச்ச அழகுகள் ஆறு..

முருகன்

அழகெல்லாம் முருகனே-ல ஆரம்பிச்சு அழகென்ற சொல்லுக்கு முருகா வரை அவன் அழகு பற்றி சொல்லாத பாடல்கள் கிடையாது. காலெண்டரோ, ஓவியமோ, எதுவாய் இருந்தாலும் முருகனோட முகத்துல தெய்வீக அழகை தவிர, சுண்டியிழுக்கும் ஒரு இளமை அழகும் இருக்கும். சின்ன வயதில் முருகனோட படங்கள் பார்த்து, இப்படி வரையும் ஓவியர்கள் யாரின் முகத்தை முன்மாதிரியா எடுத்துக்குவாங்க.. இல்லை வரையும் போதே அவர்களின் முன்னே முருகன் வருவானோ என்று எண்ணி எண்ணி வியக்கும் அப்படியொரு அழகு முருகனோட முகத்துல இருக்கும். பழநி மலை போனால், ராஜா வேஷத்துல, ஆனந்தமான ஒரு புன்னகையோட அவரை காண கண்கோடி வேண்டும். அதுவும், வடபழநி கோவிலில், சில அர்ச்சனை பொழுதுகளில், திருநீறு, திணை, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால் என்று பல அபிஷேகங்களில் முருகனை காண என்ன கொடுப்பினை செய்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அழகு அப்படின்னு சொன்னாலே எனக்கும் சித்திரம் முதல் சிலை வரை முதல்ல மனசுல வந்து நிற்பது முருகன் தான். மொத்த அழகு ஆறையும் முருகன்னே சொல்லலாம். ஆனால், மேல CVRக்கும் அமிழ்துக்கும் வாக்கு கொடுத்து விட்டதால் முருகன் முதல் இடத்தில் மட்டும்.

தமிழ்

ஒவ்வொரு எழுத்தும் ஒரு அழகு. அதிலிலிருந்து எழும் ஓசைகளும் அழகு. தமிழை கரைத்து குடித்தவர்கள், அதோடு பக்கத்தில் அமர்ந்து வாழ்ந்தவர்கள், அதனை அமிழ்தென்றும் அழகென்றும் சொல்லிவிட்ட பிறகு, நான் மட்டும் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது.

நான் பிறந்தவுடன் வடமாநிலத்தில் இருந்தேன், கிட்டதட்ட எனது நான்கு வயது வரை. அப்போது அங்கு தமிழர் பிரச்சனை எழுந்து, தமிழரெல்லாம் பயந்து தமிழகம் வந்தடைந்த போது, போதும் இந்த வாழ்க்கை என்று நாங்களும் வந்துவிட்டோம். அப்போது கிளி மாதிரி தத்துபித்துன்னு நான் தமிழ் பேசுவேனாம். ஆனால் ஹிந்தி வெளுத்துகட்டுவேனாம். என் ஊருக்கு வந்த பிறகு யார் கேள்வி கேட்டாலும் நான் ஹிந்தியில் தான் பதில் தருவேனாம். இன்னமும் ஊர் பெருசுகள் என்னை கண்டால் சொல்லும் விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்போது ஹிந்தியா அப்படின்னா என்று கேட்கும் நிலையில் தான் நான் என்றாலும், அப்போது அப்படி ஹிந்தி பேசியதில் பல சமயங்களில் பேசும் போது, 'ழ'வை ல என்று உச்சரித்து விடுவதுண்டு. ஆனால் எழுதும் போது அந்த மாதிரி பிழைகள் இருக்கவே இருக்காது. இந்த ஒரு விஷயதிற்காக எத்தனையோ முறை நான் வருந்தியதுண்டு என்றால், தமிழ் மேலும், அதன் ஏகாந்த அழகின் மீதும் நமக்கிருக்கும் பற்று தெரிந்திருக்குமே. தமிழ் இங்கே இரண்டாவது அழகு..

நிலா

ஆடை கட்டி வந்த நிலவு என்று பட்டுகோட்டை முதல், வண்ணம் கொண்ட வெண்ணிலவே என்று வைரமுத்து வரை நிலவை, அதன் அழகை, அதன் பரந்த வெளிச்ச வெளிகளை பாடாத கவிஞர்கள் உண்டா.. நிலா, என்றுமே அழகு. அது தேய்வதும் அழகு.. வளர்வதும் அழகு.. சின்ன வயசில் நிலாவை காட்டி நமக்கு நெய்ச்சோறு போட்டதெல்லாம் மறக்கமுடியாதது. (அப்பவே நிலாவ சைட் அடிக்காம இந்த ஷ்யாமுக்கும், அம்பிக்கும் சோறே உள்ள இறங்காதாம்.) அந்த சின்ன வயதில் மனதில் ஒரு இளவரசியாக பதிந்துவிட்ட நிலா, இன்று அழகான ஒரு தேவதையாக மனசுக்குள் உருவெடுத்து நிற்கிறது. பரந்து விரிந்து கிடக்கின்ற இருண்ட வானத்தில் ஒரு வெளிச்ச பொட்டு, இந்த நிலா. உலக காதலர்களின் உன்னத நண்பன் இந்த நிலா. நமக்கும் எங்கே போனாலும் கூடவே வர்ற காதலி. இவள் இருப்பது மூன்றாம் இடத்தில்.

புன்னகை

கொஞ்சம் சிரிங்க என்று புகைப்பட நிபுணர் முதல், எப்படி சிரிச்ச முகத்தோட மகாலெட்சுமி மாதிரி இருக்கு பொண்ணு என்று பெண் பார்க்கும் இடத்தில் பெரியவர்களும், டேய், எப்போதுமே உன் உதட்டுல லிப்ஸ்டிக் மாதிரி இருக்கிற அந்த ஸ்மைல் தாண்டா என்னை கவுத்தினது என்று பூங்காவில் காதலனிடம் கதைக்கும் காதலியும், பொக்கை வாய்னாலும் என் தாத்தா சிரிச்சா அது அழகு என்று சொல்லும் பேரன்களும், அமுல் பேபி மாதிரி அழகா சிரிக்கிறான் பாரு குழந்தை என்று பக்கத்து வீட்டு குழந்தைகளை கொஞ்சுவது வரை புன்னகையில் அழகு, வர்ணமடித்த வானம் மாதிரி முகத்துக்கு ஒரு அழகு. இந்த சிரிப்பு முகத்துக்கு மட்டும் இல்ல, உள்ள இருக்க மனசையும் படம்பிடித்து காட்டும் அழகு.. அதனால நமக்கு சிரித்த முகம் ரொம்ப பிடிச்ச விஷயம்.

மழை

ஒரு மழை பெய்தால் போதும், அது மனிதர் முதல் புல், பூங்கா வரை எல்லோரையும் மகிழ்விக்கும். இந்த பூமியே குளித்தது போல அப்படி ஒரு அழகு வழிந்தோடும் இந்த மழையினால். நமக்கு மழை ரொம்ப பிடித்த விஷயம். மனசு நனையிற வரை மழையில் ஆடுவேன். நம்புங்கள், பயந்து ஒளிந்த போதெல்லாம் பிடிக்கும் வியாதிகள் மழையோடு கைகோர்த்து ஆடும் போது வருவதே இல்லை. நான் மழையை பொருத்தவரை, ஆண்பால் ஷ்ரேயா. கண்ணை மூடிக்கொண்டு இதை கற்பனை செய்து பாருங்கள். மழை முடிந்த நேரத்தில், மரங்கள் சூழ்ந்த ஒரு சாலையில், ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல, சேர்த்த துளிகளை தரைக்கு இலைகள் அனுப்பும் அந்த ஆனந்த கணத்திலே என்னை மறந்து நடப்பேன். ஒரு மரத்தை போல ஒளிந்து கொள்ளாமல் மழையில் குளித்து, காற்றில் தலைவாரிக் கொள்வேன். மழை, என் ஐந்தாவது அழகு.

நல்ல மனிதர்கள்

வானில் கருமேகம் சூழ்ந்தது. இதை கண்டாலே மழை பெய்யும் சந்தோசத்தில், தரை புற்கள் கூட தலையாட்டி ஆடும். மயிலுக்கு சொல்லவும் வேண்டுமோ. தன் அழகு தோகைவிரித்து நடனமாடியது. இதை கண்ட பேகன் என்னும் மன்னன், அடடா, குளிரில் வாடுகிறதே இந்த பொன்மயிலென்றெண்ணி போர்வை போர்த்துகிறான். பார்ப்பதற்கு அறிவற்ற செயல் என்று தோன்றினாலும், அதுவும் ஒரு உன்னத செயல் என்கிறது நாலடியார். இதைப் போல பசியென்று வந்த புறாவிற்கு தன் தொடை அரிந்து தந்தான் ஒரு மன்னன். இப்படி, வாய்விட்டு சொல்லமுடியாத உயிருக்கே பதறியடித்து உதவும் இவர்கள் மனிதர்களுக்கு எப்படி உதவியிருப்பர்கள். இந்த அளவு இல்லையெனினும், நம்மால் முடிந்த அளவு முடியாதோர்க்கு உதவி செய்யலாம். முடியாதோர் என்றதும் எல்லோரும் பிச்சை போடுவது ஒன்று தான் என்று நினைகிறார்கள். ஆனால், அதுவல்ல.. வெயில் காலங்களில் பழநிக்கு பாதயாத்திரை நடந்து போவோருக்கு மோர், தண்ணீர் பந்தல் அமைத்து அவர்தம் தாகம் தணித்தல், கல்வி கற்க வழியிருந்தும் நிதி இல்லாததால் பள்ளி போக முடியாதோர்..இப்படி எத்தனையோ பேர் வாழ நெஞ்சில் உரம் இருந்தும் திசைகாட்ட ஆள் இல்லாததால் பாய்மரம் போலத் தவிக்கின்றனர். நல்ல மனிதர்கள் சமுதாயதிற்கு அழகு.

இது போல படித்து முடித்துவிட்டு, புராஜெக்ட் அல்லது வேலை இருக்கும் இடங்கள் தெரியாமல் எத்தனையோ மனிதர்கள் பரிதவிக்கின்றனர். அப்படி வழியிழந்தோர்க்கு உதவ அம்பி-யும், DD மேடமும் புதியதாய் ஒரு வழிமுறையோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் நல்ல மனிதர்கள். சமுதாயம் புன்னகை பூக்க, சோர்ந்த நெஞ்சங்களில் மகிழ்ச்சி மழை பொழிய, இந்த தமிழின் உதவியோடு, இருட்டை ஒழிக்க வந்திருக்கும் மனித நிலாக்கள். அவர்களின் இந்த முயற்சி வெற்றி பேற வாழ்த்துக்கள்.

என்னின் ஆறை எழுதி முடித்தாகிவிட்டது. அப்போ நாமும் மற்றவர் அழகை தெரிந்து கொள்ளவேண்டாமா. இதோ நான் டேக் செய்யும் நண்பர்கள்

1. அம்பி
2. DD மேடம்
3. ACE
4. ப்ரியமான ப்ரியா
5. பில்லு பரணி
6. G3
(விதிகளை மீறி ஆறு பேரை கூப்பிட்டாச்சு.. இனிமே இதுல மூணு பேரை குறைக்க முடியாது.. இந்த சங்கிலியை ஆரம்பித்த கொத்ஸ் மன்னிப்பாராக)

உங்க அழகை தெரிந்துகொள்ள நான் தயார். எழுத தயாராகுங்கள்.

Saturday, March 24, 2007

ஜில்லென்று மலேசியாவும் கும்மென்று பார்க்க திரைப்படங்களும்

விளம்பரப்படம் எடுக்கிறது மாதிரி ஆகிடுச்சுப்பா.. பதிவுக்கு ஆளை திரட்டி வந்து, பின்னூட்டம் போடவைக்கிறது.. பதிவோட தலைப்பை இது மாதிரி கொடுத்தா தான், பின்னங்கால் பிடறியில் அடிக்க எல்லோரும் ஓடிவர்றாங்க.. சில பேர் அப்படி வந்தும், உள்ளேன் ஐயான்னு ஒரு பின்னூட்டமும் போடுறது இல்லை.. சரி..நீங்க கல்லை தூக்குறதுக்கு முன்னாடி விஷயத்துக்கு வர்றேன்..

மலேசியா பத்தி நிறைய தெரிலைனாலும், அங்க இருக்க பினாங் பத்தி என் ஐயா தினமும் நிறைய கதை சொல்லி இருக்கார். அவர் அவரோட இளவயதில் அங்கு சென்று தான் கிட்டதட்ட ஆறு மாதங்கள் மேஸ்திரி வேலை பார்த்ததாகச் சொல்வார். அப்புறம் உடம்பு சரியில்லாமல் போன காரணத்தால், அப்படியே தாய்நாடு திரும்பி வந்து சொந்த அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டார். இந்த அத்தை பொண்ணை பண்ணிக்கமாட்டேன்னு சொல்லித் தான் பினாங் அவர் சென்றது அடுத்த கதை. ம்ம்.. அவர் மட்டும் அப்பவே அங்கேயே செட்டில் ஆகியிருந்தா இந்நேரம் நானும் மலேசியாவை பத்தி நிறைய விஷயங்கள் எழுதுவேன். ஆனா, அப்படி எனக்கு எந்த மனக் குறையும் வராம, மலேசியாவின் கடுகு முதல் காட்டாறு வரை, அதன் நீள அகலத்தை நமக்காக அளந்து சொல்லப்போறாங்கா, நம்ம மை பிரண்டும், துர்காவும்.. ஜில்லென்று ஒரு மலேசியா அப்படின்னு புதுசா ஒரு வலைப்பக்கத்தை ஆரம்பிச்சு, கதைக்க போறாங்க.. வருங்காலத்துல, 2007, மே மாசம் என்னப்பா நடந்தது மலேசியாவில்னு யாராவது கேட்டா, இங்கே போப்பான்னு அவங்களுக்கு இந்தப் பக்கத்தோட சுட்டியை கொடுத்திடலாம்.. இது நிச்சயமாய் ஒரு வரலாற்றுப் பதிவாய் இருக்கும்னு நினைக்கிறேன். இப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனைக்கு, அவங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் முயற்சியில் தளராமல், விக்ரமாத்தித்தன் வேதாளத்தை விடாமல் பிடித்து வந்து கதை சொன்ன மாதிரி, உங்களுக்கு மலேசியாவின் காற்றை சுவாசிக்கத் தரப்போகிறார்கள்.

இது உங்களை சந்தோசப் படுத்தும் ஒரு விஷயம். நிறைய திரைப்படத்தோட சுட்டிகள் இங்கே இருக்கு.. நீங்க இந்த வலைப்பக்கத்திலேயே கூட அந்தப் படங்களைப் பாக்கலாம்.. நான் இப்போத்தான் எம்.ஜி.யாரின் குடியிருந்த கோயில் படத்தை பாத்துட்டு வர்றேன்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி (அம்பி, இது உனக்காக இல்லை..) எல்லாப் படங்களும் இலவசம் தான்.. எல்லா மொழி திரைப்படங்களும் ஒரு இடத்துல கிடைக்குது.. போங்க.. படங்களை பாருங்க.. நல்ல என்ஜாய் பண்ணுங்க, நண்பர்களே

Update : இதுவும் வீடியோ மற்றும் டிவி சேனல் சுட்டிகள் நிறைய இருக்குங்க www.techsatish.com

படிச்சிட்டு அப்படியே போனா எப்படி.. பின்னூட்ட மொய் எழுதிட்டு போங்கப்பா..

Wednesday, March 14, 2007

வேலைச் சுமை

ஆணி புடுங்குறது ஆணி புடுங்குறது அப்படின்னு சொன்னா, இவனுக்கு அப்படி என்ன பெரிய வேலைன்னு எல்லோரும் நினைக்கலாம்.. நான் சொன்ன புரியாதுன்னு தான், இந்த படத்தை போட்டிருக்கேன்.. இதுக்கு பேரு தான் வேலைச் சுமை என்பதோ..

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.






இப்போதெல்லாம் என் நியுரான் மனிதர்கள் பாடுவது ஜாவா பல்லவியையும் ஆரக்கிள் ஆராதனைகளையும் தான். என் கைகள் பிள்ளையார் மாதிரி மௌஸ் ஏறியே கிடக்கிறது.

Thursday, March 08, 2007

ஐம்பதும் ஐம்பதும் ஐலேசா

நமது கழகத்தின் தன்மானச் சிங்கம், நாட்டாமை என்று எல்லோராலும் பாசமுடன் அழைக்கப்படுபவர், பகார்ட்டியை பாலாய் குடு(டி)ப்பவர், போர்களத்தில் பூரி கட்டையின் விழுப்புண்களை உடலெல்லாம் கொண்டவர், முகிலின் பாசமிகு அப்பா, பிளாக் உலகத்தின் தனிகரற்ற முதல்வர் ஷ்யாம் அவர்கள் தனது ஐம்பதாவை பதிவை வெற்றிகரமா போட்டிருக்கிறார். எல்லோரும் அவர் பதிவுக்கு போய் நல்ல ஒரு ஓ போட்டுட்டு கும்மியும் அடிங்கப்பா!

அதே நேரத்தில், போட்ட பந்துகளை எல்லாம் சிக்ஸருக்கு விரட்டி, உலக கோப்பை அது உங்கள் கோப்பை என்று, கிரிக்கெட் உலக கோப்பையை பற்றிய செய்திகளையும், கருத்தாய்வுகளையும் அள்ளி வீசி வரும் நமது பதிவுலக சச்சின் மணிகண்டன் தனது ஐம்பதாவது பதிவை போட்டிருக்கிறார். உங்க கமெண்டரியை அள்ளி வீசுங்க!

நாட்டாமை முதல்வர் ஷ்யாமுக்கும், கிரிக்கெட் மணிகண்டனுக்கும் உங்கள் சார்பாக மக்கா..அடிச்சு தூள் கிளப்புங்கப்பா என்று வாழ்த்துகிறேன்..

Wednesday, March 07, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - தொடர் கவிதை ஓட்டம்

என் உள்ளம் உளறியதை நான் இங்கே உளறியிருந்தேன்.. அதன் பிறகு அந்த தலைப்பே ஒரு கவிதை என்று என் மாப்ள பரணியும் அதைத் தொடர, கவிதை புயல் வேதாவும் அவர் பங்குக்கு அழகான ஒரு கவிதையை பிரசவித்திருந்தார். ஒரு புள்ளியில் தானே ஒரு அழகான பயணமே என்பது புரிந்துகொண்ட நம்ம நண்பர் காலெண்டர் கவி மணிபிரகாசும் தன் உள்ளத்தை உளற விட்டிருக்கிறார். உணர்ச்சியான வரிகளில் உலவ விட்டிருக்கிறார்.

ரெடி! ஸ்டார்ட்! கோ! நீங்களும் உங்க மனசை பறக்கவிட்டு, நச்சென்று ஒரு கவிதையை எழுதலாம்..

ஆரம்பம் இங்கே
போதையானது இங்கே
மூன்றாவதாய் முகிழ்த்தது இங்கே
நாங்காவது கியர் போட்ட கவிதை இங்கே...

அடுத்தது யார்? அந்த பெண்ணின் கண்களில் வழியும் போதையை பருகிய கிறக்கத்தில் உளறப் போவது எந்த உள்ளம்..

பாரெல்லாம் உண்டாம் தமிழ்நாட்டு டாஸ்மாக்கில். அதற்காக அவள் விழி போதை பருகிவிட்டு அவள் மடியெனும் பாரில் தான் கிடப்பேன் என்று இன்னும் என் மனது பிடிக்கிறது அடம்! அவள் இன்னும் இடம் தராததால் இப்போது இருப்பதோ அந்த சந்நியாசி மடம்!

Sunday, March 04, 2007

மந்திரிசபை மாற்றம் - இரண்டாம் பகுதி

மந்திரிசபையின் மாற்றத்தின் முதல் பகுதிக்கு வந்த பின்னூட்டங்கள் நம்மை திக்கு முக்காட வச்சது. கிட்டதட்ட தமிழ் நாட்டில இருக்க சட்டசபை இடங்களை விட அதிகமாகவே பின்னூன்ட்டங்கள் கிடைத்துள்ளன. இத்தனை கமெண்டுகளும் நமது பிளாக் முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளுக்கு (அப்படின்னா என்னான்னு கேட்கப்படாது.. சும்மா கொள்கை வச்சுகிட்டு அதை கடைபிடிக்காம இருக்கிறதை விட கொள்கையே இல்லாம பிளாக் தேச மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கொள்கையாகும்) கிடைத்த வெற்றி என்றே நினைக்கிறேன். கட்சியின் சின்னத்தை என்ன என்று உள்ளாட்சி அமைச்சர் கேட்டுட்டார். இதுக்கு பதிலையும் நான் சொல்றதை விட நம்ம மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம் (நாட்டாமை முதல்வரே.. நயன் படத்தையோ, நமீதா படத்தையோ சின்னமா எல்லாம் வைக்க முடியாது.. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க)அப்படியே கொடி வண்ணத்தையும் சொல்லுங்கப்பா மக்களே

சரி.. இப்போ மிச்சம் இருக்க மற்ற துறைகளுக்கு.... என்னடா இதெல்லாம் ஆர்பாட்டம் இல்லாத துறையா இருக்கேன்னு யாரும் நினைக்காதீங்க.. ஏற்கனவே பயங்கர வேலை இவங்க எல்லாம் பாக்குறதால இவங்களுக்கு ஈசியா இருக்கட்டுமேன்னு இந்தத் துறைகள்.

சமூக நலத் துறை அமைச்சர் : நண்பர் SLN

லண்டனில் இருந்துகிட்டு லண்டன்ல பொழியிற பனியை பற்றியும் எழுதுவார். சென்னை வெயிலையும் ஹாட்டா எழுதுவார். திடீர்னு எல்லா புண்ணிய தலங்களையும் ட்ரிப் அடிச்சு ஒரு பதிவை போடுவார்.

பால் மற்றும் மீன் வளத் துறை அமைச்சர் : கோல்மால் கோபால்

போன தடவை இருந்த அதே துறை தான். இடையில் மாடு வளர்ப்பது எப்படின்னு ஒரு ட்ரெய்னிங்குகாக ஒரிசா புவனேஷ்வர் போயிருந்தார். இப்போ சென்னை டைடல் பார்க்குல அதை செயல் படுத்துறார். அந்த பணியை இவரே மறுபடியும் தொடர்வார்

உணவு மற்றும் சுற்றுபுறத்துறை அமைச்சர் : SKM

ஹோம் டெபார்ட்மெண்ட்.. ரொம்ப வருஷ அனுபவம். இந்த துறையை இவரைவிட வேற யாருக்கு தர்றது?

காடுகள் மற்றும் கனிம வளர்ச்சித் துறை அமைச்சர் : கோபிநாத்

புது அமைச்சர். புதுசா நம்ம ஜோதில ஐக்கியமானவர். அதனால கஷ்டமில்லாத இந்த துறை இவருக்கு.. ஆனா ரொம்ப பொறுப்பான துறை..

கூட்டுறவுத் துறை அமைச்சர் : தங்கை தீக்க்ஷண்யா

தங்கை இப்போ ரொம்ப பிசி. அதனால ரொம்ப கஷ்டப்படுத்த விரும்பல.

எல்லாத் துறையும் ஓவர். அப்போ சட்டசபையை கவனிக்கிறது யாரு. இருக்கவே இருக்காங்க கொடுமை புகழ் உஷா. போனதடவை கொடுமை ஒழிப்புத் துறை அமைச்சரா இருந்தாங்க. எல்லோர் கொடுமையையும் ஒழிச்சாங்க.. ஆனா இவங்க முன்னாடி ஊர்கொடுமையெல்லாம் பிரேக் ஆடுது. அது தான் இந்த தடவை நமக்கு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இப்போ அவங்க தான் சபாநாயகர். துணை சபாநாயகரா தோழி ரம்யா.

அட! என்னாச்சு அம்பிக்கு ஒண்ணுமில்லையான்னு நீங்க எல்லாம் கேக்குறது புரியுது. என் மச்சானுக்கு இல்லாமலா..நம்ம கிட்ட இருக்க 15 எம்.பி சீட்டை வச்சுகிட்ட என்ன பண்றது. அது தான் மத்திய அமைச்சர் போஸ்ட் ஒரு ஏழு கிடைச்சது. உள்ளூர் பிளாக்கை ஆண்டா மட்டும் போதுமா, தேசிய அளவுல பேரெடுக்க வேண்டாமா..

தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் : அம்பாசமுத்திரம் அம்பி

இதுல தான்பா இந்த தொலைபேசித் துறையும் இருக்கு. இனிமே உன் காட்டுல.. இல்ல..இல்ல..காதுல தேன் மழை தான்.. அம்பி, உன்னை ஒரு சின்ன வட்டத்துக்குள்ள எல்லாம் அடைக்கல.. நம்ம கட்சியோட பேரை செங்கோட்டையிலும் பரப்புபா..

கப்பல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் : நண்பர் KK

எல்லா பிளாக்கும் போய் சரளமா பின்னூட்டம் கொடுப்பார்.. ரொம்ப கருத்தான விஷயங்களையும் எழுதுறார். நம்ம நாட்டாமை பேரை உடம்புல பச்சைகுத்திகிட்டு இருக்கார் போல.. அந்த அளவுக்கு நாட்டாமை மேல இவருக்கு பற்று.. அதனால அவர் கூட இணைந்து பணியாற்ற KK

நிதித் துறை இணை அமைச்சர் : தோழி சேதுக்கரசி

நம்மளோட எல்லாப் பதிவுக்கும் வந்து, படிச்சு பின்னூட்டம் போடுவார். நிறைய விஷயங்களை சுட்டிக்காட்டி இருக்கார், நம்ம பிளாக்கை மேம்படுத்த.

மற்ற மத்திய மந்திரிபதவியை நம்ம தோழமை கட்சிக்கு கொடுத்தாச்சு. இதுக்கு G3 தான் தலைவிங்கிறதால (கட்சி பேர் என்னங்க) அதுக்கு அவர் தான் பெயர் சிபாரிசு பண்ணுவார். பார்ப்போம் யாருக்கு கொடுக்கிறார்னு.

அப்புறம் இந்த சென்னை மேயர் பதவிக்கு நம்ம நண்பர் கோப்ஸ் பெயர் முன்மொழிவோம் நம்ம கட்சி சார்பா.

நம்ம கட்சிக்கு நீங்க கொடுத்து வர்ற ஆதரவை பார்த்தி ஐ.நா சபையே ஆடிகிடக்கு. அவங்க கூட பேச்சு வார்த்தை நடத்த தான் நம்ம (வாழ்நாள்)தலைவி கீதா கிளம்புறாங்க அமெரிக்காவுக்கு. அவங்க பயணம் வெற்றியடையவும் நாம் வாழ்த்துறோம்.

வேற யாருக்காவது வாரியப் பதவியோ வட்ட செயலாளர் பதவியோ வேணும்னா பின்னூட்டதுல சொல்லுங்க நண்பர்களே..

என்றும் நம்ம பிளாக் முன்னேற்ற கழகத்திற்கு உங்களின் பொன்னான ஆதரவை தருமாறு கழகத்தின் சார்பாக வேண்டுகிறோம். இந்த பகுதிக்கும் உங்கள் பொன்னான பின்னூட்டங்களை இட்டு கட்சியின் மானத்தை இமயமலை உயரத்திற்கு பறக்கவிடுங்க..

தலைவி கீதா புகழ் ஓங்குக! நாட்டாமை நாமம் வாழ்க!

மக்களே.. அப்படியே அம்பி எழுதிய மத்திய மந்திரிசபை பதவி ஏற்பு நிகழ்ச்சியையும் பார்த்துட்டு வந்துடுங்க

Friday, February 23, 2007

பிளாக் வரலாற்றில் முதன் முறையாக 300 பின்னூட்டங்களையும் தாண்டி..

ஒற்றுமை! உண்மை! உயர்வு!

ஒரு கழகத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்பது தொண்டர்கள் தருகிற கோசம் அந்த வானத்தை துளைக்கும் போது தெரியும்! பதிவுலகில் பின்னூட்டங்களே அந்த கோஷம் என்பதால் அது 300யும் தாண்டி ராக்கெட் வேகத்தை பார்க்கும் போது, எங்கே நமது எல்லை நிலவல்ல, அதையும் தாண்டி தூரமானதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புதியதாக தொடங்கப்பட்ட நமது பிளாக் முன்னேற்ற கழகம் (பி.மு.க), சிங்கம் போல வீறு நடை போட்டு கோட்டையை அடைந்திருக்கிறது. இத்தனை பின்னூட்டங்கள அள்ளி அள்ளித் தந்து கழகம் வெற்றிவாகை சூட ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் முதல்வர் நாட்டாமை, துணை முதல்வர் வேதா மற்றும் ஏனைய அமைச்சர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

வாழ்க நமது பி.மு.க! வளர்க நமது கழகம்!

குத்துங்கப்பா கும்மி!
பி.மு.கவுக்கு இந்த பின்னூட்டம் கம்மி!

இந்த சூப்பர் கோஷம் எழுப்பியவர் கோபிநாத்!


[கவர்னர் ஜனாதிபதியை சந்திக்க சென்றிருப்பதால் மற்ற அறிவிப்புகள் திங்கட்கிழமை]

Wednesday, February 21, 2007

மு.கா அமைச்சரவை மாற்றம்.. யார் யார் அமைச்சர்கள்?

[கலைஞரோட அமைச்சரவைல தான் இந்த மாற்றம்னு அடிச்சு பிடிச்சிகிட்டு வந்தா ஐயாம் சாரி.. இது நம்ம அகில உலக பிளாக் முன்னேற்றம் கட்சியின் ஆட்சி மாற்றம் பற்றிய அறிவிப்பு]

நம்மளோட முதல் பதவியேற்பு பற்றிய பதிவு

உண்மையான தமிழ்நாட்டு அரசியல் மாதிரியே ஆகிடுச்சு.. மந்திரிசபை மாத்துறேன் மாத்துறேன்னு ரெண்டு மூணு தடவை டிஸ்கி போட்டாச்சு.. ஏன் இன்னும் பண்ணலைனு கொ.ப.செ வேதால இருந்து நம்ம மலேசியா பிரண்ட் வரைக்கும் கேட்டாச்சு.. நானும் ரொம்ப காலமா அந்த அறிவிப்பை போடலாம்னு நினைச்சு மறந்துட்டேன்.. தோ.. கச்சேரி ஸ்டார்ட்..

ஹிஹிஹி..வழக்கம்போல உங்க எல்லோருடைய பேராதரவோடு.. நான் முதலமைச்சர்னு தானே நினைக்கிறீங்க.. அது தான் இல்ல.. நம்ம கட்சி மத்த எல்லா கட்சிக்கும் முன் மாதிரியா இருக்கணும்.. அதனால நான் நம்ம அகில உலக பிளாக் முன்னேற்றக் கட்சியின் (பி.மு.க) தலைவனாகவே இருந்து மக்களுக்கு தொண்டாற்றப் போறேன்.. அப்போ முதலமைச்சர்?

முதலமைச்சர் : 'நாட்டாமை' ஷ்யாம்

எல்லோருக்கும் ஆச்சர்யம் தானே.. இது சும்மா விளையாட்டுக்குன்னாலும், நாம மனசுல இப்படி எல்லாம் நிஜமா நடந்தா நல்லா இருக்கும்னு நினைச்சு இருக்கிறதை செயல்படுத்தற நேரம். அதனால இந்த பதவிகள் எல்லாம் எல்லோருக்கும் மாறி மாறி வரணும்.. பதவி ஆசை என்பதே யாருக்கும் வராத மாதிரி பாத்துக்கணும்.. அப்போ தான் தமிழகம் சிறக்கும். அனுபவம் உள்ளவர்கள் பின்னால் இருந்து காக்கணும்.. ஒரு சின்ன நிறுவனத்துல ஒரு புரோகிராம் எழுதுறவருக்கு எத்தனை பேக்-அப் வைக்கிறோம்.. ஒரு நாட்டை ஆளுறதுல இருக்க வேண்டாமா.. அதுதான்.. தோ.. நாட்டாமை முதல்வர் ஆகிட்டார்.. (வாழ்த்துக்கள் நாட்டாமை! நயனுக்கு ஏகப்பட்ட சலுகைகள் நீங்கள் தந்தாலும், நாட்டுக்கு நல்ல தீர்ப்பு சொல்வீங்கள்ல)

துணை முதல்வர் : 'கொ.ப.செ' வேதா

நம்ம கட்சிக்காக சூறாவளி சுற்றுப் பயணமெல்லாம் போய், கட்சியின் கொள்கைகளை பிளாக் உலகிற்கே சொன்னவர். உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் வரும். ஒப்புக்குத் தானே துணை முதல்வர்னு? அதெல்லாம் கிடையாது. நாட்டாமை, நயன் சூட்டிங் பாக்கவோ, நமீதா பேட்டி பாக்கவோ, இல்லை தங்கமணிகிட்ட பூரிக்கட்டையால (கட்சி நிதியில் இருந்து கொடுத்தது.. ஹிஹிஹி) அடி வாங்கி ஓய்வு எடுத்தாலோ, அப்ப இவங்க தான் முதல்வர். அது மட்டுமல்ல இவங்க கிட்டயும் சில துறைகள் தனியா இருக்கும். முதல்வர் அலுவலகம் வராத நேரங்களில், வேதா தான் முதல்வர். இவரும் கோப்புகளில் கையெழுத்து போடலாம். ஆனா அப்படி போடும் போது, இவர் என்னென்ன கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கார்ங்கிற விவரம் முதல்வருக்கு CC ல போகும்.. கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசுக்கு வாழ்த்துக்கள் கொ.ப.செ

நிதி அமைச்சர் : 'மாப்ள' பரணி

அட! சில விஷயங்கள்ல மாற்றம் செய்யாம இருக்கிறது நல்லது.. எப்படி சிதம்பரம் தான் அந்த பதவிக்கு அழகோ, அது மாதிரி மாப்ள பரணி.. (ஹிஹிஹி.. ஆனா.. இதுவரைக்கும் அசின், பாவனா படத்துக்கு மட்டுமே நிதியுதவி செய்துகிட்டு இருந்தவர், நாட்டாமைக்காக நயனுக்கும் செய்யனும்.. சரியா நாட்டாமை..சே..சே.. முதல்வா)

கல்வி அமைச்சர் : 'தலைவி' 'பஸ்ஸில் பாலபிஷேகம் கண்ட அம்மன்' கீதா

போன தடவை, இவர் அறநிலையத்துறை அமைச்சரா செய்த பணி மகத்தானது. கோயிலுக்கு செய்த அதே பணிகளை பள்ளிகளுக்கு செய்வார் நம்ம மேடம். தலமெல்லாம் சுற்றி வர்ற மாதிரியே இனி பள்ளிகளையெல்லாம் சுற்றிவருவார். இன்னொரு பெண் உ.வ.சா உதயமாகிறார்.

சட்டம் மற்றும் வருவாய்த் துறை : 'கண்ணாளனே' ப்ரியா (அவங்க எழுதுன ஒரு தொடர் அவங்களுக்கு இருந்த பழைய சுத்த சிகாமணிங்கிற பேரையே மாத்திடுச்சு பாத்தீங்களா..)

இனிமே குடும்ப வருவாயை இவங்க தான் கவனிக்கப் போறாங்க. அதனால அதோட தமிழ் நாட்டோட வருவாயையும் பாத்துக்கோங்கன்னு ஒரு பெரிய சுமையை கொடுத்தாச்சு. அதுமட்டுமல்ல, கல்யாணத்துக்கு பிறகு வீட்டுக்காரருக்கு போடுற புது சட்டங்களை அப்படியே தமிழ்நாட்டுக்காகவும் போட்டா பிளாக் உலகம் சிறக்குமில்லையா.. அது தான் இவங்களுக்கு இந்த துறை

உள்ளாட்சித் துறை : 'ஆணி' அருண்

கிளீவ்லேண்ட்ல இவர் ஆணி புடுங்குற விஷயம், மதுரை திருமலை நாயக்கர் மஹால் வரை தெரிஞ்சு போச்சு.. சரி அதோட இந்த பிளாக் உலகிற்கும் பல நன்மைகளை செய்யட்டுமேன்னு தான் இந்த துறை.. நண்பா.. வாழ்த்துக்கள்..புதுசா பதவி ஏற்கப்போறீங்க.. நல்லா இங்கேயும் ஆணி புடுங்குங்க..

கலை, விளம்பரத் துறை : 'திண்டுக்கல்' 'சின்சினாட்டி' (இன்னொரு 'சி'யும் இருக்கு.. அது பத்தி விரைவில்) மணி

இவர் காலெண்டர் பத்தி எழுதுன கவிதைகள் ரொம்ப பிரபலம். அதுல இவருக்கு நம்ம கொ.ப.செ காலெண்டர் கவிஞர்னே பேர் வச்சுட்டாங்க.. அதுமட்டுமல்லாம, கற்றது கடலளவு தொடருக்காக ஒரு அழகான நன்றியுரை போட்டிருக்கார்.. நல்ல விளம்பரம் 'கடல்'கணேசன் அவர்களுக்கு..

செய்தித் துறை அமைச்சர் : 'மலேசியா' மை பிரண்ட்

சும்மா இவர் மலேசியாவை பத்தி சொல்ற விஷயம் ஒன்றொன்றும் புதுசு கண்ணா புதுசு.. அமெரிக்காவை பத்தியும் தமிழ்நாட்டை பத்தியுமே நாமெல்லாம் பிளாக் எழுதுறப்போ ஒரு (நமக்கு) தெரியாத நாட்டை பத்தி அழகா நிறைய விஷயங்கள் சொல்றார். அவர் ஆப்பு வாங்கிய விஷயத்தை பத்தி எழுதின பதிவுல முதன் முதலா 50 கமெண்ட் வாங்குன சந்தோசத்துல இருக்கார். வாழ்த்துக்கள் மை பிரண்ட். இது அவருக்கு இரட்டை சந்தோசமா இருக்கும்னு நினைக்கிறேன்.

சுகாதாரத் துறை அமைச்சர் : 'சியாட்டல்' பொற்கொடி

போன தடவை மின்சாரத்துறை அமைச்சரா இருந்தாங்க.. வீட்ல வாக்கும் கிளீனரா வச்சு கூட்டுறதை இனிமே பிளாகிலையும் கூட்டப் போறாங்க.. கீ போர்ட் சுத்தமாகிடுச்சா பொற்கொடி

போக்குவரத்துத் துறை அமைச்சர் : 'பிரெஞ்சு' CM ஹனிஃப்

கிட்டத்தட்ட நாலு மாசமா நம்ம பிளாக்கை விடாம படிக்கிறவர். இவர் பதிவு எழுதினா நாம பதிலுக்கு பின்னூட்டம் போட்டு நன்றிக்கடன் செலுத்தலாம்.. பதிவும் எழுதுறது இல்ல.. அது தான் நண்பருக்கு இந்த பரிசு. நிறைய பக்கங்களுக்கு சுற்றுலா போய் பின்னூட்டம் போடுறதுலனால இவருக்கு இந்த துறை.

பொதுப்பணித் துறை அமைச்சர் : கையில் வாளும் சொல்லில் வீச்சும் கொண்ட நம்ம ஜி

என்னை மாதிரியே இவரும் கட்சிக்காக பிரமச்சாரியா இருக்கவர். (ஹிஹி.. ஆள் கிடைக்கலைங்கிறதை இதைவிட நாசுக்கா எப்படிங்க சொல்றது) சும்மா கதைகளை சரளமா எழுதுபவர். கையில் வாள் வச்சு பயமுறுத்துறதால, இந்த காவேரி பிரச்சனையெல்லாம் தீர்ப்பாருல அது தான்

விளையாட்டுத்துறை அமைச்சர் : நண்பர் மணிகண்டன்

எங்கே கிரிக்கெட் நடந்தாலும், அந்த பால் சிக்சர் தாண்டுறதுக்குள்ள பயங்கர ஸ்பீடா பதிவு போடுறவர் அந்த போட்டியை பத்தி.. உலகக் கோப்பை கிரிக்கட் முடிஞ்சவுடனே மத்த விளையாட்டை பத்தியும் எழுதுவாருன்னு நம்புவோம்.

மின்சாரத்துறை அமைச்சர் : நண்பர் ட்ரீம்ஸ்

ஷாக்கடிக்கிற பதிவுகளை போடுறவர். அதைவிட மின்சார கண்கள் கொண்ட பெண்களின் படத்தை போட்டு தனது பக்கத்தை அழகா அலங்கரிப்பவர். இவர் இந்த துறை அமைச்சரானதுனால மின்சாரம் உற்பத்தி செய்றதுலையும் ஏதாவது புதுமை செய்வார்னு நினைக்கிறேன்.. திரிஷாவை கூட்டிகிட்டு ஊர்வலம் போனா தெருவிளெக்கெல்லாம் அப்படியே தீப்பிடிக்குமே..

வீட்டுவசதி துறை அமைச்சர் : தோழி G3

இவரும் தனியா ஒரு கட்சியை நடத்தி வந்தாலும் நம்ம கட்சிலையும் ஒரு நல்ல உறுப்பினர். இப்போ என்னமோ புதுசா கவிதையெல்லாம் எழுதுறாங்க..

இசை மற்றும் தமிழ் வளர்ச்சிக்கழக அமைச்சர் : தினம் ஒரு குறள் கிட்டு மாமு

சும்மா ஒரு பக்கம் சினிமா பாடல்களுக்கு தன் குரல் தந்து பாடல்கள் தந்து கொண்டே, அடுத்த பக்கம் தினம் ஒரு குறள் னு தமிழுக்கும் இசைக்கும் ஒரே சேர சேவை செய்பவர்.

அட! என்ன இன்னும் பல பேர் (அம்பி, SKM, SLN, KK, சேதுக்கரசி, ரம்யா, உஷா, கோபிநாத் மற்றும் பலர்) பெயரைக் காணோமேன்னு பாக்காதீங்க.. எல்லாம் அடுத்த பதிவில் ஸ்வீட் சர்ப்ரைஸா.. அம்பி, அதுக்குள்ள உன் அக்கா கிட்ட போட்டு கொடுத்துறாதப்பா..

Friday, February 16, 2007

கிட்டு மாமாவிற்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உலக மலரெல்லாம்
உன் பெயர்
சொல்லி
இன்று
பூக்கட்டும்!

பொங்கி ஓடும்
தேச ஆறெல்லாம்
இன்று
உன் பெயர்
சொல்லி
கொண்டாடி குதிக்கட்டும்!

அலையும்
காற்றெல்லாம்
புல்லாங்குழல்
நுழையாமல்
கீதம் இசைக்கட்டும்!

கலைந்து கிடக்கும்
முகிலெல்லாம்
நியுஜெர்சி மீது
மழையாக
உன் பெயர்
சொல்லி பொழியட்டும்!

தாரை தப்பட்டை
இல்லையென்று
நினைத்தால்
இடியும் மின்னலும்
குறுக்கே வந்து முழங்கட்டும்!

ஷ்ரேயாவைப் போலவே பூச்செண்டோடு நாங்களும் களிப்புற சொல்கிறோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமு!