Thursday, August 31, 2006

தாலாட்டும் காற்றே வா..

வாழ்க்கையை உலகத்துல யாரு ரொம்ப நல்லா ரசிச்சு வாழ்றாங்கன்னு பாத்தா, கடைசி இடம் இந்தியனுக்கு தான். இதோ இந்த வாரம் திங்கட்கிழமை லேபர் டே வருது.. அதனால இங்க உள்ள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சுற்றுலா போறோம்.. நான் நியுயார்க் போறேன்..

நம்ம இந்தியாவுல, வேலை, குடும்பம், குட்டி, ஏதாவது விஷேசங்களுக்கு போறது, பல பேரை பாத்து அரட்டை அடிக்கிறதுன்னு வாழ்க்கையை கழிக்கிறோம்.. பணம் ஓரளவுக்கு இருக்கிறவங்க தான் இந்த சுற்றுலா போறதை பத்தியே நினைக்கிறாங்க.. அப்படி சில பேர் போறப்பவே கொடை, ஊட்டி தாங்க மாட்டேங்குது.. எல்லோரும் போக ஆரம்பிச்சா, சாமி, ஊட்டி அப்புறம் சென்னை மாதிரி ஆகிடும் சீக்கிரம்..

சரி, அதுக்காக வாழ்க்கையின் கீழ்தட்டுல இருக்கிறவங்க, இந்த மாதிரி போறதில்லையா..தூரத்துல யாரோ கேள்வி கேக்குற மாதிரி தெரியுது.. போறாங்க..அவங்களும் இந்த மாதிரி சுற்றுலா போறாங்க..ஆனா அது எப்படி இருக்கும்னா, தவமாய் தவமிருந்து படத்துல ராஜ்கிரண் தன் குடும்பத்தோட ஒரே ஒரு ஊருக்குள்ளன்னு பாட்டு பாடிகிட்டு போற மாதிரி தான்.. அப்படியும் இல்லைனா.. புளிசோறு, எலுமிச்சைச் சோறு, கொஞ்சம் காரமாய் உருளைக்கிழங்குன்னு பொட்டலம் கட்டிகிட்டு ஒரு கோவிலுக்கு போறது.. என்னுடைய சின்ன வயசு சுற்றுலா எல்லாம் கோவிலை சுத்தி தான் இருக்கும்.. அப்படி போற கோவிலுக்கு பக்கத்துல ஆறோ குளமோ இருந்தா அதுல போய் நல்லா ஆட்டம் போடுறது தான் அங்க இருக்கிற ஒரே ஒரு விளையாட்டு..

எங்க ஊர்ல இருந்து பழநிக்கு வருடாவருடம் பாதயாத்திரை போவாங்க.. அப்படி போறதுக்கு அவங்க மாலை போட்டு இருக்கிறப்போ எங்கியாவது பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு ஒரு வேன்லயோ, லாரிலயோ, சேருகிற ஆள்களின் எண்ணிக்கையை பொருத்து, கூட்டிகிட்டு போவாங்க. அது தான் எங்களை பொறுத்தவரை டூர். போற இடத்துல, நல்லா சாமியை கும்பிட்டுவிட்டு, கொண்டு போற சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிவிட்டு, கபடி விளையாட ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது..

இந்த மாதிரி இல்லைனா, ஊருல எல்லாரும் மாதாமாதம் ஒரு பணத்தை யார்கிட்டயாவது கொடுத்து வச்சு, அதாவது ஒரு ஆளுக்கு டிக்கட் செலவு ரூபாய் 120-னா, மாதம் அவங்க பத்து ரூபாய் கட்டணும்.. அப்படி கட்டி நாங்க எல்லோரும் போன முதல் டூர், மைசூர், பெங்களூர் மற்றும் திருப்பதி.. அப்போ நான் ஐந்தாவது படிச்சதா ஞாபகம்.


சில சமயம் பக்கத்துல இருக்கிற (திண்டுக்கலிலிருந்து மதுரை போறப்போ இடதுபக்கதுல இருக்கிறது) சிறுமலைக்கு, எங்க பெரியப்பா வீட்டு தோட்டத்துக்கு போவோம்.. அந்த குளுமையான இடத்துல, ஒரு மூன்று நாள் தங்கி ஜாலி பண்ணிட்டு வருவோம்.. அது தான் எங்களுக்கு அப்போ ஊட்டி.. இந்த இடத்தை பத்தி இன்னொரு பதிவுல ரொம்ப சொல்றேன்..ஆனா இந்த இடம் ஊட்டியைவிட நல்ல இடம்ங்கிறது எனக்கு ஊட்டிக்கு போனப் பிறகுதான் தெரிஞ்சது.. அந்த அமைதியான, ரம்மியமான இடத்தை ரசிக்கக்கூடிய வயசு அப்போ இல்லைனாலும், அதற்கு பிறகு என் கல்லூரி நண்பர்களோட போனப்ப, ரொம்பவே ரசிச்சேன்..

என்னதான், இந்த வாரம் நான் நியுயார்க் போனாலும், அந்த திருப்தி, அந்த ஒரு சின்ன வயசு விளையட்டுத்தனம், சுதந்திரம், அந்த பரவசம், கிடைக்குமா..தெரியல.. அதுக்கு பிறகு, என் சுவாசக்கற்றே படத்துல வர்ற திறக்காத காட்டுகுள்ளே பாட்டும், சாமுராய் படத்துல வர்ற மூங்கில் காடுகளே பாட்டும், எனக்கு அந்த நினைவுகளை தந்தன..

Wednesday, August 30, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 6

ஜுனியர் விகடனுக்கு ஒரு கழுகு, வாரமலர் சினிமா பகுதிக்கு ஒரு கருப்பு பூனை இருப்பதை போல நமது சினி பகுதிக்கும் ஒரு செய்தி தொகுப்பாளர் இருந்தால் நல்லா இருக்கும் என்று, நேற்று ஒரு சிட்டுகுருவியைப் பிடித்தேன்.. சிட்டுகுருவி சின்ன இடங்களில் கூட நுழைய முடியும் என்பதால் அதையே ஏகமனதாக தேர்வு செய்தேன் (?) கொலம்பஸில் எங்கே சிட்டுக்குருவி என்று யாரும் பின்னூட்டம் இட வேன்டாம்..(குறிப்பா அம்பிக்கு) எப்படியோ கிடைத்தது.. நமக்கு தேவை ஒரு செய்தி தொகுப்பாளர்.. அவ்வளவு தான்.

பரட்டை என்கிற அழகு சுந்தரம்


இது எங்க ஊர்ல,பீடி குடிச்சுகிட்டு, யார் என்ன வேலை சொன்னாலும் செஞ்சுகிட்டு, கிடைக்கிற இடத்துல சாப்பிட்டுகிட்டு, ஊர் கோவிலுல தூங்கி பொழுதை கழிக்கிற ஆள் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மருமகன் தனுஷுக்காக, தமிழாக்கம் செய்யச் சொல்லி பரிந்துரை செய்த ஒரு கன்னட மொழி படத்தின் தமிழ் தலைப்பு. இதை நடன இயக்குநர் ராஜு சுந்தரம் இயக்குகிறார்.
சென்னைக்கு வேலை தேடி, கிராமத்தில் இருந்து வரும் தனுஷ் ஒரு தாதா ஆகிறார். அதற்கு, பிறகு அவரை தேடி அவர் அம்மா வருகிறார். அன்பான தாயுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் ஒரு பாச போராட்டமே இந்தக் கதை. தனுஷின் அம்மாவாக அர்ச்சனா நடிக்கிறார்

சிட்டுகுருவி - பரட்டை, எப்போ தாத்தா ஆகப்போறீங்க..

சபரி

புரட்சிகலைஞர் விஜயகாந்தின் அடுத்த படம், கம்பீரம், அரசு படங்களை இயக்கிய சுரேஷின், சபரி. இதில் விஜயகாந்த் ஒரு மருத்துவராக நடிக்கிறார். அவருக்கு இணையாக ஜோதிர்மயி மற்றும் மாளவிகா நடிகிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவமனைகள், அதில் எத்தனை மருத்துவர்கள் என்னும் புள்ளி விவரங்களை நீங்கள் இந்த படம் பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம். ஆனால் விஜயகாந்தின் பிரதான வசன எழுத்தாளர் லியாகத் அலிகான், கேட்ட பதவி தேமுதிகவில் கிடைக்கவில்லை என்பதால், அதிமுகவில் சேர்ந்த பிறகு, இவருக்கு மறுபடியும் எழுதுவாரா என்பது சந்தேகமே..

சிட்டுக்குருவி - கேப்டன், தமிழ்ல என்ன வேணும்னாலும், பேசுங்க.. இங்கிலீஷ்ல மட்டும் வேண்டாம்..

சூர்யா - ஜோ திருமண வரவேற்பு

சூர்யா - ஜோ திருமண வரவேற்பு, பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது. வரவேற்பு, செப்-11 ஆம் தேதி கல்யாணதிற்கு பிறகு, பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும்.

சிட்டுகுருவி - நமக்கு பிரச்சினை இல்ல.. பறந்து உள்ள போயிடலாம்

பெரியார்

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவதும், அதற்கு தமிழக அரசு 95 லட்ச ரூபாய் நிதியுதவி செய்ததும், உங்களுக்கெல்லாம் பழைய செய்தி தான். ஆனால் இப்போது பெரியாரின் மனைவியாக நடிக்க நடிகை குஷ்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை எதிர்த்து பாமக கட்சி எம் எல் ஏக்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்து எதிர்த்தனர். இருந்தாலும், குஷ்பு தான் நடிப்பார் என்று நமது சிட்டுகுருவி சத்தியம் செய்கிறது.

சிட்டுக்குருவி உங்களுக்காக கடைசியா ஏதோ சொல்லுது.. "இந்த முறை மட்டும் அல்ல, எப்போதுமே, செய்திகள் எல்லாம் போன்ற தளங்களிலிருந்தும், மற்ற வழியாகவும் தான் கிடைக்கிறது.. ஏன்னா எப்போ எதை எதையோ காப்பி அடிக்கிறாங்கோ.. அதனால உண்மையை உலகத்திற்கு முதல்ல சொல்லனும்ல..அது தான்"

அய்யோ..பயங்கரமா பசிக்கிது.. குளத்துமேட்டு கருவாயன் தோட்டத்துல திராட்சை இருக்கு.. சாப்பிட்டு வர்றேன்..

Tuesday, August 29, 2006

அமெரிக்க அனுபவம் 2

இந்த அமெரிக்க ஆளுங்க இருக்காங்களே, அவங்களுக்கு குடும்ப பாசம், மனைவி, பிள்ளை பாசம் எதுவுமே இருக்காது.. பத்து பன்னிரென்டு வயசு ஆனா பிள்ளைகள் தனியா போயிடுவாங்க.. இப்படி நான் இங்கே வருவதற்கு முன்னே பல கதைகள் கேட்டதுண்டு.. ஆனால் இதுவரை அது போல யாரையும் பார்த்ததில்லை.. என் கூட வேலை செய்றவங்க எல்லோரும் அவங்க குடும்ப புகைப்படம், அதாவது அவங்க அப்பா அம்மாவோட இருந்தது, பிள்ளைகளோடது, மனைவியோடது ன்னு அவங்க உட்காருர இடமெல்லாம் வச்சு இருக்காங்க. நான் பாரிஸ் வழியா அமெரிக்கா வர்றபோ, பாரிஸ் விமான நிலையத்துல, ஒரு சின்ன பொண்ணிற்கும் அவளோட அப்பாவிற்கும் இருக்கிற அன்னியோனத்தையும் பாசத்தையும் பார்த்து கலங்கினேன்.. அதிசயப்பட்டேன்.. சந்தோசப்பட்டேன்.. அந்த பொண்ணோட அப்பா, அழகா அவளோட செந்நிற தலை முடி கோதி, வாயில் வைத்து பெரிய அளவு ரப்பர் பேண்டை இழுத்து, சடை பின்னிகொன்டிருந்தார்.. என்னே ஒரு காட்சி அது...

அதுவும் இல்லாம வளர்ப்பு பிராணிகளிடம் பாசம் காட்டுரவங்களுக்கு எப்படி பிள்ளை, குடும்ப பாசம் இல்லாம போகும். எப்படி சினிமாவுல, உலக பொது உணர்வுன்னு காதலை சொல்றாங்களோ, அதைவிட பொதுவானது, காதலுக்கும் அடிப்படையானது பாசம்.

ஆனா ஒண்ணு மட்டும் புரியல.. இவங்களோட ஆடைகள். நம்ம நாட்டுல அவ்ளோ வெப்பம் மிகுந்த பூமிலயே நாம உடம்பு முழுக்க சுத்திகிட்டு இருக்கோம்.. ஆனா இங்கே இவ்ளோ குளிர்ச்சியா இருகிறப்போ ஏன் இப்படி குறைந்த ஆடைகள்.. மற்றபடி கடைகளுக்கு போனால், அவங்க உபசரிப்பு பக்காவா இருக்கும்.. முதல் வார்த்தை அவங்க பேசுரதே, எப்படி இருக்கீங்கனு ஒரு கேள்வியோட தான்.. எப்பவுமே அவங்க உதட்டுல, லிப்ஸ்டிக்கோட சிரிப்பு இருக்கும்.. நம்மகிட்ட பேசுரப்போ, முகம் சுழிக்காம, எரிஞ்சு விழாம, அக்கறையா, அனுசரனையா அவங்க நடந்துகிறது நல்லா இருக்கும். இந்தியர்களான நாம நிச்சயமா இந்த அணுகுமுறையை கத்துக்கணும். இதை நான் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. ஏன்னா, ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு இதுல.. நம்ம நாட்டு மக்கள் தொகை.. சின்ன வயசுல இருந்து நாம உருவான விதம் அப்படின்னு.. அவ்வளவு சின்ன கடைல,சரவணா ஸ்டோர்ஸ்ல, எத்தனை பேருக்குத்தான் அவங்க பணியாற்ற முடியும் சிரிச்சுகிட்டே.. இருந்தாலும், அந்த கூட்டதுல நீந்தி போய், திருப்தி ஆகாம, திரும்பி வந்ததும் உண்டு. எடுத்து வந்த துண்டு கைக்குட்டை ஆன கதையும் உண்டு.

Monday, August 28, 2006

சென்னையில் ஒரு மழைக்காலம்

இன்று காலை கொலம்பஸில் எழுந்ததிலிருந்து ஒரே மழை.. இப்படியொரு மழை சென்னையில் பெய்தால் எப்படி இருக்கும்.

ரோடுகள் எல்லாம் சரிசமமாக இருக்கும். எல்லா பள்ளங்களிலும் நீர் நிரம்பி தரை ஒரே மாதிரி இருக்கும். இந்த சமயத்தில் நடந்து செல்வதும் சரி, வாகனத்தில் செல்வதும் சரி, ஒரு தில்லான விசயம்.. இப்படித்தான் இந்த ஆகஸ்டு மாதம் தொடங்கிய சமயத்தில், ஒரு மழைகால முன்னிரவில், டைடல் பார்க் விட்டு நான் என்னுடைய வாகனத்தில் வந்து கொன்டிருந்தேன். போக முடியாத அளவு மழை பெய்து கொண்டு இருந்ததால், ஓரமாய் ஒரு நிழற்குடையின் கீழ் ஒதுங்கினேன். மழை விட்ட பிறகு, வண்டியை துடைத்து விட்டு கிளம்பினேன். அந்த ரோட்டில், வேகமாய் வந்த ஒருவன் என் மேல், ரோட்டில் கிடந்த மழை நீரை வாரி இறைத்து விட்டு சென்றான்.உனக்கு இது தேவையா என்று வடிவேல் மாதிரி சொல்லிகொண்டாலும், அவன் மேல், பயங்கர கோபம். நானும் வண்டியை வேகப்படுத்தி அதே போல் அவன் மேல் தண்ணீர் அடிக்க முயற்சித்தேன். ஆனால் அந்த படவா ராஸ்கோல் மறுபடியும் என் மேல் தண்ணீரை வாரி அடித்தான்.. இப்போது சுர்ரென்று கோபம் ஏறியது. இன்னும் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினேன். ஆனாலும் உள்ளூர ஒரு பயம்..எங்கே தார் சாலையில் வழுக்கி விழுந்திடுவேனோ என்று..இருந்தாலும் அவன் பக்கத்தில் சென்ற போது....சொய்ங்ங்ங்ங்.. மறுபடியும் தண்ணீரபிஷேகம்.. ஆஹா இப்படியே போனால் வீட்டிற்கு போறதுக்கு முன்னாடி குளித்து விடுவேன் போல என்று அவனை விட்டு விட்டேன்..வேறென்ன செய்ய... அவன் என்மீது தண்ணீர் அடிச்சது பத்தாதுன்னு அடுத்த ஆளை பிடிக்க வேகமா போயிகிட்டு இருந்தான். ஆனா இப்படி ஒருத்தன் நடு ரோட்டில் குளிச்சது என்னை குளிப்பாட்டிய அவனுக்கு தெரியவே தெரியாது.

அதே மழை இங்கேயும் பெய்தது. ஆனால் ரோட்டில் தண்ணீர் நிற்கவில்லை. அலுவலகம் செல்லும் போது, எங்கேயும் இந்த மழையினால் வாகன நெரிசல் ஏற்பட்டதில்லை. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்கிறார்கள்.

இதை எல்லாம் பார்த்து ஏங்கினாலும், நம்மூரை நினைத்து ஏங்காத நாளில்லை, ஒரு கணவனின் வியர்வையின் வாசம் ஒரு மனைவிக்கு என்றும் பிடிப்பதை போல..

Sunday, August 27, 2006

அமெரிக்க அனுபவம் 1

எல்லாமே புதுசு.. ரோடுகள் எல்லாம் பள்ளங்கள் இல்லாமல்..ஒரே சீராய்... போகின்ற வாகனமெல்லாம் ஒரு ஒழுங்கை கடைப்பிடிகின்றன.. எல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு ஏக்கம் நெஞ்சுக்குள் வரத்தான் செய்கிறது.

கடைகளுக்கு சென்றால் வளர்ப்பு பிராணிகளுக்கு என்றே ஒரு தனியான பகுதி.. அவைகளுக்கு சிறு சிறு வீடுகள்.. முடி சீவ சீப்புகள்.. ஷாம்பூக்கள்.. ஒரு அழுக்கேறிய அலுமினிய தட்டில் எங்கள் வீட்டு நாய் சோறு சாப்பிட்டது மங்கலாய் என் நினைவில்..

வாங்கிய ஒரு பொருளை கொடுக்க வால்மார்ட் சென்றேன். பில் எங்கே என்று கேட்ட ஊழியரிடம் திரு திரு என்று விழித்தேன்..தொலைத்து விட்டேனா.. என்று தேடி கொண்டிருக்கையில், எனக்கு பின்னே இருந்தவர் எல்லாம் முன்னே சென்றனர். சரி..பர்ஸில் தேடலாம் என்று தேடினால் அந்த பில் இருந்தது.. கடவுள் இன்னும் இருக்கார் என்று நான் தமிழில் முனகினேன்.

கடவுள் எப்பவுமே இருக்கார்.. நாம் தான் கண்டுகொள்வதில்லைனு ஒரு குரல் தமிழில்.. அதிர்ச்சியோடும் ஒரு கேள்விகுறியோடு திரும்பினால்.. தமிழ் ஜாடையில் ஒருவர், என்னை பார்த்து சிரித்தபடி.. எந்த ஊர் நீங்க என்று
கேட்டார்..நான் திண்டுக்கல் என்றேன்..ஆஹா நான் தேனிங்க என்றார்.. என்னமோ கடவுளையே நேராய் பார்த்த ஒரு சந்தோசம்..

சரி சரி..பேசிக்கிடே பில்லும் போடுங்க.. மறுபடியும் ஒரு புது குரல்..என்னடா என்றால் கடை ஊழியரும் தமிழன்.. எல்லோர் கூடவும்
சந்தோசமாய் பேசி விட்டு வீடு திரும்பினேன்..எங்கு போனாலும் பார்க்கின்ற நூறு பேரில் முப்பது பேர் இந்தியர்கள்..

அமெரிக்கா வரும் போது ஒரு சின்ன பயம் இருந்தது..அது இப்போது போயேவிட்டது.. இன்று பக்கத்தில் இருந்த ஒரு கோவிலுக்கு சென்றோம், விநாயகர் சதுர்த்திக்காக. என்ன கூட்டம்..

அட போங்க யாருங்க சொன்னது என் தேசம் விட்டு தூரத்தில் நான் இருகேன்னு..நான் இருக்கும் கொலம்பஸில் தமிழ் சங்கம் இருக்கிறது.. எல்லோரையும் சந்திக்க போகிறேன் சீக்கிரம்..

Bommarillu...

Yes. Again there is a last minute twist in buying the rights of Bommarilu, the telugu movie. Vijay lost the rights to Prakashraj at last minute. Prakashraj buy the rights and the original producer of the movie going to act as co-producer along Prakash raj. It seems he had given a word of promise to Prakash when the moie was under production.

Wednesday, August 23, 2006

Cine Bits - சில உண்மைகள்

As per the cine news given in Cine Bits 4, the telugu romantic movie Bomarillu is now grabbed by a whopping price by the producer swargachitra Appachan for Vijay. He will do this remake movie after completing his current project Pokkiri, which is also a remake of Telugu Pokkiri. It's again proved that like other hereos how Vijay is stayed more confident on remaking movies. Why? He has to answer.

இந்த செய்தி சினி பிட்ஸ் பதிவுகள் எவ்வளவு நம்பகரமான செய்திகளை தருகிறது என்று நிருபிக்கிறது. ஸ்ஸ்ஸ்.. அப்பாடா! ஒரு சின்ன விளம்பரத்தை போட்டாச்சு!!

Cine Bits 5

Much awaited cop-story movie Vettaiyaadu vilaiyaadu going to release on Aug 25. Everyone is expecting to see the movie, since after a long time, kamal is doing a role of cop. Hope previously he had acted as cop in Kuruthipunal. And the Harris's tunes are already hit. If this film also done well, then the fame of the director Gautham will move up in the ladder.

Sillunnu oru kathal, which is already said to be release on Aug 31, is going to release on Sep 7, to avoid clash between Kamal's VV. And, from that, only four days gap for Surya-Jyothika marraige. So the movie is already expected a lot to see these gorgeous pair on the screens.



Sibiraj, son of Sathyaraj going to act in Lee directed Kokki fame Director Prabhu Solomon. This movie is produced by Sathyaraj to make his son in a top hero and it will be his last attempt for this. A..Ah Nila is the heroine pairing with Sibiraj.

A surprise news is AR Rahman going to score a music for Selvaraghavan's next hindi movie named as Mehbeth. Yuvan is the backbone and highlights of the Selva movie right from the begininng. Now its a break in their director - music director combo for this new proposed movie. I like Illayaraja and Balu Mahendra pair for their involvement in the movie. And their output also so good to hear and watch.

Monday, August 21, 2006

அமெரிக்கானாலும் அசின் தான்

என்னை வாழ வைத்த, வாழ்த்தி வழியனுப்பி வைத்த, பிளாக் உலக நண்பர்களுக்கும்,
அன்பர்களுக்கும் எனது மேலான நன்றி.

நான் இப்போது அமெரிக்காவின் ஓஹாயொ எனும் மாநிலத்தின் தலைநகர் கொலம்பஸில் இருக்கிறேன்.கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் முதல் இரண்டு நாட்கள். அப்புறம் எனது நண்பர்களுடன் வெளியில் கடைகளுக்கு சென்றால் நூறில் முப்பது இந்தியர்கள்.

எச்சரிக்கை அமெரிக்கர்களே. எங்கள் மக்கள் வெகு சீக்கிரம் இங்கேயும் கொடியை நாட்டப்போகிறார்கள்னு நினைச்சா, அங்க ரோட்டுல குப்பையை போடுறவன் இங்கே ஒழுங்கா தொட்டியில் போடுறான். ஒரு வேளை, இந்தியாவிலும் சட்டங்கள் இது மாதிரி இருந்தா, எல்லாம் ஒழுங்கா இருந்திருக்குமோ...

என்னை ஆச்சரியப்படுத்திய, சிந்திக்க வைத்த சில அமெரிக்க விஷயங்கள் விரைவில்...

அம்பி, நான் தான் இங்கே இருக்கிறேனே ஓழிய, என் எண்ணம் எல்லாம் அசின்..அசின்..அசின் தான். அதனால், ஒழிந்தான் கார்த்தி என்று மனதுக்குள் சந்தோசப்பட வேண்டாம்.

Saturday, August 19, 2006

100வது நாள்

What are you thinking about promos in all newspaper about the completion of DMK's 100 days. Do you think, what they are exposing is right? Is it correct or above the reality? post your comments on their promos..

Cine Bits 4

The much awaited Kamal-KSRavikumar combo Dasavatharam's shooting has started yesterday. I always surprise about kamal's work and dedication towards the cinema. Now he has come up with new idea of having 10 characters in a movie. It's one more than Sivaji's Navaraththiri. Hope after 25 years, somebody will come and do 12 characters.

India's super top model Deepika Padukone going to pair with Kollywood's latest hot Surya in Gautam Menon's Naan Than. Gautham, what happens to your Silandhi with Sarath, Jyithika and Thapu..

Again remake rajakkals started to buy a rights for another hit telugu movie Bommarillu. Jayam Ravi group, AM Ratnam, K Bhagyaraj, Vijay had seen the preview of the movie and started to bargain to buy this movie. Sidharth and Genelia paired in this romantic movie which is collecting more in BO. Hope nowadays these Remake Rajakkals Jayam Ravi and Vijay are not having faith in new innovative Tamil directors. ennaachchu pa..

Friday, August 18, 2006

Vanthutten

ellorukkum vanakkam...

ungal manamaarntha vazhthukkalukku en nenjarntha nanri..

US welcomes me with the statement "Every exit is the entrance for the new experiences" enna oru unnathamana enakke enakkevana vazhthukkal..

Syam, enga ponaalum kollywood news illama postE kidaiyathu..

Ambi, Geetha madam, TRC Sir, Nagai Siva, Prasanna, Chinnakutti,Syam mattrum vazhthiya ellorukkum Nanri...

Friday, August 11, 2006

I'm Flying

Dear Friends,

I am leaving India on coming Monday to United States. See you all within one week. It's urgent requirement. So I even don't know how it happened so fast.

சந்திப்போம் நண்பர்களே!!!

Tuesday, August 08, 2006

சோதனை மேல் சோதனை

திடீரென்று ஆபீஸில் பிளாகற்க்கு தடை செய்துவிட்ட படியால், என்னால் இனி அந்த தடை விலகும் வரை தினமும் பதிவுகள் போட இயலாது. (தினமும் தான் போட முடியாது..ஆனால் வாரத்திற்கு ஐந்தாவது எப்படியும் போட்டுவிட வேண்டும் என்பதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை) தங்களின் பின்னூட்டங்களுக்கும் பதில் எழுத இயலாது. நிறைய பதிவுகள் நான் போட நினைத்து இருந்த காலங்களில் இப்படியொரு சோதனை. பிளாகருக்கு செல்வதற்கும் பதிவுகள் இடுவதற்கும் வேறு ஏதும் வழிகள் இருந்தால் பின்னூட்டதில் சொல்லி உதவுக..

நீண்ட விடுமுறைக்கு பிறகு வந்திருக்கும் கீதா மேடத்தின் பயணக்கட்டுரையும், அவரை பெங்களூரில் கலாய்த்த அம்பியின் விளையாட்டுத்தனம் பற்றியும் விரைவில் அவரவர் வலைப்பூக்களில் பதிவுகளை எதிர்பாருங்கள்..

Sunday, August 06, 2006

ஜோரான கல்யாணம்

சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் செப் 11-ல் ஜோரா கல்யாணம்..
ரொம்ப நாளாய் மூடிவைத்த காதல் இப்போது நிறைவேறுகிறது.. நேற்று இதை உலகிற்கு சூர்யா தந்தை சிவகுமார் அறிவித்தார்.

வாழ்த்துக்கள் ஜோ-சூர்யா!!!

Saturday, August 05, 2006

சொத்துச் சண்டை

யார் சொன்னது? தொந்தியும் தொப்பையும் காவல்துறைக்கு மட்டும் சொந்தமென.. அது இப்போது சாஃப்டுவேர் இஞ்சினியருக்கும் சொந்தம்..

Friday, August 04, 2006

Azhwaar Promo Poster



[Thanks : Dinakaran]

Another One...




[Thanks : Behindwoods]

Superb article is available at here

Thursday, August 03, 2006

Cine Bits 3

Simbhudevan, the director of Imsai Arasan was gifted with Swift by Director Shankar, who is the producer that film.

R K selvamani has started a new film in the name of Pulan Visaranai 2 with Prasanth as hero.

Bala is ready with the script for much awaited Naan Kadavul and shooting started at Tenkasi on Aug 2. Arya will join with the crew in September after completing the Saran's movie vattaram

Vishals' Thimiru and Mohanlal,Jeeva's Aran going to hit theatres, in this weekend

There is a chance of releasing Vettaiyadu Vilaiyadu and Godfather in the month of August. The newly elected Producer council members trying to release those movies.

Tuesday, August 01, 2006

ஆழ்வார் ஆரம்பம்

இன்று பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கும் என் 'தல'யின் ஆழ்வார் படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.

இந்த படம் மிகப்பெரும் வெற்றியை பெற இயக்குநர் செல்லா தலைமையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்துகிறேன்.

All the Best Thala!!!