Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Saturday, May 22, 2010

நடிகர் விஜயின் 'தல'க்கு மேல் கத்தி


அடுத்தடுத்து ஆதி முதல் சுறா வரை (போக்கிரி மட்டும் இதில் விதிவிலக்கு) மொக்கை படங்களாய், அரசியல் ஆசை காரணமாய் அவசர அவசரமாய் எடுத்த எல்லா படங்களும், செல்போன் நிறுவனங்களுக்கு மட்டும் லாபம் தந்து, தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு போட வைத்ததால், இன்று கூடும் அதன் சங்க உரிமையாளர்கள் மிகவும் முக்கியமான முடிவுக்கு (தங்கள் சங்கத்திற்கு இலவசமாக ஒரு படம் இல்லை ரெட் கார்டு) வர இருக்கின்றனர். ஏற்கனவே ஆதி படத்தின் போது இதே போல ஒரு பிரச்சினை ஏற்பட்டது. எப்படியோ சமரசம் செய்து, சரிசெய்தார்கள். இப்போது மறுபடியும்?

ஒவ்வொரு முறையும் அடுத்த படத்தில் சம்பாதித்து விடலாம் என்றும் ரசிகர்களை போல நம்பிக்கொண்டிருந்த இவர்களுக்கு, சுறா பெரிய ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் வேலைக்கு ஆகாது இன்று நினைத்து விஜய்க்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருகின்றனர்.

தியேட்டர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கும், இவ்வளவு காலமா என்ன பாஸ் பண்ணிகிட்டு இருந்தீங்க? சுறாவுக்குமா அதிக விலை கொடுத்தீங்க?

விஜய் சார், தியேட்டர் ஆபரேட்டர் முதல் உங்கள் 'குட்டி' ரசிகர்கள் வரை எல்லோரும் கடுப்பாகி இருக்கின்றனர்.. வித்தியாசமா ஏதாவது பண்ணுங்கண்ணா..

கௌதம் சாருக்கு திருப்பாச்சி, சிவகாசி டிவிடி பாக்கத்தானே கொடுத்தீங்க?
ஆமா, ராகுல் கிட்ட உங்கப்பாவுக்கு கவர்னர் போஸ்ட் கேட்டீங்களாமே, உண்மையா.. பாத்துங்கண்ணா உங்களை பத்தி இப்படித்தான் நிறைய நியூஸ் வருது..

இனிமேலாவது நல்ல படம் கொடுங்கண்ணா..

Saturday, January 23, 2010

சென்டிமெண்ட் சினிமா : எம்ஜிஆர் பட தலைப்புகளும் வசூல் வீழ்ச்சிகளும்

சமீபத்தில் வந்து பயங்கர விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் வரை எம்ஜியார் பட தலைப்புகளை வைத்த எந்த படங்களும் வசூலை வாரி கொடுக்கவில்லை என்பது உண்மை. எனக்கு ஞாபகம் இருந்து சரத்குமார் நடித்த நாடோடி மன்னன் தான் எம்ஜிஆர் தலைப்பில் வந்த முதல் படம் (ஏதோ எல்லா சரத்குமார் படங்களும் பயங்கர வெற்றியை கொடுத்த மாதிரியும் இது ஓடாததிற்கு ஒரு காரணம் சொல்வதாக நினைக்க வேண்டாம்) அதை பின் அன்பே வா, வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஓருவன் எல்லாமே குப்பர படுத்துக்கொண்ட படங்கள் தான்.. என்ன காரணமாக இருக்க முடியும்.. கதையும் கொடுத்த விதமும் சரியில்லை என்பது தான் முதல் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட் பார்க்காத ஆள் யாரும் இல்லை. அப்படி இருக்க மறுபடியும் ஏன் இப்படி தலைப்புகளை தெரிவு செயவேண்டும்..

இப்போது நடிகர் ராஜ்கிரண் தனது புதி சொந்த படதிற்கு மலைகள்ளன் என்று பெயர் வைத்திருக்கிறார். ஓடுமா அந்த படம்? நீங்கள் தமிழ் சினிமாவின் சென்டிமெண்டுகளை நன்றாக கவனித்தாலே ஒரு படம் ஓடுமா ஓடாதா என்று சரியாக சொல்லிவிட முடியும். எப்படி? வரும் வாரங்களில் பார்க்கலாம். ஒரு உதாரணதிற்கு, வில்லு ஓடாது என்று என் நண்பர்களிடம் நான் எடுத்து சொன்ன சென்டிமென்ட் காரணங்கள் கீழே
1. ஒரு பொங்கல் விட்டு ஒரு பொங்கலிலோ, அல்லது ஒரு தீபாவளி விட்டு ஒரு தீபாவளிலோ தான் விஜய் படங்கள் ஓடி உள்ளன. ஒரு பொங்கலில் ஆதி காலை வாரிவிட, அடுத்ததில் போக்கிரி தூக்கி நிறுத்தியது. அதனால் அடுத்த பொங்கல் ரிலீசான வில்லு இந்த சென்டிமென்ட் படி படுத்துகொள்ளூம்.
2. சூப்பர் வெற்றி கொடுத்த இயக்குநர் விஜயின் அடுத்த படத்தை கவிழ்த்து இருக்கிறார். பாசில் காதலுக்கு மரியாதைக்கு பிறகு கண்ணுக்குள் நிலவிலும், ரமணா திருமலைக்கு பிறகு ஆதியிலும்.. அதனால் போக்கிரிக்கு பிறகு வில்லுவும் பிரபு தேவா எடுப்பதால் கவிழ வாய்ப்பு உள்ளது. (இதில் பேரரசு விதிவிலக்கு).
3. அப்போது நயன்தாராவின் மார்க்கெட் கீழ் நோக்கி சென்று கொண்டிருந்ததால்.. ஏகன், சத்யம் என்று அவரின் படங்கள் அடிமேல் அடி வாங்கி கொண்டிருந்தன

மேலே சொன்ன மாதிரி இன்னும் பல சென்டிமென்ட்கள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக அலசி காய்ப்போடுவோம் நேரம் கிடைக்கும் போது

Monday, May 26, 2008

சிவாஜி - குருவி ஒற்றுமை

தன் வழி தனி வழி என்று சொல்லும் ரஜினியின் வழியில் செல்ல பல நடிகர்கள் போட்டா போட்டி. இதில் எப்போதும் முன்ணணியில் இருப்பவர் நடிகர் விஜய். பாபா படம் சரியாக ஓடாத போது, இனி ரஜினி அவ்வளவு தான் என்று சந்தோசப்பட்டு சந்திரமுகிக்கு இணையாக சச்சினை களமிறக்கி அடி வாங்கி கொண்டவர்.

சமீபத்தில் பலரும் பல நெகடிவ் விமர்சனங்கள் தந்திருந்த போதும், எனது மனைவி விஜய் ரசிகர் என்பதால், வேறுவழியில்லாமல் குருவி படம் இருநூறு ரூபாய் செலவழித்து சத்யம் திரையரங்கத்தில் காண நேரிட்டது. படம் மாஸ்க் ஆஃப் ஜெரோ, தி பிரஞ்சு கிஸ் ஆகிய ஆங்கில படங்கள் மற்றும் சத்ரபதி என்னும் தெலுங்கு படத்தின் தழுவல் என்றாலும், பல இடங்களில் சிவாஜியின் சாயல் தெரிந்தது. அது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.. கவனித்ததை பட்டியலிடுகிறேன், இன்னும் இருந்தால் நீங்களும் பட்டியலை தொடருங்கள்

1. சிவாஜியில் ரஜினியின் அப்பா மணிவண்ணன், குருவியில் விஜயின் அப்பாவும் இவரே
2. சிவாஜியிலும் குருவியிலும் வில்லன் சுமன்
3. சிவாஜியில் இடைவேளையின் போது காசை சுண்டிவிட்டு, சிங்க பாதையா பூப்பாதையா என்று ரஜினி விவேக்கிடம் கேட்பது போன்று, இங்கேயும், மலேசியா கிளப் சண்டைக்கு முன்பு விஜய் இரு விரல்களை காண்பித்து அகிம்சை, அடிதடி என்று விவேக்கை தேர்வு செய்ய சொல்வது
4. சிவாஜியில் ரஜினி செத்து பிழைப்பது போல், இதிலும் விஜய் தண்ணீரில் இறந்து விட்டது போல் காட்சி அமைத்திருந்தது
5. மியூஉசிக்கல் ஸ்டோரில் நடக்கும் முதல் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி, குருவியில் மலேசியா கிளப் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி..
6. இது ஒற்றுமையா என்று தெரியவில்லை.. இரண்டிலும் நாயகர்கள் கூடவே விவேக்

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.. இன்னும் இருந்தால் பின்னூட்டதில் சொல்லுங்கள் நண்பர்களே..இது படத்தை குறை சொல்ல எழுதியதில்லை.. கவனித்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே..

பி.கு: கல்யாணம் முடிந்து விருந்து என அலைந்து இப்போது தான் கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார முடிந்தது.. இனி எழுத்து ஊர்வலம் தொடரும் என்று நினைக்கிறேன்.. கல்யாணத்திற்கும், பிறந்த நாளிற்கும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

இந்த மாதம் மத்தியில் திருமணம் செய்து புது வாழ்க்கை தொடங்கிய கவிதாயினி வேதாவிற்கும், மாப்ள பரணிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Saturday, January 26, 2008

விஜய் - த்ரிஷா - காதல் - மறுபடியும் - கிசுகிசு?

நான் தனியாக எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஜுனியர் விகடனில் வந்த இந்த கிசு கிசுவை நீங்கள் படித்து பொருள் தெரிந்து கொள்ளுங்கள்..


இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த போதும், இதேபோல் செய்திகள் உலா வந்தது.. மறுபடியும் இப்போ..

Thursday, April 26, 2007

எஜமான் ரஜினி - அழகிய தமிழ் மகன் விஜய் - என்ன சம்பந்தம்?



[படம் கீர்த்திவாசனின் பதிவிலிருந்து]

மேல இருக்கும் படத்தை மூன்று மாசத்துக்கு முன்னாடி பாத்தப்ப ஏதேச்சையான விஷயம்னு நினைச்சேன்..

கீழே இருக்கின்ற தலைவரின் படம் எஜமான் திரைபடத்திலிருந்து. விஜயின் படம், தயாரிப்பில் இருக்கும் அழகிய தமிழ் மகன் படத்திலிருந்துஇப்போ உண்மையோ என்று தோன்றுகிறது? நீங்க என்ன நினைக்கிறீங்க?




ஒரு முடிவோடதான் விஜய் இருக்கார் போல.. ஆனால் ரஜினியிடம் இருக்கும் விமர்சனங்களை தாங்கி கொள்கின்ற பக்குவம் இன்னும் வரணும். சமீபத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபாவில் போக்கிரி படத்தை பேக்கரி என்று கிண்டல் செய்ததை கண்டு பொறுக்காமல், அவரது தந்தை அந்த டைரக்டர் மற்றும் டெக்னிஷியன்களை அழைத்து மன்னிபு கேட்க வைத்தாராம். ஆனானப்பட்ட ரஜினி கமல் படங்களை கிண்டல் செய்தாலும் அது நகைச்சுவை நிகழ்ச்சி என்று தான் நினைப்பார்கள். இந்த சகித்துகொள்ளும் தன்மை விஜய்க்கும் இருந்தால் சீக்கிரம் தொடலாம் தேடும் நாற்காலியை...

Thursday, January 25, 2007

'தல'யின் கிரீடம் 'இளையதளபதி'யின் அழகிய தமிழ்மகன்



பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் நிறுவனம் புதியதாக அவரின் மகன் சுரேஷ் பாலாஜியின் கீழ், மும்பை அட்லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம், கிரீடம். இதில் ஜி படத்திற்கு பிறகு அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேருகிறார். அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரணும் அம்மாவாக சரண்யாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் வி.எல். அழகப்பனின் மகன் விஜய் இயக்குகிறார். இந்தப் படம் மலையாளத்தில் திலகன், மோஹன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் படத்தின் தழுவல்.



இந்த படம் கிட்டதட்ட 60% ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்துக்கு வெயில் அறிமுக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு பொறுப்பை திரு ஏற்று இருக்க, எடிட்டிங்கை ஆண்டனி செய்கிறார்.



ஒரு தந்தை மகனுக்கு இடையிலான பாசத்தை சொல்லும் அழகான குடும்ப, ஆக்க்ஷன் படமாக வேகமாக வளர்ந்து வருகிறது கிரீடம்.

போக்கிரியின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகனின் ஷூட்டிங் நேற்றிலிருந்து தொடங்கியது. படத்தை மசாலா இயக்குநர் தரணியின் அசிஸ்ட்டண்ட் பரதன் இயக்க, படத்திற்கு இசை அலங்காரம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்க, இன்னொரு நாயகியாக நமீதா வேஷம் கட்டுகிறார்.



இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.