Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Wednesday, April 25, 2007

தத்துவம் நம்பர் 10101

தோல்வி என்பது உனது காதலி உன்னை விட்டு சென்றதல்ல,
நீ, அவள் தங்கைக்கு முயற்சி செய்யாதது தான்

- சுவாமி காதலானந்தா

Tuesday, January 02, 2007

சூடமாய் கரையும் நினைவுகள்

எழுதாத பேப்பரை கையில் வைத்து கொண்டு என்ன எழுதலாம், எப்படி எழுதலாம், எப்படி எழுதினால் சுவையா இருக்கும் என்று பலவாறான யோசனைகள். இப்படி எத்தனை கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்பதில் மட்டும் ஒரு சின்ன எல்லையை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். அத்தனை பக்கங்களில் அவனே முதலில் எழுதுகிறான். நாம் நடந்ததை எழுதுகிறோம். அவன் நடக்க போவதை எழுதுகிறான். உலகில் அத்தனை பேருக்குமாய் அவன் எழுதுகிறான். நாம் நமக்கே எழுத சிரமப்படுகிறோம். இப்படித்தான் வருடத்தின் முதல் நாட்கள் நாள்காட்டியில் கிழிக்கப்படுகின்றன.

நடந்தது எல்லாம் இப்போது நினைக்கையில் மங்கலான கனவுகளாய் தெரிகிறது. நடக்கபோவது எல்லாம் இழுக்க இழுக்க நீளும் ரப்பராய் நீண்ட கனவுகளாய் இருக்கிறது. முன்னாலும் பின்னாலும் கனவுகளை சுமக்கும் மனிதன்,வாழ்க்கை எல்லாம் கனவுகளை போலவே போகிறது, முன்னால் நகரும் போது பின்னால் ஓடி கரைகின்ற புகைவண்டி புகைகளாய்.

ஓசோன் மண்டலம் ஒரு பக்கம் கிழிந்து போய் மழைக்காலங்களில் வெய்யிலையும் வெய்யில் காலங்களில் குளிரையும் மாற்றித் தந்து தட்ப வெட்பத்தில் கால்பந்து விளையாடுகிறது. ஒரு பக்கம் அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் காடுகள் கான்கிரீட் சுவர்களாகிறது. இப்படியே காடுகள் இடிக்கப்பட்டால் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் இந்த கான்கிரீட் கட்டடங்களை கண்டு மழைபெய்யுமா இந்த வானம்? ஓசோ சொன்னதை போல இயற்கையை நாம் மதித்தால் அது நம்மை அரவணைக்கும். முடிந்தவரை உங்கள் வாழ்நாளில் ஒரு ஆயிரம் மரங்களையாவது நடுங்கள். இல்லையென்றால் எந்த மரத்தையும் அறுக்கும் அருகதை நமக்கு கிடையாதென்றெண்ணி சும்மா இருங்கள்.

புதியதாய் பிறக்கும் ஒரு வருடம் நமக்கு ஒரு வயதை மட்டுமா தருகிறது. புதிதாய் போடப்பட்ட ஒரு சாலையிலே போகின்ற வண்டிகள் தரும் தடங்களை போல எத்தனை எத்தனை படிப்புகளை சொல்லித் தருகிறது. அடுத்தவரின் தவறுகளை இங்கே பட்டியலிட்டுகொண்டே தனதை பூஜை அறையின் அடியிலே சமாதியாக்குகின்றனர். பதவிகளை ஏற்கும் போதும் கொள்ளப்படும் பிரமாணங்களை போல வாழும் ஒவ்வொருவரும் ஒன்றை மனதில் இருத்தி கொள்ள வேண்டும். அது புதிய ஒன்றை கண்டுபிடிக்க இல்லையென்றாலும் பழையதை அழிக்காமல் இருத்தல் பெரியது.

யாருமே இல்லாத ஒரு நாளிலே உக்கார்ந்து யோசித்தால் இப்படித்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள் தூளியில் ஆடுது. சில சமயம் நமக்கு முன்னால் நடக்கும் சில விதி மீறல்கள், படி தாண்டல்கள் நமக்கு இதயத்தின் அதிகபட்ச துடிப்புகள் கணக்கிட உதவுகிறது. அன்னியன் விக்ரமாய் தலைவிரித்து கற்பனையில் குதிரையோடு பறக்கிறது.

நமக்கு நாமே கோடுகளை இட்டு, உற்றோர் உறவினர் என்று இல்லாமல் எல்லோரும், உலகில் வாழும் ஒற்றை ஜாதி மலரிலிருந்து அதை பிறக்க வைக்கும் சூரிய பிரபு வரை சுகத்தோடு இருக்க, ஆசை கோபம் களவு தெரிந்தவன் பேசத் தெரிந்த மிருகம் என்று ஆண்டவனின் ஆறு கட்டளையின் ஒன்றாய் இல்லாமல், பல வண்ண அரிதரங்கள் பூசி நாலு பேரை அழ வைப்பதை போல, க்ளுகென முகிழ்க்கும் உதட்டு மலரின் புன்னகை கொண்டு நெஞ்சமெலாம் வாழ்த்தி, புறாக்களில் மட்டுமல்ல இதயங்களிலும் அமைதியை, இமயம் தொட்டு விடும் ஆகாச எண்ணங்களுக்கு இந்த வருடத்தில் புது வண்ணம் பூசுவோம்.

போகும் வழியெல்லாம் காற்று உங்களுக்கு வாசனை தந்து தடையென நிற்பவை எல்லாம் தடமில்லாமல் போகிட, போகியில் தீயிட, பரமபத ஏணிகளில் ஏறி, பாம்புகளில் தப்பித்து, வாழ்க்கை தாயத்தில் வாகை மலரது சூடி, எனக்கு அறுபது அடுத்தோற்கு நாப்பது என எல்லாம் ஒதுக்கி, வாழ்வில் மகிழ்ச்சி, மனத்தில் எழுச்சி எண்ணி என்றும் சிறப்பாய் வாழ இந்த ஆண்டு வேண்டும் என வேண்டியது எல்லாம் கிடைத்து உங்களை வாழ வைக்க வேண்டுகிறேன்

Friday, December 29, 2006

மறக்க முடியாத 2006

இந்த வருஷம் எனக்கு மிக மகிழ்வான வருஷம். நினைத்தற்கும் வரமாய் கேட்டதற்கும் அதிகமாக ஆண்டவன் அருள் தந்து, என் உள்ளே சக்தியாய் புகுந்தி எல்லாவற்றையும் நடத்தி கொடுத்த வருடம்..

கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு முன்னால் வேண்டிய ஒன்றை திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் நடத்தி கொடுத்ததால், இந்த வருடம் பிப்ரவரி மாதம் கோயில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் தள்ளிப் போய் இந்த வருடம் தான் இதை எடுக்க முடிந்தது.அம்மனுக்கு என் நன்றியை அளித்தேன்.. பெரியதொரு உள்ளக் கவலை ஒன்றை அம்மன் சன்னிதியில் இறக்கி வைத்தேன். அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

இந்த வருடம் மே மாதம் என் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆனதால் கன்பார்ம் ஆகி, 5/5 என்று ரேட்டிங்கும் கிடைத்த வருடம்..அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

ஒரு அண்ணனாய் இருப்பவனுக்கு இருக்கும் கடமை..தங்கை கல்யாணம்..அதுவும் இந்த வருடம் ஜூன் மாதம் 28-ல் கல்யாணம் நடந்தது ஆண்டவன் அருளால்..அடுத்த வருடம் மாமா புரோமோஷன் வேற வெயிடிங்க்..அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

அதிகம் தேடாமல் ஆண்டவன் தந்தது இந்த அமெரிக்க வாசம்.. அதுவும் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17-இல் நடந்தது.. எத்தனையோ கனவுகள் இருந்தாலும் வாழ்கையில் இதுவெல்லாம் ஒரு தனி கனவு.. இதையும் அந்த வடபழநி ஆண்டவன் நடத்தித் தந்தான்.. அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

சினிமாக்களிலும் அலுவலகத்தில் மேனேஜர் கையிலுமே பார்த்த வந்த மடிக்கணினி இப்போ நம்ம மடிலையும்..வந்தது அமர்ந்தது இந்த வருஷத்துல தான்

எபோதோ சின்னதாய் ஆரம்பித்து, ஆர்வங்கள் பெருகி, இப்போது புதியதாய்..ஆல விழுதுகளய் நன்பர்கள் கிடைத்து, மன மகிழ வைத்த இந்த பிளாக் உலகம். எத்தனை நண்பர்கள்..எத்தனை திசைகள்..ஒவ்வொரு டிகிரியிலும் பல நண்பர்கள்.. இந்த வருட ஆரம்பத்தில் பின்னூட்டங்கள் இல்லாமல், தண்ணியில்லா ஏரியை போல் கிடந்த இந்த பக்கத்தை பார்த்து, மாரி மழை பெய்யாதோ என்று நினைத்திருக்கிறேன்.. கனவுகள் பெரிய கனவுகள் கண்டிருக்கிறேன்.. இப்போது இந்த வருடக் கடைசியில் அதை திரும்பி புரட்டி பார்த்தால் இந்த தொட்டு விட்ட தூரம் உள்ள உவகையே தருகிறது.. தொட்டெழுந்து பார்த்தால் போகும் தூரமும் நிறையத் தான் இருக்கிறது.

இந்த வருடத்தில் தான் பதிவுகள் எண்ணிக்கை சதமடித்தது.. சேவாக்காகி 300ம் அடித்தது.. பின்னூட்டம் எழுபதையும் தாண்டியது.. முருகன் மாதிரி என் நாடு என் மக்கள் னு ஒரு அமைச்சரவையும் உண்டாகி..ஹிஹிஹி..நமக்கு நாமே முடியும் சூட்டியாச்சு... இதோ அடுத்த மந்திரிசபை விரிவாக்க வேலையும் போயிகிட்டு இருக்கு.. இப்படி பரபரன்னு வாழ்க்கை பதிக்க ஆரம்பிச்சதும் இந்த வருஷத்துல தான்

எழுதிய பதிவுகளை திரும்பி பார்க்கையில், ஆதரவான ஒரு கை தலையை கோதி விடுகையில் கிடைக்கும் ஒரு ஆனந்த மயக்கம், சந்தோசம் உள்ளத்திலே பரவிக் கிடக்கிறது.. ஆனால் நிறைய சினிமா பத்திதான் எழுதி இருக்கிறோமோ என்று ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது.. அதையும் வருகின்ற 2007-இல் சரிப் படுத்த முயல்வேன் என்று ஒரு நம்பிக்கை இருந்தாலும், சினிமாவே இல்லாமல், தண்ணீரே இல்லாமல், இருக்க முடியாது என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது.

நண்பர்களே, வருகின்ற 2007 உங்களுக்கு பொன்னான வாழ்க்கையையும் புதுவேக உற்சாகத்தையும் தந்து, உடல் ஆரோக்கியமும், வெற்றி ஏணிகளில் ஏற்றம் என்று மகிழ்வை தர வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.