Thursday, November 30, 2006

பில்லா அஜித் முரட்டுக்காளை விஜய்

ஹிந்தி டான் படம் வந்ததிலிருந்து எப்போ இது மாதிரி பழைய ஹிட்டான ரஜினி,கமல் படங்களை தமிழ்ல ரீமேக் பண்ணப் போறாங்கன்னு ஒரே பேச்சு.. இது ஒரு படி மேல போய், தான் ரஜினியின் முரட்டுக்காளையை ரீமேக் பண்ணினா நடிக்க ரெடின்னு விஜய் ஒரு பேட்டில சொல்ல..இப்போ இதை மையமா வச்சு தான் எல்லாப் பக்கமும் அரட்டையே.. இப்போ புதுசா கிடைச்ச நியூஸ் படி அமிதப்போட 'டான்' ரீமேக்ல ஷாருக் நடிச்ச மாதிரி ரஜினியோட பில்லால அஜித் நடிக்கப்போறாராம். முரட்டுக்காளைல விஜய் ரஜினியோட கெட்-அப் (அதே மாதிரி ஹேர்-ஸ்டைல்ல) ல வந்து பொதுவாக எம்மனசு தங்கம்னு பாடினா எப்படி இருக்கும்.. ஏற்கனவே இதே மாதிரி ஹேர்-ஸ்டைல்ல விஜய் வசீகரா-லையும் பகவதி-ல ஒரு பாட்டுலையும் வந்ததையும் நினைவுகூர்ந்து ஒப்பீடு செய்து பாருங்க..

அடுத்து அஜித் பில்லாவா நடிச்சா எப்படி இருக்கும்.. ரஜினியோட அந்த ஸ்டைல் மறுபடியும் வருமா இவருக்கும்.. ஒரு வேளை வாய் முழுக்க வெத்தலையை போட்டுகிட்டு வெத்தலையை போட்டேண்டினு அஜித் பாடினா கரகோசம் விண்ணை பிளக்குமா.. வரலாறுல அஜித் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்துல நடிச்சதால இதுக்கு தேர்வாகி இருக்காரா..

இதை பத்தி பேச ஆரம்பிச்சவுடனே எல்லா ரஜினி,கமல் படங்களையும் தூசி தட்டி, இதுல இவர் நடிச்சா எப்படி இருக்கும்..அதுல அவர் நடிச்சா எப்படி இருக்கும்னு எங்க பாத்தாலும் ஒரே கதை தான்.. அந்த மாதிரி சமீபத்துல ஒரு சினிமா வலைப்பக்கதுல பட்டியல் போட்ட படங்கள் தான் கீழே பட்டியல் இடப்பட்டிருக்கிறது..

1. அக்னி நட்சத்திரத்துல பிரபுவா அஜித்தும், கார்த்திக்காக விஜயும்
2. நெற்றிக்கண் படத்துல அஜித்
3. நான் சிகப்பு மனிதனா விஜய்
4. தில்லுமுல்லு பண்றவரா சூர்யா
5. சிகப்பு ரோஜாக்கள் கமலாக அஜித்
6. நாயகன் கமலாக விக்ரம்

இந்த வெற்றிபடங்கள் எல்லாம் இன்னும் எத்தனையோ கிராம டூரிங் தியேட்டர்களில் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.. இதை எல்லாம் துடைத்து இந்த கால புதிய டெக்னிக்கல் விஷயங்களை புகுத்தி மேற்சொன்ன நடிகர்களை வைத்து எடுப்பதால் பழைய படங்களோட நிலைமைகள் என்னவாகும்.. என்ன தான் சொன்னாலும் ஷாருக்கின் டான் பார்த்தவர்கள் அமிதாப்பின் டான் மாதிரி இல்லை என்று தான் சொல்கிறார்கள்.. ஷாருக்கின் ரசிகர்கள் வேண்டுமென்றால் ரசிக்கலாம். அதே போலத் தான் இந்த படங்களும் அமையப் போகிறது..புதிதாய் மறுபடியும் எடுத்தால்..

ரஜினியின் ஸ்டைல் கலந்த அந்த துள்ளல் நடிப்பும், கமலின் உணர்வுபூர்வ நடிப்பும் இன்னொருவரால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களா.. நினைத்து பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.. அவனவன் புதுப் புது கதைகளங்கள்.. புதிய டெக்னிக்கல் விஷயங்கள் என்று முன்னே போய் கொண்டிருக்கிற காலக்கட்டத்தில் இவர்களின் எண்ணங்களைப் பாருங்கள்..

என்னை பொறுத்தவரை, அடுத்த ரஜினியாக வேண்டும், கமலாக வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருக்கிற நடிகர்கள் அவர்களின் படங்களை ரீமேக் செய்யும்போது தாங்கள் நடித்தால் அந்த நடிகரின் ஸ்தானத்தையே பிடித்ததாக நினைத்து செய்வதாகத் தான் படுகிறது.. அண்ணாமலை ரஜினி மாதிரி நெற்றியில் சாம்பலை பூசிக்கொண்டு நீ எந்த ஊரு நான் எந்த ஊரு என்று ஆடும் இவர்கள் இன்னும் எத்தனையோ மைல்கல் பயணிக்கவேண்டும் அந்த நாற்காலிக்கு என்று என்றைக்கு தான் புரிந்து கொள்ளப்போகிறார்களோ.. கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

டி.ஆரின் வீராசாமி பாடல்கள் டிச.4 முதல்

Wednesday, November 29, 2006

ஏடிஎம்ல பணம் எடுக்கிறப்போ திருடர்ட இருந்து தப்பிக்க..

சமீபத்தில் வந்த ஒரு இ-மெயில் இது.. செய்திகளில் படித்தது போலவும், கேட்டது போலவும், யாரேனும் உங்களை ஏடிஎம்-ல் பணம் எடுத்து தர மிரட்டினாலோ, துன்புறுத்தினாலோ அதிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருப்பதாக அந்த இ-மெயில் குறிப்பிடுகிறது..

அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நீங்கள் உங்கள் ஏடிஎம் 'பின்' (PIN) எண்ணை திருப்பி அடித்தால் (அதாவது 1234 என்பது உங்கள் 'பின்' (PIN) என்றால், 4321 என்று அடிக்க வேண்டும்), அதை ஏடிஎம் மிஷின் புரிந்துகொண்டு, நீங்கள் கேட்ட பணத்தை தந்துவிட்டாலும் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்து உங்களின் அவசரத் தேவைக்கு அங்கே உடனே போலீஸை அனுப்பி வைக்குமாம்.

உண்மையா என்று தெரியவில்லை. உண்மையாய் இருந்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். இந்த இ-மெயில் சென்னையில் உள்ள ஒரு கணினி நிறுவனத்திலிருந்து அதன் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக தெரிகிறது. இதைப் பற்றி சமீபத்தில் ஒரு டி.வி நிகழ்ச்சியில் சொல்லப்பட்டதாகவும், இந்த முறை பலபேருக்கு தெரியாமல்
இருப்பதாகவும் சொல்கிறது..

வங்கியில் பணி புரியும் நண்பர்கள் அல்லது இதை பற்றி தெரிந்த நன்பர்கள் சொல்லலாமே இது உன்மையா என்று.

ஊரு விட்டு ஊரு வந்து

கடிகார முட்களைப் போல பரபரப்பாய் இருந்தது இந்த டிரிப். ஓய்வு எடுக்கவே நேரம் போதல.. இன்னைக்கு காலைல தான் வந்தேன்.. கடமை உணர்ச்சில நேரா ஆபீசுக்கே வந்துட்டேன். அழகான, ஆபத்தான கிராண்ட் கேனியன் மலை மற்றும் பள்ளதாக்குகளும், சும்மா கலகலன்னு இருக்க சூதாட்ட நகரமான லாஸ் வேகாசின் சூதாட்ட வசூலும் (நான் விளையாடவே இல்லை. ஆனால் மூன்றாம் தடவையாக வந்த என் நண்பன் ரோஹன், இதற்கு முன்னால் ஐம்பது டாலராய் தோற்று இருந்தாலும், இந்த தடவை 350 டாலராய்
திரும்ப வாங்கி வெற்றி வாகை சூடினான்.. பத்து ரூபாய் ஜெயித்தாலே நாம டிரீட் கேப்போம்.. இதுக்கு விடுவோமா.. நல்ல ஒரு இந்தியன் உணவகத்துல மூக்குப் பிடிக்கச் சாப்பாடு.) லாஸ் ஏஞ்ஜலின் சினிமா அழகு மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோவின் பிரம்மாண்டமும் இன்னும் கண்ணுலயே இருக்கு.. இது இல்லாமல், சான் டியாகோவில்
இருக்கும் ஸீ வேர்ல்டில் ஒரு நாள் முழுக்க தண்ணீர் விளையாட்டுக்கள் கூட.

இன்னும் சுவையான சம்பவங்கள் மற்றும் பயண குறிப்புகளோட கொலம்பஸிலிருந்து கொலம்பஸ் வரைன்னு ஒரு பெரிய தொடர் எழுதலாம்னு இருக்கேன்.. கண்ணை கவரும் படங்களோட.. இது இனிமேல் இந்த நகரங்களை விஸிட் அடிக்க போறவங்களுக்கு ஒரு கைடாவும், போயிட்டு வந்தவங்களுக்கு மறுபடியும் ஒரு டிரிப் அடிச்ச மாதிரியும் இருக்கணும்னு நினைக்கிறேன். வழக்கம்போல உங்கள் பேராதரவை எதிர்பாக்குறேன் நண்பர்களே..

தினமும் வந்து படிச்சிட்டு கமெண்ட் போட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி..

Wednesday, November 22, 2006

அடைமழை மாதிரி ஏன் இத்தனை பதிவுகள்..

எழுதுறதை போதைன்னு சொல்லியாச்சு.. ஆனா இப்படியே ரொம்ப நாள் போதையில மிதக்குறவனை என்ன பண்ணுவாங்க..ஏதாவது டாக்டரிடம் கூட்டிட்டு போவாங்க.. இல்லைனா சபரி மலைக்கோ பழநிக்கோ மாலை போடவச்சிருவாங்க.. மாலை போட்டபிறகு எதுவும் இந்த மாதிரி போதை ஏற்றும் சமாச்சாரங்கள் கூடாது.. அதனால என்ன பண்ணுவான் குடிமகன் மாலை போடுறதுக்கு முதல் குடிப்பான் பாருங்க..நம்ம டாஸ்மாக்லயே சரக்கு இல்லைன்னு சொல்றவரைக்கும். ஏன்டா இந்த மாதிரி பில்டப் கொடுக்குறேன்னு பாக்குறீங்களா.. வேற ஒண்ணும் இல்லங்க.. விசயத்தை சொல்றேன் கேளுங்க.. கடந்த ஒரு வாரமா நான் அடைமழை மாதிரி பதிவுகளை போட்டதுக்கு என்ன காரணம்னா, மாலை போடுறதுக்கு முன்னாடி குடிமகன் குடிக்கிற மாதிரி தான்.. அடுத்து ஒரு ஆறு நாள் இந்த வலைப்பக்கமே வரமுடியாது.. இந்த நன்றியளிப்பு (Thanksgiving day) விடுமுறைல ஊர் சுத்தப் போறேன்.. லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கிரான்ட் கேனியன் மலைகள் னு மேற்குப் பக்கம் ஒரு பெரிய சுற்றுலா போறேன்.. அந்த நாட்களை சரிக்கட்ட தான் இத்தனை பதிவு..

பதிவு இருக்கும்னு நீங்க தினமும் வந்து ஒரு அட்டென்டன்ஸ போட்டுட்டு, நீங்க படிக்காத சில பழைய பதிவுகள் இருக்கலாம்.. அதையும் படிச்சுட்டு ஒரு பின்னூட்டத்தை போட்டுடுங்க.. புரியுது.. ஒரு அஞ்சு நாள் நிம்மதியா இருக்கலாம்ன இப்படி படுத்துறியேப்பான்னு நீங்க சொல்றது எனக்கு நல்லாவே கேக்குது.. ஸ்கூல்ல எல்லாம் இந்த டீச்சர் கொஞ்சம் அலுப்பா இருந்தலோ, இல்ல வெளில போறாங்கன்னா டீச்சர் வந்து ஏதாவது படிச்சுகிட்டு இருங்கன்னு சொல்லிட்டு போவாங்கள்ல..ஹிஹிஹி..அது மாதிரி தான் இதுவும்.. எந்த பதிவு படிச்சாலும் ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க நண்பர்களே..

எப்பவும் போனும் கையுமா இருக்க என் மச்சினிச்சி பொற்கொடி ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்காங்க.. மத்திய அமைச்சர்கள் தரப் பட்டியல் போட்ட மாதிரி, நம்ம அமைச்சரவையிலும் ஒரு ரேட்டிங் போடலாமேன்னு.. அந்த தரப் பட்டியல் வந்தவுடனே போட்டுடுறேன்.. அந்த தரப் பட்டியல் போடுறதுக்கு நீங்க போடுற பின்னூட்டமும் கணக்குல வருதுன்னு ஒரு சின்ன ஹின்ட் கொடுக்குறேன்.. அதனால எதப் படிச்சாலும் ஒரு பின்னூட்டத்தை போட்டுடுங்க... நீங்க ரேட்ல மேல வரலாம்.. அடப் பாவி.. கமென்ட் வாங்குறதுக்கு இப்படி எல்லாம் ஒரு வழியான்னு நீங்க சொல்றது கேக்குறது.. புரியுது.. என்னங்க பண்றது..

இந்த கீதா மேடம் இருக்காங்களே, எத்தனை பின்னூட்டம் போட்டாலும்..என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடலல..அப்படின்னு நறநறநறன்னு பல்லை கடிச்சு பயமுறுத்துறாங்க.. மேடம்..நான் வர்றதுக்குள்ள அந்த மூணு தொடரை போட்டுடுங்க.. இல்லைனா.. நான் அந்த தொடரை போடம இருந்திருந்தா அம்பி என்ன பண்ணியிருப்பாரோ அதையே தான் நானும் பண்ணுவேன்.. எங்கடா நம்ம கட்சியின் செயலாளர், சுத்த சிகாமணி சுகாதார அமைச்சர் ப்ரியாவை கணோமேன்னு பாத்தா அம்மணி நமக்கு முன்னாலயே ட்ரிப் அடிக்க ஜூட் விட்டுட்டாங்க..

இந்த கோழி குழம்பை பத்தி எழுதி எழுதின போஸ்ட்ல நீறைய பேர்..சாமி..ஆள விடுன்னு ஒரு அட்டென்டன்ஸ் மட்டும் போட்டுட்டு பறந்துட்டாங்க.. அவங்களெகெல்லாம் என்ன சொல்றேன்ன.. இனிமேல் அந்த மாதிரி பதிவுகளை எழுதாம இருக்க முயற்சி பண்ணுறேன்..

அப்புறம் முக்கியமான விஷயம்..உங்க பதிவுக்கெல்லம் வந்து அட்டென்டன்ஸ் கொடுக்க முடியாது.. அதனால நிறைய கமெண்ட் போட்டு அதையெல்லாம் வந்து சரிகட்டிடுறேன்.. வர்ட்டா மக்களே..

வித்தியாசமான போஸ்டர்.. (புகைபிடிப்பவர்களுக்கு)


மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் புகை பிடிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள போஸ்டர் இது..
என்ன ஒரு அருமையான கற்பனை.. புகைபிடிப்பவர்கள் அண்ணாந்து பார்த்தால், பாதிரியார் அவர்களுக்கு பன்னீர் தெளித்து ஆன்மா சாந்தியடைய வாழ்த்துகிறார்.


இதற்குப் பிறகும் இப்படி புகை பிடிக்கணுமா நண்பர்களே!

Tuesday, November 21, 2006

காதலனே கண்கண்ட தெய்வம் - பகுதி 3

காதல் ஆக்க்ஷன் நகைச்சுவை என எல்லா ரசமும் கொண்ட தொடர்கதை...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

தூரத்தில் இன்ஸ்பெக்டர் இன்பவேலன் தனது ஜீப்பில் வந்து கொண்டு இருந்ததை பார்த்ததும் அப்படியே காளிதாஸை இழுத்து கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு அடர்ந்த புதருக்குள் ஒளிந்தான் சண்முகம். இன்ஸ்பெக்டர் ஜீப் இந்தப் பக்கமே வராமல் வேற பக்கம் போவதை பாத்து பெருமூச்சு விட்டான் சண்முகம். காளிதாஸ்..டேய்.. வாடா போலாம்.. அந்த இன்ஸ்பெக்டர் நாய் அந்த பக்கம் போகுது..வா நாம போகலாம்னு கூப்பிட்டாலும் ரெண்டு ரவுண்டு ஓவரா விட்டதுல காளிதாஸால நடக்கவே முடியல.. அவனை அள்ளி ஆட்டோல போட்டுகிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக ஆட்டோவில் கிளம்பினான் சண்முகம்.

சண்முகம் பிளான் பண்ணின அந்த திங்கள் கிழமை...

அந்த கம்பெனியின் கேன்டீன்..
கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது..

காவ்யா.. இன்னைக்கு அம்மா திருநெல்வேலி போறாங்க..அதனால அவங்கள கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்ல ரயிலேத்திவிடணும். அதனால சீக்கிரம் கிளம்பிடுவேன். நீ ஏதாவது ஷேர் ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டல் போயிடுடா..சரியா.. சூடா இருந்த கேண்டீன் டீயை ருசித்தபடி கொஞ்சலுடன் காவ்யாவுடன் பேசிகிட்டு இருந்தான் கதிர். காவ்யாவுக்கு என்னமோ அவன் விட்டு ரொம்ப நாள் பிரியப் போறதா கவலை. அவன் பேசினதுக்கு கூட இம் கொட்டாமல்.. சூடான அந்த காபியையே பார்த்து கொண்டிருந்தாள். ஏய்..கவி..என்ன கப்பல் கவிந்த மாதிரி இருக்க.. அது தான் உன் ஹீரோ முன்னாடியே உட்கார்ந்து இருக்கார்ல.. நீ கன்னிதீவுல இருந்தாலும் வந்து காப்பாத்துவாருல.. என்று கிண்டலடித்துகொண்டே வந்தாள் பாவனா.. கூடவே பவித்திராவும்.. போங்கடி.. என்னை வம்பிழுக்கலைனா உங்க ரெண்டு பேருக்கும் பிஸாவே உள்ள இறங்காதே.. அழகான விழிகளில் நடனமாடியபடியே கோபப்பட்டாள் காவ்யா.. இவள் என்ன செய்தாளும் அழகு.. சின்னப் புருவம் கூட என்னமாய் பேசுது காவியங்கள் என்று அவளை ரசித்தபடியே உட்கார்ந்து இருந்தான் கதிர்.. தோ பாருங்கடா.. இங்கே ஐயா ஆஸ்திரேலியாவுல டூயட் பாட கிளம்பிட்டாரு.. பவி..வாடி..நம்ம இங்க இருந்தா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நம்மள குரூப் டான்ஸர் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிடுவாங்க என்றபடி பவித்ராவை தள்ளிகிட்டு போனாள் பாவனா. பாவனா, பவித்ரா, காவ்யா, கதிர் எல்லோரும் ஒரே டீம்.. இவங்க நாலு பேரும் ஒரு மினி குரூப்.. ஆட்டம், பாட்டம், கும்மாளம்னு தான் இருப்பாங்க இவங்க நாலு பேரும் ஒண்ணு சேர்ந்தாலே..

ஆபீஸ்ல அந்த வீல் வச்ச சேர்லயே தான் இந்த பக்கம் அந்த பக்கம்னு போவா பவித்ரா.. சேரை உருட்டிகிட்டு பாவனா பக்கத்துல வந்தா பவித்ரா..பாவனா.. இன்னைக்கு நான் சீக்கிரம் கிளம்புரேண்டி..அம்மாவை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகனும்.. அண்ணனை பத்தி தான் தெரியுமே.. நீ பாத்து கிளம்பிக்கடி..சரியா.. பை..னு சொல்லிவிட்டு சேரிலேயே நகர்ந்து அவளோட சீட்டுக்கு போய் கைபையை எடுத்துகிட்டு கிளம்பினாள் பவித்ரா..

ஆபீஸ் முடிஞ்சு வேண்டாவெறுப்பாய் கிளம்பினாள் காவ்யா.. இப்பவெல்லாம் கதிரை பிரிஞ்சு இருப்பதே கொடுமையான நேரமாயிடுச்சு காவ்யாவுக்கு.. சொல்லமுடியாத உணர்வாய் இருந்தது அவளுக்கு..யார்கூடவும் மொத மாதிரி கலகலப்பாய் பேச முடியல.. அப்படியே நடந்து வேளச்சேரி பஸ்ஸ்டாண்டுக்கு வந்தாள்.. ஹ்ம்ம்..எவ்வளவு நேரம் நின்னுகிட்டு இருந்தாலும் பஸ் வராது.. வந்தாலும் கூட்டம் தாளாது.. பேசாம ஏதாவது ஆட்டோ இருந்தா கிளம்பிடவேண்டியது தான் என்று அவள் நினைத்த சமயத்தில் ஒரு ஷேர் ஆட்டோ அவள் பக்கத்தில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய காளிதாஸ் எங்கேமா போகணும். என்று காவ்யாவை பார்த்து கேட்டான். கொட்டிவாக்கம் போகணும்..என்றாள் காவ்யா.. அங்கே தாம்மா போறோம்..ஏறிக்கோ..போலாம் என்று காளிதாஸ் சொல்ல ஆட்டோவுக்குள் ஏறி அமர்ந்தாள்.. தூரத்தில் நின்றுகொண்டிருந்த சண்முகம் மெதுவாக சிரித்துகொண்டே ஷேர் ஆட்டோவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். டீக்கா பேண்டு சட்டை போட்டு இன் செய்து..ஷூ எல்லாம் போட்டு ஏதோ பெரிய கம்பெனியில் வேலை செய்பவன் போல ஷோக்கா இருந்தான் சண்முகம். அது தான் சண்முகம்.. எந்த வேலை செய்தாலும் அவ்ளோ பெர்ஃபெக்க்ஷன்.

இன்னைக்கு அம்மாவை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போக பவித்ரா வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்டா.. இன்னைக்கு பாவனா தனியாத்தான் ஆபீஸ்ல இருந்து கிளம்புவாள்.. எப்படியும் அவள் கிட்ட என் காதலை சொல்லிடணும்.. இப்படி ஒரு அணையா தீய மனசுல வச்சுகிட்டு ஒரு வேலையும் செய்ய முடியல.. பழமோ காயோ இன்னைக்கு சொல்லிட வேண்டியது தான் என்று வீட்டிலிருந்து காக்கிச் சட்டையில் இல்லாமல் அழகான இளைஞனாய் டி-சர்ட் ஜீனில் பைக்கில் கிளம்பினான்.. நாலு தடவை கண்ணாடியில் முகம் பார்த்தான்.. ஐந்து தடவை தலை வாரினான். எப்படியும் வேளசேரில தான் பஸ் ஏறுவா.. அங்க போய் பிடிக்கணும் என்றவாறு பைக்கில் வேகமெடுத்தான் வேளச்சேரிக்கு..

எக்ஸ்க்யூஸ்மீ.. ஆட்டோ எங்கே போகுது.. கேட்டுகொண்டே காளிதாஸை நெருங்கினான் சண்முகம். கொட்டிவாக்கம் போகுது சார்..ஏறி பின்னால உக்காரு சார்..போகலாம்..என்று சண்முகத்தை பார்த்து ஒரு கள்ளச் சிரிப்புடன் சொன்னான் காளிதாஸ்.. சண்முகம் ஏறி உக்கார்ந்தான்.. சே..என்ன ஒரு மல்லிகைப்பூ வாசனை.. காசு கொடுக்குற எவகிட்டயும் இந்த வாசனை வர்றதில்லையே என்று நினைத்து கொண்டான்..

சார்..ஆட்டோ திருவான்மியூர் போகுமா என்றவாறு ஒரு இளைஞன் கேட்டான்..காளிதாஸுக்கு உடம்பு படபடத்தது...திருவான்மியூர்ல எங்க போகணும் என்று கேட்டான் சன்னமான குரலில்.. தியாகராஜர் தியேட்டர் ஸ்டாப்புக்கு போகனும்..போகுமா.. என்றான் அவன்..இல்லப்பா..வண்டி இப்படியே உள்ளாற போயிடும்..அந்தப் பக்கமெல்லாம் போகாது என்றான்.. பதில் சொல்லி முடிக்குமுன்னே அவனுக்கு மூச்சு வாங்கியது.. அந்த இளைஞன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஆட்டோவை உடனே கிளப்பிட வேண்டியது தான் என்று டிரைவர் சீட்ல போய் உக்கார்ந்தான்.

அதே நேரம் ஆட்டோ அருகில் பாவனா வந்தாள்..எக்ஸ்க்யூஸ்மீ..ஆட்டோ எங்கே போகுது என்று காளிதாஸை பார்த்து கேட்டவள் காவ்யாவை பார்த்தாள்.. ஹே.. கவி.. எங்கே.. கொட்டிவாக்கதுக்கு தானே..பவித்திரா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டாள்..நானும் வர்றேன்..என்றவாறு ஆட்டோக்குள் பார்த்தாள். ஏங்க..கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்களேன்..அவ என் பிரண்ட்..நான் அவள் பக்கத்துல உட்கார்ந்துக்குறேன்..என்று பாவனா சண்முகத்தை பார்த்து கேட்டாள்.. அவனும் வேறு வழி இல்லாமல் இந்த நகர்ந்து உட்கார்ந்தான்.. பாவனா ஏறி காவ்யா பக்கத்துல உட்கார்ந்தாள்..

பாவனா ஏறி உக்கார, தூரத்தில் இருந்து இன்பவேலன் அவளை பார்த்தான்.. சரி..பக்கத்துல போய் அவளை கூப்பிடலாம்னு ஆட்டோ பக்கத்துல போனான்..பாவனா அந்தப் பக்கம் திரும்பி காவ்யாகிட்ட ஏதோ கதையடித்து கொண்டிருந்தாள்.. இன்பவேலன் அவளை கூப்பிட நினைக்க, காளிதாஸ் இவனை பார்த்ததும் ஆட்டோவை வேகமா கிளப்பினான்.. இன்பவேலன் காலிதாஸையும் பின்னால் உட்கார்ந்து இருந்த சண்முகத்தையும் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.. அந்த கணப்பொழுதில் ஆட்டோ இவனை கடந்து தரமணி ரோட்டில் வேகமெடுத்தது..

அதே நேரம்..ஆஹா..ஒண்ணுக்கு ரெண்டு பட்சி..எப்படியாவது அந்த இன்பவேலன் கண்ணுல மண்ணை தூவிட்டா இன்னிக்கு முழுவதும் விடிய விடிய சொர்க்கம் தான் என்று நினைத்துகொண்டே தன் பாக்கெட்டில் இருந்த மயக்க ஸ்ப்ரேயை மெதுவாக எடுத்தான் சண்முகம்.

(தொடரும்)

விஷால் அடுத்த வசூல் மன்னனா?

தமிழோவியம் என்னும் வலை புத்தகத்தில் நான் எழுதிய "விஷால் அடுத்த வசூல் மன்னனா?" என்னும் சினிமா சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த கட்டுரையை படிக்க இங்கே க்ளிக்கவும்.

எனது படைப்பை வெளியிட்ட தமிழோவியம் ஆசிரியர் குழுவிற்கு மிகவும் நன்றி

Monday, November 20, 2006

கோழி குழம்பு புராணங்கள்

(சைவம் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் இந்தப் பதிவை பொறுத்துகொள்ளுங்கள்)

நான் சென்னைக்கு 2001 டிசம்பரில் என் எம்.சி.ஏ படிப்பின் கடைசி செமஸ்டர் புராஜெக்டுக்காக வந்த போது, எனக்கு குக்கரில் எப்படி சாதம் வைப்பது என்பது கூட தெரியாது. ஒரு நாள் வைத்து குக்கர் முழுவதும் கரியாகிப் போனது தான் மிச்சம். கேஸ் ஆன் பண்ணுவதிலிருந்து கரண்டி பிடிப்பது வரை எனக்கு புது விஷயமே. இன்று விட்டால் சமையல்கட்டில் கபடியே விளையாடுவேன். அன்றைய தேதியில் எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் சப்பாத்தி மாவு பிசைந்து வைத்தால் அதை அழாகான வட்ட வடிவ சப்பாத்தியாய் தேய்த்து தருவது தான். மற்றபடி யாராவது வெங்காயம் நறுக்கினால் கூட விழுந்தடித்து ஓடுவேன். இது இல்லாமல் அசைவத்தில், கோழியின் தலையை பிடித்து லாவகமாக அருவாள்மனையில் அறுக்கத் தெரியும். அருவாள் மனையை என் காலில் மிதித்து, கூடவே கோழியின் இரண்டு கால்களையும் அதே காலால் மிதித்து கொள்வேன். இறக்கைகளை ஒரு கையால் பிடித்து அதே கையால் கழுத்தையும் சேர்த்து பிடிப்பேன். இன்னொரு கையால் வாய் பகுதியை பிடித்து அருவாள்மனையில் வைத்து மெதுவா அறுப்பேன். கோழி ரத்தத்தையும் ஒரு கிண்ணத்தில் பிடித்து தனியாக வைப்பேன். ரத்த வருவல் சுவையே அலாதிதான். அதுவும் அறுத்த பின், கொஞ்ச நேரம் விட்டால் கூட கோழியின் முடிகளை பிய்ப்பது கஷ்டம் என்பதால் அதனையும் அதே ஜோரில் பிய்த்தெறிவேன். இப்போதெல்லாம் பெரும்பாலும் பிராய்லர் கோழி தான். அதுவும் அதன் முடியை ஈசியா உரிக்கணும்ங்கிறதுக்காக, கோழி உயிர் போன பிறகு சுடிதண்ணில போட்டு முக்குவாங்க. என் வீட்டுக்கு முன்னாடி இருக்க ஒரு ஐயா, அப்படி எல்லாம் செய்யக் கூடாது..கோழி ருசியா இருக்காதுன்னு சொல்வார்.. அது கொஞ்சம் நிஜமும் கூட.. முதன் முதல் இப்படி கோழி அறுக்க கற்றுக்கொண்டதே ஒரு சுவராஸ்யமான விஷயம் தான்.

ஒரு முறை திண்டுக்கலில் இருந்து செந்துறை, திருமலைக்கேணி போகும் வழியில் இருக்கும் ராஜக்காபட்டி கல்லுப்பட்டிக்கு சென்றிருந்தேன். என் அம்மாவோட அம்மா, அம்மாச்சி இருக்கும் ஊர். அங்கே சென்றிருந்த போது, கோழிக்குழம்பு வைக்கவேண்டும் என்று என் அம்மாச்சி சொன்னார்கள். ஆனால் அப்போது என் மாமாவோ, என் சித்தப்பாவோ யாரும் இல்லை. சரி..நானே செய்கிறேன் என்று அந்தப்பக்கம் பறந்து விளையாடி கொண்டிருந்த இரண்டு கோழிகளை பிடித்து மேலே சொன்னவாறு சமையலுக்கு தயார் செய்தேன். அப்படி அறுத்துகொண்டிருந்த போது ரெண்டு வயதான பெண்கள் வீட்டுக்கு வந்தாங்க.. வந்தவங்க நான் கோழியில் லாவகமா பிடிச்சி அறுக்கிறதை பார்த்துட்டு..ஏய் அங்கம்மா (என் அம்மாச்சி பேரு) உன் பேராண்டி என்னமா பிடிச்சு அறுக்கிறான் இந்த சின்ன வயசுல (ஒரு பதிமூணு வயசு இருக்கும் அப்போ எனக்கு) அப்படின்னாங்க.. ஏய்..கண்ணு போடாதீங்கடி என் பேரன் மேல..காத்தி (என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க) சாயந்தரம் சொல்லு..சுத்திப் போடுறேன்னு சொன்னாங்க.. யெப்பா..எனக்கு பெருமை தாங்கல அப்போ.. கோழிகளை சிறு சிறு துண்டாக்கும் போது கொஞ்சம் உஷாரா இருக்கணும். ஏன்னா அதுல ஈரல் பக்கத்துல பச்சைகலர்ல ஒண்ணு இருக்கும்.. அதை அப்படியே துண்டா அறுத்து தனியா எடுத்திடணும். இல்லைனா கறி கசக்கும். என் அம்மாச்சி என்னை கோழி தலையை சாப்பிட விட மாட்டாங்க.. பசங்க எல்லாம் கோழி தலையை சாப்பிடக்கூடாதாம்..

ஆனா என் அப்பாவோட அம்மா, நாங்க அப்பம்மான்னு தான் கூப்பிடுவோம். அவங்க சமைச்ச காலத்துல, கோழி தலையை எனக்குன்னு தனியா எடுத்து வச்சிருவாங்க.. பேரப்பிள்ளைக கூட்டத்துல அசைவம் சாப்புடுற ஒரே ஆள் நான் தான். மத்தவங்க எல்லோரும் சைவம் தான். கோழிகுழம்பு வைக்கிற நாட்களில நான் ஒரு வெட்டு வெட்டிகிட்டு இருப்பேன்.. அந்த பக்கம் இவங்க ரசமும், தயிரும் சாப்பிடுவாங்க.. பாக்கவே பாவமா இருக்கும்.. ஆனா அவங்களை பொறுத்தவரை அது தான் அவங்களுக்கு அமிர்தம்.. ஏனோ அசைவச் சுவையை அவங்க ருசிச்சதே இல்லை.. இப்பவும் எங்கே அசைவம் கிடச்சாலும் ஒரு புடி புடிப்பேன்..

ஏதாவது கோவிலுக்கு கோழிகளை நேர்ந்துவிட்டால் அதை அவர்கள் அறுப்பதே நமக்கு ஒரு மாதிரியா இருக்கும். சாமிக்கு முன்னடி அந்த கோழியை ஒருவர் பிடித்து கொள்வார். இன்னொருவர் வந்து கழுத்தை அறுத்து அந்த கோழியை தூக்கி எறிவார். அது மேலும் கீழுமாய், கிழக்கு தெற்காய் கழுத்தில்லாமால் பறக்கும்.. உண்மையில் அப்படிப் பார்க்கும் போதெல்லாம் அந்த கோழியை பார்த்து பாவப்பட்டிருந்தாலும் சாப்பிடும் போதும் ஏனோ அதெல்லாம் தெரிவதில்லை.

சென்னைல இருக்கிறப்போ ஞாயிற்றுகிழமையானாலே கோழி தான். அதுலையும் சூப், குழம்பு அல்லது கிரேவி, வருவல், கூடவே முட்டைன்னு அன்னிக்கு சமயல் சும்ம பக்கத்து வீட்டை எல்லாம் கூப்பிடும் சாப்பிட.. நானும் என் கல்லூரி நண்பன் கிரிஷ்ணகுமாரும் கோழிப் பிரியர்கள். கல்லூரியில் இருக்கும்போதே தினமும் எதிரில் இருக்கும் கடையில் தினமும் சூப் வாங்கி குடிப்போம். எங்க கூட தங்கி இருந்த பார்த்தசாரதி வைக்கிற கோழி ஐயிட்டங்களே சூப்பரா இருக்கும். அவனுக்கு எல்லோரும் வச்சிருக்க செல்லப் பேர் 'கோழிப் பார்த்தா'.. வெங்காயும், தக்காளி,இஞ்சி, பூண்டு, மல்லி, புதின, சிக்கன் மசல பொடி போட்டு அவன் செய்ற கிரேவி என்னிக்கும் எங்க மத்தில ரொம்ப பிரபலம். யார் வந்தாலும் வீட்ல கோழி சமையல் தான்.

இப்போ இங்கே வந்த பிறகு போன ஞாயிறு தான் சிக்கன் கிரில் போட்டு சாப்பிட்டோம்.. நல்லா சுவையா வந்தது..முதல் தடவையிலே.. என்ன இருந்தாலும் நம்மூரு டேஸ்ட் நம்மூரு டேஸ்ட் தான். அதுவும் என் அம்மா வைக்கிற சிக்கன் குழம்பு ஒரு தனி ரகம் தான். என் அப்பா வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர். அதனால் எவ்வளவு உரப்பு இருந்தாலும் தெரியாது. ஆனா அவருக்கு எதுவுமே உரப்பு நன்றாக இருக்கணும். ஒரு முறை என் நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அதனால் என் அம்மா சிக்கன் குழம்பும், சிக்கன் 65-வும் செய்திருந்தார்கள். நான், என் அப்பா நண்பர்களோடு மதிய உணவு சப்பிட்டு கொண்டிருந்தோம். என் அப்பா என் அம்மாவிடம் என்ன குழம்பில் உரப்பே இல்லை என்று கேட்டுகொண்டிருந்தார். நான் இந்தப் பக்கம் என் நண்பர்கள் கண்ணில் நீர் வர சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இரண்டு பக்கமும் பாத்து நடுவுல உக்கார்ந்து நான் சிரிச்சுகிட்டு இருந்தேன்.

Sunday, November 19, 2006

என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி

பழைய தமிழ் பாடல்களை ரீமேக் என்னும் பெயரில் இப்போதைய இசை அமைப்பாளர்கள் மாற்றி இசை அமைத்து வருவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.. சமீபத்தில் வாத்தியார் படப் பாடல்களை கேட்கும் போது, வாங்க மாப்பிள்ளை வாங்க படத்துக்காக ஷங்கர் கணேஷ் இசையமைச்ச என்னடி முனியம்மா பாடலை ரீமேக் பண்ணின புது வடிவத்தை கேட்டுகொண்டிருந்தேன்.. நன்றாகத் தான் பண்ணியிருக்கிறார்கள்.. இந்த மாதிரி புது இசை வடிவம் பழைய பாடல்களுக்கு கொடுப்பதை நான் மிகவும் வரவேற்கிறேன்.. நான் பிறந்து சிறு வயதாய் இருக்கும் காலத்திலே கல்யாண வீடுகளில் ஒலிப் பெருக்கியில் கேட்ட ஞாபகம்.. அதற்குப் பிறகு அப்பப்போ வானொலியில் கேட்டிருக்கிறேன்.. இந்த மாதிரி புது வடிவம் கொடுப்பதால் பழைய பிரசித்தி பெற்ற பாடல்களை மறுபடியும் கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது.. அதுவும் இது எல்லா தரப்பு வயதினரையும் இது மகிழ்விக்கும்.

எனக்கு சரியாக ஞாபகம் இல்லை, இந்த மாதிரி ரீமேக் பண்ணுவது எப்போ ஆரம்பித்தது என்று. ஆனால் குறும்பு படத்தில் யுவன் தனது அப்பா இசையமைத்த அடுத்த வாரிசு படப் பாடலான ஆசை நூறு வகை தான் இந்த புதுவடிவ இசைக்கு வாசல் திறந்துவிட்டது என்று நினைக்கிறேன். அப்போது இப்படி செய்வது புதிதாக இருந்தது.. எல்லார் புருவங்களையும் கொஞ்சம் உயர வைத்தது.

அதன் பிறகு மன்மதனில் என் ஆசை மைதிலியே என்றும், வல்லவனில் காதல் வந்திடுச்சு எனவும் அவர் பழைய பாடல்களுக்கு புதிய இசைகருவிகளில் புதிய வடிவத்தை போட்டு கால்களை தாளமிட வைத்தார். தாஸ் படத்தில் அவர் அப்பாவின் நீங்கள் கேட்டவை பாடலான அடியேய் மனம் நில்லுன்னா நிக்காதடியை வா வா வா நீ வராங்காட்டி போ போ போன்னு அப்படியே 'காப்பி' அடிச்சிருந்ததை இப்போதைக்கு இங்கே மறந்துவிடுவோம்.

யுவனுக்கு ஒரு படி மேல போய் பழைய பாட்டின் பிரசித்தி இன்னும் எல்லோர் மனங்களிலும் இசைக்கப்படும் படகோட்டி பட தொட்டால் பூ மலரும் பாடலை, புது இசை வடிவம் மட்டுமல்லாது புதிய மெட்டிலும் விருந்து படைத்தார் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான். இந்த பாட்டு பழையதை போன்றே மிகவும் ரசிக்கப்பட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்படி பழைய பாடல்களை புதிதாக அடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பின்னே வருபவருக்கு, இப்போது இருக்கும் மிகவும் இளையவருக்கும் அந்த பழைய பாடல்கள் மறந்து போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. சில பேர் பழங்கால புராதான சின்னங்களுக்கு புதிய வர்ணம் பூசுவது போலவும், அது அந்த பழைய அழகை மறைத்துவிடும் என்று சொல்வதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லவற்றுக்கும் எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. ஆனால் மறந்து போன பழைய பாடல்களையே இவைகள் நிச்சயம் ஞாபகமூட்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்படி செய்வது ரசிக்கத்தான் வைக்கிறது. நிச்சயம் வரவேற்கலாம்.

மத்திய அமைச்சர்கள் தரப் பட்டியல்...

எப்படி வேலை செய்கிறார்கள் நமது அமைச்சர்கள் என்று அடிக்கடி ஏதாவது ஒரு சஞ்சிகை கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை தருவது வழக்கம்.. அதன்படி தி பைனான்ஸ் எக்ஸ்பிரஸ் என்னும் நாளிதழ் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.இந்த கருத்துக்கணிப்பு ஆறு பெருநகரங்களில் 338 நிறுவங்கள் இடையே நடத்தப்பட்டது..

அதன்படி, போன முறை இந்திய டுடே எடுத்த கணிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்த ரயில்வே அமைச்சர் லல்லு இப்போது முதலிடத்துக்கு வந்திருக்கிறார். ரயில்வே துறைக்கு மிகுந்த லாபம் இந்த வருடத்தில் இவர் முயற்சியில் வந்ததால் அவர் முதலிடத்தை பிடித்ததாக காரணம் சொல்லப்பட்டிருக்கிறது..

அதே போல நாலாம் இடத்தில் இருந்த தயாநிதி மாறன் இப்போது இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்தியா முழுவதும் லோக்கல் கால், 10 கோடி தொலைபேசி இணைப்புகள் (எங்கள் ஊரில் கடந்த பத்து மாதங்களாய் அடிக்கடி தொடர்புகள் துண்டிக்கப் படுவது வாடிக்கை ஆகிவிட்டது..இதற்கும் இவர் இரண்டாம் இடத்திற்கு வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறேன்), நோக்கியா, மோட்டோரோலா கம்பெனிகள் நமது மண்ணிற்கு முதலீடு செய்ய கொண்டு வந்தது போன்றவைகளை காரணமாக சொல்கிறார்கள் (போட்டோவுக்கு தாத்தாவுடன் போஸ் கொடுப்பதை விட்டுவிட்டார்கள்). இருந்தாலும் தமிழ் நாட்ல இருந்து ஒருத்தர் அதுவும் அரசியல் கத்துகுட்டி இந்த இடத்துக்கு வந்ததுக்கு வாழ்த்து சொல்வோம்..

நமது மத்திய நிதியமைச்சர் போன தடவை இருந்த மூன்றாம் இடத்திலேயே இந்த முறையும் இருக்கிறார். இவரை தயாநிதி மாறன் ஒவர்டேக் செய்துவிட்டார்.

தமிழகத்தை சேர்ந்த மற்ற அமைச்சர்களான டி.ஆர்.பாலு ஆறாம் இடத்திலும் அன்புமணி பத்தாம் இடத்திலும் இருக்கிறார்கள்..

ஆமாம் தமிழ்நாட்ல இருந்து போன மத்தவங்க எல்லாம் என்னதான் செய்றாங்க..

இந்த செய்தியின் மூலம் இங்கே

மே மாதத்தில் இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பு இங்கே

இந்த செய்திகளை நமக்காக பகிர்ந்துகொண்ட பாலிடிக்ஸ் பார்வதிக்கு ஒரு நன்றி

Saturday, November 18, 2006

டி.ஆரும் மும்தாஜும் ஆடும் டூயட் - காணத்தவறாதீர்கள்!

கொஞ்ச நாளைக்கு முன்னால இந்த நகைச்சுவைக்கெல்லாம் வசனம் தேவையில்லன்னு நான் போட்ட ஜோக்ஸ் படங்கள் மாதிரி கீழே இருக்க படங்களையும் நீங்க நினச்சா நான் பொறுப்பில்லை..




பிள்ளை சிம்பு வயசுக்கு மீறின காரியமெல்லாம் செஞ்சா, அப்பா டி.ஆரோ சின்ன வயசு பையனாட்டம் ஆட்டம் போடுறாரு..



கவலை படாதீங்க மக்களே.. விஜயகாந்தோட தர்மபுரி மாதிரி இதுவும் ஒரு மகத்தான நகைசுவை படமாத்தான் இருக்கும்..


கட்டிபுடி கட்டிபுடிடான்னு பாடி, மல மல மருதமலன்னு ஆடின மும்தாஜுக்கு வந்த சோதனைய பாத்தீங்களா..


இதெல்லாம் கடந்த ஒரு வருஷதுக்கும் மேலா டி.ஆர் இயக்கி நடிக்கும் வீராச்சாமி படத்தின் புகைப்படங்கள்..


டி.ஆர், எப்போ தான் வரும் படம்?

Friday, November 17, 2006

நண்பர்களோட நண்பர்கள் நண்பர்களான கதை

ஒவ்வொரு நாளும் விடியறப்போ வானம் ஒரே மாதிரி இருக்கிறதில்லை.. அதே மாதிரி நாமும்.. புதுப் புதுப் பார்வைகள்.. புதுப் புது உணர்ச்சிகள்.. சந்தோசங்கள்.. கனவுகள்.. ஹ்ம்ம்.. இந்த ட்ரீம்ஸ் பதிவுல தீபாவ பாத்ததிலிருந்து அவ நினைப்பு தான்.. பாருங்களேன்.. நேற்று கனவு முழுதும் அவ தான்.. சுவையான ஒரு காதல் படம் ஓடியது.. காலையில் எழவே மனசு இல்ல.. சரி அந்த கனவ தனிப் பதிவா போடுறேன்.. இன்னமும் என் கையை பிடிச்சுகிட்டு பக்கத்துலயே உக்கார்ந்து இருக்க மாதிரி ஒரு பிரமை.. ட்ரீம்ஸ்..இப்போ சந்தோசமா உங்களுக்கு.. உரையாடல்கள்.. நட்புகள்.. நட்பு என்னும் பூ மட்டும் எங்கே எப்படி முழைக்கும்னு யாருக்குமே தெரியாது.. ஆனால் காதலைவிட இதற்கு சக்தி அதிகம்.. வலிமை அதிகம்.. அது பார்க்காமல் நட்பு கொண்ட, சங்க இலக்கிய நண்பர்கள், கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் முதல் இன்று வரை அதற்கென்று ஒரு தனித்துவ வலிமை இருக்கிறது.. (இந்த பார்க்காத நட்பை வைத்து தான் காதல் கோட்டை படத்தோட தீம் ஆரம்பிச்சதோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இன்னும் இருக்கு) இந்த நட்பு ஒருவருக்காக மற்றவர் உயிர் துறக்குற வரை போனதுண்டு அவர்கள் கதையிலே.. காதல் என்பது கார்மோன்கள் செய்யும் கலாட்டா.. அது எப்படி சொல்லப்பட்டிருந்தாலும் ஆரம்பம் ஒரு ஈர்ப்பில் தான் என்பது என் எண்ணம்.. சில காதல்கள் இதிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கலாம்.. ஆனால் பெரும்பாலும் கண்களையோ முக அழகையோ வைத்து தான் காதல் ஆரம்பிக்கும்.. சரி விடுங்க.. காதல் எப்படி ஆரம்பிச்சா நமக்கென்ன... நாம இப்போ நண்பர்களை பத்தி பார்ப்போம்.. மூணு மூணா போட்டு எழுதின பதிவு புது நண்பர்களை எனக்கு அடையாளம் காட்டி இருக்கு..

முதலில் நண்பர் குரு அறிமுகமான கதையை பார்க்கலாம்.

நான் எட்டாவது தம்பித்தோட்டத்துல படிச்சுக்கிட்டு இருந்தப்போ புதுசா வந்து சேர்ந்தவன் தான் நண்பன் செல்வின். வந்த சில நாட்களிலேயே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். அப்போது அவன் திண்டுக்கல்லில் இருந்து வந்து சென்றதால் நாங்கள் பள்ளி முடிந்து பஸ் ஏறி நான் எனது வெள்ளோட்டுப்பிரிவு நிறுத்தத்தில் இறங்கும் வரை..அது பிரியாத ஃபெவிகால் நட்பாகவே இருக்கும். பள்ளி முடிந்து கல்லூரிக்கு சென்ற பின்னும் இது தொடர்ந்தது.. கல்லூரியில் படிக்கும் போது நடந்த விபத்தில் நெஞ்சில் அடிப்பட்டதால் அவனை அழுத்தம் கொடுக்கும் எந்த செயலைகளையும் செய்யக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதனால் எம்.சி.ஏ முடித்த பிறகு, காந்திகிராம கல்லூரியிலேயே லெக்சரர் ஆக வேலை செய்து வந்தான். நான் சென்னைக்கு வந்த பிறகும் வருடம் இரு முறையாவது நேரில் நாங்கள் பார்த்து அளவளாவிக் கொள்வோம்.. ஒரு நாள் கால் பண்ணி..என்னமோ தெரில..பேசணும் போல இருக்குடான்னு ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தான்.. சரியா ஒரு வாரம் கழிச்சு செல்வின் நெஞ்சுவலில இறந்து போன செய்தி தான் வருது, விடிகாலைல..

செல்வின் பத்தி என்னிக்கும் மறக்காத ஒரு சம்பவம்.. ஒன்பதாவது படிக்கிறப்போ கணக்கு பிரீயடுல ஜாமென்ட்ரி பாக்ஸ் இல்லாம ஒரு இருபது பேர் வகுப்புக்கு வெளில நிக்க, அடுத்த நாள் எல்லோருக்கும் அதை வாங்கி வந்து கொடுத்து அசத்தினவன்.. ஒரு வேளை, சொர்க்கதுக்கு போற அளவுக்கு புண்ணியத்தை இவ்ளோ சின்ன வயசுலயே பண்ணினதால, போதும் வா சொர்க்கதுக்குன்னு கடவுள் கூப்பிட்டுகிட்டதா நான் அடிக்கடி நினச்சுக்குவேன்..

அப்படிப்பட்ட என் நண்பன் செல்வின் கூட எம்.சி.ஏ படிச்ச நெருங்கிய நண்பன் குருவை தான் அந்த முத்துக்கள் மூணு பதிவு சேர்த்து வைத்தது. ஏற்கனவே குருவை இந்த பிளாக் உலகில் சந்தித்திருந்தாலும், நான் பதிவுகள் போட ஆரம்பித்த நாட்களில் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களில் ஒருவராய் இருந்தாலும், இப்படி ஒரு நட்பு எங்கள் இருவருக்கும் இடையே இருக்குமென்று அப்போது நினைக்கவில்லை. மேல இருந்து எங்கள் நெஞ்சங்களில் நாளும் வாழும் நண்பன் செல்வின் இதையெல்லாம் நிகழ்த்துகிறான் போலும்.

அடுத்து நல்ல செயல்கள் மூலம் பூனைக்கு மணி கட்டும் மணிப்ரகாஷ்

இங்கே நாம போடுற பதிவுகளை பாத்துட்டு..அட நம்ம திண்டுக்கல் ஆள் என வந்தவர்..என் ஊரின் பக்கத்து ஊர், எங்க பஞ்சாயத்துல இருக்க ஊர் நரசிங்கபுரம்.. அங்கே இவரோட அண்ணனுக்கு பொண்ணெடுத்து, இவர் அக்காவை கட்டிக்கொடுத்து என உறவுகளோடு சம்பந்தப்பட்ட ஊர்.. இவரும் முத்தான மூன்று பதிவுல எழுதி இருந்த விஷயங்களை பாத்து, ரெண்டு பேரும் பின்னூட்டதிலயே பேசிக்க..இவர் கூட பதினொன்று, பனிரெண்டு படிச்ச என் ஊர் பையன், என் நண்பன் பிரகாஷ் என தெரியவர, அப்படியே உடனே கூகிள் டாக்ல சம்பாஷனைகள்.. இவரும் இப்போ நான் இருக்க மாநிலம் ஓஹாயோன்னு சொல்ல, நான் எங்கன்னு கேக்க, அங்க இருந்து சின்சினாட்டின்னு பதில் வர.. அட.. எனக்கும் அங்கே நண்பர்கள் இருக்காங்களேன்னு சொல்லி அவங்களை தெரியுமான்னு கேக்க, ஆமா..தெரியும்னு அவர் சொல்ல.. அட என்ன இன்னிக்கு நண்பர்களோட நண்பர்கள், நண்பர்கள் ஆகுற நாளான்னு ஒரே சந்தோசம்..அப்படியே என் கைபேசி நம்பர் அவர் கேட்டு, நான் கொடுத்து.. அப்புறமென்ன இடைவிடாத உரையாடல் தான்.. இப்படியும் நடக்குமாங்கிற மாதிரி சட்டுன்னு பூத்து பழம் விளைஞ்ச கதை இது.. அப்புறம் பாத்தா நம்ம அருணும் அவரோட எதிர்த்த ரூம்ல தான் தங்கி இருக்காராம்.. இங்க பாருடா..

அது தான் நட்போட ஆச்சர்யமே.. சீக்கிரம் நம்மளையும் அதோட வானதுக்குள்ள இழுத்துக்கும்.. எத்தனை எத்தனை கரங்கள் இப்படி இங்கே எழுத ஆரம்பிச்சதிலிருந்து ஒண்ணு சேர்ந்திருக்கு.. ஒருமித்த கருத்தோ, அதிலே சர்சைகளோ...பிடிச்ச விஷயமோ.. பிடிக்காததோ.. எத்தனையோ முகம் கொண்ட மனங்கள் முகம் காட்டாமல் தங்கள் மனம் காட்டி கைகுலுக்கி இருக்கின்றன.. இதையெல்லாம் நினச்சுப் பாக்குறப்போ நான் கல்லூரியில் எழுதின ஒரு கவிதையின் வரிகள் ஞாபகத்துக்கு வருது..

எங்கிருந்து வந்தோம்..
எப்படி
எங்கே செல்ல போகிறோம்..
சிரித்து கொண்டே
கட்டிப்பிடித்து
கைகுலுக்குகின்றன
பூக்கடை ரோஜாக்கள்..

பல
வண்ணமிகு மண்ணின்
வளர்ப்பிலே வளர்ந்த
பருத்திகள் எல்லாம்
இறுகப்பிடித்து
இழைகின்றன
ஆலையிலே ஆடைகளாய்..

முகங்கள்
முகவரிகளல்ல
மனங்கள்
மாற்றி எழுதுகின்றன
நட்பென்னும் மை கொண்டு


(ஞாபகத்தில் இருந்த சில வரிகள் மட்டும்.. கீழே இருப்பது சும்மா ஒரு இன்ஸ்டன்ட் கவிதை)

கருத்துக்கள்
ஒத்தவருக்கு
உலகமே ஒரு கைக்குள்..
இப்படி
நட்புகள் வாய்த்தவருக்கோ
இதைப் போல
ஆயிரம் கைகள்..


எனக்கும் இப்போ ஆயிரம் கைகள் நண்பர்களே உங்கள் எல்லோராலும்..

கிராமத்து மணம் கமழும் பருத்திவீரன் பாடல்கள்

பருத்தி வீரன்.. மௌனம் பேசியதே, ராம் படத்துக்கு பிறகு அமீர், சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து எடுக்கும் படம். முதன் முதலாய் கிராமத்து படத்துக்கு இசையமைச்சிருக்கார் யுவன்.. கார்த்திக்கு ஜோடி பிரியாமணி.. முதல்ல பாடல்கள் எப்படின்னு ஒரு ரவுண்டு பார்ப்போம்.

அறியாத வயசு புரியாத மனசு - இளையராஜா

இளையாராஜா இசையமைக்கும் படங்களில் இப்படியொரு பாடல் நிச்சயமா இருக்கும். காதலர்கள் இருவரும் ஆடி ஓடி பாடி..உக்கார்ந்து நடந்து காதல் செய்ய..பிண்ணனில பாடல் ஓடும்..இளையாராஜா கொஞ்சம் இந்த பாட்டை வித்தியாசமா பாடி இருக்க மாதிரி இருக்கு.. சில இடங்களில் ஹஸ்கி குரலில் பாடுவது அவருக்கே புதுசா இருக்கும்.. கொஞ்ச நாள் நம்மூர் FMல கேக்கப்படுற பாட்டா இந்த பாடல் இருக்கும்..

ஏலே ஏலேலே - யுவன் க்ரிஷ்ணா, ராஜ், மாணிக்கவினாயகம்

இது ஒரு டூயட் பாட்டு.. பாடல்களின் வரிகள் ரொம்ப இயல்பா இருக்கு.. மிகவும் சாதாரண வரிகள் தான்.. வார்த்தைகள் தான்.. ஆனால் உணர்வுகளை பிரதிபலிக்கிற பாட்டா இருக்கும். ஆனா என்ன தான் கிராமத்து பாடலா இருந்தாலும் கம்பியூட்டர்ல மெட்டுக்கள் போட்டது நல்லாவே தெரியுது. ஆனா காதுக்கு சுகமாத் தான் இருக்கு.

நாதஸ்வரம் - (பாட்டு இல்ல..இசை மட்டுமே) எஸ்.ஆர். சண்முக சுந்தரம் குரூப்

யுவன் படங்கள்ல இப்போவெல்லாம் தீம் மியூசிக் இருக்கும். இது கிராமத்து படம்ங்கிறதால தீம் இசையும் அதுக்கு ஏத்த மாதிரி.. டூயட்ல ஏ.ஆர்.ரகுமான் சக்ஸ்ஸோபோன் மட்டுமே வச்சு ஒரு தீம் மியூசிக் போட்ட மாதிரி இதுல நாதஸ்வரம்.. படத்துல நாதஸ்வரத்துக்கு ஏதும் மேட்டர் இருக்குமான்னு தெரில.. ஆனா நல்ல வித்தியாசமான முயற்சி... வரவேற்கலாம்.. கொஞ்ச நாள் கழிச்சு "பருத்திவீரன் புகழ் சண்முக சுந்தரம் குரூப் நாதஸ்வரத்தில்"னு நீங்க உங்க ஊர்ல கல்யாணம் கச்சேரி போஸ்டர்கள் பாக்கலாம்.

சரி கம பத - மதுமிதா, S. சரோஜா, அமீர்
இது ஒரு சிறிய பாடல். இது ஹீரோயின் ஊருக்குள்ள தன்னோட் பாட்டி கூட வம்பிழுத்து பாடுற பாட்டுன்னு நினைக்கிறேன். நல்லா எடுத்திருந்தா நிச்சயம் ரசிக்கிற மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா பாட்டுல சொல்ற மாதிரி ரொம்ப பெருசா ஏதும் இல்ல

டங்கா டுங்கா - பாண்டி, லக்ஷ்மி, ராஜா, சரோஜா

இது தான் படத்தோட ஹை-லைட்டான பாட்டு.. அப்படியே மதுரை ஏரியாவுல நடக்குற திருவிழா பாட்டு.. இனிமே அந்த பக்கம் நடக்குற எல்லா திருவிழாவலையும் இந்த பாட்டு நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு ரொம்ப யதார்த்தமா இருக்கு.. பாடுனவங்க எல்லோரும் புதுசு.. கரகாட்டத்துல பாடுறவங்களையே பாடவச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். இடை இடையே வர்ற விசில் சத்தமும் வசனங்களும் பாட்டுக்கு இன்னும் உயிரூட்டுவதாகவே இருக்கு.

ஊரோரம் புளியமரம் - பாண்டி, லக்ஷ்மி, ராஜா, கலா

இதுவும் போன பாட்டு மாதிரியே தான். விஜயலக்க்ஷி நவனீதகிருஷ்ணன் பாட்டோட ஆரம்பிச்சு..அப்படியே கரகாட்ட மெட்டுக்கு அழகா உங்களை கூட்டிட்டு போயிருப்பார் யுவன்கரகாட்டதுல எந்த அளவுக்கு இரட்டை அர்த்த வசங்கள் இருக்கும்னு நேர்லயே பாத்து இருக்கிறேன்.. போன பாட்டுலையும் இதுலையும் கரகாட்டதோட இணைப்பு ரொம்ப இருக்கு.. இந்த ரெண்டு பாட்டு எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்குமான்னு நினைக்கிறேன்..

பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கு. ஆன ஆஹோ, ஓஹோன்னு சொல்ல முடியாது.. யுவன் இன்னும் நல்லாவே போட்டிருக்கலாம்னு நினைக்கிறேன்.. ஆனா முதல் கிராமத்து படங்குறத வச்சு பாத்த நல்ல முயற்சி நல்ல பாடல்கள்னு தான் நான் சொல்வேன்.. ஆனா ஒவ்வொரும் பாட்டுலையும் அந்த மண்ணோட வாசம் வர்ற மாதிரி அமைச்சிருக்கிறது பாட்டுகளுக்கு பலம். ஆனா கிராமத்து வாத்தியங்கள் உறுமி, தப்பு போன்றவைகள் ரொம்ப பயன்படுத்தலையோன்னு ஒரு குறை இருக்கத்தான் செய்யுது..

ஆனா கொஞ்ச நாள் நீங்க எந்த கிராமத்துக்குள்ளயும் நுழைஞ்சா இந்த பாடல்களை கேக்கலாம்னு நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைகிறீங்க..கேட்டுட்டு சொல்லுங்க..

(நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.. அது தான் மேட்டர்..அத மனசுல வச்சுத்தான் இந்த விமர்சனம் எழுதி இருக்கேன்)

Wednesday, November 15, 2006

எழுதுறது இப்போ போதையாயிடுச்சு...

இன்னிக்கு எதுவும் பதிவு எழுதற மாதிரி இல்லை.. என்னடா இவன் ஒரு நாளுக்கு ரெண்டு பதிவு எழுதுறனேன்னு படிக்கும் நண்பர்களே ஸ்பீடை குறைக்க சொல்லிட்டாங்க.. அவங்க சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்குல்ல.. ஆனா என்ன பண்றது.. நம்ம கண்ணுல ஒரு செய்தியை பாத்தா உங்க கிட்ட சொல்லாம இருக்க முடியல..

பருத்திவீரன் பாடல்கள் கேட்டுகிட்டு இருக்கேன்.. எல்லாம் மண் வாசனை பாடல்கள்.. எங்க ஊர் திருவிழாவும் அப்போ ஆடுற கரகாட்டமும் தான் ஞாபகம் வருது.. யுவன் நன்றாக இசையமைத்து உள்ளார்.. முதல் முழு கிராமிய படம் இவருக்கு.. கிழக்கு சீமையிலே ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் கிராமிய படம்.. அதில் அவர் கிராம மணம் காட்டியதை விட இதில் யுவன் பின்னி இருப்பதை போலத் தெரியுது..

படப் பாடல்களின் விமர்சனம் நாளை.. நாளைக்கு இந்த விமர்சனம் மட்டும் இல்ல.. இப்படி எழுதுறதுல கிடைச்ச இரு நட்புகள் பற்றியும் சேதி உண்டு..

என்னடா ஒண்ணும் எழுதமாட்டேன் சொல்லிட்டு இவ்ளோ எழுதுறானேன்னு பாக்குறீங்களா.. என்னங்க பண்றது.. எழுதுறது இப்போ போதையாயிடுச்சு...

Tuesday, November 14, 2006

எழுதல..கொலை தான்.. போடு அந்த மூன்றை

என் முத்தான மூணு தொடரை எழுதல, மகனேன்னு மிரட்டல் விட்டு அம்பி எழுத சொன்ன தொடர் பதிவு இது..

பிடிச்ச வாசனைகள் மூணு...

1. மல்லிகை பூ ஏறின கூந்தல் வாசனை (எப்படி உனக்கு தெரியும்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது)
2. பெட்டி, பீரோவுல துணிகளுக்கு போடுற அந்துருண்டை வாசனை
3. ரொம்ப நாள் கழிச்சு பெய்த மழைல நனைந்த மண் வாசனை

பிடிக்காத வாசனைகள் மூணு...

1. நல்லதாய் இருந்தாலும் குமட்டிகிட்டு வர்ற வேப்ப எண்ணெய் வாசனை
2. ஈரம் போகாம ரொம்ப நாள் இருந்த துணியோட வாசனை
3. அட..நம்ம சென்னைல ஓனிக்ஸ் வண்டி போறப்ப வர்ற வாசனை

பார்த்த வேலைகள் மூணு

1. எங்க கடையில சின்ன வயசுல இருந்து இப்போ போனாலும் பாக்குற வேலை
2. முதன் முதலா சென்னையில் நான் பார்த்த மென்பொருள் வேலை
3. அண்ணன் கூட சேர்ந்து பார்த்த மருவு (மரிக்கொழுந்து மாதிரி பூக்களிடையே வச்சு கட்டுற ஒரு வாசனை இலைகள்) வியாபாரம்

மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூணு

1. பாட்ஷா (எத்தனை தடவை பாத்திருப்பேன் இந்த படத்தை)
2. ஆயிரத்தில் ஒருவன் (சின்ன வயசுல என் ஊர்ல தெருவுல திரை கட்டினப்போ பாத்ததிலிருந்து இன்னிக்கு வரைக்கும் கிட்டதட்ட இருபதுக்கும் மேல)
3. கோகுலத்தில் சீதை (காதல் கோட்டைக்கு பிறகு அகத்தியன் 1996 தீபாவளிக்கு எடுத்த படம்.. கார்த்திக் அசத்தின படம்.. கம்பி மேல நடக்குற மாதிரியா பாத்திரம்னு ஆனந்த விகடன் விமர்சனத்துல பாராட்டின படம்.. அப்பவே ஏழு தடவைக்கு மேல..ஒவ்வொரு தடவையும் படத்துல புதுசா ஏதாவது மேட்டர் இருக்கும்)

மறக்க முடியாத நினைவுகள் மூணு

1. கொடைக்கானல் போகும் வழியில் ஊத்தை தாண்டி பண்ணைக்காடு பிரிவில் இருக்கும் விவேகானந்தா பள்ளியில் ஆறாவது நான் படித்த அந்த ஒற்றை வருடம்.
2. மதுரை தியாகராஜர் கல்லூரியில் நான் படித்த இளநிலை படிப்பு BSc (Applied Sciences)
3. கிட்டதட்ட இருபத்திரண்டு வருடமாய் இருந்த கூரைவீட்டு வாழ்க்கை

பார்க்க விரும்பும் வேலை மூணு

1. எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவராகி எங்கள் ஊரில் எல்லாவற்றையும் கொண்டு வந்து சிறந்த ஊராக்க வேண்டும் (அதுக்கு.. பஞ்சாயத்து தலைவராகனுமான்னு கேக்காதீங்க.. அப்படி இருந்த ரொம்ப நல்ல ஊருக்கு பண்ணலாம்)
2. ஒரு நல்ல எழுத்தாளராக வேண்டும்
3. ஒரு படத்தையாவது இயக்க வேண்டும். எந்த ஆபாச அக்கிரமக் காட்சிகள் இல்லாமல் எடுக்க வேண்டும். (சிரிக்காதீங்க)

செய்ய விரும்பும் செயல்கள் மூணு

1. நிறைய மரம், செடிகளை நடுவது.. ஒரு நாளுக்கு ஒண்ணாவது..
2. வயல்ல நின்னு அந்த சுகந்த காத்தை சுவாசிப்பது
3. கையில் புத்தகத்தோடு என் வீடு தோட்டத்தில்

சாப்பிட விரும்பும் உணவு மூணு

1. அம்மா கையால செஞ்ச எல்லாமும்
2. கெட்டித் தயிரும் நெய் கருவாடும்
3. திருவிழா சமயத்துல வெட்டுற கிடாக்கறி குழம்பு

இப்போ இருக்க விரும்பும் இடங்கள் மூணு

1. என் கிராமம் அ. வெள்ளோடு
2. பழநி ஆண்டவர் சன்னதி
3. எத்தனை முறை போனாலும் சலிக்காத கொடைக்கானல்

என்னை அழ வைத்த மூணு விஷயங்கள்

1. எல்லாம் கற்றுக்கொடுத்த என் தாத்தா, ஐயா, கூடவே ஆடி, சுற்றி போனவருடம் நெஞ்சுவலியால் இறந்து போன என் நண்பன் செல்வின் - மூணு பேரும் இறந்த செய்தி கேட்ட அந்த நிமிடங்கள்
2. முதன் முதலாய் மதுரை ரேடியோவில் இளையபாரதம் நிகழ்ச்சியில் கவிதை நான் படித்த அந்த நிமிடங்கள் (ஆனந்த கண்ணீர்பா)
3. அமெரிக்காவுக்கு கிளம்பி வரும்போது என் தாய், தந்தை அழுததை பார்த்து நானும் அழுத அந்த தருணங்கள்...

சரி... இந்த வம்புல
1. தோழி வேதா
2. தோழி பிரியா
3. தலைவி கீதா (ம்ம்..தப்பிக்கமுடியாது) மூணு பேரையும் மாட்டிவிடுறேன்.. இன்னும் மூணு நாள்ல இந்த பதிவை போடல.. அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க..

அம்பி..உங்க தொடரை போடணும் போடணும் தான் நினைச்சேன்.. நேரம் போதாததால கொஞ்சம் தாமதமாகிவிட்டது.. அதுக்கு இப்படி மிரட்டலாமா.. இப்போ சந்தோசமா.. எங்கே ஒன்று..இரண்டு..மூண்ரு என கமெண்ட் போடுங்க பாக்கலாம்.. நண்பர்களே.. இந்த பதிவே மூணுனால கமென்ட்டையும் மூணா போடுங்க

அப்துல்கலாமுக்கு போட்டியா ரஜினிகாந்தா?



தென்மாநிலங்கள் உருவாகி ஐம்பது வருஷம் ஆகிவிட்டது.. அதை CNN-IBN, "தங்கமான தெற்கு" ங்குற பேர்ல கொண்டாட முடிவு செஞ்சிருக்குங்க.. ஒவ்வொரு துறையிலும் ஒரு ஆள தேர்ந்தெடுத்து, தேர்தல் வச்சிருக்காங்க.. இந்த தேர்தல் இன்னும் ஏழு நாளைக்கு மட்டும் தான் இருக்கும்.

இந்த வலை வாக்கு சீட்ல இருக்கவங்களோட பேர் பட்டியல் (இதுவரை, அவங்க வாங்கின ஓட்டுக்கள், அடைப்புக்குறிக்குள்)

ஜனாதிபதி அப்துல் கலாம் (36.63%)
நடிகர் ரஜினிகாந்த் (30%)
இசைஞானி இளையராஜா (13.46%)
எம்.எஸ். சுப்புலக்க்ஷ்மி (9.21%)
தந்தை பெரியார் (8.27%)
விஸ்வநாதன் ஆனந்த் (2.43%)

இதுல ரஜினியை வச்சாங்கன்னு தெரில.. சினிமாக்காகன்னா அப்போ கமல் பேர் தான் இருக்கணும்.. கட்டாயம் ரஜினி பேர் கிடையாது.. ஒரு பலத்த போட்டி இருக்கனும்னா இன்னும் நல்லாவே ஆட்களை போட்டிருக்கலாம். இருக்கிறவங்கள்ல அப்துல் கலாமுக்கும் ரஜினிக்கும் தான் போட்டி.. அப்துல் கலாமை விட ரஜினி முதல் இடதுக்கு வந்தா அதை விட தமிழனுக்கு அவமானம் இல்ல.. என்ன தான் நான் ரஜினி ரசிகன் என்றாலும், இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கண்மூடித்தனமா ஆதரிக்க முடியாது. அதுவும் இல்லாம.. மேல இருக்கவங்கள்ல ரஜினியை தவிர, எல்லோரும் தமிழ்நாட்டுல பிறந்தவங்க.. ரஜினிக்கு பதில கமல் பேரு இருந்திருந்தா ரொம்ப பொருத்தமா இருக்கும். ரஜினி பேரை இதில் வைத்த CNN-IBN குழுவை வன்மையா கண்டிக்கிறேன்.



இது மட்டுமில்லாம, பிரபலமான தமிழனை தேர்ந்தெடுங்கள் என்று ஒரு விளம்பரம் வேற..

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க.. சரி முதல்ல இங்க போய் உங்க ஓட்டை போட்டு தமிழ்நாட்டோட மானத்தை காப்பாத்துங்க. கூடவே முடிஞ்சா Post Comments பகுதில ரஜினி பேரை போட்டதுக்கு உங்க எதிர்ப்பையும் சொல்லுங்க நண்பர்களே..

அப்புறம் ஒரு சந்தோசமான சமாச்சாரம்..

உங்க எல்லோருடைய ஆதரவால அதிகமா பார்க்கப்படுற வலைபூக்கள்ல இதுவும் முதல் பத்துல
ஒண்ணா வந்திருக்கு..

எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் நண்பர்களே

Monday, November 13, 2006

கத்திப்பாரா பாலம் வரைபடம்..பார்க்க..ரசிக்க..சிரிக்க


இது கிண்டி கத்திப்பாரா சந்திப்புல வரப்போற பாலத்தோட வரைப்படம்.. கருணாநிதிக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் இது கனவுத் திட்டமான்னு தெரியாது.. ஆனா தினமும் வடபழனிக்கும் அம்பத்தூருக்கும் D70-இல் போய் அல்லாடிய எத்தனையோ பயணிகள்ல நானும் ஒருவன்ங்கிறதால..இந்த பாலம் சில நிமிஷ பயணத்தை குறைக்கும்ங்கிறதால..இவ்வகை பாலம் தமிழ்நாட்டுல இது தான் முதல் (திண்டிவனத்துல இருக்கிறது வேறு மாதிரி) என்பதால.. ஒரு எதிர்ப்பார்ப்போட பாத்துகிட்டு இருக்கேன்.

இதை அனுப்பிவைத்த என் அலுவல் தம்பி ஜெரினுக்கு நன்றி..

எழுதியோ சொல்லியோ வராதா சிரிப்பை ஒரு படம் தந்திடும்.. அந்த மாதிரி படங்கள் தான் இங்கே உங்களை புன்னகைக்கவோ..சிரிக்கவோ வைக்க.. இந்த மாதிரி படங்கள் சில சமயம் தினத்தந்தியோட முதல் பக்கத்துல வரும்.. இந்த சிரிப்புக்கு வசனம் தேவை இல்லைன்னு..












இந்த சிரிப்பு சிறப்பு படங்களை அனுப்பி வைத்த இன்னொரு அலுவல் தம்பி மகேஷுக்கு நன்றி.

நிறைய வேலைனால ரொம்ப எழுத முடியல அது தான்..ஹிஹிஹி..

Sunday, November 12, 2006

ராவணன் வேஷத்தில் ரஜினிகாந்த்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 14

தமிழ் மக்கள் நாலு பேர் கூடிட்டாலே அவங்க பேசுறதுல கொஞ்சம் சினிமா இல்லாம இருக்காது.. அந்த அளவுக்கு சினிமா தமிழன் வாழ்வுல ஒரு விஷயமாகிடுச்சு.. எந்த வார, மாத புத்தகமா இருந்தாலும் சினிமாக்குன்னு சில பக்கங்கள் இல்லாம இருக்காது.. ஏன்னா சினிமா விஷயம் இருந்தால் தான் அந்த புத்தகமே முழுமையடையுது.. இது மட்டுமில்லாமல், சினிமா பத்திரிக்கைனே தனியா பல புத்தகங்கள் இருக்கு.. அதுலையும்.. நடிகர்களுக்குன்னு தனி புத்தகங்கள் வேறு இருக்கு.. பத்திரிக்கை மட்டுமில்லை..டிவிக்களும் தான்.. என்னிக்காவது ஒரு நாள் சினிமா நிகழ்ச்சி இல்லாம எந்த நிகழ்ச்சியாவது இருக்கா.. சுதந்திர தினம்னாலும் சினிமா ஆளுக தான் வந்து வாழ்த்து சொல்வாங்க.. பொங்கல்னாலும் அவங்க தான் வருவாங்க..

இப்படி இருக்கப்போ நாம மட்டும் விதி விலக்கா என்ன (ஏன் நம்ம பதிவுகள்ல சினிமா விஷயம் அதிகமா இருக்குன்னு நான் நினச்சப்போ வந்த சிந்தனைகள் (?).. இதே கேள்வி.. தலைவி கீதாவுக்கு வந்த மாதிரி உங்களுக்கும் வரலாம்ல..அது தான் இப்படி ஒரு தொடக்கம்)அதுவும் இல்லாம போன்ல எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு இந்த சிட்டுகுருவி எஸ்கேப் ஆகிடுச்சு..

ஒரு NRI ITA Films-ங்கிற பேனர்ல தயாரிக்கிற ராமேஸ்வரம்ங்கிற படத்துல முதன் முறையா ஜீவாவும் பாவனாவும் ஜோடி சேர்றாங்க.. படத்தை செல்வம் அப்படிங்கிற புது இயக்குநர் டைரக்ட் பண்றார். யுவன் இசை அமைக்கிற இந்த படத்தோட ஷூட்டிங் ஜனவரி 2007-இல் இருந்து ஆரம்பிக்குது.

ஆழ்வாருக்கு பிறகு அஜித் நடிக்கும் கிரீடம் படத்தோட பேர் மலையாளப் பேர் மாதிரி இருக்குறதால தமிழக அரசு வரி விலக்கு தருவாங்களோ அப்படின்னு படத்துக்கு மகுடம் பேர் வச்சிருக்காங்க.. ஆந்திராவில் டிசம்பர் முதல் வாரத்தில இருந்து படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்குது. ஆரம்பித்தில் யுவன் இசையமைப்பார் அப்படின்னு சொல்லப்பட்டது.. ஆனா இப்போ வெயில் படத்தோட இசையமைபாளர் G.V. பிரகாஷ் அந்த வேலையை செய்றார். திரிஷா அஜித் ஜோடியா ஆட்டம் போடுறார்.. ஆனா ஒரு பத்து வருஷதுக்கு முன்னாடி மகுடம்-ங்கிற படத்துல சத்யராஜ் நடிச்சிருக்கார். அதனால் பேரை மறுபடியும் மாத்துவதற்கான சாத்தியம் உண்டு. பார்ப்போம்.




உன்னை நினைத்து, பிரியமான தோழி படங்கள் சரியாக ஓடாததால் டைரக்டர் விக்ரமன் கொஞ்ச நாள் எந்த படமும் எடுக்காமல் இருந்தார். இப்பொழுது பரத், பாய்ஸ் ஜெனிலியா, இருவரையும் ஜோடியாக வைத்து சென்னைக் காதல் என்ற சிட்டியில் நடக்கும் ஒரு காதல் கதையை படமாக்கி வருகிறார். இந்த படத்தின் ஹைலைட்டான விஷயமே பரத்தும், ஜெனிலியாவும் உண்மையிலே காதல் வலையில் விழுந்துவிட்டனர் என்பது தான்.

ஆந்திராவை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவர் தனக்கும் ஸ்ரீதேவிக்கும் 1991-இல் கல்யாணம் நடந்தது என்றும், இப்போது சேர்ந்து வாழ விரும்புவதாக ஐகோர்ட்டில் ஒரு கேஸ் போட்டர். ஆனா அதை நீதிமன்றம் நிராகித்தது.

ஹிந்தியில் பெரிய அளவில் எடுக்கப்போகும் ராமாயணம் படத்தில் ராவணன் வேஷத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க போவதாக வந்த செய்தியை இப்போது ரஜினி தரப்பு மறுத்துவிட்டது. இதே மாதிரி மஹாபாரதம் திரைப்படத்தில் அஜித் சகுனியாக நடிக்கப்போவதாக ஒரு புரளியும் சுத்திகொண்டு இருக்கிறது.

இப்போதைக்கு இதுதான் சிட்டுக்குருவி சொன்ன சினிமா செய்திகள்.. அடுத்து சிட்டுக்குருவியோட பார்ப்போம்.

Saturday, November 11, 2006

மும்தாஜும் முந்திரிக்கொட்டையும்

பள்ளி வாழ்க்கையே ஒரு சொர்க்க வாழ்க்கை. அதுவும் எனக்கு அமைந்த நண்பர் கூட்டமும் அப்படி.. கூட்டமாய் சேர்ந்து கும்மி அடிக்கிறதில் ஒரு ஆனந்தமே உண்டு.. நான் என் ஊரில் இருந்து பஸ்ஸில் வந்து செல்வதால்..திண்டுக்கலில் இருந்து வர்ற நண்பர் கூட்டமும் உண்டு.. இவர்களுடன் சேர்ந்து கபடி விளையாண்டாலும் சரி, கால்பந்து விளையாண்டாலும் சரி.. பொழுதுபோறதே தெரியாது..

அப்படி இருக்க நண்பர் கூட்டத்தில் வேலுமணி ஒரு ஆள்.. இவன் தான் நான் சிஎம் உரை ஆற்றிக்கொண்டிருந்தப்போ எனக்கு சோடா கொடுத்து வகுப்பை விட்டு வெளில போனவன். இன்னமும் உரிமையோடு எதுனாலும் சண்டை போடுபவன். அப்போ நாங்கள் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த டீச்சர் பேரு.. பேரு.. ம்ஹிம்.. பேரு ஞாபகம் இல்ல.. ஏன்னா அவங்களை நாங்க குருவின்னு தான் சொல்வோம்.. ஏன் அந்த பேர்ன்னு இன்று வரை தெரியாது.. ஆனா எங்களுக்கு முன்னாடி இருந்தவங்க அப்படித்தான் கூப்பிட்டாங்க.. நாங்க அப்படித்தான் அழைத்தோம்.. எனக்கு பின்னாடி வந்தவங்களும் அப்படியே.. எனக்கு தெரிஞ்சு டீச்சர்களுக்கு வைக்கிற பேர் தான் உலகத்துல விஷேசமான பேரா இருக்கும்.. இதை விட நான் எம்.சி.ஏ மதுரைல தியாகராஜர் காலேஜ்ல படிச்சப்போ, திருப்பூர்ல இருந்து சதீஷ்ன்னு ஒரு ஜூனியர் வந்தான்.. என்னை சின்ன வயசுல இருந்து கெண்டின்னு தான் கூப்பிடுவாங்க.. நீங்களும் அது மாதிரியே கூப்பிடுங்க அப்படின்னான்.. அதிசயமா இருந்தது.. பட்டப்பேரை சொல்லி இப்படியே கூப்பிடுங்கன்னு சொல்றானேன்னு..ஏன் அந்த பேருன்னு கேட்டதுக்கு..அவன் கண்ணாடி போட்டிருப்பான்.. அதனால அவனை ஸ்கூல்ல எல்லோரும் கண்ணாடி கண்ணாடின்னு கூப்பிட ஆரம்பிச்சு, அது அப்படியே மருவி கெண்டின்னு ஆயிடுச்சுன்னு சொன்னான்.. ஆனா பெரும்பாலும் நான் அவனை சதீஷ்னு தான் கூப்பிடுவேன்.. ரொம்ப நேரம் சதீஷ்ன்னு கூப்பிட்டு திரும்பலைனா, வேறு வழி இல்லாம கெண்டின்னு கூப்பிடுவேன்..

பெரும்பாலும் இந்த பட்டப்பேரே பலபேருக்கும் நிரந்தரமாயிடும்.. சொந்த பேரை சொல்லி ஒருத்தரை யாருக்காவது ஞாபகம் வரலைனா இந்த பட்டப்பேர் தான் உதவும்.. இன்னமும் என் கூட ஹாஸ்ட்டலில் தங்கியிருந்த பல பி.இ நன்பர்களுக்கும் கார்த்தின்னா ஞாபகம் வராது.. கடலை கார்த்தினாத் தான் ஞாபகம் இருக்கும்.. என் ஸ்கூல் ஜூனியர் பையன் ஒருத்தவனுக்கு எயிட்ஸ்னு தான் பேர். காரணம் என்னன்னு தெரியாது..இன்னமும் வில்சன் அவனை அப்படித்தான் கூப்பிடுவான்.. என் பள்ளில டபுள் எம்.ஏ முடிச்ச ஒரு வாத்திக்கு மாமா தான் பேரே.. இப்போ அவர் தலைமை ஆசிரியர்.. ஆனாலும் படிக்கிற பசங்களுக்குள்ள அவருக்கு அது தான் பேர்.. நான் பனிரெண்டாம் வகுப்பு படிச்சுமுடிச்சு பத்து வருசமாச்சு.. இன்னமும் அவருக்கு அது தான் அடையாளப் பேர்.

அப்படி எங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த குருவி (குருவே, மன்னிக்கவும்) டீச்சர், ஒரு நாள் கட்டுரை பரீட்சை வச்சாங்க.. ரெண்டு கட்டுரை எழுதணும். எல்லோரும் இடம்விட்டு இடம்விட்டு உக்கார்ந்து தான் பரீட்சை எழுதணும். அதனால பெரும்பாலும் தென்னந்தோப்புல தான் உக்காரச் சொல்வாங்க. என் நண்பன் வேலுமணி இருக்கானே..பிட் அடிக்கிறதுல பலே கில்லாடி. நமக்கு இதெல்லாம் பெரிய அலர்ஜி.. செஞ்சு பாக்கலாமேன்னு கூட செஞ்சதில்ல.. ஆனா அன்னிக்கு என்னடான்னா ஒரு பஸ் டிக்கட் பின்னாடி ரெண்டு ஆங்கில கட்டுரையையும் பிட் எழுதி இருந்தான். ஒரு பஸ் டிக்கட் பின்னாடி ரெண்டு திருக்குறள் எழுதுறதே பெரிய விஷயம். ஆனா அதுல அவன் 200 சொற்கள் கொண்ட ரெண்டு கட்டுரையையும் எழுதி இருந்தான்.. இப்போ நினச்சாலும் அது அதிசயமா இருக்கும்.. அதை பாத்து பரீட்சையும் எழுதி முடிச்சுட்டான். அவன் பண்ண தப்பு, அந்த பஸ் டிக்கட்டை பரீட்சைக்கு முன்னாடி, எழுதின பேப்பர் வாங்குற நேரம் வரைக்கும், சும்மா இருந்த நேரத்துல அவனுக்கு முன்னாடி ஒரு சின்ன குழியை தோண்டி அதுல புதைச்சுட்டான். குருவி டீச்சருக்கு தெரியும் பசங்களைப் பத்தி.. அதனால எல்லோரும் எழுதின பின்னாடி அப்படியே நாங்க பரீட்சை எழுதின இடத்துக்கு போய் ஒரு ரவுண்ட்ஸ் விட்டாங்க.. என்னடா இங்க மட்டும் மண்ணு தோண்டி கிடக்கேன்னு, அவங்க மறுபடியும் தோண்டினாங்க.. அவங்களுக்குன்னா ஆச்சர்யம்.. எப்படி இந்த பசங்க இவ்வளவு சின்ன இடத்துல ரெண்டு கட்டுரையை எழுதினாங்கன்னு.. என்னன்னமோ சொல்லி கேட்டுப்பாத்தாங்க..ம்ஹிம்.. பசங்க யாரும் யாரை சொல்லல.. கடைசி வரைக்கும் யார் அந்த ஆள்னு அவங்களுக்கு தெரியாது. ஆனா ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒண்ணுன்னா அந்த சம்பவத்தை தான் சொல்வாங்க..

என்னடா இப்படியொரு தலைப்பை வைத்துவிட்டு அதை பத்தி ஒண்ணுமே இல்லியேன்னு யோசிக்கிறீங்க.. சரியா.. காதல் தேசம் மற்றும் அமரன் படத்துல முஸ்தபான்னு ஒரு பாட்டு வருமே.. படம் முழுவதும் அப்படியோரு ஆளே இருக்க மாட்டான்.. அது மாதிரி தான் இதுவும்.. அங்க முஸ்தபா.. இங்க மும்தாஜ்.. அவ்ளோ தான் வித்தியாசம்.. அப்புறம் அந்த முந்திரிக்கொட்டை ஏன்னு நினைக்கிறீங்க..அதுவும் வேற ஒண்ணும் இல்ல.. எதையும் யோசிக்காம இப்படி ஒரு தலைப்பு வைத்த நான் ஒரு முந்திரிக்கொட்டை.. காரணம் ஓகேவா..

Thursday, November 09, 2006

செவ்வந்தி தோட்டத்தில இன்னைக்கு சூட்டிங்காம்

வி.எம்..நம்ம ஊர் கலிக்கம்பட்டியாரோட செவ்வந்தி தோட்டத்தில இன்னைக்கு சூட்டிங்காம்.. ஊரே அங்க தான் போயிகிட்டு இருக்கு.. நீ மட்டும் என்ன பண்ற.. வா வி.எம் போகலாம்.. சைக்கிள்ல வந்து கூப்பிட்டான் நண்பன் வில்ஸன். அப்புறம் பள்ளிக்கு நேரமானதால அப்படியே நேரா ஸ்கூல்லுக்கு கிளம்பியாச்சு.. ஸ்கூல்ல இருந்து வர்றப்போ அப்படியே போகலாம்னு ஒரு பிளான்.

அட.. எனக்கு ஏன் வி.எம் னு பேர் வந்ததுன்னு சொல்லவே இல்லியே.. ஏற்கனவே அதபத்தி சொல்றேன்னு சொல்லியும் சொல்லவே இல்ல.. அந்த காரணத்தையும் இப்பவே சொல்லிடுறேன்.. நான் ஓன்பதாவது தம்பித்தோட்டத்தில படிச்சுகிட்டு இருந்தப்போ, எம். கார்த்தின்னு ஒருத்தன் வந்து சேர்ந்தான். ரெண்டு பேருக்கும் ஒரே இனிஷியல்..ஒரே பேர்.. டீச்சர், ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னொரு இனிஷியலை முன்னாடி வச்சிக்கோங்க..அதுக்கு அவங்க அவங்க அப்பாக்கிட்ட கேட்டுட்டு வாங்க.. அப்படின்னு டீச்சர் சொன்னாங்க.. சரின்னு போயி அப்பாகிட்ட கேட்டா, அப்பா வி.ன்னு சேர்த்துக்க அப்படின்னு சொன்னாங்க.. கிராமத்துல ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீட்டு பேர் இருக்கும். அது மாதிரி எங்களுக்கு வேம்ப வீடுன்னு பேர்.. எங்க குல தெய்வம் வேம்ப கருப்பண்ணசாமி.. அதனால அந்த பேர். அதனால தான் அந்த எக்ஸ்ட்ரா இனிஷியல் வி.. என் ஊரு பேரும் வெள்ளோடுங்குறதால அதுக்கும் பொதுவா அந்த இனிஷியல் அமைஞ்சு போச்சு.. அதுக்கு பிறகு எங்க ஸ்கூல்ல எல்லோருக்கும் வி.எம் னாத் தான் தெரியும்..

சரி, விஷயத்துக்கு வருவோம். அன்னிக்கு ஸ்கூல் முழுவதும் யாரப் பாத்தாலும் இதே பேச்சு தான்.. ஏய்.. சரத்குமார் நடிக்கிற மகுடிக்காரன் சூட்டிங் எங்க ஊர்ல நடக்குதே.. சூப்பரா ஒரு பொண்ணு வேற வந்திருக்காம் செகண்ட் ஹீரோயினான்னு ஒரே தம்பட்டம் தான்.. அன்னிக்கு கடைசி பீரியடு எனக்கு பி.டி பிரீயட்.. வில்சனுக்கும் விவசாய பிரீயட். என்னது விவசாய பிரீயடா ன்னு யோசிக்காதீங்க.. என் ஸ்கூல்லே ஒரு தென்னந்தோப்புக்கு நடுவுல தான் இருக்கும். அது தான் பள்ளிக்கு தம்பித்தோட்டம்னு பேரு.. அதுக்கு நடுவுல பெரிய சதுர வடிவ தொட்டி ஒண்ணு மூடி இருக்கும்.. நாங்க சாப்பிடறது, பி.டி பிரீயட் போயிட்டு வந்தா முகம் கை கால் கழுவுறதுன்னு எல்லாம் அங்கே தான். அங்கே இருந்து வாளில தண்ணிய பிடிச்சுட்டு போய், ஸ்கூல சுத்தி இருக்க எல்லா செடிக்கும் ஊத்தணும்.. ஒரு ஆள் பத்து வாளி தண்ணி சுமக்கனும்..

வில்சனும் விவசாய பிரீடியக்கு மட்டத்தை போட்டுட்டு ரெண்டு பேரும் சைக்கிள்ல ஒரே மிதி தான்.. சூட்டிங் நடக்குற இடத்துக்கு பறந்தோம்.. நாங்க போன சமயம் எல்லோரும் ஈவினிங் டிபன் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க.. சரத்துக்கு 'நல்லெண்ணெய்' சித்ரா தான் ஹிரோயின்.. அவங்க ஒரு தென்னைமரத்துக்கு முன்னாடி உக்கார்ந்து தென்னமட்டையில இருந்து விளக்குமாறு செய்ற மாதிரி ஒரு சீன்.. அப்போ அவங்க மகள் தான் அந்த ரெண்டாவது ஹிரோயின் போல.. அந்த பொண்ணு சித்ரா கிட்ட ஒரு சொம்பு தண்ணிய கொடுத்துட்டு வர்றப்போ, இடையில வில்லன் வந்து ஏதோ மிரட்டனும்.. நாங்க அங்க இருந்த அரைமணி நேரமா இதே சீன் தான் எடுத்தாங்க.. நானும் வில்சனும் கேமராவுக்கு பின்னால நின்னுகிட்டு இருந்தோம்..

அந்த கேமராவை பிடிச்சிகிட்டு இருந்தவர் (ஒளிப்பதிவாளர்னு நினைக்கிறேன்) அந்த செகண்ட் ஹிரோயினை பத்தி எப்பப்பாத்தாலும் காது கூசும் படியான மட்டமான வர்ணணைகள்.. இப்படித்தான் சினிமா உலகம் இருக்குமோன்னு ஒரு இமேஜ் அப்பவே உருவாகிடுச்சு.. மகுடிக்காரன்ங்கிற அந்தப் படம் திண்டுக்கல்லயும் ரிலீஸ் ஆகி ஒரு நாலு நாள் தான் ஓடுச்சுன்னு நினைக்கிறேன்..

அதுக்கப்புறம் நான் ஒரு நாள் எங்க கடையை கவனிச்சுகிட்டு இருந்தப்போ, ஒரு பெரியவர் ஏதோ அரட்டைல சொன்னார்.. ஏற்கனவே சுதாகரன் (கிழக்கே போகும் ரயில் ஹீரோ) நடிச்ச குருவிக்கூடுன்னு ஒரு படமும் எங்க ஊர்ல தான் எடுத்தாங்களாம்.. எங்க ஊர்ல எந்தப் படம் எடுத்தாலும் அது ஓடாதாம்.. அது எங்க ஊர் ராசியாம்.. அதுக்கப்புறம் ரஞ்சித்தை ஹீரோவா போட்டு சிந்து நதிப் பூன்னு ஒரு படம் எடுத்தாங்க..பாட்டெல்லாம் கொஞ்சம் நல்லா இருக்கும்..ஹிம்..அந்த பெரியவர் சொன்ன மாதிரி அதுவும் ஓடல.. எப்பவும் சென்டிமெண்ட் பாக்குற சினிமாக்காரவங்க அதுக்கப்புறம் எங்க ஊருக்கு வந்ததே இல்லை..

(பக்கத்துல சின்னாளப்பட்டியை சுத்தி எடுத்த ஆட்டோகிராப், சண்டகோழி எல்லாம் ஹிட்டானது.. நல்ல வேலை எங்க ஊர்ல எடுக்கலைனு நான் நினைச்சுகிட்டேன்)

Wednesday, November 08, 2006

எங்கே வேணா போகலாம்.. யுஸ் மாதிரி நமக்கும் மேப் வந்தாச்சு

பெங்களூர்ல இருந்து இனிமே அம்பி எங்கேயாவது கார்ல போகனும்ணா எப்படிபோறதுன்னு யார்கிட்டயும் போய் கேக்கவேண்டியதில்ல.. கீதா மேடம், வேதாஎல்லாம் டூர் போறாங்கன்னா டிரைவருக்கே இப்படிப் போன்னு வழி சொல்லலாம். எப்படி? சொல்றேன்.. சொல்றேன்..

இங்கே யுஸ்ல எங்க போறதுனாலும் வாடகை கார் தான்.. ஆபீஸ் உபயத்துல போற எல்லா ஊருக்கும், கூகிள் மேப்ஸ் இல்லைனா மேப்குவஸ்ட்ல புண்ணியத்துல, நாம கிளம்புற, சேர்ற அட்ரஸ் கொடுத்தா, முழு வழியையும் சொல்லிடும். அதுல போட்டு இருக்க மாதிரியே போனாப்போதும்.. யுஸ்ஸையே சுத்தி வரலாம். இதெல்லாம் இந்தியாவுல நடக்க எப்படியும் ஒரு பத்து வருஷம் ஆகும்.. அப்படியே ஆனாலும் அட்ரஸ் கொடுத்து போறதெல்லாம் வேப்பமரத்தடில படுத்து கனவு கண்டுக்கவேண்டியது தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இன்னும் ஒரு வருஷத்துல நீங்க இதே விஷயங்களை இந்தியாவுலையும் பண்ணலாம். அட.. ஏன் உங்களையே கிள்ளி பாத்துக்குறீங்க.. உண்மைதாங்க.. இப்போ ஒரு 60% அந்த வேலையை முடிச்சிருக்காங்க.. இந்த வலைதளதுக்கு போயி உங்க ஊரத் தேடுங்க. கட்டாயம் கிடைக்கும். அட.. மாவட்ட மேப்பிலயே புள்ளி அளவுக்கு இருக்க என் ஊரே தெரியுதுப்பா.. அதைப்பாத்தவுடனே எவ்ளோ சந்தோசம் தெரியுமா எனக்கு.. அட நெடுஞ்சாலை எல்லாம் அதோட நம்பரோட வருதுங்க.. NH-7, NH-45 அப்படின்னு பட்டாசை கிளப்புறாங்க.. எல்லாம் யுஸ்ல எப்படிப் பார்ப்போமோ அது மாதிரியே வருதுங்க..



இந்த வலைதளத்துல நீங்க பதிவு (இலவசம் தான்)செஞ்சீங்கன்னா உங்களுக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சா அவங்க கிட்டசொல்லலாம். நீங்களும் ஏதாவது ஊரையும் புதிய வழித்தடத்தையும் வரையலாம். ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கு. என்ன இப்போதைக்கு பக்கத்துலஇருக்க பொரிகடலை கடைக்கு எப்படி போறதுன்னு வழி சொல்லாது. ஆனா சீக்கிரம் வந்திடும். இங்கே போயி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே.. இப்ப நீங்க அட்ரஸ் கூட கொடுத்து தேடலாம்.

ஆனா என்னதான் மேப் கொடுத்தாலும் அதைக்கண்டுபிடிச்சி போறதுக்கு நெடுஞ்சாலை ஓரத்துல இருக்க வழிகாட்டில, மைல்கல்ல எல்லாம் சினிமா போஸ்டர்களும் திருமண வாழ்த்துக்களும், முதல்வர் கருணாநிதி, விஜயகாந்தை வருக வருகன்னு வரவேற்கும் போஸ்டர்களும் இருக்கும் வரை கொஞ்சம் கஷ்டம் தான் இல்லியா..

இந்த மாதிரி டெக்னிக்கல் விஷயத்தை நமக்கு சொல்றது யாரு.. அட வேற யாரா இருக்கும்.. நம்ம டெக்னிக்கல் தேனப்பன் தான்.. ரொம்ப நன்றிங்க தேனப்பன் சார்.

Tuesday, November 07, 2006

போலீஸ்காரர்களுக்கு அர்ச்சனை தட்டு - விஜயகாந்த்

இட்லிவடை சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ பொன்ஸ் கேட்ட கேள்வி தான் எனக்கு பயங்கர சிரிப்பாய் இருந்தது.. விஜயகாந்த் தப்பித்தவறி ஜெயிச்சா போலீகாரங்களுக்கெல்லாம் அர்ச்சனை தட்டு கொடுப்பாரா, லத்தி துப்பாக்கியோட..இது தான் அவரோட கேள்வி..

அவர் கேட்ட மாதிரி கேப்டன் கொடுத்துட்டா அப்புறம் நம்மளோட பதிவோட இன்றைய தலைப்பு தான் நாளைய நாளிதழ்களின் தலைப்பாய் இருக்கும்.

அவருக்கு ஏன் எப்படி ஒரு சந்தேகம்னு நினைகிறவங்களுக்கு நிச்சயமா அருணோட பதிவை படிச்சவங்களுக்கு வராது. அப்படியும் அதை நீங்க பாத்து ரசிக்க கீழ உள்ள வீடியோவை ஓட்டுங்கப்பா.. நீங்களும் கீழ விழுந்து சிரிப்பீங்க..



1:25 நிமிஷங்களுக்கு பிறகு காணவும்..

இன்று நவம்பர் மாதம் 8-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் எனது அருமை தங்கை தீக்க்ஷன்யாவுக்கு, அண்ணனின் பாசமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. தங்கச்சி.. நீ நீடூழி வாழ்கம்மா..

கூகிளில் மிக அதிகமாக தேடப்படும் சொல் தமிழ்.. சாட்சிக்கு கீழ இருக்கும் வீடியோவை பாருங்கோ..


வீடியோ சுட்டி உதவி இட்லிவடை ..

Monday, November 06, 2006

உலக நாயகன் கமலுக்கு பிறந்த நாள்...



தமிழின் தசாவதார சகலகலா மன்னன், உலக நாயகன் கமலுக்கு இன்று 53வது பிறந்த நாள்..



சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேற் முதலீடு செய்து இன்னும் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு உன்னத கலைஞன் இவன்.



"அண்ணே !! உங்களுக்கு லக்கி நம்பர் ஏழுண்ணே !!!" என்று வசூல்ராஜாவில் வசனம் வருவதும் இதனால் தான்



வாழ்க கமல்..
வளர்க அவரின் திரைத்தொண்டு..

ஒரு கலக்கலான சந்திப்பு

புதுசா டெக்னிக்கல் தேனப்பனும் பாலிடிக்ஸ் பார்வதியும் வரப்போறாங்கன்னவுடனே சிட்டுக்குருவிக்கு தலகால் புரியல.. அவங்களுக்கு கொடுக்குறதுகுன்னே தனித்தனியா கிப்ட் வாங்கி வந்திருக்கு.. எவ்ளோ..நாளா நான் இங்க இருக்கேன்.. எனக்கு ஒரு குண்டூசி கூட வாங்கிட்டு வரலையேன்னு கீதா மேடம் மாதிரி மனசுகுள்ள ஒரே புலம்பல்.. அப்புறம் நீங்க சொன்னபேரை எல்லாம் சொல்லி, இன்னும் ஏன் பேரை நீ செலெக்ட் பண்ணலைன்னு கேட்டா அதுக்கு சர்ருன்னு அந்த சின்ன மூக்குல கோபம் வந்து உக்கார்ந்துகிச்சு. ஏன்னு கேட்ட டெக்னிக்கல் தேனப்பன் பாலிடிக்ஸ் பார்வதி மாதிரி தனக்கும் ஒரு ரிதமா பேர் வேணும்னு சண்டை.. எப்பா சாமி..உன்னை சமாதானப்படுத்த முடியாது..அதோ அவங்க ரெண்டு பேருமே வந்துட்டாங்க..முதல்ல இந்த மீட்டிங் முடியட்டும்..அப்புறம் உன் சண்டையை வச்சுக்கலாம்னு சமாதானப்படுத்திட்டு, அவங்க ரெண்டு பேரும் உள்ளே வர்றதுக்காக கதவை திறந்துவிட்டேன்.

வாங்க தேனப்பன் சார்..வாங்க மேடம்

ஹிம்..நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்..எங்க..எங்க நம்ம சிட்டுக்குருவியை காணோம்..னு தேனப்பன் கேக்க மூணு பேரும் சேர்ந்து சிட்டுகுருவியை தேடினா அது ஷோபாவுக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுகிடக்கு..என்னான்னு கேட்டா வெக்கமாம்..அடடே..சிட்டுக்குருவி சொல்லவே இல்லை..


வந்தவங்களுக்கு ஜில்லுன்னு ஜூஸ் கொடுத்துட்டு அப்படியே அரட்டை கச்சேரியை ஆரம்பித்தோம்.

வைகோவையே மிஞ்சப் போறார்..சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.. தேர்தலுக்கு முன்னடி, அதிமுகவுல சேர்ந்தவர், புது படம் ஷூடிங் கணக்கா, மேடைக்கு மேடை கருணாநிதியையும், தயாநிதி மாறனையும் சகட்டுமேனிக்கு பேசினார். ஆனா அதிமுக பெரிய அளவுல சீட் பிடிக்காததால, கொஞ்ச நாள் அடக்கி வாசிச்சார். இந்தப்பக்கம் தொடர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாம சன் டிவில தன் மனைவி ராதிகா புரோகிராம் பண்ண கடுப்பான அதிமுக ஜெயா டிவிக்கு அழைக்க அவரும் மறுக்க, கட்சியிலிருந்து தூக்கப்பட்டார். அதற்கும் மவுனம் காத்த சரத் உள்ளச்சியில் அதிமுக சிதரிப்போக..அதிமுகவிலும் எந்த பதவியும் கிடைக்காமல் போக மனம் வெதும்பினார். தீபாவளிக்கு வந்த தனது 100வது படம் தலைமகனும் படுத்துவிட.. இதுதான் சமயம் என்று அதிமுகவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். தனியாக கட்சி ஆரம்பிப்பதா இல்லை கேப்டனோட கைகோர்ப்பதா என்று அடுத்த வாரம் சொல்லப்போறாராம்..என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் பொலிடிக்ஸ் பார்வதி..

மேடம் அது சினிமாக்காரர் நியுஸ் நான்தான் சொல்லனும்..நீங்க எப்படி சொல்லலாம்னு சிட்டுக்குருவி சிணுங்கிகொண்டே வழக்கம் போல செய்திகளை கொட்ட ஆரம்பித்தது.

நியுஸ் ஒண்ணு..சிம்புவின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட வல்லவனின் மோசமான வசூலால் அதன் தயாரிப்பாளர் தேனப்பன் மிகவும் அதிர்ச்சியுடன், துவண்டு போயிருக்கிறார். இதனால் ஏற்கனவே இழுத்து கொண்டிருக்கும் பாலாவின் நான் கடவுள் கிடப்பில் போடப்படும் என்று தெரிகிறது. தங்களது தலயை பணம் கேட்டு மிரட்டிய பாலா தேனப்பனின் நிலைமை கண்டு அஜித் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருப்பதாக தெரிகிறது. வல்லவனின் கதை சிம்பு வாழ்கை கதை என்றும் சில பேர் சொல்லிவருகின்றனர். அதுவும் அந்த பள்ளி காச்சிகளை பார்த்தால் ரஜினியின் மகளை ஞாபகம் வைத்து எடுத்திருப்பதாக தெரிகிறது..வசனங்களை பார்த்தால் உண்மையோ என்றும் தோன்றுகிறது.. உண்மையா சிம்பு..

நியுஸ் ரெண்டு..பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த அஜித்தின் ஆழ்வார், வரலாறின் வசூலை கண்டு முன்னதாகவே, டிசம்பர் மாதம் 15-இல் வெளிவருகிறது. பொங்கலுக்கும் நிறைய படங்கள் வெளியாகி வசூலை பாதிக்கும் என்பதால், முன்னமே திரையிட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் முடிவெடுத்துள்ளார். இப்போது ஆழ்வாரின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நியுஸ் நம்பர் மூன்று..சர்வம் என்றொரு படம் முதலில் சூர்யாவின் சொந்த நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக விஷ்ணுவர்த்தனால் எடுக்கப்படுவதாக இருந்தது. சில்லுன்னு ஒரு காதல் தோல்விக்கு பிறகு, அதை கைவிட்டுவிட்டதாக டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பத்திரிகைகளுக்கு செய்தி தந்தார். மறுபடியும் ஒரு வாரத்துக்குள் இருவரும் சேர்ந்து அந்த படத்தை மறுபடியும் வேறு ஒரு தயாரிப்பாளரை கொண்டு எடுக்கப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் மறுபடியும் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டதாக இரு நாட்களுக்கு முன்னால் கூறியுள்ளனர். என்னாச்சு உண்மயில் இவர்கள் இருவருக்கிடையே.. ஏன் இந்த குழப்பம் சூர்யா.. இன்னும் கல்யாண மயக்கம் தீரவில்லையோ சூர்யாவுக்கு..

இப்போது கிடைத்த தகவல் படி, சூர்யா கௌதமன் இயக்கதில் உடல் பொருள் ஆவி என்னும் படத்தில் நடிக்கப் போகிறார். இப்போது சரத்-ஜோதிகா வைத்து தான் எடுத்து வரும் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துக்கு பிறகு இந்த புதிய படம் தொடங்க இருக்கிறது.

செய்தி நம்பர் நாலு.. ஹிந்தியில கஜினி எடுக்கிறப்போ அங்கேயும் கல்பனா கதாபாத்திரத்துல நடிக்க தன்னை தான் கூப்பிடுவாங்கன்னு இருந்த அசின் கனவுல மண்ணை போட்டுட்டாங்க.. அமீர்கான் ஜோடியா நடிக்க போறது பிரியாங்க சோப்ரா...

செய்தி நம்பர் ஐந்து..வல்லவனுக்கும் வரலாறுக்கும் சத்யம் தியேட்டரில் தீபாவளி முதல் ஆளுக்கு இரண்டு காட்சிகள் என்று முடிவானது. சத்யத்துல எல்லா காட்சிகளும் தன்னுடைய படமே ஓடும்..வரலாறு ஊத்திக்கும் என்று தனது நண்பர்களிடம் சொல்லி கனவு கண்டுகொண்டிருந்த சிம்பு, சத்யத்தில் இருந்து வல்லவனை தூக்கியதில் இப்போது அதிர்ச்சியில் இருக்கிறார்.

ஒன்று..இரண்டு..மூன்று என சினிமா செய்திகளை சொன்ன சிட்டுக்குருவி, ரவுண்டு நெக் T-ஷர்டா இருந்தாலும் காலர் இருக்கும் நினைப்பில் தூக்கிவிட்டுக்கொண்டது..

சிட்டுக்குருவியின் ஷேஷ்டையை பார்த்து சிரித்துகொண்டு இருந்த டெக்னிக்கல் கோவிந்தன்.. இன்னைக்கு நம்ம பிளாக் மக்களுக்கு பயன்படுற மாதிரி ஒரு செய்தி சொல்றேன்.. டெக்னோரடி என்னும் ஒரு வலைதளத்தில் உங்க பிளாக் பத்தி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இப்படித்தான் கார்த்தியோட கனவுகளை பத்தி இங்கே சுட்டி இருப்பதை நான் தெரிந்து கொண்டேன்..

இப்படி எல்லோரும் பேசி முடிச்ச பிறகு,வீட்ல பண்ண பிரியாணியை சாப்பிட்டு கிளம்பினாங்க. அதுக்குள்ள சிட்டுக்குருவி பாலிடிக்ஸ் பார்வதியோட பெட்டாகி, லேடிஸ்க்கு என்னன்ன பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டது, அதோட லவ்வருக்கு வாங்கித்தர.

முதல் தடவைங்கிறதால தான் மூணு பேரும் ஒண்ணா வந்திருக்காங்க.. இனிமேல் தனித்தனியாத்தான் வருவாங்க..

பாலிடிக்ஸ் பார்வதி பேக்ஸ் மூலம் அனுப்பின செய்தி

இன்னும் பதினைந்து நாளில் விஜயகாந்தின் திருமண மண்டபம் நெடுஞ்சாலைதுறையினால் இடிக்கப்படும் என்று அதற்கான மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறி இருக்கிறார். கோயம்பெடு அருகே கட்டப்படவுள்ள அடுக்கு மேம்பாலத்திற்காக இடிக்கப்படும் 150 கட்டிடங்களில் அவருடைய திருமண மண்டபமும் ஒன்று. இதனை பத்திரிக்கைகள் ஊதிப் பெரிதாக்காமல் இருந்தா சரி.

Sunday, November 05, 2006

விஜயகாந்த பாணியில் ஒரு புள்ளி விவர கணக்கு..

300வது பதிவின், சிறப்பு பதிவின் தொடர்ச்சி...

சிறு வயதில் எனக்குள் இருந்த, கொழுந்துவிட்டு எரிந்த எழுத்தார்வத்தை தீர்த்து வைத்தது இந்த வலைப்பக்கம் தான்.

இந்த வலைப்பக்கதை பற்றிய, கேப்டன் விஜயகாந்த பாணியில் ஒரு புள்ளி விவர கணக்கு..

இந்த வலைபூ ஆரம்பிக்கப்பட்டது - செப்டம்பர் மாதம், 2004
முதல் பதிவை இட்ட நாள் - 19ம் தேதி அக்டோபர் மாதம், 2004


அதிக பார்வையாளர்கள் படித்த நாள் - 26ம் தேதி, அக்டோபர் மாதம்.. 582 முறை பார்வை இடப்பட்டிருக்கிறது. 373 பேர் பார்வை இட்டிருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் தீபாவளி பட தர வரிசை என்ற இரு பதிவுகளையும் சேர்த்து.

வெங்கட் தான் இங்கே முதல் பின்னூட்டம் இட்டவர்.

இது கீதா மேடம் பெங்களூர் சென்றதற்காக அசின் மன்றம் சார்பா அடிக்கப்பட்ட இந்த வலைப்பக்கத்தின் முதல் போஸ்டர். வலைப்பக்க நண்பர்களுக்காக போடப்பட்ட முதல் பதிவும் இது தான்.

முதன் முதலாய் மர்ரொரு வலைப்பக்கத்தில் பரிந்துரை செய்யப்பட்ட பதிவு Chillunnu oru kathal-um Professional tax-um. கில்லி.இன்-இல் போடப்பட்டது இது.


அதிக பின்னூட்ட்ங்கள் பெற்றது முதலமைச்சர் மு.கார்த்திகேயன் என்ற பதிவுக்காக.. மொத்தம் 74. மேலும் இந்த பதிவில் சசி மட்டுமே 16 பின்னூட்டங்கள் பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் இருப்பது கன்னா பின்னான்னு ஒரு பதிவு.. தீபாவளி ஸ்பெஷல் என்ற பதிவு. மொத்தம் 67 பின்னூட்டங்கள்.

இதனிடையில் தேர்தல் சமயங்களில் அரசியல் நகைச்சுவை என்று ஒரு எட்டு பதிவைகள் தொடராய் வெளிவந்தது. அதன் பிறகு சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் தான் மிக அதிக தொடராய் இப்போது 12-ஐ எட்டி இருக்கிறது. மேலும் மிக அதிகமாக சினிமா பற்றிய பதிவுகள் தான் வெளியிடப்பட்டிருக்கிறது. 300-இல் பாதிக்கு மேல் நிச்சயம் சினிமா பதிவுகள் தான்.

வெளியிடப்பட்டதிலேயே மிகச் சிறிய பதிவு இது தான்

புதிய பகுதியாக டெக்னிக்கல் விஷயங்களை பற்றி சொல்ல டெக்னிக்கல் தேனப்பன் என்று புதிதாக ஒருவர் வர இருக்கிறார், சினிமா பற்றி சிட்டுக்குருவி சொல்வது போல இவர் உலகில் இருக்க புது டெக்னிக்கல் விஷயம் பற்றி சொல்வார்..டிப்ஸ் மாதிரி..நிச்சயம் ஓவர் டோஸா இருக்காது..

அதே மாதிரி அரசியல் பத்தி பேச பாலிடிக்ஸ் பார்வதி வேற வர்றாங்க. சிட்டுக்குருவிக்கு கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் இவங்களுக்கும் நீங்க தருவீங்கன்னு நம்புறேன்.

இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் மனதில் இருக்கிறது. அதுக்கு உங்கள் அதரவு என்னிக்கும் தேவைப்படுகிறது.

இவனை வாழ்த்துங்கள். எனது முந்நூறாவது பதிவுக்காக வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

Saturday, November 04, 2006

நான் வளர்கிறேனே அம்மா (300வது பதிவு)

இது எனது முந்நூறாவது பதிவு..

முதல் பதிவு எழுதும் போது, இருந்த மனநிலையே வேறு. இது ஏதோ டெக்னிக்கல் விஷயம் பேசுவதற்காக மட்டுமே என்று நினைத்திருந்தேன். ஒரு வருடமாக அப்படித்தான் டெக்னிக்கல் விஷயங்களாய் எழுதி வந்தேன். ஒரு வருடமா..என்று கேக்காதீர்கள்.. அந்த ஒரு வருடத்தில் நான் இட்ட பதிவுகள் பதினொன்று தான்.

அதன் பிறகு ஏதேச்சையாய் பாலாஜியின் ஆங்கில பதிவுகள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடையா சினிமா பதிவுகள் ஏற்கனவே சினிமா மோகம் அதிகம் உள்ள என்னை சினிமா பற்றியே எழுத தூண்டியது. எனது பார்வையையும் மாற்றி டெக்னிக்கல் விஷயங்களை விடு வெளியே வந்தேன். முதன் முதலாக என்ன எழுதுவது என்று தெரியாமல் ரொம்ப நேரம் திணறி மெலடி மன்னன் கே ஜே யேசுதாஸ் பற்றிய ஒரு சிறிய பதிவை இட்டேன். அப்போ, வெறும் சினிமா செய்திகளாய் (அப்போ சிட்டுக்குருவி எல்லாம் இல்லை) தான் போட்டு வந்தேன். பாலாஜி இப்போதும் எனது பதிவுகளை படிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி பதிவுகளாய் போட்டு தாக்குவதற்கு அவரே காரணம்.பிளாக் உலகில் எனக்கு நிறைய கற்று தந்தது அவரது பதிவுகள் தான். அவர் தான் எனக்கு பிளாக் உலகில் தொடக்கநிலை பள்ளியின் ஆசிரியர் போல..

இப்படி எழுத ஆரம்பித்த காலத்தில் எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்தது எனது அலுவலக நன்பன் வெங்கட். சினிமாவில் செய்திகளை மட்டுமே எழுதிகொண்டு இருந்த போது, படத்தின் விமர்சனங்களையும் எழுதலாமே என்று நினைத்து முயற்சித்து எழுதியது தான் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் விமர்சனம். ஆரம்பித்த விஷயங்களில் தொடராமல் அப்படியே இடையில் விட்டுவிட்டது இந்த திரைவிமர்சனப் பகுதி தான்.

அப்படியே பல பதிவுகளுக்கும் போனதில், தமிழிலும் எழுதலாம் என்று தெரிந்து கொண்டேன். தமிழில் எழுத முடிவு ஆயிற்று. ஆனால் என்ன எழுதுவது என்று ஒரே குழப்பம். அப்படி யோசனையில் இருந்த போது, சரி நம்ம கதையை எழுதலாம்னு போட்டது தான் கபடி பற்றிய எனது முதல் முழுநீள தமிழ் பதிவு. அப்புறம் ஓணான் வேட்டையும், மைக்கும் சோடாவும்னு நிறைய பதிவுகள் போட்டாலும் அந்த முதல் தமிழ் பதிவின் போது இருந்த ஆனந்தம் அளவிடற்கரியது.. சொல்லில் சொல்ல முடியாதது. பின்னூட்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல், கடை திறந்தும் வாங்க வராமல் கவலைப்படும் ஒரு தொழில்காரனாய் நான் உண்மயிலே மனம் ரொம்ப நொந்துஇருக்கிறேன். அந்த சமயங்களில் அறிமுகமானவர்கள் தான் நண்பன் பில்பெர்டும், கீதா மேடமும், என் மச்சான் அம்பியும், நாட்டாமை ஷ்யாமும், மாப்ள பரணியும், தோழிகள் வேதாவும், உஷாவும், நாகை சிவாவும், சசியும். (நண்பர்களின் பெயரில் நீங்கள் தட்டினால், அவர்கள் எனக்கு எழுதிய முதல் பின்னூட்டத்தை பார்க்கலாம்)

எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை, ரஜினி, அஜித், அசின் இவர்களை பற்றி தான் அதிக பதிவுகள் எழுதி இருக்கிறேன். (இவர்களின் பெயரில் நீங்கள் தட்டினால், அவர்கள் பற்றி எழுதிய முதல் பதிவை நீங்கள் படிக்கலாம்). அதிலும் அஜித் பற்றி மட்டுமே நான் போட்ட பதிவுகளின் எண்ணிக்கை இருபத்தைந்தை தாண்டும்.

அப்புறம் பதிவுகள் தமிழ்மணத்தில் இட்டால் நிறைய பேர் படிப்பார்கள் என்று அறிந்து அதில் இணைத்தேன். ஆனால் தினமும் சென்று அங்கு அப்போது இட்ட பதிவை புதுப்பிக்க வேண்டும் தெரியாது. ஒரு மூன்று மாதத்திற்கு முன்னால் தான் அதையும் செய்தேன். இப்போதான் நிறைய பேருக்கு இந்த பதிவுகள் எல்லாம் சென்றடைகிறது.

டிசம்பர் மாதம் கடைசியில் எனது 50வது பதிவையும், மார்ச் மாதம் முதல் தேதி எனது 100வது பதிவையும், ஜூன் மாதம் இறுதியில் எனது 200வது பதிவும் வெளிவந்திருக்கிறது.

எனது ஒவ்வொரு பதிவையும் படித்து, அது எப்படி இருந்தாலும் ஆஹா ஓஹோன்னு பாராட்டி எனது கனவுகளுக்கு உயிர் கொடுத்த உங்கள் ஒவ்வொருத்தருக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன்..

அதன் பிறகு திராசா சார், பிரியா, பொற்கொடி, கோல்மால்கோபால், இந்தியதேவதை, பாலா.ஜி, தங்கை தீக்க்ஷன்யா, ஜனனி, G3, சண்டக்கொழி, அருண்குமார், SLN, மது, கடல்கணேசன், Dreamzz , karthik BS என பெரிய நண்பர்கள் கூட்டமும் வந்து சேர்ந்தது. அப்பப்ப வந்து போகும் கைபுள்ளைக்கும், கேகேவுக்கும், பொன்னாவுக்கும் நன்றி. இவர்கள் எல்லோருக்கும் நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன்.

அவசரத்தில் சில பெயர்கள் விட்டு போயிருக்கலாம். எல்லோருக்கும் எனது நன்றி. இவனை எல்லொரும் வாழ்த்துங்கள் வளர..உங்க எல்லொருக்கும் ரொம்ப நன்றி.. நன்றி.. இந்த அடியேன் இன்னும் பல பதிவுகள் எழுதி சிறக்க வாழ்த்துங்கள்..

(சிறப்பு பதிவாய் தொடரும்)

Friday, November 03, 2006

ஆழ்வார் பக்கம்

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் ஆழ்வார் படத்தின் சூடான செய்திகள்..


ஜனவரி 03

புத்தாண்டு போஸ்டர்
































டிசம்பர் 25

மதுரையில் ஆழ்வார் வெளியாகும் தியேட்டர்கள்

































டிசம்பர் 18
'தல'யின் ரசிகர்களே உருவாக்கிய டிரெய்லர்




டிசம்பர் 17














பொங்கலுக்கு வெளிவரும் இந்தப் படம் சென்னை சத்யத்திலும், வடபழனி கமலாவிலும் கோயம்பேடு ரோகினியிலும் ரீலிஸ் செய்யப்படுகிறது

அஜித் பற்றிய என்னுடைய எல்லா பதிவுகளும்

இது நான் 'தல' அஜித் பற்றி வெவ்வெறு காலகட்டங்களில் எழுதிய பதிவுகளின் தொகுப்பு.

1. Return of the favor
2.
Gramaththu 'Batcha'?
3.
Thala pOla varumaa...
4. Paramasivan - Short Music Review
5. Ajith..Still in the race
6. Paramasivan Movie Review
7. Bala-Ajith's Naan Kadavul
8.
Kaththu namma pakkam veesuthu
9. Will Guard'Father save Ajith?
10.Tirupathi Songs - Short review
11.Ajith Sings for Bhavana
12.Tirupathi
13.Tirupathi - Reasons
14.Happy Anniversary Thala
15.Happy Birthday Thala!
16.கடவுளை கை விட்ட அஜித்
17.
Thalaivar saw Thala's Godfather
18.Bala Threatened Ajith - Naan kadavul secrets
19.
Yaar Kadavul?
20.Aalvaar Ajith
21.Tirupathi 100
22.
ஆழ்வார் ஆரம்பம்
23.Azhwaar Promo Poster
24.சன் மியுசிக்ல அஜித் பாட்டு போடுறதில்ல..ஏன்?
25.தீபாவளிப் படங்கள் - அஜித்தின் வரலாறு
26.கோலிவுட் 'கில்லி'

Thursday, November 02, 2006

இசைபுயலா மறுபடியும் வருவாரா ஏ ஆர் ரகுமான்

ஹாரிஸ் ஜெயராஜ் தான் இப்போதைய தமிழ் சினிமாவின் இசையுலக மன்னன். போன வருஷம் கஜினி பாடல்களை முண்முணுக்க வைத்தவர், இந்த வருடம் பார்த்த முதல் நாளேன்னு பாட வைத்திருக்கிறார். இவருடைய பாடல்கள் தான் மியுசிக் கடைகளிலும் நன்றாக விற்பனை ஆகிறது. இவருடைய இசையும் படத்துக்கு படம் புதுசாகவும் இளமையாகவும் இருக்கிறது. இந்த வருடத்தில் யுவன்சங்கர் பாடல்களும் அந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. போட்டிக்கு ஏ ஆர் ரகுமானும் இல்லை..

மிகப் பெரிய அளவில் பரபரப்பாய் விளம்பரம் செய்யப்பட்ட, ஏ ஆர் ரகுமானின் சமீபத்திய சில்லுன்னு ஒரு காதலும், பாடல்கள் சுமாராகவே இருந்தன. ஏ ஆர் ரகுமானின் பழைய இசை வேகம் இதில் இல்லை என்றே சொல்லலாம். அதுவும் சில்லுன்னு ஒரு காதல் நன்றாக ஓடாததால் கேசட் சிடி விற்பனையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பெயர் மாற்றம் செய்யப்பட்டு, எட்டாவது உலக அதிசயம் என்று விளம்பரம் செய்யப்பட்ட வரலாறு பாடல்களும் பழைய ஏ ஆர் ரகுமானின் ஸ்டைலில் இல்லை. ஏ ஆர் ரகுமானால் மட்டுமே ஓடிய படங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் இப்போது அவராலும் தாக்குபிடிக்க முடியவில்லையோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத் தொடங்கிவிட்டது.

இன்டர்நெட்டில் பாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், கேசட் சிடி விற்பனை தான் இசை அமைப்பாளரின் திறமையை நிர்ணயிக்கும் ஒரு சக்தி. ஆனால் சமீபத்திய ஏ ஆர் ரகுமான் பாடல்கள் (ரங் தே பசந்தி தவிர) அந்த அளவுக்கு விற்கவில்லை என்பது மறுக்கமுடியாத மறைக்கமுடியாத உண்மை.

அதுவும் இல்லாமல், இப்போது ஏ ஆர் ரகுமானை பற்றிய புதிய விஷயத்தை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அது ஏ ஆர் ரகுமான் இசையமைத்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்பதே. மொத்ததில் எடுத்துகொண்டால் சொற்ப படங்களே வசூலை குவித்து இருக்கின்றன என்று பட்டியல் வேறு இடுகிறார்கள் இவர்கள். இது எப்படி என்றால், கஷ்டப்பட்டு கிரிக்கெட்டில் டெண்டுல்கர் நூறு ரன்களை அடிக்க, மற்ற எவரும் விளையாடாமல் இந்தியா தோற்றுவிட்டால், டெண்டுல்கர் விளையாடி இதுவரை இந்திய ஜெயித்தது சில போட்டிகள் தான் என்று குறை சொன்ன கதை போலிருக்கிறது. பாடல்களை நன்றாக கொடுப்பது மட்டுமே ஏ ஆர் ரகுமானால் முடியும். படம் ஓடாததற்கு டைரக்டர் முதல் மற்றவர்கள் தான் காரணம். அதற்கு ஏ ஆர் ஆர் என்ன செய்வார் பாவம். ஒழுங்காக வேலை வாங்காதது அந்த டைரெக்டர் தப்பு தான். இளையராஜாவும் தோல்வி படங்கள் கொடுத்ததுண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அ..ஆ.., ஆயுத எழுத்து, கண்களால் கைது செய், பாய்ஸ் போன்ற படங்கள் ஓடாததற்க்கு ஏ ஆர் ஆர் என்ன செய்வார். இந்த படங்களின் பாடல்கள் நன்றாகவே இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உதயா, பரசுராம், அல்லி அர்ஜூனா போன்ற சில படங்களில் ஏ ஆர் ரகுமானின் இசையும் சொல்லிகொள்ளும் படியாக இருந்ததில்லை. என்னை பொறுத்தவரை எதுவுமே இசையமைப்பாளரிடம் கிடையது. அந்த படத்தின் டைரக்டரை பொறுத்தது. மணிரத்னதிடம் எந்த மியுசிக் டைரக்டர் வேண்டுமானாலும் ஹிட் தரலாம். ஏனென்றால் அப்படி அவர் வேலைவாங்குவார். இதுவரை வெளிவந்த எந்த மணிரத்னதோட படத்தின் பாடல்களும் சோடை போனதில்லை.

ஏதோ இப்போது ஏ ஆர் ரகுமானால் தமிழில் நிறைய கவனம் செலுத்தமுடிய வில்லை. ஆனால் இனி வரும் படங்கள் அவரின் இசை புயலோடு வரப்போகிறது.. அப்போது இந்த மாதிரி புழுதிகளும் பழிமொழிகளும் பறந்து விடும் என்பது மட்டும் உண்மை.

ஏ ஆர் ஆரின் அடுத்த படைப்புகள்...

1. மணிரத்னத்தோட குரு
2. ஏவிஎம், ரஜினி, ஷங்கர் கூட்டணயில் சிவாஜி
3. கலைபுலி தாணு தயாரிப்பில், அவர் மகனின் இயக்கத்தில், பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்கும் சக்கரகட்டி
4. விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகன்

புயல் இசையாய் வரும்.. நம் மனதை நிச்சயம் கொள்ளை கொள்ளும்..