Thursday, November 09, 2006

செவ்வந்தி தோட்டத்தில இன்னைக்கு சூட்டிங்காம்

வி.எம்..நம்ம ஊர் கலிக்கம்பட்டியாரோட செவ்வந்தி தோட்டத்தில இன்னைக்கு சூட்டிங்காம்.. ஊரே அங்க தான் போயிகிட்டு இருக்கு.. நீ மட்டும் என்ன பண்ற.. வா வி.எம் போகலாம்.. சைக்கிள்ல வந்து கூப்பிட்டான் நண்பன் வில்ஸன். அப்புறம் பள்ளிக்கு நேரமானதால அப்படியே நேரா ஸ்கூல்லுக்கு கிளம்பியாச்சு.. ஸ்கூல்ல இருந்து வர்றப்போ அப்படியே போகலாம்னு ஒரு பிளான்.

அட.. எனக்கு ஏன் வி.எம் னு பேர் வந்ததுன்னு சொல்லவே இல்லியே.. ஏற்கனவே அதபத்தி சொல்றேன்னு சொல்லியும் சொல்லவே இல்ல.. அந்த காரணத்தையும் இப்பவே சொல்லிடுறேன்.. நான் ஓன்பதாவது தம்பித்தோட்டத்தில படிச்சுகிட்டு இருந்தப்போ, எம். கார்த்தின்னு ஒருத்தன் வந்து சேர்ந்தான். ரெண்டு பேருக்கும் ஒரே இனிஷியல்..ஒரே பேர்.. டீச்சர், ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னொரு இனிஷியலை முன்னாடி வச்சிக்கோங்க..அதுக்கு அவங்க அவங்க அப்பாக்கிட்ட கேட்டுட்டு வாங்க.. அப்படின்னு டீச்சர் சொன்னாங்க.. சரின்னு போயி அப்பாகிட்ட கேட்டா, அப்பா வி.ன்னு சேர்த்துக்க அப்படின்னு சொன்னாங்க.. கிராமத்துல ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீட்டு பேர் இருக்கும். அது மாதிரி எங்களுக்கு வேம்ப வீடுன்னு பேர்.. எங்க குல தெய்வம் வேம்ப கருப்பண்ணசாமி.. அதனால அந்த பேர். அதனால தான் அந்த எக்ஸ்ட்ரா இனிஷியல் வி.. என் ஊரு பேரும் வெள்ளோடுங்குறதால அதுக்கும் பொதுவா அந்த இனிஷியல் அமைஞ்சு போச்சு.. அதுக்கு பிறகு எங்க ஸ்கூல்ல எல்லோருக்கும் வி.எம் னாத் தான் தெரியும்..

சரி, விஷயத்துக்கு வருவோம். அன்னிக்கு ஸ்கூல் முழுவதும் யாரப் பாத்தாலும் இதே பேச்சு தான்.. ஏய்.. சரத்குமார் நடிக்கிற மகுடிக்காரன் சூட்டிங் எங்க ஊர்ல நடக்குதே.. சூப்பரா ஒரு பொண்ணு வேற வந்திருக்காம் செகண்ட் ஹீரோயினான்னு ஒரே தம்பட்டம் தான்.. அன்னிக்கு கடைசி பீரியடு எனக்கு பி.டி பிரீயட்.. வில்சனுக்கும் விவசாய பிரீயட். என்னது விவசாய பிரீயடா ன்னு யோசிக்காதீங்க.. என் ஸ்கூல்லே ஒரு தென்னந்தோப்புக்கு நடுவுல தான் இருக்கும். அது தான் பள்ளிக்கு தம்பித்தோட்டம்னு பேரு.. அதுக்கு நடுவுல பெரிய சதுர வடிவ தொட்டி ஒண்ணு மூடி இருக்கும்.. நாங்க சாப்பிடறது, பி.டி பிரீயட் போயிட்டு வந்தா முகம் கை கால் கழுவுறதுன்னு எல்லாம் அங்கே தான். அங்கே இருந்து வாளில தண்ணிய பிடிச்சுட்டு போய், ஸ்கூல சுத்தி இருக்க எல்லா செடிக்கும் ஊத்தணும்.. ஒரு ஆள் பத்து வாளி தண்ணி சுமக்கனும்..

வில்சனும் விவசாய பிரீடியக்கு மட்டத்தை போட்டுட்டு ரெண்டு பேரும் சைக்கிள்ல ஒரே மிதி தான்.. சூட்டிங் நடக்குற இடத்துக்கு பறந்தோம்.. நாங்க போன சமயம் எல்லோரும் ஈவினிங் டிபன் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க.. சரத்துக்கு 'நல்லெண்ணெய்' சித்ரா தான் ஹிரோயின்.. அவங்க ஒரு தென்னைமரத்துக்கு முன்னாடி உக்கார்ந்து தென்னமட்டையில இருந்து விளக்குமாறு செய்ற மாதிரி ஒரு சீன்.. அப்போ அவங்க மகள் தான் அந்த ரெண்டாவது ஹிரோயின் போல.. அந்த பொண்ணு சித்ரா கிட்ட ஒரு சொம்பு தண்ணிய கொடுத்துட்டு வர்றப்போ, இடையில வில்லன் வந்து ஏதோ மிரட்டனும்.. நாங்க அங்க இருந்த அரைமணி நேரமா இதே சீன் தான் எடுத்தாங்க.. நானும் வில்சனும் கேமராவுக்கு பின்னால நின்னுகிட்டு இருந்தோம்..

அந்த கேமராவை பிடிச்சிகிட்டு இருந்தவர் (ஒளிப்பதிவாளர்னு நினைக்கிறேன்) அந்த செகண்ட் ஹிரோயினை பத்தி எப்பப்பாத்தாலும் காது கூசும் படியான மட்டமான வர்ணணைகள்.. இப்படித்தான் சினிமா உலகம் இருக்குமோன்னு ஒரு இமேஜ் அப்பவே உருவாகிடுச்சு.. மகுடிக்காரன்ங்கிற அந்தப் படம் திண்டுக்கல்லயும் ரிலீஸ் ஆகி ஒரு நாலு நாள் தான் ஓடுச்சுன்னு நினைக்கிறேன்..

அதுக்கப்புறம் நான் ஒரு நாள் எங்க கடையை கவனிச்சுகிட்டு இருந்தப்போ, ஒரு பெரியவர் ஏதோ அரட்டைல சொன்னார்.. ஏற்கனவே சுதாகரன் (கிழக்கே போகும் ரயில் ஹீரோ) நடிச்ச குருவிக்கூடுன்னு ஒரு படமும் எங்க ஊர்ல தான் எடுத்தாங்களாம்.. எங்க ஊர்ல எந்தப் படம் எடுத்தாலும் அது ஓடாதாம்.. அது எங்க ஊர் ராசியாம்.. அதுக்கப்புறம் ரஞ்சித்தை ஹீரோவா போட்டு சிந்து நதிப் பூன்னு ஒரு படம் எடுத்தாங்க..பாட்டெல்லாம் கொஞ்சம் நல்லா இருக்கும்..ஹிம்..அந்த பெரியவர் சொன்ன மாதிரி அதுவும் ஓடல.. எப்பவும் சென்டிமெண்ட் பாக்குற சினிமாக்காரவங்க அதுக்கப்புறம் எங்க ஊருக்கு வந்ததே இல்லை..

(பக்கத்துல சின்னாளப்பட்டியை சுத்தி எடுத்த ஆட்டோகிராப், சண்டகோழி எல்லாம் ஹிட்டானது.. நல்ல வேலை எங்க ஊர்ல எடுக்கலைனு நான் நினைச்சுகிட்டேன்)

42 பின்னூட்டங்கள்:

said...

//விவசாய பிரீயட். என்னது விவசாய பிரீயடா ன்னு யோசிக்காதீங்க.. //

LOL :) naan ennada ithu puthu period?nu yosichen. cinema world is full of sentiments.

hiyaaa, tdy also me thaan pashtu!
i want one ravaa dosa. (india vanthu vaangi tharen!nu dakaldi panna vendaam, en a/c la dollers transfer pannidu)

murugan dollera? iyappan dollera?nu comedy kimady ellam panna padathu! :D

said...
This comment has been removed by a blog administrator.
said...

அருமையாப் பதிஞ்சிருக்கீங்க

உங்க ஊர்ல எடுத்த படம் ஓடாதத்துக்கு காரணம் சாமிக்குத்தம் போல:-))

சார், நல்லண்ணெய் சித்ராவ வச்சு படம் எடுத்த பப்படம் தானே வரும்

Anonymous said...

என்னங்க கார்த்திக்!!
உங்க ஊர்ல படம் எடுத்தா ஓடவே ஓடாதுன்னு முடிவே கட்டிடீங்களா?
படம் ஓடுமா இல்லையான்றது அந்த படத்தின் கதையையும் பொறுத்ததுதானே? என்ன பன்றது! உங்க ஊர்ல எடுக்கப்பட்ட கதை நல்லா இல்லை.. படம் ஓடலை.
ஆட்டோகிராஃப் உங்க ஊர்ல எடுத்து இருந்தா கூட அது ஹிட்டா ஆகியிருக்கும்!
பார்ப்போம். அடுத்து யார் உங்க ஊர்ல வந்து படம் எடுக்கிறாங்கன்னு...

said...

கார்த்திக்.. எப்போ நான் வந்தாலும் நாலு போஸ்ட் ஏற்கனவே படிக்காம இருக்கு.. சேர்த்து சேர்த்துத் தான் படிக்கிறேன்..
கார்த்திக்கை ஹீரோவா போட்டு உங்க ஊர்ல படம் ஷூட்டிங் எடுக்கச் சொல்லுங்க.. கண்டிப்பா நல்லா ஓடும்.

said...

Maams...unga oor senthimenta namma udaikarom...Neenga story,screenplay,dialog,music, paatu, direction, hero-nu pala role-la pinna...akka asin-ku kandhaangi pudavaya katta vachi...perarasu kitta oru kuttu paatu ezhudhi vaangi...oru dance podurom parunga....appadi india-ve endirichi aadanum :))

said...

கார்த்தி,
கும்பகோணத்துக்கும் இந்த ராசி இருந்தது. நல்லவேளை சேது படம் வந்து ஊர் பேரை காப்பாத்துச்சு.

அப்புறம் என்ன, சும்மாவாச்சும் கும்பகோணத்தை ஸ்டில் பண்ணி சினிமாவுல காட்டிடுறாங்க

எல்லாம் bloody sentiments

senshe

said...

indha range-ku neenga post pottinganna adutha postla verum "pass" nu thaan comment panna mudiyum !!!

LOL for vivasaaya period :)

Anonymous said...

Bharani said...
Maams...unga oor senthimenta namma udaikarom...Neenga story,screenplay,dialog,music, paatu, direction, hero-nu pala role-la pinna...akka asin-ku kandhaangi pudavaya katta vachi...perarasu kitta oru kuttu paatu ezhudhi vaangi...oru dance podurom parunga....appadi india-ve endirichi aadanum :))


bharani, karthik all in one panni, asin nadichaa naam support pannuvom.. yaenna neenga karthik rasikar, naan asin rasikainnu ovvoruvarukkum oru reason irukku. aanal, perarasuvaai paadu eluthi paada sonneengganna piragu Captanudaiya Dharmapuri maathiri comedy-aa aagidum. Piragu namma Karthikoda blogla thaan thuppu thuppunnu comments adichu thuppanum..
pst: Karthik, paarthu padam edungga.. hehehe...

said...

சினிமா போஸ்ட், அதனாலே ஒரு உள்ளேன் ஐயா போட்டுட்டு ஒதுங்கறேன்.

said...

//hiyaaa, tdy also me thaan pashtu!
i want one ravaa dosa. (india vanthu vaangi tharen!nu dakaldi panna vendaam, en a/c la dollers transfer pannidu)

murugan dollera? iyappan dollera?nu comedy kimady ellam panna padathu!//

ICICI account number kodu ambi..anuppuREn,, ada ithu kooda panna maattenaa enna, machchaanukkaaka

said...

//அருமையாப் பதிஞ்சிருக்கீங்க

உங்க ஊர்ல எடுத்த படம் ஓடாதத்துக்கு காரணம் சாமிக்குத்தம் போல:-))

சார், நல்லண்ணெய் சித்ராவ வச்சு படம் எடுத்த பப்படம் தானே வரும்

//

முதல் வருகைக்கு நன்றி கானா ப்ரபு..

நீங்க சொல்றதும் சரி தான்.. சித்ரவை எல்லாம் ஹீரோயினா போட்ட படம் எப்படி ஓடும்

said...

//என்னங்க கார்த்திக்!!
உங்க ஊர்ல படம் எடுத்தா ஓடவே ஓடாதுன்னு முடிவே கட்டிடீங்களா?
படம் ஓடுமா இல்லையான்றது அந்த படத்தின் கதையையும் பொறுத்ததுதானே? என்ன பன்றது! உங்க ஊர்ல எடுக்கப்பட்ட கதை நல்லா இல்லை.. படம் ஓடலை.
ஆட்டோகிராஃப் உங்க ஊர்ல எடுத்து இருந்தா கூட அது ஹிட்டா ஆகியிருக்கும்!
பார்ப்போம். அடுத்து யார் உங்க ஊர்ல வந்து படம் எடுக்கிறாங்கன்னு... //

உங்க பாசதுக்கு நன்றி மை பிரண்ட்....பார்ப்போம் அடுத்து எடுக்குற படமாவது ஓடுதான்னு.. ஆனா எங்க ஊர கண்டாலே சினிமாக்காரவங்க ஓடுறாங்க..

said...

//கார்த்திக்.. எப்போ நான் வந்தாலும் நாலு போஸ்ட் ஏற்கனவே படிக்காம இருக்கு.. சேர்த்து சேர்த்துத் தான் படிக்கிறேன்.. //

என்ன பன்றது கணேசன்.. ஆனா உங்க ஆளவுக்கு என்னால பிரச்சித்தி பெற முடியல.. :-)

//
கார்த்திக்கை ஹீரோவா போட்டு உங்க ஊர்ல படம் ஷூட்டிங் எடுக்கச் சொல்லுங்க.. கண்டிப்பா நல்லா ஓடும். //

நானா இருந்தாலும் எங்க ஊர்ல எடுக்கமாட்டென்..என்னா அப்போ நானும் சினிமாக்காரன் ஆகிடுவேன் கணேசன்

said...

//Maams...unga oor senthimenta namma udaikarom...Neenga story,screenplay,dialog,music, paatu, direction, hero-nu pala role-la pinna...akka asin-ku kandhaangi pudavaya katta vachi...perarasu kitta oru kuttu paatu ezhudhi vaangi...oru dance podurom parunga....appadi india-ve endirichi aadanum //

மாப்ள..உன் பாசத்துக்கு அளவே இல்லப்பா.. உடம்பே அப்படியேஏஏஏஏ புல்லரிக்குதுபா மாப்ள..

said...

//கார்த்தி,
கும்பகோணத்துக்கும் இந்த ராசி இருந்தது. நல்லவேளை சேது படம் வந்து ஊர் பேரை காப்பாத்துச்சு.

அப்புறம் என்ன, சும்மாவாச்சும் கும்பகோணத்தை ஸ்டில் பண்ணி சினிமாவுல காட்டிடுறாங்க

எல்லாம் bloody sentiments
//

முதல் வருகைக்கு நன்றி சென்ஷி.. ஆனா அதுக்குப் பிறகு ஜி படம் ஊத்திகிச்சே பா

said...

//indha range-ku neenga post pottinganna adutha postla verum "pass" nu thaan comment panna mudiyum //

Arun, oru NaaLaikku oru pOst thaanE podurEn.inimE kurachchukkuREnn..Arun :-))

said...

/Piragu namma Karthikoda blogla thaan thuppu thuppunnu comments adichu thuppanum..
pst: Karthik, paarthu padam edungga.. hehehe... //

Ahaa..my friend.. padam\ththai edukkurathuku munnadiye postar chaani adikkireengalEpaa

Anonymous said...

Neenga oru padam eduthu oor peyarai kaapaathunganna ;)

said...

//சினிமா போஸ்ட், அதனாலே ஒரு உள்ளேன் ஐயா போட்டுட்டு ஒதுங்கறேன்.//

முழுசா படிக்காம, ஷூட்டிங்னு இருந்தவுடனே சினிமா போஸ்ட்ன்னு ஒதுங்குறது நல்லா இருக்கா மேடம்.. இதை வன்மையா கண்டிக்கிறேன்.

said...

//Neenga oru padam eduthu oor peyarai kaapaathunganna //

haniff....

Ahaa.. ellorum ithaiyE solreengalE..pechaame eduththidavaa padam..

said...

அட செந்திமெண்டாவது ஒண்ணாவது... நீங்க ஹீரோவாகி உங்க ஊர்ல எடுத்தா தான் கால்ஷீட் குடுப்பேன்னு சொல்லுங்க..

said...

நன்றி கார்த்தி...நேரம் இருந்தா வாங்க. 98805 97061

said...

//அட செந்திமெண்டாவது ஒண்ணாவது... நீங்க ஹீரோவாகி உங்க ஊர்ல எடுத்தா தான் கால்ஷீட் குடுப்பேன்னு சொல்லுங்க..//

ஆமா ப்ரியா.. அப்படித் தான் நினைக்கிறேன்.. அசின் கால்ஷீட் கிடைச்சா உடனே ஆரம்பம் தான்.

said...

inna karthi idhu..unga ooru avala raasi illadha oora? Kavala padadheenga Bharani sonna madhiri , namma ellorum sendhu oru padam eduppom....

heroine: Asin
Hero: vera yaaru naan dhen! :)
Villain: neenga

padam 100 naalu odum... theatre kulla dhaan! :D

said...

appurom ungalakku V madhri dhaan enakku B!!!!!

B endradhu engaloda Kuduma pera kurikardhu! Thaatha kaalathula irunhdu andha initial mattum munnadi thothikitey varudhu! :)

said...

nalla description of ur ooru , filmi rajyam and sentiments..

said...

படிக்காமல் ஒண்ணும் பின்னூட்டம் போடலை, படிச்சேன், சினிமாவைச் சுத்தியே இருக்கிறது. தவிர, இந்த ஷூட்டிங் எல்லாம் பார்த்தது இல்லை. பார்க்காத, தெரியாத விஷயத்தைப் பத்தி விமரிசனம் எப்படிக் கொடுக்கிறது? அதான், ஒதுங்கினேன்.

said...

oh, adhan andha padamlam odalaya? I was thinking kadhai sari illa-nu - so it all boils down to your oor. Very bad VM, neenga oorai mathunga, illa perai mathunga ;)

said...

என்ன ஆச்சு, வீக் எண்ட் மோகம் வந்துடுச்சா? முதல் ஆளா இன்னிக்காவது வரலாம்னு பார்த்தா, ரொம்ப மோசம் போங்க, தாற்காலிக முதல் அமைச்சர் :D பதவியிலிருந்து தூக்கலாமான்னு பார்க்கலாம். இப்படியா தோட்டத்துக்கு ரெஸ்ட் எடுக்கப் போறது? :-)

said...

நல்ல வேளை முன்னாடியே சொன்னீங்க...இல்லனா நானும் அங்க வந்து என்னோட படத்த எடுக்கலாம்னு இருந்தேன்..யாரு புரொட்டியூசன்னு கேக்கறீங்களா நம்ம அம்பி தான் :-)

said...

//கார்த்திக்.. எப்போ நான் வந்தாலும் நாலு போஸ்ட் ஏற்கனவே படிக்காம இருக்கு.. சேர்த்து சேர்த்துத் தான் படிக்கிறேன்..
//

KGS, எனக்கும் இதே பிரச்சனை தான்..இவர் போஸ்ட் போடும் வேகத்துக்கு நம்மால படிக்க முடியல... :-)

said...

//heroine: Asin
Hero: vera yaaru naan dhen! :)
Villain: neenga

padam 100 naalu odum... theatre kulla dhaan!//

karthik, ithukku per thaan chanthula chinthu paadurathaa

said...

//appurom ungalakku V madhri dhaan enakku B!!!!!

B endradhu engaloda Kuduma pera kurikardhu! Thaatha kaalathula irunhdu andha initial mattum munnadi thothikitey varudhu//

O..karthik..Neenga entha oorappa..

said...

//nalla description of ur ooru , filmi rajyam and sentiments//

thanks da madhu

said...

//படிக்காமல் ஒண்ணும் பின்னூட்டம் போடலை, படிச்சேன், சினிமாவைச் சுத்தியே இருக்கிறது. தவிர, இந்த ஷூட்டிங் எல்லாம் பார்த்தது இல்லை. பார்க்காத, தெரியாத விஷயத்தைப் பத்தி விமரிசனம் எப்படிக் கொடுக்கிறது? அதான், ஒதுங்கினேன்.//

சரி சரி ஒத்துக்குறேன் தலைவியே.. நீங்க படிச்சுட்டு தான் பின்னூட்டம் கொடுத்தீங்கன்னு

said...

//oh, adhan andha padamlam odalaya? I was thinking kadhai sari illa-nu - so it all boils down to your oor. Very bad VM, neenga oorai mathunga, illa perai mathunga//

Ahaa usha..enna eppadi kilambitteenGka.. unmayile padathula kathai chari illeenGka

said...

//என்ன ஆச்சு, வீக் எண்ட் மோகம் வந்துடுச்சா? முதல் ஆளா இன்னிக்காவது வரலாம்னு பார்த்தா, ரொம்ப மோசம் போங்க, தாற்காலிக முதல் அமைச்சர் :D பதவியிலிருந்து தூக்கலாமான்னு பார்க்கலாம். இப்படியா தோட்டத்துக்கு ரெஸ்ட் எடுக்கப் போறது?//

தலைவியே.. அலுவலகத்துல கொஞ்சம் வேலை அதிகம்..அது தான் நேற்று பதிவு போட முடியல.. என்னை தூக்குறீங்களா... அப்புறம் நீங்க தலைவியா இருக்க் முடியாது..ம்

said...

//நல்ல வேளை முன்னாடியே சொன்னீங்க...இல்லனா நானும் அங்க வந்து என்னோட படத்த எடுக்கலாம்னு இருந்தேன்..யாரு புரொட்டியூசன்னு கேக்கறீங்களா நம்ம அம்பி தான்//

அம்பி.. என்ன ஊர்ல எல்லா தோட்டத்தையும் வித்தாச்சா.. பாருங்க.. நயன்தாரா கூட நடிக்கனும்னு உங்களுக்கு மொட்டை போட பாக்குறார் நாட்டாமை.

said...

//KGS, எனக்கும் இதே பிரச்சனை தான்..இவர் போஸ்ட் போடும் வேகத்துக்கு நம்மால படிக்க முடியல//

நாட்டாமை.. என்ன இது இவ்ளோ பெரிய கம்பிளைண்டும்

said...

@ச்யாம், நான் போற இடத்திலே எல்லாம் எனக்கு முன்னாலே வந்துட்டுப் போறீங்க, ஆனால் என்னோட பதிவுக்கு வரதில்லை? அப்புறம் புதரகத் தூதுவர் பதவிக்கு வேட்டுத் தான். :D

அங்கே மழை எல்லாம் எப்படி? இப்போ குறைஞ்சிருக்கா? நீங்க என்னோட பதிவுக்கு வரதில்லையா, வந்த இடத்திலே விசாரிக்க வேண்டியதாப் போச்சு.

said...

Madam, ungaloda intha comment innikkuth thaan paaththEn