Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, May 22, 2010

நடிகர் விஜயின் 'தல'க்கு மேல் கத்தி


அடுத்தடுத்து ஆதி முதல் சுறா வரை (போக்கிரி மட்டும் இதில் விதிவிலக்கு) மொக்கை படங்களாய், அரசியல் ஆசை காரணமாய் அவசர அவசரமாய் எடுத்த எல்லா படங்களும், செல்போன் நிறுவனங்களுக்கு மட்டும் லாபம் தந்து, தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு போட வைத்ததால், இன்று கூடும் அதன் சங்க உரிமையாளர்கள் மிகவும் முக்கியமான முடிவுக்கு (தங்கள் சங்கத்திற்கு இலவசமாக ஒரு படம் இல்லை ரெட் கார்டு) வர இருக்கின்றனர். ஏற்கனவே ஆதி படத்தின் போது இதே போல ஒரு பிரச்சினை ஏற்பட்டது. எப்படியோ சமரசம் செய்து, சரிசெய்தார்கள். இப்போது மறுபடியும்?

ஒவ்வொரு முறையும் அடுத்த படத்தில் சம்பாதித்து விடலாம் என்றும் ரசிகர்களை போல நம்பிக்கொண்டிருந்த இவர்களுக்கு, சுறா பெரிய ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் வேலைக்கு ஆகாது இன்று நினைத்து விஜய்க்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருகின்றனர்.

தியேட்டர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கும், இவ்வளவு காலமா என்ன பாஸ் பண்ணிகிட்டு இருந்தீங்க? சுறாவுக்குமா அதிக விலை கொடுத்தீங்க?

விஜய் சார், தியேட்டர் ஆபரேட்டர் முதல் உங்கள் 'குட்டி' ரசிகர்கள் வரை எல்லோரும் கடுப்பாகி இருக்கின்றனர்.. வித்தியாசமா ஏதாவது பண்ணுங்கண்ணா..

கௌதம் சாருக்கு திருப்பாச்சி, சிவகாசி டிவிடி பாக்கத்தானே கொடுத்தீங்க?
ஆமா, ராகுல் கிட்ட உங்கப்பாவுக்கு கவர்னர் போஸ்ட் கேட்டீங்களாமே, உண்மையா.. பாத்துங்கண்ணா உங்களை பத்தி இப்படித்தான் நிறைய நியூஸ் வருது..

இனிமேலாவது நல்ல படம் கொடுங்கண்ணா..

Friday, May 21, 2010

ரஜினியின் ஆங்கிலம்

ரஜினியின் படங்களில், ஆரம்பித்தில் இருந்து இன்று வரை பல விஷயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும், பாம்பு, கராத்தே ஸ்டைல், முக்கியமாக ஆங்கிலம் பேசுற ஸ்டைல் என்று பெரிய பட்டியல் நீளும்.

ரஜினியின் ஆங்கிலம் பேசும் விதத்தில், இன்னமும் மனசில் நிலைத்த படம் குரு சிஷ்யன். படம் நெடுக ரஜினி காமெடி சரவெடி வெடித்துக் கொண்டிருப்பார். இன்னமும் குரு சிஷ்யன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்தால், சேனல் மாற்றாமல் ரசிப்பது உண்டு. ஒவ்வொரு முறையும் அவர் ஆங்கிலம் தெரிந்த மாதிரி எதையாவது பேச, மற்றவர்கள் முழிக்க, அப்படியொரு படம் வந்தே நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்து இன்றும் மனதில் நிற்கும் வசனம் "Mr. Paramasivam, I want to know, No or Yes". படம் பாருங்கள் நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.

குரு சிஷ்யன் தவிர, வேலைக்காரன் வசனம் "I can talk English, I can walk English, I can swim English" மிகவும் பிரபலமானது.

அண்ணாமலை, உழைப்பாளி போன்ற படங்களில் ரஜினி ஆங்கிலம் பேசுவதும், அதை அவர் குழப்பி அடிப்பதும் எல்லோராலும் ரசித்த ஒன்று. இப்படி இவர் படங்களில் ஆங்கிலத்தை குழப்பி அடிக்க, ஷங்கரின் சிவாஜி என்னை ஆச்சரியப்படவைத்தது. ஆம். நுனி நாக்கில் ரஜினி ஆங்கிலம் பேசியது முற்றிலும் வித்தியாசம் தான். எப்படி அவர் ஆங்கிலம் பேசத் திணறியது மிகவும் ரசிக்கப்பட்டதோ அதே போல், அவரின் சரள ஆங்கிலம் வெகுவாக ரசிக்கப்பட்டது என்பது உண்மை. Cool Buddy!

சிவாஜியிலே அப்படி என்றால், எந்திரனில். எல்லா ரசிகர்களுடன் நானும் எதிர்பார்ப்பில்.

Saturday, January 23, 2010

சென்டிமெண்ட் சினிமா : எம்ஜிஆர் பட தலைப்புகளும் வசூல் வீழ்ச்சிகளும்

சமீபத்தில் வந்து பயங்கர விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் வரை எம்ஜியார் பட தலைப்புகளை வைத்த எந்த படங்களும் வசூலை வாரி கொடுக்கவில்லை என்பது உண்மை. எனக்கு ஞாபகம் இருந்து சரத்குமார் நடித்த நாடோடி மன்னன் தான் எம்ஜிஆர் தலைப்பில் வந்த முதல் படம் (ஏதோ எல்லா சரத்குமார் படங்களும் பயங்கர வெற்றியை கொடுத்த மாதிரியும் இது ஓடாததிற்கு ஒரு காரணம் சொல்வதாக நினைக்க வேண்டாம்) அதை பின் அன்பே வா, வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஓருவன் எல்லாமே குப்பர படுத்துக்கொண்ட படங்கள் தான்.. என்ன காரணமாக இருக்க முடியும்.. கதையும் கொடுத்த விதமும் சரியில்லை என்பது தான் முதல் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட் பார்க்காத ஆள் யாரும் இல்லை. அப்படி இருக்க மறுபடியும் ஏன் இப்படி தலைப்புகளை தெரிவு செயவேண்டும்..

இப்போது நடிகர் ராஜ்கிரண் தனது புதி சொந்த படதிற்கு மலைகள்ளன் என்று பெயர் வைத்திருக்கிறார். ஓடுமா அந்த படம்? நீங்கள் தமிழ் சினிமாவின் சென்டிமெண்டுகளை நன்றாக கவனித்தாலே ஒரு படம் ஓடுமா ஓடாதா என்று சரியாக சொல்லிவிட முடியும். எப்படி? வரும் வாரங்களில் பார்க்கலாம். ஒரு உதாரணதிற்கு, வில்லு ஓடாது என்று என் நண்பர்களிடம் நான் எடுத்து சொன்ன சென்டிமென்ட் காரணங்கள் கீழே
1. ஒரு பொங்கல் விட்டு ஒரு பொங்கலிலோ, அல்லது ஒரு தீபாவளி விட்டு ஒரு தீபாவளிலோ தான் விஜய் படங்கள் ஓடி உள்ளன. ஒரு பொங்கலில் ஆதி காலை வாரிவிட, அடுத்ததில் போக்கிரி தூக்கி நிறுத்தியது. அதனால் அடுத்த பொங்கல் ரிலீசான வில்லு இந்த சென்டிமென்ட் படி படுத்துகொள்ளூம்.
2. சூப்பர் வெற்றி கொடுத்த இயக்குநர் விஜயின் அடுத்த படத்தை கவிழ்த்து இருக்கிறார். பாசில் காதலுக்கு மரியாதைக்கு பிறகு கண்ணுக்குள் நிலவிலும், ரமணா திருமலைக்கு பிறகு ஆதியிலும்.. அதனால் போக்கிரிக்கு பிறகு வில்லுவும் பிரபு தேவா எடுப்பதால் கவிழ வாய்ப்பு உள்ளது. (இதில் பேரரசு விதிவிலக்கு).
3. அப்போது நயன்தாராவின் மார்க்கெட் கீழ் நோக்கி சென்று கொண்டிருந்ததால்.. ஏகன், சத்யம் என்று அவரின் படங்கள் அடிமேல் அடி வாங்கி கொண்டிருந்தன

மேலே சொன்ன மாதிரி இன்னும் பல சென்டிமென்ட்கள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக அலசி காய்ப்போடுவோம் நேரம் கிடைக்கும் போது

Tuesday, November 04, 2008

இப்படியும் நடந்து இருக்கலாமோ - அஜித்தும் நடிகர் சங்க உண்ணாவிரதமும்

புரட்சி புண்ணாக்கு எழுதிய இந்த கட்டுரையை படியுங்கள், நீங்கள் சொல்வீர்கள் இப்படியும் நடந்திருக்கலாமோ என்று

Monday, September 15, 2008

நாலு வரியில் புதுப்பட விமர்சனங்கள்

தாம் தூம் - ஆங்கில இசை தொகுப்பை போல பாடல் காட்சிகள், வழக்கமான ஜீவா படத்தின் ஹை-லெட்டான ஹாரிஸ் ஜெயராஜின் அசரவைக்கும் பாடல்கள், ஜெயம் ரவியின் நடிப்பு, இவைகள் படத்தின் தூண்கள். திரைக்கதை இன்னும் மெருகேற்றப்பட்டிருந்தால் இன்னும் அசத்தலாக இருக்கும் - 5.5/10


பொய் சொல்ல போறோம் - முதல் பாதியில் ஆமை வேக கதையில் எல்லாமே வறட்சி.. இரண்டாவது பாதி பரவாயில்லை - 4/10

சத்யம் - கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு ஏற்ற வகையில் படம் இல்லை. நிச்சயமாக இது விஷாலுக்கு சறுக்கல் தான். தாம் தூமிற்கு இசை பலம் தந்த ஹாரிஸ் இதில் காலை வாரிவிட்டிருக்கிறார். சண்டை காட்சிகள் மட்டும் பரவாயில்லை, அதுவும் கூட்ட கூட்டமாக வருவதால் சலிப்பு தான் - 3.5/10

Thursday, June 19, 2008

தசாவதாரம் - ஆராய்ச்சிகள் 1

தசாவதாரம் படத்திற்கு முன், எனக்கொரு சின்ன சந்தேகம் இருந்தது.. இவ்வளவு பணத்தை இறைத்து எடுக்கப்படும் படம் வியாபார ரீதியாக ஓடுமா என்று? ஏனெனெனில் ஆளவந்தான் இது போன்று உரக்க பேசப்பட்டு கடைசியில் உப்பில்லாத ப(ண்)டம் ஆனது. படத்தின் விற்பனைக்கு பெரிதும் உதவிய பத்து வேடங்கள் எந்தவாறு உதவும் என்றும் ஐயமும் இருக்கத் தான் செய்தது. என்னை பொறுத்தவர் படம் நன்றாக இருக்கிறது, முந்தைய பதிவில் சொன்னது போல.. கயாஸ் தியரி மற்றும் பட்டாம்பூச்சி எபெக்ட்களை பற்றி பின்னால் பார்ப்போம். முதலில் பாத்திர படைப்புகளை பற்றி காண்போம்.

படத்தில் மொத்தம் நான்கு கமல்கள்.. என்னடா பத்து வேடங்கள் என்று சொன்னார்களே என்று பார்க்கிறீர்களா? நான் சொன்னது கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று கமல் இந்த படத்தில் எடுத்துக்கொண்ட வெவ்வெறு பரிமாணங்கள் பற்றி. படத்தில் சிறு சிறு விஷயங்கள் கூட சிலாகிக்க தகுந்தவை.. படத்தின் கதை எல்லோருக்கும், படம் பார்க்காதவர்களுக்கு கூட தெரியும் என்பதால் அதை பற்றி பெரியதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை.

படத்தில் நாம் முதலில் எடுத்துக்கொள்வது, மணற் கொள்ளையை எதிர்க்கும் வின்சென்ட் பூவராகன் பாத்திரம். அதில் நான் கவனித்த சில விஷயங்களை பட்டியலிடுகிறேன்.

1. பெரும்பாலும் தலித் இன மக்கள், கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட, கிறித்துவ - இந்து கலந்த பெயர் வின்சென்ட் பூவராகன். இதில், நாகர்கோயில்காரராக பூவராகனை வடித்திருப்பதிலும் இது சரியே என்று தெரிகிறது.
2. கே.எஸ்.ரவிகுமார் படம் என்றாலே கற்பழிப்பு காட்சிகள் இருக்கும் என்று எல்லோரும் விமர்சனங்களில் எழுதியிருந்தனர். ஆனால், அந்த விஷயம் கதையில் மிக முக்கியமானது. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன். தனது மேலாடை உருவப்படும் போது ஆன்டாள், நாராயணா என்று ஆண்டவனை அழைக்கிறாள். திரௌபதிக்கு சேலை தந்து காத்தது போல், இங்கேயும் நுழைகிறது பூவராகன் கதாபாத்திரம். அங்கே கண்ணன் கறுப்பு.. இங்கே பூவராகனும் அப்படியே. கண்ணனும், பூவராகனும் கனுக்காலில் கூர்மையான ஆயுதம் குத்தியே இறந்து போகின்றனர். கமல், பூவராகன் பாத்திரத்தை கண்ணனோடு ஒப்புமை படுத்திய உருவாக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.
3.சந்தான பாரதி, பி. வாசு இருவரும் தவறு செய்பவர்களே.. அதுவும் தப்பு செய்ய தூண்டும் பி.வாசுவே பெரிய குற்றவாளியாக தோன்றுகிறார். ஆனால், கதையில் பி.வாசு சாகாமல் சந்தாபாரதி சுனாமியால் இறப்பது ஏன்? அதற்கான காரணங்கள்
அ) பெண்ணை மானபங்க முயற்சி செய்ததால்
ஆ) பி.வாசு இறந்திருந்தால் சந்தான பாரதி மணற்கொள்ளையை தொடர்ந்திருக்கலாம். இப்போது, பி.வாசுவின் மகன்களை பூவராகன் காப்பாற்றியதால், அவரது கால்களில் விழுந்து மனது மாறுகிறார். இனிமேல் மனற்கொள்ளை நிச்சயம் நடக்காது
இ) பூவராகனை விட சந்தான பாரதி தான் பி.வாசுவுக்கு உறவினர். ஆனால், பூவராகனும் சந்தானபாரதியும் இறந்து கிடக்கும் இடத்தில் அவரது எல்லா உறவினரும் பூவராகனை சுற்றியே. என்னதான் உறவினராய் இருந்தாலும், நல்ல உள்ளங்கள் போற்றப்படுகிறான் என்பது உணர்த்தப்படுகிறது இங்கே
4. கிருஷ்ணவேணி பாட்டி, இறந்த பூவராகனை மகனாக நினைத்து அழும்பொழுது சாதி உணர்வுகள் உடைத்தெரியப்படுகிறது.. அதற்கேற்றார்போல் அங்கே வசனங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

"நம்ம ஆராமுதன் சிவப்பால இருப்பான்"
"உள்ளே சிவப்பு தாண்டா.. உழச்சு உழச்சு கறுப்பாயிட்டான்"

இப்போது பொதுவான சில விஷயங்கள்...

1. இரண்டாம் உலகப்போரில் ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு இருந்தது ஜப்பானும் (கடைசியில் சுனாமி என்று கத்தி சொல்வதற்கும் இவர் உதவி உள்ளார். நன்றாக பார்த்தால் இந்த சுனாமிக்கு முன்னர் ஜப்பான் நாட்டை சேர்தவர்கள் தான் அதை பற்றி அதிகம் அறிந்து வைத்திருந்தனர்), அமெரிக்காவும்.. அந்த இரண்டும் நாடுகளும் உலகத்தை அழிக்கும் சக்தியை எதிர்த்து நேரடியாகவும் மறைமுகமாகவும் போராடுகின்றன.. இதற்கு வழக்கம்போல் இந்தியா உதவுகிறது
2. இந்தியாவில் பஞ்சாப் (அவ்தார் சிங்), ஆந்திரா (பல்ராம் நாயுடு), தமிழ்நாடு (கோவிந்த்) (நரசிம்மராவ் என்று வரும் அந்த கொரியர் அலுவலக கன்னட இளைஞனையும் சேர்க்கலாம்) என்று மாநிலங்களுக்கு இடையே கதாபாத்திரங்கள் அமைத்து, அவர்களும் தீய சக்தியை அழிக்க மறைமுகமாகவோ நேரடியாகவோ உதவுகின்றனர்
3. மூன்று முக்கிய மதத்தை சார்ந்த கதாபாத்திரங்கள் (கோவிந்த், வின்சென்ட் பூவராகன், கபி ஃபுல்லாகான்)
4. ஒரே மதமாயினும் வேறு வேறு வகுப்பை சார்ந்தவர்கள்

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் மெல்ல மெல்ல கதைக்கு ஏற்றவாறு அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன.. நன்றாக இன்னும் ஆராய்ந்து பார்த்தால் கமலின் புலமை நமக்கு தெள்ள தெளிவாக தெரியும்..

இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் அடுத்த பதிவில்.. காத்திருங்கள்..

உங்கள் எண்ணங்களையும் மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்



பின் குறிப்பு : நான் அக்மார்க் ரஜினி ரசிகன் என்பது நான் பிளாக் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து பதிவுகளை படிப்பவர்களுக்கு தெரியும்

Tuesday, June 17, 2008

தசாவதாரம் - எங்கெங்கும் விமர்சனம்

பிளாக் உலகம் ஆரம்பித்த பிறகு, ஒரே படத்திற்கு இத்தனை விமர்சனங்கள் கிடைத்தது தசாவதாரதிற்குத் தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள். விமர்சனங்கள் படித்த பிறகு படத்திற்கு செல்வோர் இவர்களின் விமர்சனங்கள் பார்த்து மண்டை குழம்பி போய் உள்ளனர்.. கயாஸ் தியரி, பட்டர்பிளை இபக்ட் என்று புதுசு புதுசாக சொல்கிறார்கள்.. ஒன்றும் புரியவில்லை.. இரண்டாவது நாளே ஓசி டிக்கட்டில் படம் பாத்தாகிவிட்டது. உண்மையில், எனக்கு படம் பிடித்து தான் இருந்தது.. அப்ப விமர்சனம் எழுதலையா என்று கேட்கிறீர்களா.. இதோ நாளை இரண்டாவது தடவையாக சொந்த காசில் பார்க்க போகிறேன்.. வந்து விரிவாக எழுதுகிறேன்

Monday, May 26, 2008

சிவாஜி - குருவி ஒற்றுமை

தன் வழி தனி வழி என்று சொல்லும் ரஜினியின் வழியில் செல்ல பல நடிகர்கள் போட்டா போட்டி. இதில் எப்போதும் முன்ணணியில் இருப்பவர் நடிகர் விஜய். பாபா படம் சரியாக ஓடாத போது, இனி ரஜினி அவ்வளவு தான் என்று சந்தோசப்பட்டு சந்திரமுகிக்கு இணையாக சச்சினை களமிறக்கி அடி வாங்கி கொண்டவர்.

சமீபத்தில் பலரும் பல நெகடிவ் விமர்சனங்கள் தந்திருந்த போதும், எனது மனைவி விஜய் ரசிகர் என்பதால், வேறுவழியில்லாமல் குருவி படம் இருநூறு ரூபாய் செலவழித்து சத்யம் திரையரங்கத்தில் காண நேரிட்டது. படம் மாஸ்க் ஆஃப் ஜெரோ, தி பிரஞ்சு கிஸ் ஆகிய ஆங்கில படங்கள் மற்றும் சத்ரபதி என்னும் தெலுங்கு படத்தின் தழுவல் என்றாலும், பல இடங்களில் சிவாஜியின் சாயல் தெரிந்தது. அது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.. கவனித்ததை பட்டியலிடுகிறேன், இன்னும் இருந்தால் நீங்களும் பட்டியலை தொடருங்கள்

1. சிவாஜியில் ரஜினியின் அப்பா மணிவண்ணன், குருவியில் விஜயின் அப்பாவும் இவரே
2. சிவாஜியிலும் குருவியிலும் வில்லன் சுமன்
3. சிவாஜியில் இடைவேளையின் போது காசை சுண்டிவிட்டு, சிங்க பாதையா பூப்பாதையா என்று ரஜினி விவேக்கிடம் கேட்பது போன்று, இங்கேயும், மலேசியா கிளப் சண்டைக்கு முன்பு விஜய் இரு விரல்களை காண்பித்து அகிம்சை, அடிதடி என்று விவேக்கை தேர்வு செய்ய சொல்வது
4. சிவாஜியில் ரஜினி செத்து பிழைப்பது போல், இதிலும் விஜய் தண்ணீரில் இறந்து விட்டது போல் காட்சி அமைத்திருந்தது
5. மியூஉசிக்கல் ஸ்டோரில் நடக்கும் முதல் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி, குருவியில் மலேசியா கிளப் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி..
6. இது ஒற்றுமையா என்று தெரியவில்லை.. இரண்டிலும் நாயகர்கள் கூடவே விவேக்

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.. இன்னும் இருந்தால் பின்னூட்டதில் சொல்லுங்கள் நண்பர்களே..இது படத்தை குறை சொல்ல எழுதியதில்லை.. கவனித்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே..

பி.கு: கல்யாணம் முடிந்து விருந்து என அலைந்து இப்போது தான் கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார முடிந்தது.. இனி எழுத்து ஊர்வலம் தொடரும் என்று நினைக்கிறேன்.. கல்யாணத்திற்கும், பிறந்த நாளிற்கும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

இந்த மாதம் மத்தியில் திருமணம் செய்து புது வாழ்க்கை தொடங்கிய கவிதாயினி வேதாவிற்கும், மாப்ள பரணிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Saturday, February 16, 2008

முனியாண்டி, விலங்கியல் மூன்றாம் ஆண்டு



மெட்டி ஒலி புகழ் திருமுருகன், தன் முதல் முயற்சியான எம் மகனில் தன்னை ஒரு நல்ல டைரக்டர் என்று நிருபித்தார். இப்போது அதே குழுவோடு அடுத்த படத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த படத்தின் புகைப்படங்கள் இப்போது தான் வெளியடப்பட்டிருக்கிறது.



படத்தின் குழுவில், எம் மகனின் நாயகி கோபிகா தவிர, பெரும்பாலும் அனைவரும் அதே ஆட்கள்.. கோபிகாவிற்கு கால்ஷீட் இல்லாததால், தனக்கு தெரிந்த இன்னொரு தூரத்து பெண்ணை டைரக்டருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.. அவர் பெயர் தாமரை.. சாயலில் கோபிகா போலவே இருக்கிறார்.



இந்த கலர் தாவணி, கோயில் அம்மன் வருவது போல ஒரு உணர்வை தருகிறது.. கோபிகாவை போலவே நன்றாக மணம் வீசுவாரா இந்த தாமரை?



திருமுருகன், படத்தின் கதைக்கு தரும் முக்கியதுவத்தை படத்தின் தலைப்பிற்கும் தருவார் போல...

Friday, February 15, 2008

பரபரப்பாய் தமிழ்நாடே பாக்குற பாட்டு

இப்போதைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே விடாம பாத்து பாத்து ரசிக்குற படப்பாடல் இது.. இனிமேல் வடிவேல் தேவையில்லை..விவேக் வேண்டாம் நகைச்சுவைக்கு.. லாரன்ஸ் ஓடட்டும்.. ராஜூ சுந்தரம் ரிட்டர்யட் ஆகட்டும்.. எங்கள் அண்ணன் சாம் அன்டர்ஸ்னின் பாடல் அசைவுகளுக்கு ஈடு கொடுக்க யாரும் உண்டோ..



வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்.. இந்த பாடலை பார்த்தா நோய் எந்த ஜென்மத்திற்கும் வராது..

இந்த பாடல் சமீபத்தில் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல்.. எங்கள் நண்பர்களுக்கு மத்தியில் சாம் அன்டர்ஸன் தான் ஹீரோ

Wednesday, February 13, 2008

யார் இவர்? எதற்காக இந்த வேஷம்?





இது கமல் தான்.. தசவதாரதிற்கான வேடம்.. சரியாய் பதில் சொன்ன எல்லோருக்கும் ஒரு சபாஷ்

Saturday, January 26, 2008

விஜய் - த்ரிஷா - காதல் - மறுபடியும் - கிசுகிசு?

நான் தனியாக எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஜுனியர் விகடனில் வந்த இந்த கிசு கிசுவை நீங்கள் படித்து பொருள் தெரிந்து கொள்ளுங்கள்..


இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த போதும், இதேபோல் செய்திகள் உலா வந்தது.. மறுபடியும் இப்போ..

Thursday, January 24, 2008

2007-ன் மயக்கும் மெட்டுக்கள்

ஒவ்வொரு வருடமும் கணக்கு வழக்கில்லாத படங்கள் வெளியிடப்படுகின்றன, தமிழ் சினிமாவில்.. படத்தின் பூஜையின் போது எல்லோரும் அந்த படம் வெற்றி பெறவே உழைக்கிறார்கள்.. ஆனால் பத்துக்கும் குறைவான படங்களே நினைத்த வெற்றியை பெறுகின்றன.. மிச்சமிருப்பதில் பத்து படங்கள் தயாரிப்பாளரின் வயிற்றில் பாலை வார்கின்றன. ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் அதிகமாக தன் பங்கை தருபவர்கள் படத்தின் இசையமைப்பாளர்கள்.. படம் வருவதற்கு முன்னரே மக்களின் மனதில் படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பை தந்துவிடுகின்றன.. தியேட்டர் வரை அவர்களை இழுத்தும் வருகின்றன..

2007-ல் அப்படி ரசிகர்களை கட்டிப்போட்ட படங்களின் பாடல்கள் என்னென்ன.. எனது பார்வையில் ஒரு சிறிய பட்டியல்.. எனது காருக்கான ஒரு ஆடியோ சிடி எழுதினால் அதில் என்னென்ன பாடல்கள் இருக்கலாம். நிச்சயம் இதில் உங்கள் பட்டியலில் இருக்கும் சில பாடல்கள் இருக்கும்.. ஏனென்றால் இந்த வருடம் அநியாயதிற்கு ரசிக்க, மயக்க பல பாடல்கள் இருக்கின்றன.. ஆனால் எல்லாவற்றையும் ஒரு சிடியில் அடக்க முடியாது.. உன்னாலே உன்னாலே படத்தில் அனைத்தும் பாடல்களும் தலையசைக்க வைப்பவை.. அதில் அதிகமா பிடித்த ஒரு பாடலை மட்டுமே இங்கே பட்டியலில் சேர்த்திருக்கிறேன்..

மெலடி மெட்டுகள்
(வரிசை சும்மா தான்.. ரேட்டிங் இல்லை)

தொட்டால் பூ மலரும் - அரபு நாடே (ஹரிச்சரன்,யுவன் இசை:யுவன்)
சென்னை 28 - யாரோ யாருக்குள் யாரோ (SPB, சித்ரா இசை:யுவன்)
தீபாவளி - காதல் வைத்து (
விஜய் யேசுதாஸ் இசை:யுவன்)
கற்றது தமிழ் - பற பற பட்டாம்பூச்சி (ராகுல் இசை:யுவன்)
பருத்தி வீரன் - அறியாத வயசு (இளையராஜா இசை:யுவன்)
பொல்லாதவன் - மின்னல் கூத்தாடும் (கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ இசை:ஜிவி பிரகாஷ்)
கிரீடம் - அக்கம் பக்கம் (சாதனா சர்கம் இசை:ஜிவி பிரகாஷ்)
பச்சைக்கிளி முத்துச்சரம் - காதல் கொஞ்சம் (நரேஷ் ஐயர் இசை:ஹாரிஸ் ஜெயராஜ்)
பொறி - பேருந்தில் நீ எனக்கு (மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ இசை:தினா)
சிவாஜி வாஜி வாஜி (ஹரிஹரன், மதுஸ்ரீ இசை:ஏஆர் ரகுமான்)


தாளப் பாடல்கள்

சிவாஜி - அதிரடிக்காரன் (ஏஆர் ரகுமான், சயனோரா இசை:ஏஆர் ரகுமான்)
கருப்பசாமி குத்தகைக்காரர் - நாலு கோபுர (திப்பு, சின்னப்பொன்னு இசை : தினா)
போக்கிரி - டோலு டோலு தான் (ரஞ்சித், சுசித்ரா இசை: மணிசர்மா)
பில்லா - வெத்தலையை போட்டேன்டி (சங்கர் மகாதேவன் இசை:யுவன்)
சென்னை 28 - சரோஜா சாமானிக்காலோ (ஷங்கர் மகாதேவன், ப்ரேம்ஜி அமரன் இசை:யுவன்)
பருத்தி வீரன் - ஊரோரம் புளியமரம் (சரோஜா, பாண்டி, லக்ஷ்மி, கார்த்திக் இசை:யுவன்)
சிவி – மாயாவி நீயா (ஹரிச்சரன், க்ரிஷ், ஸ்ருதி இசை: தரன்)
தாமிரபரணி - கட்டபொம்மன் ஊரெனெக்கு (விஜய் யேசுதாஸ் இசை:யுவன்)
பொல்லாதவன் - எங்கேயும் எப்போதும் (SPB, யோகி B, சுனிதாசாரதி இசை:ஜிவி பிரகாஷ்)
ஓரம் போ - கோழி காலு (கைலாஷ் நாயர், ஜாஷி கிஃப்ட் இசை: ஜிவி பிரகாஷ்)

இந்த வருஷம் அதிகப்படங்களுக்கு இசையமைத்தது யுவனாகத் தான் இருக்கும். ஆனால் அதில் சில படங்களுக்கு மோசமான இசை அமைந்திருந்தாலும் (மச்சக்காரன்?), பல படங்கள் அந்தந்த நேரத்தில் வரிசை பட்டியலில் நல்ல இடத்தில் தான் இருந்தன.. மற்றும் ஜிவி பிரகாஷின் பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பேற்றது உண்மை தான். அதுவும் 2008-ல் ரஜினி நடிக்கும் குஷேலன் படத்தின் இசை பொறுப்பும் ஜிவி பிரகாஷிற்கு கிடைத்துள்ளது. இன்னும் நல்ல இசை தந்து மகிழ்விக்க வாழ்துக்கள் அவருக்கு!

திரையிசையில் அழையாமல் நுழைந்து விட்ட ஒன்று ரீமிக்ஸ் பாடல்கள். மக்கள் வரவேற்றாலும் அதை எதிர்ப்பவர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது.. இந்த வருடமாவது அதன் தாக்கம் குறைந்து இசையமைப்பாளர்கள் அவர்களின் சொந்த திறனை தருவார்களா நல்லிசையாக?

Saturday, December 29, 2007

கண்ணதாசனும் இளையராஜாவும் படைப்பதால் இறைவர்கள்

கண்ணதாசன்.. எளிய வரிகளில், இசையோடு தனது கருத்தை, தேனோடு பாலாக, கலந்து தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்து படைத்தவர்.. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்.. இன்னமும் ஒவ்வொரு நீள் ஒலி குழாய்களிலும் ஒலித்துகொண்டிருக்கும் உன்னத வார்த்தைகளுக்கு வடிவம் தந்தவர்.. இன்னமும் இவரைப் போல, வாழ்க்கைக்கு, வாழ்க்கையோடு ஒன்றிய பாடல்களை தந்தவர் யாரும் இல்லை..

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

இந்த பாடலை, நினைப்பதெல்லம் நடந்துவிட்டால் என்று நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் இந்த பாடலை, கேட்டால், யாருக்குத் தான் தெளிவு பிறக்காது.. எந்த மனதிற்குத் தான் ஆறுதல் கிடைக்காது.. இது தான் கண்ணதாசனின் பாடல்களில் இருக்கும் அடிக்கருத்தே..

ஒவ்வொரு பாடலும் ஒரு தனி ரகம்.. கேட்க கேட்க படத்தின் நாயகனுக்கு எழுதிய பாட்டில் சிறிது நேரத்தில் நாம் நாயகனாக குதிரை சவாரி செய்வோம்.. வருத்தமென்றாலும், காதல் சொட்டும் வரிகள் என்றாலும், வீரம் என்றாலும், விவேகம் தரும் வேகம் என்றாலும், கண்ணதாசனின் வரிகளுக்கும், அந்த தத்துவதிற்கும் நிகர், அவரின் படைப்புகளே..

எங்கள் ஊர் மைக்-செட்டுகளில் இன்னமும் புதிய பாடல்களை விட அதிகமாய் ஒலித்துக்கொண்டிருப்பது பழைய பாடல்களே.. அதுவும் கண்ணதாசனின் காதல் பாடல்கள் பிரசித்தம்.. கவியரசுவின் காதல் பாடல்களின் கேசட்டுகள் பகுதி பகுதியாய் அடுக்கி வைத்திருப்பார்கள். இங்கே வந்த பிறகு கஷ்டப்பட்டு அதில் பாதியை தான் வலையில் இருந்து இறக்குமதி செய்ய முடிந்தது.

சிவாஜி நடித்த ரத்தத் திலகம் படத்தில் கண்ணதாசனே திரைப்பாத்தில் தோன்றி பாடும் பாடல் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. தன்னை பற்றை அவரே பாடுவது போன்ற ஒரு பாடல்.. வரிகள் எல்லாம் கண்ணாடி போல அவரது நிறைகுறை கொண்ட குணங்களை சொல்லும்..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவிய தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்

இடையில், இப்படி பாடல்கள் படைப்பதால் தன்னை இறைவன் என்று சொல்கிறார் கண்ணதாசன்.. உண்மை தானே

இளையராஜா - அன்னக்கிளியில் தமிழ் நாட்டு மக்களை, அந்த படத்தின் பாடல்கள் இசைக்கும் ரேடியோ பெட்டியின் முன்னே, கட்டிப் போட்டவர்.. இசையில் எல்லா பரிமாணத்தை, உருவி எடுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கையில் இசைத் தேன் மழை பொழிந்தவர். இவரின் ஒவ்வொரு பாடல்களும் ஆராய்ச்சி செய்கின்ற அளவுக்கு ஒரு பெரிய கடல் என்பது ஒவ்வொரு பாடலாக கேட்டவர்களுக்கு நிச்சயமாய் புரிந்திருக்கும்.

இளையராஜா பாடல்களின் தேடல் வேட்டையில் கிட்டதட்ட எண்பது சதவிகிதத்தை நெருங்கிவிட்டேன்.. இனிமேல் மிச்சமுள்ள இருபது சதவிகிதம் தான் கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. முயற்சி திருவினையாக்கும் என்று முயல்கிறேன்.. கடலில் குதித்து முத்தெடுப்பது என்பது சுலபமில்லை தானே

பாடல்கள் தவிர, இளையராஜவின் படங்களில் பெரிய பலம் பின்ணனி இசை.. அந்த கதாபாத்திரத்தின் துடிதுடிப்பை, உணர்ச்சியை அப்படியே நமக்குள் ஏற்றி, அந்த காட்சியில் நம்மை வைத்து நாம் பதறும் அளவுக்கு, அதற்கு இசை உயிரூட்டியவர் இசைஞானி.

பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் மடை திறந்து என்று ஒரு பாடல் வரும். அது கிராமத்திலிருந்து இசையப்பாளனாக வந்த ஒருவன், வாய்ப்பு கிடைத்த பிறகு தன்னை நினைத்து பாடும் பாடல். கிட்டதட்ட இசைஞானியின் கதை.. அதனால் அதன் பாடல்வரிகளும் அதை ஒத்தே தான் இருக்கும்..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

இங்கே இளையராஜா பற்றிய வரிகளை அழகாக வாலி தந்திருப்பார்.. அதுவும் இந்த வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்துமாறு மேஸ்ட்ரோவே பாடலில் வந்திருப்பார்.. மிகவும் உயிரோட்டமான பாடல்..

இவ்வாறாக, ஒரு இறைவன் பாடல் வரிகளை தந்திருக்க, ஒரு இறைவன் அதற்கு இசை உயிர் தந்திருக்க ஆழ்ந்த அமைதியில் நமக்குள் தெய்வத்தை காண வைக்கும் பாடல், மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல்.. இந்த பாடல், தான் இறக்கும் முன்பு, சென்னை விமான நிலையத்தில் வைத்து கண்ணதாசன் எழுதி கடைசிப் பாடல்.

Tuesday, December 18, 2007

கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லா

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் சார்பாக இந்த வாரம் கொலம்பஸ்ஸில் 'தல'யின் பில்லாவை திரையிடுகிறார்கள்.. டிக்கட்களுக்கு, சங்கத்தின் செயலாளர் சரவணகுமாரை (740 549 3707) அணுகவும்.


Saturday, December 15, 2007

சேரன் தேடிய சீதை

பழைய தமிழ் படங்களின் பெயரை மறுபடியும் பயன்படுத்துவதும், பாடலை மட்டுமல்லாமல் கதையையும் அப்படியே எடுப்பது இப்போது கோலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. படத்தின் பெயரை பயன்படுத்துவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. எனக்கு நினைவு தெரிந்து கமலின் சதிலீலாவதி அதற்கு பிள்ளையார் சுழி போட்டது என்று சொல்லலாம். இப்போது சேரனின் அடுத்த படத்திற்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்து வெற்றி பெற்ற ராமன் தேடிய சீதை தான் தலைப்பு. படத்தை புதிய கீதை, கோடம்பக்கம் படத்தை இயக்கிய ஜெகன்ஜி தான் இயக்குகிறார். இவர் சேரனின் சீடர். புதிய கீதையும் கோடம்பாக்கமும் அந்த அளவுக்கு தியேட்டர்களில் ஓடி கல்லா நிரப்பவில்லை. இந்த படமாவது தனக்கு நல்ல பேரைத் தரும் என்று எதிர்பார்க்கிறார் ஜெகன்ஜி. கோடம்பாக்கம் படம் நல்ல பேரைத் தந்தாலும் தயாரிப்பாளரின் கையை சுட்டதென்னவோ உண்மை.



மாயக்கண்ணாடி எதிர்பார்த்த அளவு ஓடாததாலோ என்னவோ இப்போது கேமராவுக்கு பின்னால் இருப்பதை விட, முன்னால் சில காலம் இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டார் போலும். கரு.பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்திற்கு பிறகு, இப்போது ராமன் தேடிய சீதை. சேரன், எப்போ அடுத்த படம் இயக்கப்போறீங்க?



படத்தில் சேரனுடன், இணைந்து சென்னை28 புகழ் நிதின் சத்யாவும், பசுபதியும் நடிக்கிறார்கள். நிதின் சத்யா, சென்னை28 மற்றும் சத்தம் போடாதே பாங்களில் நன்றாக நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார். இந்த படத்திலும் இவருக்கு நல்ல ரோலாக அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்தால், பசுபதி கண்பார்வையற்றவராக வருகிறார். எந்த ரோல் கொடுத்தாலும் வெளுத்து கட்டுபவர், இதையும் நன்றாக செய்வார்.



படத்தில் மூன்று கதாநாயகிகள். தூத்துக்குடி படத்தில் நடித்த கார்த்திகா அதில் ஒருவர். இவர் நான் கடவுள் படதிற்காக பிச்சைகாரியாக ஒரு நாள் முழுவதும் பெரியக்ளத்தில் சுத்தி வந்தார். ஆனால் ஏனோ அந்த படத்தில் நடிக்கவில்லை. அதற்கு, இந்த இந்த படம். நல்ல பிரேக்கை எதிர் பார்க்கிறார். பார்ப்போம் இந்த படம் தருமா என்று.



அடுத்தவர், பொய் படத்தில் நடித்த விமலா ரமணன். பொய்க்கு பிறகு வாய்ப்புகள் வராமல் போகவே மலையாளப் பக்கம் ஒதுங்கினார். மூன்றாவதாக, ரம்யா நம்பீஸன். இவர் ஒரு மலையாள நடிகர். முதன் முதலாக இந்த படத்தில் நடிக்கிறார்.




படத்திற்கு இசை, வித்யாசாகர், அந்த இசைக்கு வரிகளை தருபவர் யுகபாரதி. படத்தை மோசர்பியர் என்னும் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை படப்பிடிப்பு கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது

Friday, December 14, 2007

முருகனருள் பரப்பும் பில்லாவின் சேவல்கொடி பறக்குதய்யா


பில்லா பாடல்கள் வெளியான பிறகு பல தடவை, எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரமின்மையால் அந்த பாடல்களை பற்றி எழுத முடியவில்லை. சேவல் கொடி பாட்டில் வரும் இரண்டு வரிகளை பற்றி மட்டும் எழுதினேன். இன்று வலையுலகை ஆய்ந்து மேய்ந்து கொண்டிருந்த போது, முழுக்க முழுக்க படத்தின் கதாநாயகன் முருகன் அருள் வேண்டி பாடும் சேவல் கொடி பாட்டை, முருகனருள் பதிவில் அதன் வரி விளக்கங்களோடு படித்து என்னையே நான் மறந்துவிட்டேன்.. இந்த பாடல் முருகனை பற்றி வருவதாலும், நல்ல தாளங்களோடு கேட்பதற்கு இனிமையாய் இருப்பதாலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த பாட்டில் இவ்வளவு மறைமுக அர்த்தங்களா.. கண்ணபிரான் அவர்கள் இந்த பாடலை வரி விளக்கங்களோடு இங்கு எழுதியிருப்பதை படியுங்கள். நிச்சயம் நீங்களும் முருகனருள் பெற்று மெய்சிலிர்ப்பீர்கள்..

நன்றிங்க கண்ணபிரான் ரவிஷங்கர்!



நம்ம பதிவுல தல படத்தை போடலைனா எப்படி!

Wednesday, November 28, 2007

பில்லா பாடலும் தமிழில் அர்ச்சனையும்

நீண்ட நெடு நாட்களாக எனக்கு சந்தேகம். கோயிலில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்கிறார்களே, தமிழிலும் செய்யலாமே என்று. அர்ச்சனை என்னவோ கடவுளுக்குத் தான் செய்கின்றோம், ஆனால் என்ன சொல்லி செய்கிறார்கள் என்று தெரிந்தால், கும்பிட வந்தவர்களுக்கு அதனோடு ஒன்றி, மனசு உருகி சுவாமியை தரிசனம் பண்ணமுடியும். இல்லையென்றால், பூஜை செய்பவர் அவர் பாட்டுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்ல, ஒன்றும் புரியாமல் கை குவித்து நாம் அவரையும் சாமியையும் பார்த்து முழித்து கொண்டிருக்க வேண்டும். சமீப காலங்களில், தமிழில் அர்ச்சனை என்பது ஒரளவுக்கு பரவி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, வேளச்சேரியில் இருக்கும் சிம்ம நரசிம்மர் கோயிலில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்கிறார்கள் (நான் அறிந்த வரையில்). ஆண்டாள் திருப்பாவையெல்லாம் அவர்கள் பாடும் போதும் நமக்கும், நமக்குள்ளும் அந்த பரவசம் தொற்றிக்கொள்கிறது என்பது உண்மை தான். அதில் நான் பல நாட்கள் உருகியதும் உண்மைதான்.

சரி, இதில் எங்கே பில்லா படம் வருகிறது என்று கேட்கின்றீர்களா. விஷயத்திற்கு வருகிறேன். படத்தில் முருகனை போற்றிப் பாடி ஒரு பாடல் இருக்கிறது, விஜய் யேசுதாஸ் குரலில். அதில், பாடல் முடியும் போதும் தமிழ் கடவுள் முருகன், அவருக்கு தமிழில் அர்ச்சனை செய்யலாமே என்று அர்த்தம் தரும் பாடல் வரி வருகிறது. கேட்கும் போதும் சட்டென்று கவனத்தை ஈர்த்த வரிகள். பாடலாசிரியர் பா. விஜய், கிடைத்த தருணத்தை அழகாக பயன்படுத்தியிருக்கிறார். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். நெஞ்சுருக வேண்டி ஆண்டவனை வழிபடும் ஒரு இடத்தில், புரியாமல் நின்று தலையசைப்பது சரியாகுமா என்று கேட்டால் இல்லை.. தமிழில் அர்ச்சனை என்பதை இன்னும் சற்று அதிகமான குரலில் முழக்கமிட வேண்டும். கிறித்துவ மதம் இந்தியாவில் இவ்வளவு விரைவாக பரவியதற்கு ஒரு காரணம், அதன் மொழியாக்கமும் மக்களை சென்று அவர்கள் விஷயங்களை கொண்டு சேர்த்தவிதமும் தான். மக்களுக்கு, பக்தர்களுக்கு புரிந்தால் தான் அந்த வேண்டுதல், பக்தி மனசுக்குள் நிற்கும். இவ்வாறு நிறைய அர்த்தமுள்ள விஷயங்களை பாடலாசிரியர்கள் பாடல்களில் ஏற்றினால், மக்களை சென்று சுலபமாக கருத்துகள் சென்று சேரும்.

கொசுறு : பில்லா பாடல்கள் அடங்கிய கேசட், சிடிக்கள், சிவாஜிக்கு அடுத்து இந்த வருடத்தில் அதிகமாக விற்று இருக்கின்றன.

Tuesday, November 13, 2007

ரஜினி பிறந்தநாளன்று பில்லா - இப்போ டிரெய்லர்

தீபாவளி படங்களில் எதுவும் சூப்பர் ஹிட் இல்லை என்று முடிவு செய்த விநியோகஸ்தர்கள், இப்போது ஆவலுடன் எதிர்பார்ப்பது ரஜினியை தனித்து அடையாளம் காட்டிய பில்லாவின் ரீமேக் தான்.. தீபாவளிக்கு வரவிருந்த படம், பிற்தயாரிப்பு (நன்றி : PIT) வேலைகளினால் தற்போது தள்ளிப்போய்விட்டது. இப்போது, ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். படத்தின் முன்னோட்ட வடிவம் தீபாவளி அன்று முதன் முதலாய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.



இதுவரை யாரும் காட்டாத வகையில் அஜித்தை ஸ்டைலாக அமர்க்களமாக காட்டியிருக்கிறார்கள். பிண்னணி இசையில் யுவன் பட்டையை கிளப்பியிருக்கிறார். இந்த வருடத்தில் இந்தப்படமாவது அவருக்கு கைகொடுக்கட்டும்.. நயன் அதிரடியாய் இளமையாய், ஆக்ரோஷ ஆப்பிளாய் ஜொலிக்கிறார்.. படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்திருப்பதாய் சொல்கிறார் விஷ்ணுவர்தன்.

படம் வசூலை குவித்தால், எல்லாப் புகழும் விஷ்ணுவுக்கே..

Friday, October 26, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 20 [சூடான சினிமா பகுதி]

ஹலோ கார்த்தியா.. நான் ஏஞ்சல் பேசுறேன்..

(ஏஞ்சலா? குரலே தேன்ல குழச்ச மாதிரி இருக்கே.. நம்ம வாழ்கையிலும் வசந்தமா..வெயிட் வெயிட்.. இது எங்கயோ கேட்ட குரலா இருக்கே..ஆஹா.. நம்ம சிட்டுக்குருவி லவ்வர் வாய்ஸ்ல.. அடப்பாவி.. )

எப்படி இருக்க ஏஞ்சல்.. நம்ம சி.குவுக்கு என்ன ஆச்சு.. நீ பேசுற..

கார்த்தி..மொதல்ல சி.குன்னு கூப்பிடறதா நிறுத்துறியா? ஏதோ லக்கிமேன்ல, எமன் வேஷத்துல வர்ற கவுண்டமணி சித்ரகுபதனா வர்ற செந்தில் ஷார்ட்டா சி.குன்னு கூப்பிடுற மாதிரி இருக்கு..

இல்ல ஏஞ்சல்.. பாசமா சுருக்கமா கூப்பிட்டேன்..

அதுக்குத் தான், ப்ரின்ஸ்ன்னு பேர் வச்சிருக்கோம்ல.. அதை வச்சு கூப்டா போதும்..

சொல்லவே இல்ல..

நீ கேக்கவே இல்லியேப்பா..

உன் பிளாக் நண்பர்கள்கிட்ட மட்டும் கேட்ட..எங்க கிட்ட கேட்டியா.. அது தான் நாங்க எங்களுக்கே புது பேர் வச்சிருக்கோம்.. சரி.. அதைவிடு.. இன்னைக்கு சாயந்தரம் உங்க வீட்டுக்கு கும்மி அடிக்க வர்றோம்.. நம்ம ஸ்பெஷல் தெரியும்ல ரெடியா இருக்கணும் என்ன என்று சொல்லிட்டு, என் பதிலுக்கு கூட காத்திருக்காம டொக்குன்னு போனை வச்சது ஏஞ்சல்..

எல்லாம் நம்ம நேரந்தான்னு நினச்சுகிட்டேன்..

சாயங்கால வேளை..

நம்ம சிட்டுக்குருவிகள் ரெண்டு பேருமே வெஜ் ஆளுக.. அதனால இந்த தடவை நம்ம ஊரு பாசி பயறை ஊற வச்சு, குக்கர்ல ஒரு விசில் வச்சு, தேன் ஊத்தி வச்சிருக்கேன்.. இது ஏஞ்சலுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு நம்ம சிட்டுக்குருவி சொல்லியிருக்கு..பேருக்கேத்த மாதிரி தான் ரெண்டு பேரும் வந்திருந்தாங்க... ஏஞ்சல், வின்ங்க்-லெஸ் (ஸ்லீவ்-லெஸ்) ரெட் ஜாக்கெட் போட்டுகிட்டு, பாரதிராஜா பட தேவதை மாதிரியும், நம்மாளு கேப், கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுகிட்டு வந்தாங்க.. அப்படியே ஜோதிகா-சூர்யா மாதிரி இருந்தாங்க.. ஆனா அவங்க கிட்ட சொல்லல.. ரொம்ப மேல ஏறிக்குவாங்க ரெண்டு பேரும் (பொறாமைபடாதடா கார்த்தி)

இன்னைக்கு என் டார்லிங் தான் எல்லா சினிநியுஸும் சொல்லப்போறா.. பயங்கர பிரிபரேஷன்ல வந்திருக்கா.. (கல்யாணம் ஆன பிறகு மனுஷங்களை மாதிரி நீயும் பெண்டாட்டி முன்னால பேசுறத நிறுத்திட்டியேப்பா குருவி)

தொண்டையை கனச்சுகிட்டு ஏஞ்சல் மேட்டரை சொல்ல ஆரம்பிச்சது..

ரொம்ப ஆவலா எதிர்பார்த்த ஷங்கர்-ஷாரூக் காம்பினேஷனோட ரோபட் சொத்துன்னு ஆயிடுச்சு.. ஷாரூக் அந்த படத்திலிருந்து விலகிட்டதா சொல்லிட்டார்.. இனி ஷங்கர் அடுத்த நடிகர் கிட்ட போவாரா இந்த கதையோட இல்ல வேற கதை ரெடி பண்ண போறாரான்னு தெரில..

இதை விட பெரிய நியூஸ், நம்ம ஷ்ரேயா (என்னை மாதிரி கியூட்டா இருக்கும்ல அந்த பொண்ணுன்னு ஏஞ்சல் சொல்ல, நம்ம சிட்டு குருவி அதை கொஞ்ச..கட் கட் கட்.. நம்ம ஸ்டொமக் பேர்னிங் சாமி) ஹாலிவுட் படத்துல நடிக்க போறாங்களாம்.. அதுவும் ஹிரோயினா.. அவங்க காட்ல மழை தான்.. தமிழ்நாட்ல சூப்பர் ஸ்டார் முதல் வைகை புயல் வரை ஆட்டம் போட்டாச்சு.. இப்போ அமெரிக்க பக்கம்..ம்ம்

சிம்பு தன்னோட கெட்டவன் படத்தை இப்போதைக்கு தள்ளி வச்சுட்டாராம்.. அடுத்து சிலம்பாட்டம் படத்துல நடிக்க போறாராம்.. அனேகமா வல்லவன் படத்துக்கு பிறகு அவருக்கு எந்த படமும் வரலைனு நினைக்கிறேன்.. காள எப்போ தியேட்டரை முட்ட வருதோ தெரியல..

ஒரு வழியா தசாவதாரம் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சது.. இப்போ கடைசி கட்ட தொழில்நுட்ப வேலைகள் நடக்க ஆரம்பிச்சிடுச்சு.. அதனால, கமல் தன்னோட அடுத்த படத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டார்.. படத்தோட பேர் மர்மயோகி.. பழைய எம்.ஜி.ஆர் படத் தலைப்பு தான்.. இந்த வரலாற்று படத்தை கமலே இயக்குகிறார், ரிலையன்ஸ் நிறுவனதிற்காக..

ம்ம்..கார்த்தி..உங்க தலயோட பில்லா படம் நவம்பர் 30க்கு தான் வருதாம்..பாட்டெல்லாம் நவம்பர் 15 வெளியிட பிளான் பண்ணியிருக்காங்க.. இன்னைக்கு எல்லா திரைப்பட தளங்கள்லயும் பில்லா படத்தோட ஸ்டைலானா ஸ்டில்கள் தான்.. படமெல்லாம் அசத்தல வந்திருக்காம்.. சந்தோசமா (நான் சிரித்தேன்)

இன்று வெளியான சில பில்லா ஸ்டில்கள்






இன்னைக்கு தான உன் அசினோட பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டியா இல்லியா.. சொல்லாம இருப்பியா.. உன் கனவுல அசின் வந்து முதமெல்லாம் வாங்கி கிட்டதா என் பிரின்ஸ் கிட்ட சொன்னியா.. என் பிரின்ஸ் சரியான ஏமாளி.. நீ சொன்னதை நம்பிகிட்டு ஊரெல்லாம் சொல்லுது.. (உன்னை.. ஏஞ்சலை அடிக்க கை ஓங்கினேன்)

அசின் பிறந்தநாளிற்காக...





பேசிக்கொண்டிருந்த போதே சிட்டுக்குருவி மெதுவா ஏஞ்சலை கிள்ளியது.. என்னடான்னு கேட்டா, அடுத்த அப்பாயிண்ட்மென்ட் அவங்களோட நண்பர் வீட்ல டின்னராம்.. சொல்லிகிட்டே சிறகடிச்சு பறந்து போயின இரண்டும்..ம்ம்.. காதல் பறவைகள்