Wednesday, September 05, 2007

ஜீரோ ரூபாய் - கொடுக்கமாட்டேன் லஞ்சம்

எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க, லஞ்சம் கொடுக்காமல் இருக்க. சென்னையை சேர்ந்த ஐந்தாவது தூண் என்னும் நிறுவனம் இதற்கான சமூகப்பணிகளை செய்து வருகிறது. இவர்கள் அச்சு அசலாக ஆயிரம் ரூபாயை போன்ற ஒரு காகிதத்தை அச்சடித்துள்ளார்கள். (இதற்கு ரிசர்வ் பேங்க் எப்படி அனுமதி தந்தது என்பது விளங்காத விஷயம்) ஆயிரம் எண்ணிற்கு பதிலாக இதில் பூஜ்ஜியம் இருக்கும். ரிசர்வ் வங்கி பெயருக்கு பதிலாக "எல்லா நிலையிலும் லஞ்சத்தை ஓழிக்க வேண்டும்" என்னும் வாசகம் இருக்கிறது. (கீழிருக்கும் படம் பார்க்க)



லஞ்சம் கேட்கும் இடங்களில் இப்படி ஒரு பணத்தை கொடுத்தால் பலனுள்ளது என்று சொல்கிறார் இந்த இயக்கத்தின் நிறுவனர் விஜய் ஆனந்த். மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்க



எப்படியோ நல்லது நடந்தால் சரி.. இது போன்று ஒரு லட்சம் நோட்டுகளை அடுத்த வாரம் மும்பையில் வெளியிட முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்

20 பின்னூட்டங்கள்:

said...

Oru salaam pottuttu veetukku kelambaren.. naalaikku vandhu padichittu commentaren :)

Anonymous said...

/லஞ்சம் கேட்கும் இடங்களில் இப்படி ஒரு பணத்தை கொடுத்தால் பலனுள்ளது என்று சொல்கிறார் இந்த இயக்கத்தின் நிறுவனர் விஜய் ஆனந்த்./

I think it is an excellent idea.

Rumya

said...

அருமை.
;-D

said...

சுவாரஸ்யமான விஷயமா இருக்கே!! :-)

பதிவிட்டதற்கு நன்றி!! :-)

said...

நல்ல விஷயம் தான்! நடக்குமா?

Anonymous said...

I think this is a good idea to bribe with these notes.

said...

Nalla idea dhaan.. aana vaangaravan thodarndhu emaaruvaana enna? avan paaka maataana adhu enna noteunnu?

Anonymous said...

Lanjam oshinthaal ok :-)

Anonymous said...

Interesting:)

said...

only attendance

said...

இது சாத்தியமா.....?
இருக்குமானால் நன்று....
இந்திய அதிகாரிகளைத் திருத்த நல்லதொரு முய்ற்சி......

said...

கடமை தவறாம வந்து படிச்சுட்டுப் பின்னூட்டமும் போடறேன். நல்ல அருமையான தொண்டு. வாழ்த்துக்கள் அந்த நிறுவனத்துக்கும், அதை அறியச் செய்த உங்களுக்கும்.

said...

Enga Pudikarreenga intha news ellam...

said...

wow good news... :D

said...

நல்ல ஐடியா. இந்த பணத்தையும் கவரிலோ பெட்டியிலோ வெச்சு குடுத்தா தான் நம்ம ஆளுங்க வாய பொளந்துட்டு வாங்குவாங்க. :)

சரி, என்ன தலைமறைவு? முருகன் புண்ணியத்துல உங்களுக்கு ஒரு தங்கமணி வந்து விட்டதாக பேச்சு அடிபடுது. :p

said...

ada, ithu ambi velaiya? athane parthen?
grrrrrrr oru nalla paiyarai poy
ambi, analum ippadiya purali kilaparathu?
Narayana, Narayana, innikku rathiri nalla thungalam.

said...

நல்ல தகவல்.. ஆனால், இது எந்த அளவு செயல்படுத்த முடிஉம் என்பது ஒரு கேள்விகுறியே. :(

said...

சுவாரசியமான தகவல்!

said...

"இதற்கு ரிசர்வ் பேங்க் எப்படி அனுமதி தந்தது என்பது விளங்காத விஷயம்"

சீரியஸா சொல்றீங்களா? காமெடியா? ரிசர்வ் வங்கி இவ்வாறு நோட்டு அச்சடிப்பதற்கு அனுமதி கொடுக்கும் நிறுவனம் அல்ல!

மற்றபடி இப்படி நோட்டு அடித்து கொடுப்பது எல்லாம், லஞ்சத்தை ஒழிக்க உதவாது...சினிமாவில் வேண்டுமானால் எடுக்கலாம்.

said...

இதை வைத்து சுவாமிநாதன் என்பவர் எழுதிய "பூஜ்ய ரூபாய் நோட்டு" நகைச்சுவைகள் பாருங்க - இந்தப் பக்கத்தில் நவம்பர் 2 முதல் காணலாம்