Wednesday, November 14, 2007

இலை உதிரும் காலம்


ஒவ்வொரு இலைகளாக
உதிர்வதற்கு
தயாராய்
மரத்தில்,
மீன் பிடிக்க
அடுத்தடுத்து
குதிக்க
காத்திருக்கும்
பெங்குவின்
கூட்டம் போல...

பக்கத்து
பாசமிகு
இலைகள்
என்றைக்கோ
வண்ணங்கள் மாறி
உதிர்ந்து
சருகாய்,
மரத்துக்கடியில்..
பாதை வழியில்..

அடாது
மழை பெய்ததால்
நீர் எடை
சுமக்காமல்
கழிந்து
கீழ் கவிழ்பவைகள்
என
சில இலைகளும் உண்டு..

அவைகள்
விழுந்ததையும்
காற்றில்
அலைந்ததையும்
தலை
குப்புற நின்று
பார்க்கிறேன்,
நேற்று பெய்த
மழையின்
நீர் சொட்டு
என்னிலிருந்து
கண்ணீர் திட்டாய்...

என்றைக்கோ ஒருநாள்
நீயும்
இது போலத் தான்
என்று
மனசு மணியடிக்கையில்
இன்னும் உதிர
காத்திருக்கனுமா என்று
உள்ளூர
ஒரு உதறல்...

ஆனாலும்
மரத்தின்
வேர்கள் தரும்
தண்ணீர் மோகங்கள்
ருசியாகவே
என
ஆசை மனதின் சபலம்..

உதிர்ந்து
நாங்கள் போய்விட்டதால்
மரத்திற்கு
வருத்தமில்லை,
உடம்பில்
அம்மை தழும்பாய்
நாங்கள் இருந்த இடங்கள்,
புள்ளி கல்லறைகள்...

அடுத்த பருவத்தில்
புதிதாய்
முளைக்கும்
இன்னும் ஆயிரம்
இலைகள்..

மரமதை
புவியென எண்ணுகையில்
என்னை
கீழ் நின்று
அண்ணாந்து பார்க்கும்
மனிதனை போல
ஆனதோ
என் வாழ்க்கை?

சும்மா போட்டிக்கு படங்களை போட்ட போது, ஏன் கவிதை எழுதக்கூடாது என்று உசுப்பி விட்ட தோழி பிரியாவிற்கு நன்றி

13 பின்னூட்டங்கள்:

said...

Thala back to form pola.. asathala irukku kavidhai :)

said...

Nice one!

said...

My previous showed some error Karthick.

Fantastic line and penned so perfect about nature and life.

என்றைக்கோ ஒருநாள்
நீயும்
இது போலத் தான்
என்று
மனசு மணியடிக்கையில்
இன்னும் உதிர
காத்திருக்கனுமா என்று
உள்ளூர
ஒரு உதறல்...

Awesome and wonder why you stopped writing.

Thank you buddy:)

said...

kavithaiyum padamum romba super thalai...

Anonymous said...

padathukku yetra nalla kavithai ;-)

said...

thala..kalakkals ponga..udhiri pookal padam dhaan ninaivukku varugiradhu..

said...

kavidha superu thala1

said...

//
என்றைக்கோ ஒருநாள்
நீயும்
இது போலத் தான்
என்று
மனசு மணியடிக்கையில்
//
nice analogy... super !!

said...

தல பட்டயை கிளப்ப ஆரம்பிச்சிட்டிங்க போல :)

\\உதிர்ந்து
நாங்கள் போய்விட்டதால்
மரத்திற்கு
வருத்தமில்லை,
உடம்பில்
அம்மை தழும்பாய்
நாங்கள் இருந்த இடங்கள்,
புள்ளி கல்லறைகள்...\\

அருமை ;)

Anonymous said...

Excellent. I really loved it.

Rumya

said...

Mappy, Intha pudchukko porkizi..Arumaiyana kavithai

Anonymous said...

annae ithelllam super but chennaila aprilla vitta kathai ini yaaru kuthu pattavan vandhu ezhuthuvana? seekiram ezhutha start pannunga illa thookiduvaen.

anbu thangai

said...

//உதிர்ந்து
நாங்கள் போய்விட்டதால்
மரத்திற்கு
வருத்தமில்லை,
உடம்பில்
அம்மை தழும்பாய்
நாங்கள் இருந்த இடங்கள்,
புள்ளி கல்லறைகள்//
Aruviyai patri naan eludhiya oru kavidhaiyin varigal..
//Kodai vandhaal
Neeum povaai
Negilndha ninaivugalaai
Un thadam mattum vaazhum..//