Wednesday, August 15, 2007

விடுதலை சிந்தனைகள்

எல்லோரும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பள்ளிக்கு வந்திடனும். நம்ம பள்ளியில தேசிய கொடியேத்தி, மாறுவேடப்போட்டி நடக்கும்னு பள்ளியின் காலை வழிபாட்டில் தமிழாசிரியர் அறிவித்தார்.. வகுப்புக்கு போனவுடனே வகுப்பு ஆசிரியை, நாளைக்கு வருகை பதிவு எடுப்பேன்.. வராதவங்களுக்கு தனியா தண்டனை கொடுப்பேன்.. எல்லோரும் நாளைக்கு காலைல வந்திடுங்கன்னு சொன்னார்.. இப்போதைய சுதந்திர தின கொடியேற்ற நிகழச்சிகள் இப்படித் தான் வலுக்கட்டாயமாக மாணவர்களை வரவைத்து நடத்தப்படுகின்றன. உள்ளத்தில் விடுதலை வேட்கையும் எழுச்சியையும் நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் முதல் நம்மை சுற்றியிருக்கிற எல்லோரும் உருவாக்கத் தவறிவிட்டனர்.

அரசு விடுமுறை நாள் கிடைத்தால், விருப்பமான நேரத்தில் காலையில் எழுந்து, தொலைக்காட்சியில் போடுகின்ற நிகழ்சிகளை பார்த்து விட்டு அப்படியே சோபாக்களில் மறுபடியும் ஊறங்கிப்போகும் வழக்கம் என பாரதி சொன்னது வீணிலே அழிகின்றனர் பலர். சிறுவனாக இருக்கும் காலத்திலேயெ இதெல்லாம் அவர்களின் மனதிலே வாழைப்பழத்திலே ஊசி ஏற்றும்விதமாக செய்யப்பட்டிருக்கவேண்டும்.

எங்கள் ஊரில் ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைபள்ளியும் உண்டு. விடுதலை திருநாளின் அன்று, காலை எல்லோரையும் வரவழைத்து கொடியேற்றி, ஊர்வலம் வருவார்கள், கோஷங்கள் முழக்கமிட்டு, கையில் மூவர்ண கொடிகளுடன். அந்த சிறு வயதிலே அவர்கள் அந்த கோஷங்கள் சொல்வதிலும், கொடிகளை ஏந்துவதிலும் அப்படி ஒரு ஆர்வம் இருக்கும். இப்படி பட்டணத்தில் இருக்கும் எத்தனை பள்ளிகள் செய்கின்றன.. பெரும்பாலான பள்ளிகள் விடுதலை நாளன்று கொடியேற்றுகிறதா என்பதே சற்று சந்தேகம் தான். இந்த சிறார்கள் அப்படி ஊர்வலம் சுற்றி வருகையிலே, அவர்கள் பெற்றோர்கள் கொள்ளும் சந்தோசத்தை வார்த்தையில் சொல்ல இயலாது. அன்றைக்கு, தாங்கள் தின்பண்டங்கள் வாங்க வைத்திருக்கும் காசில் கொடி வாங்கி நெஞ்சினில் குத்திகொண்டு அவர்கள் பள்ளிகள் நோக்கி செல்லும் போதும், பார்ப்பவர்களுக்கே சற்று தேசியபற்றின் அளவு மனதில் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.

ஏதோ இராணுவ வீரர்களுக்கு மட்டும் தான் தேசியப்பற்று இருக்க வேண்டுமென்று எல்லைகள் வகுக்கப்பட்டதை போல் எல்லோரும் வாழ்கிறார்கள். இந்நிலை மறந்து, தேசிய உணர்வை ரத்தங்களில் ஏற்றி எல்லா நாளங்கள் நரம்புகளில் பரவ செய்ய வேண்டும். இந்த அறுபது வருட காலத்திலே வியக்க வைக்கும் முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் பல கோடுகள் இந்திய அன்னையின் முகங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுற்றி, தெருவை சுற்றி சுகாதாரமாக, குற்றங்கள் இல்லாத ஒரு இடமாக, சீராக வைத்துகொள்ள ஆரம்பித்தால் அதுவே மெல்ல ஒரு சங்கிலியை போல நமது நாட்டை காக்கும். அதுவே ஒவ்வொரு விடுதலை நாளின் போதும் நாம் ஏற்றுக்கொள்ளும் உறுதி மொழியாக இருக்கட்டும்.

அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்.

Friday, August 10, 2007

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை 2

முதல் பார்வை இங்கே

இப்போது டிவிக்களின் ராஜ்ஜியம் பட்டொளி வீசி பறக்கையில், தியேட்டர்கள் நவீன வசதிகள் கொண்டு எல்லாவித சௌகரியங்களை வைத்திருந்தாலும், லாபத்தில் தான் இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். எத்தனையோ நகரங்களில் தியேட்டர்கள் திருமண மஹாலாவது நாம் அடிக்கடி கேள்விப்படுகின்ற விஷயம் தான். அதுவும், சமீபத்தில் மதுரை சிந்தாமணி தியேட்டருக்கும் அப்படியொரு நிலைமை வந்துவிட்டது.. மதுரையில் நான் கல்லூரி படிக்கும் போது இங்கே பார்த்த ஒரே படம், கௌதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. ஆனால், திண்டுக்கலில் எந்தவொரு தியேட்டரும் இப்படி ஒரு நிலைமையை சந்தித்ததில்லை. ஒரு வேளை என்ன தான் டிவி பார்த்தாலும் படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை போலும்..

சரி. இனி அடுத்த இரண்டு தியேட்டர்களை பற்றி பார்ப்போம்..

முதன் முதலில் திண்டுக்கல்லில் நவின கட்டிட, ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் கட்டப்பட்டது நாகா ஏசி மற்றும் லஷ்மி தியேட்டர் வளாகம் தான். இந்த தியேட்டர் வந்த புதிதில் இதில் படம் பார்ப்பதே மக்களுக்கு பெரிய விஷயமாக பட்டது.. கட்டணம் அல்ல.. சௌகரியம் தான்.. திண்டுக்கலில் சிறுவர்கள் விளையாடும் சிறு பூங்காவுடன் இருக்கும் தியேட்டர் இது தான். அந்த சுற்று வட்டாரதில் குடியிருப்பவர்கள் விடுமுறை நாட்களில் படத்திற்கு வரவில்லையென்றாலும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு இங்கு வருவது உண்டு.. நாகா ஏசி தியேட்டர் மிகவும் சிறியது.. ஐநூறுக்கும் குறைவான பார்வையாளர்களே உட்கார முடியும். லஷ்மி தியேட்டர் கிட்டதட்ட ஆயிரம் பேர் உட்காரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். லஷ்மி, திண்டுகல்லில் இருக்கும் ஒரே 70mm தியேட்டர். இப்போது ராஜேந்திரா, ஆர்த்தி தியேட்டர்களின் வரவினால் இந்த தியேட்டர் கொஞ்சம் ரசிகர்களின் கவனத்தை இழந்திருப்பது நிச்சயம். இதில்விவரம் தெரிய பார்த்தது ரஜினியின் சிவா.. கடைசியாக பார்த்தது புதுகோட்டையிலிருந்து சரவணன்.

திண்டுக்கல் பஸ் நிலையத்தை ஓட்டி, ஆர்த்தி தியேட்டரை விட அருகில் இருப்பது கணேஷ் தியேட்டர். ஆரம்பத்தில், இதற்கு முன் சொன்ன மூன்று தியேட்டர்கள் வருவதற்கு முன் இது தான் சிறந்த தியேட்டராக இருந்தது. இடையில் வசதிகள், தரங்கள் நிறைந்த தியேட்டர்கள் வந்த பின், இது மெல்ல மெல்ல தன் பெயரை இழந்துவிட்டது.. இப்போது இடையில், படங்களை திரையிடுவது நிறுத்தபட்டு, உள்ளே மாற்றங்கள் செய்யப்பட்டு, DTS ஒலி அமைக்கப்பட்டு மறுபடியும் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆனால், தனது பழைய பெயரை திரும்ப பெற்றதா என்பது கேள்விக்குறி தான். முதன் முதலில் பார்த்த படம் போக்கிரி ராஜா.. எனக்கு விவரம் தெரிய முதலில் பார்த்ததும் இது தான். பள்ளியில் இருந்து இங்கே எங்களையும் வாழவிடுங்கள் என்னும் குரங்குள் பற்றிய படத்திற்கு அழைத்து சென்றார்கள்.

அபிராமி, ஷான், NVGB, சென்ட்ரல், சோலைஹால் ஆகிய தியேட்டர்களை பற்றி அடுத்த பதிவில்

Thursday, August 09, 2007

பில்லா ஷூட்டிங்கில் அஜித் - போட்டோ



தல அஜித்தின் ரசிகர்கள் அவரை பில்லா படத்தின் ஷூட்டிங்கில் சந்தித்துள்ளனர். அந்த படம் தான் கீழே.. தல அசத்தலா இருக்கார்ல.. என்ன சொல்றீங்க (கூட இருப்பது ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ்)

திண்டுக்கல் தியேட்டர்கள் - ஒரு பார்வை

இந்தியாவுல இருக்க பெரும்பாலான மக்கள்களுக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு திரைப்படம் பாக்குறது தான். சென்னையிலாவது கடற்கரை அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதி, கிண்டி பூங்கா, கோயில்கள் என்று இடங்கள் அநேகமாக இருக்கலாம். ஆனால் திண்டுக்கல் போன்ற சராசரி நகரங்களுக்கு பெரிதாக அப்படி என்ன இருந்துவிடப் போகிறது தியேட்டர்களை விட. அபிராமி, மாரியம்மன் கோயில்கள், திண்டுக்கல் மலைக்கோட்டை (இந்த மலைக்கு போனவர்களின் எண்ணிக்கையை விட போகாதவர்களின் எண்ணிக்கை தான் அதிகமிருக்கும்), மலைக்கோட்டை அடியினில் இருக்கும் நகராட்சி பூங்கா (எப்போதும் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதான்னு தெரில), இது போன்ற சொற்ப இடங்களே.. இதுவிட்டால், நடுத்தர மக்களுக்கு அருகிலிருக்கும் கொடைக்கானல், எல்லோரும் செல்லும்படியான பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் என ஒரு சில இடங்களும் உண்டு. ஆனால், எல்லோரும் போகக்கூடிய ஒரே இடங்கள் தியேட்டர்கள் தான். நான் திண்டுக்கலில் இருக்கின்ற எல்லா தியேட்டர்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆமாம், இருக்கிறதே பதிமூன்று தியேட்டர்கள்..அதிலென்ன எல்லா தியேட்டர்களும் என்று கணக்கு வேறு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இனி ஒவ்வொரு தியேட்டர்களாக பார்ப்போம்..

ஒளி மற்றும் ஒலித் தரத்தில் இப்போது முண்ணனியில் இருப்பது தியேட்டர் ராஜேந்திராவும் அதன் குட்டி அடையாளமான உமா தியேட்டரும் தான். இந்த தியேட்டர் நான் சென்னை வந்த பிறகு தான் திறந்தார்கள் என்பதால் என்னால் அதிக படங்கள் பார்க்க முடியவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தான் நான் படங்கள் பார்த்திருக்கிறேன். கடைசியாக அந்நியன் பார்த்தேன்.. அதிசயமாக எப்போதும் தியேட்டரில் ஏசி போடப்பட்டிருந்தது. தியேட்டரும் கொஞ்சம் புதுசு என்பதால் பளபளப்பு குறையாமல் தான் இருந்தது. இப்போதைக்கு அதிக விலை கொடுத்து, அதிக பரபரப்பு மிகுந்த படங்களை வாங்கி வெளியிடத் தகுதியான தியேட்டர் ராஜேந்திரா மட்டுமே. சென்னையில் இருந்து திண்டுக்கல் என்ஜினியர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன், தமிழ் நாட்டிலேயே சத்யதிற்கு அடுத்த DTS நன்றாக இருப்பது திண்டுக்கல் ராஜேந்திரா தான், என்று சொல்லக் கேள்வி.. இந்த வளாகம் பஸ் நிலையத்திலிருந்து அதிக தூரத்தில் இருப்பது இதற்கு ஒரு பின்னடைவே.

இதற்கடுத்த தியேட்டர் ஆர்த்தி மற்றும் சிவா வளாகம். 90-ன் ஆரம்பத்தில் (சரியாக ஞாபகம் இல்லை) கட்டப்பட்டு பளிச்சென்று அப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த தியேட்டர் இது. தியேட்டர் உள்ளமைப்பு நன்றாக இருக்கும். எனக்கு விவரம் தெரிஞ்சு பார்த்த படம் சிப்பிக்குள் முத்து.. கடைசியாக பார்த்தது ஆதி. விஜயின் அதிகப் படங்கள் இதில் தான் வெளியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருப்பதால் எப்படிப் பட்ட படம் போட்டாலும் வசூலை இந்த தியேட்டர் பார்த்து விடும். முதலில் ஆர்த்தி தியேட்டர் கட்டப்பட்டு, சமீபத்தில் தான் கிட்டதட்ட நானூறு இருக்கைகள் கொண்ட சிவா தியேட்டர் கட்டப்பட்டது. சிவாவில் இதுவரை எந்த படமும் நான் பார்த்ததே இல்லை. ஆனால், திண்டுகல்லிலேயே அதிகமாக நான் ஆர்த்தியில் தான் படங்கள் பார்த்திருக்கிறேன்..

இப்போது இந்த நாலு தியேட்டர் படங்கள் தான் அதிகமாக வசூல் குவிக்கும் படங்களை எடுத்து ஓட்டுபவைகள். இங்கு திரையிடப்படும் படங்கள் நன்றாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. சென்னைக்கு சத்யம், தேவி போல திண்டுக்கலுக்கு இந்த இரு தியேட்டர்களையும் சொல்லலாம்..

மற்ற தியேட்டர்கள் பற்றி அடுத்த பதிவில்..

Wednesday, August 08, 2007

ஆங்கில மொழிமாற்ற தமிழ் படங்களின் நகைச்சுவை தலைப்புகள்




படங்களை அனுப்பி வைத்த தம்பி மகேஷ்குமாருக்கு நன்றி

எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ

இது சொந்த சரக்கு அல்ல.. ஆனா, அதுவா முக்கியம் நமக்கு..

டீல்

உங்க செல்லுக்கு என்னோட அட்ரஸ் அனுப்புறேன்.அதே மாதிரி, என் அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்புறீங்களா?

- போட்டு வாங்குவோர் சங்கம்

சிக்குன் குனியா

சிக்குன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

- சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே யோசிப்போர் சங்கம்

கல்லூரிக் குறள்

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கும் கருவி அரியர்

அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்பவர்

அரியர்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
வாக்-இன் சென்றே சாவார்

- படிப்பவரை கண்டால் வயிரெறிபவர் சங்கம்

பாஸ்ஜி

ரிசல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா லீவு நாளு நரகமாயிரும்.. சந்தோசம்தாங்க முக்கியம்

- பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்

சங்கத்துல உட்கார்ந்து இதையெல்லாம் கவனிச்சவர், வேல்ராஜ்

Tuesday, August 07, 2007

நான் கடவுளுக்காக நிஜமாவே பிச்சை எடுத்த நடிகை

நான் கடவுள் படத்துல நடிக்கிற நடிகை, படத்துல பிச்சைக்காரியா நடிக்கனும்ங்கிறதுக்காக அந்த பொண்ணை பிச்சைக்காரி மாதிரி வேசம் போட்டு பெரியகுளம் தெருவுல ஒரு நாள் முழுக்க அலையவிட்டாராம் டைரக்டர் பாலா.. அந்த பொண்ணும் ஒரு நாள் முழுக்க பிச்சைக்காரி மாதிரி சுத்தி வந்ததாம்.. இப்படி சுத்தி வந்ததுல அந்த நடிகையை யாருக்குமே அடையாளம் தெரியலையாம்.. அந்த நடிகை வேற யாருமில்லை.. தூத்துக்குடி படத்துல கருவாப்பையான்னு பாடி ஆடிய நடிகை கார்த்திகா தான்.. சும்மா பார்த்தலே அந்த நடிகையை யாருக்கும் அடையாளம் தெரியாது.. டைரக்டர் பாலா அவர்களே, இதென்ன கொடுமை? பிதாமகன்ல விக்ரம் கழுத்தை கடிப்பார்ல, அதுக்கு எப்படி டிரெய்னிங் கொடுத்தீங்க பாலா.. என்னமோ போங்க.. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.. (இப்படி பிச்சை எடுத்ததுல வசூலான தொகை 47.50)

Monday, August 06, 2007

எல்லாம் சோம்பேறித் தனம்

காலைல கண்ணை முழிச்சாலே மடிக்கணினில ஒரு ஆங்கில படத்துல தான் முழிக்கிறது இப்போ எல்லாம். இங்க வந்த புதுசுல மாசத்துக்கு ஒரு படம்னு இருந்தது.. இடைல அது கூட இல்லாம இருந்தது.. இப்போ நாளைக்கு ஒண்ணு.. வரிசையா இந்தூரு நூலகத்துல முன்பதிவு செய்து எல்லாத்தையும் வாங்கி வச்சு வரிசை கட்டி படம் பாக்குறது. இது இல்லாம சின்சினாட்டிக்கு அருண் கூட போனப்ப அருண் நெட்ஃப்லிக்ஸ் பத்தி சொன்னவுடனே அதுலையும் சேர்ந்து தமிழ், ஆங்கிலம்னு விட்ட தொட்ட படத்தை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாசு.. நான் பாத்த படத்தை லிஸ்ட் கொடுத்தாலே வாரம் ஒரு பதிவு போட்ட மாதிரி ஆகிடும் போல அத்தனை படம்.. ஏற்கனவே பார்த்த படம்னாலும் மறுபடியும் பார்க்க ஆரம்பிச்சாசு..

இதோ கடந்த வாரம் பார்த்த படத்தோட பட்டியல்
(அடைப்புகுறிக்குள்ள நம்மளோட ரேட்டிங்)

தியேட்டரில் பார்த்தது

டிஸ்டர்பியா (7/10)
ஃபென்டாஸ்டிக் ஃபோர் (5.5/10)
ஷ்ரெக் மூன்று (7.2/10)
டிரான்ஃபார்மர் (6.8/10)
ஹாரி பார்ட்டர் (6.5/10)

டிவிடியில் பார்த்தது

மிஷன் இம்பாஸிபிள் 1
லார்ட் ஆப் தி ரிங்ஸ் - முதல் பாகம்
ஆலீஸ் இன் தி வொன்டர்வேர்ல்ட்
சிக்கன் லிட்டில்
போன் பூத்
கார்ஸ்

இது இல்லாம பிரண்ட்ஸ் நாடகத்தோட ஒன்பதாம் பாக டிவிடியில் சில எபிசோடுகள்.. இப்படி பொழப்பு போகுது நமக்கு.. நண்பர்கள் காறித் துப்பாத கதை தான். என்னடா நொய் நொய்னு முதல்ல எல்லாம் போன் பண்ணுவ.. இப்போ பண்றதில்லியேன்னு.. ஏற்கனவே சொன்னது மாதிரி, நாம மதுரையில இளநிலை படிச்சுகிட்டு இருந்தப்போ கிட்டதட்ட மாசத்துக்கு முப்பது படம் தியேட்டர்லயே பார்த்ததுண்டு.. இப்போ டிவிடியில் பார்த்ததை எல்லாம் சேர்த்தா அந்த நம்பரை தாண்டிடுவேன் போல..

நம்ம நண்பர் மணி தனது திருமணத்திற்காக இந்தியா கிளம்பிட்டார்.. அவரை பிரிய மனசில்லாம அருண் எழுதுன பாட்டை படிச்சா, எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது.. அருண், பட்டையை கிளப்பிட்டேல.. மணி, வாழ்துக்கள் பா

போன தடவை பில்டப் கொடுத்து அப்படி எழுதப்போறேன் இப்படி எழுதப்போறேன்னு பதிவு போட்ட பிறகு ஒண்ணும் எழுத முடியல.. இந்த தடவை நோ பில்டப்..பார்ப்போம் எழுத முடியுதான்னு.. இப்போதைக்கு இந்த பதிவு மூலமா உங்க எல்லோருக்கும் ஒரு வணக்கம் போட்டுக்குறேன் மக்களே.