Friday, September 01, 2006

கள்ளச்சாராய கதைகள் 1

ரெண்டு வருசதுக்கு முன்னாடி எங்க ஊர்ல எல்லோருடைய கையிலும் பணம் புரளும்.. எல்லா கடையிலும் வியாபாரம் நல்லா நடக்கும்.. நிறைய லாபம் கொழிக்கும். வருஷதுக்கு நாலு அஞ்சு திருவிழா நடக்கும்.. மூன்று ஜல்லிக்கட்டு நடத்துவாங்க.. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் ஒடிப் போய் நடக்கும் கல்யாணங்கள் கஷ்டம் இல்லாம நடக்கும்.. ஊருக்கு வெளில மதுரை ரோட்டுல இருக்கிற தியேட்டருல படம் பாக்க மக்கள் கூட்டம் கூட்டமா போவாங்க.. ஊரே ஒரு மாதிரி சந்தோசமா இருக்கும்.. சாகப்போறோம்னு தெரிஞ்சா கூட கோழிகளெல்லாம் சிறகடித்து பறந்து வாழ்ந்தன.. ஆடுகள் எல்லாம் கூட்டம் கூட்டமாய் குதித்தி கும்மாளமிட்டன.. சூரியன் கூட எங்க ஊருகு மேல வர்றப்போ ரொம்ப குளிர்ச்சியா இருக்கும்.. மொத்ததில் மக்கள் எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க..

இப்படித்தான் வெளியில் இருந்து பாக்குறப்போ ஒவ்வொருத்தருக்கும் தெரிந்தது.. ஏன்னா பணம் இருந்தா எல்லாம் இன்பமயம்னு மக்கள் எண்ணம் இருந்த சமயம். இப்படிபட்ட ஒரு திரிசங்கு சொர்க்கத்தில் மக்கள், வாழ்ந்ததெல்லாம், கள்ளசாராயம் கொடி கட்டி பறந்த காலம். எங்க ஊர் கள்ளசாராயம் நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரத்து பகுதிலிருந்து குடிமகன்களை கூட அழைத்துவந்தன, ருசி பாக்க.. பஸ்சுல ஏறினா, பின்பகுதி முழுவதும், குடிமகன்களுக்கு என்று இடஒதுக்கீடு எல்லாம் இருந்தது அப்போ.. இந்த சகதியில் விழாத மக்கள் கூட இதைப் பத்தி எல்லாம் கவலை படமாட்டர்கள்.. நமக்கென்ன என்று ஒரு எண்ணம்.. மேலும், அடுத்த ஊர் குடிமகன்கள் பல நேரம் எங்க ஊர் விதிகளின் ஓரத்தில் மப்பில் விழுந்து தூங்கியும் விடுவர்.. மாத சம்பளம் வங்குவோரால், முதல் வாரம் முழுவதும், வார சம்பளம் வங்குவோரால் எல்லா வாரமும், தினக் கூலிகளால், பணமும், மக்களின் எண்ணிக்கையும் ஊரில் நிறைய இருக்கும்.. எங்க ஊர் கள்ளச்சாராயம் விற்பவர் மற்றும் அந்த சரக்கை காய்ச்சுவோர் வீடுகளில் புது புது சாமான்கள் வந்து இறங்கும். பத்து வருடங்களுக்கு முன்னால் எங்க ஊருல டிவி அவர்கள் வீடுகளில் மட்டும் தான் இருக்கும்..

நான் அப்போ எம்சிஏ, மதுரை தியாகராஜா பொறியியற் கல்லூரில படிச்சுகிட்டு இருந்த சமயம். தினமும் கல்லூரிக்கு வீட்டிலிருந்து போய் வந்த நேரம்.. வீட்டிலிருந்து வண்டியை எடுத்து, சின்னாளபட்டி பிரிவிலிருந்த ஒரு இடத்துல நிறுத்திவிட்டு, பஸ் பிடிச்சு கொடைரோடு போய், பெங்களூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சு, மதுரை போய், அங்க இருந்து மறுபடியும் பஸ் பிடிச்சு கல்லூரி போவேன்.. ஒரு நீண்ட பயணமாய் இருக்கும் அது.. அப்போ எங்க ஊருல பயங்கர போலீஸ் ரெய்டு நடதுகிட்டு இருந்த சமயம்.. கிட்டதட்ட் ஒரு அறுபது என்பது திருட்டு வண்டிகளை எங்க ஊர்ல பிடிச்சாங்க.. நான் சின்னாளபட்டி பிரிவிலிருந்து வண்டியை எடுத்து எங்க ஊருக்கு பக்கத்துல வந்தப்போ, ரெண்டு போலீஸ்காரங்க என் வண்டியை நிறுத்தினாங்க.. என்கிட்ட லைசென்ஸும் இல்ல..வண்டிக்கு ஆர்சி புத்தகமும் இல்லை.. போட்டு காச்சப் போறாங்கன்னு ஒரு பயம் மனசுக்குள்ள.. அந்த வயத்துல ஒரு பய உருண்டை உருண்டது.. என்ன நடக்கபோகுதோ..

ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு..
நியுயார்க் டூருக்கு பிறகு...

9 பின்னூட்டங்கள்:

said...

adraa sakkai adraa sakkai...enna karthik kadhai kalathula pugunthuteenga...suspense vera vachi thodarum potuteenga.....good one..keep going :)

said...

போட்டு தாக்குங்க...எண்ஜாய் NY trip...வந்து சீக்கிரம் மீதிய சொல்லுங்க....ஆமா எந்த ஊரு உங்களுக்கு :-)

said...

//சாகப்போறோம்னு தெரிஞ்சா கூட கோழிகளெல்லாம் சிறகடித்து பறந்து வாழ்ந்தன.. //
superrr karthik, story writing flow romba nalla irukku. cheran padathu scenary maathiri oru kaatchi kan munnala theriyuthu.
cameravaa apdiyee crane view lenthu zoom pannina superaa irukkum. what say?
waiting for the next part eagerly,

said...

Thanks Bharani.. Aduththa Naalukku enna panrathunnu therila.. athanala kathaiyai split pannitten..

said...

நம்ப ஊருதானே ஆர்சி,லைஸென்சு எதுக்கு. பாக்கெட்டிலே பணம் இருந்தா போறுமே.

said...

super start annain.. kalakunga.. really good! NY trip snaps-um anupunga? enoda mail id irukallaa??

said...

dei kathi... eppada pona berikkaku...che amerikaku??? eppadi iruku ooru??? namma ooru maadire vidayasam illama iruka???? enna periya periya building- periya periya paalama irukka???? ihmmm enjoy.... unnoda phone number-a anupu.... inga irundu pesuradukku free thandoi... mudinja yahoolayum vaa...ennoda id... unakku theriyumla????

anbudan,
manasu...

said...

நன்றி ஷ்யாம்.. ஊர் விவரம் இந்த பதிவில்

said...

நன்றி அம்பி.. chinna vayasula niraiyya paduchuttu ippadi ellam ezhuthanumnu ninachchathu..