Tuesday, January 23, 2007

போதும் நிறுத்திக்குவோம் வைகைபுயல் வடிவேலு

இந்த வார விடுமுறையில் போக்கிரி பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. படம் எப்படி இருந்ததுங்கிறதை விட முக்கியமான விஷயம் படத்துல. படத்தின் நகைச்சுவை காட்சிகள். வடிவேலுவின் நகைச்சுவைகள் இப்போ எல்லாம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சுடுச்சு.

வின்னரில் கைப்புள்ளையாய் வந்தபோது கைதட்டி, சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வர பார்த்து பார்த்து ரசித்ததுண்டு. இப்போதும் இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை எங்கே கண்டாலும் சலிக்காமல் பார்ப்பதுண்டு. ஆனால் இந்த படம் வந்து கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆயிடுச்சு. இன்னமும் இவர் விதவிதமாக அடிவாங்குவது வாத்தியார், கிரி, தலைநகரம் போன்ற சில படங்களில் ரசிக்க வைப்பதாக இருந்தாலும், இப்படியான ஒரு வித்தையை தொடர்ந்து பார்த்து வந்தால் ஒரு நேரத்தில் சலித்துவிடும். அடச்சே.. என்னப்பா ஒரே மாதிரி இருக்கு என்று மனசு புலம்பித் தள்ளும்.

கவுண்டமணி-செந்தில் காமெடிகளும் இப்படித் தான், ஆரம்பத்தில், உதயகீதம், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களில் ஆரம்பித்து கரகாட்டக்காரன், சின்னவர் படங்கள் வரை தொடர்ந்தாலும், ஒரு நேரத்தில் ரசிகர்களுக்கு களைத்து போனது. அதுவும் கவுண்டமணி, கார்த்திக், சத்யராஜ் படங்களில் கதாநாயகனின் இணையாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து செந்திலுக்கு வேலை இல்லாமல் போனது. அந்த இடத்தை மெல்ல வடிவேலுவும் விவேக்கும் ஆக்கிரமித்துகொண்டனர். முந்தையோருக்கும் வேற வழியில்லாமல் போனது.

இப்போது வடிவேலுவும் மெல்ல கதாநாயகனாக இம்சை அரசன் படத்தில் வெற்றி பெற்று, இப்போது இந்திரலோகத்தில் நான் அழகப்பன் படத்திலும் கதாநாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. மெல்ல அவருக்குள் நாயகன் வேடம் என்னும் வேதாளம் முருங்கை மரம் ஆரம்பித்துவிட்டதோ தெரியவில்லை. விவேக்கும் 2004-இல் விட்ட இடத்தை இன்னமும் பிடிக்க முடியவில்லை. போன வருடம் பொங்கலுக்கு வந்த மூன்று படங்களில் (ஆதி, பரமசிவன், சரவணா) நடித்தும், சொல்லிகொள்ளும்படியாக இல்லை. அதனால் வடிவேலுவை எதிர்ப்பதற்கு கஞ்சா கருப்பு, முத்துகாளை போன்றவர்கள் மட்டுமே முயன்றனர். அதுவும் அவர்களால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. புதிதாக வந்த தாமிரபரணி படத்தை பார்த்த பிறகு, வடிவேலுவின் ரிபீட் காமடிகளே மேல் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

மதுர அண்ணாச்சி வடிவேலு அவர்களே, கொஞ்சம் உங்கள் காமெடி ஸ்டைலை மாற்றுங்கள். நாங்கள் உங்களின் மதுரை வட்டார பேச்சுகளையும், உங்கள் சட்சட்டென மாறும் பாடி லேங்குவேஜையும் பெரிதும் ரசிக்கிறோம். ஆனால் இது அப்படியே திடர்ந்தால் சிறிது காலத்தைல் எங்களுக்கு புதிதாக, புதிய ரசிக்கக்கூடிய சரக்குடன் வருபவர்களை கவனிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒவ்வொரு இடமாக நீங்கள் அடி வாங்குபவதில் இருந்து உங்களின் எல்லாவிதமான அடிவாங்கும் வகைகளையும் பார்த்து ரசித்துவிட்டோம். கொஞ்சம் புதியதாக ஏதாவது செய்யுங்கள். நாங்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறோம் வடிவேலு..

உங்களுக்கு ரசிகர்கள் வைகைப்புயல் என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். அதற்காக இப்படி சீக்கிரம் கற்பனா சக்தி வறண்டு போக வேண்டாம் உங்களிடம். நல்ல ரசிக்கக்கூடிய வின்னர் பட காமெடியை போன்று வித்தியாசமான காமெடியை முயற்சி செய்யுங்கள். இன்னும் தமிழ் சினிமாவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வைகைபுயல் வடிவேலுவே.

9 பின்னூட்டங்கள்:

Arunkumar said...

ippo vadivelukku potiye illenu thaan sollanum. adi vaangura style bore-na vivek style innum bore.. ippo varra ella padathulayum vivek double meaning vera.. but vadivelu kitta irundhu naanum pudusa edaavadhu edir paakuren. (double meaning jokes thavira)

Anonymous said...

After watching Vadivelu in Tamil pokiri, I felt the Ali/Brammanandham/Venu group's begger comedy is better.

Anonymous said...

Karthik neenga sonnathu "correctungaiyya correctu " ;)

Syam said...

சரியா சொன்னீங்க தலீவரே...போக்கிரி சினிமா விமர்சனம் பார்த்திட்டு இதேதான் நானும் நினைச்சேன் :-)

மு.கார்த்திகேயன் said...

//but vadivelu kitta irundhu naanum pudusa edaavadhu edir paakuren. (double meaning jokes thavira)
//

athe athe arun

மு.கார்த்திகேயன் said...

/After watching Vadivelu in Tamil pokiri, I felt the Ali/Brammanandham/Venu group's begger comedy is better.

//

Anon, Absolutely correct

மு.கார்த்திகேயன் said...

//Karthik neenga sonnathu "correctungaiyya correctu //

:-)

மு.கார்த்திகேயன் said...
This comment has been removed by a blog administrator.
மு.கார்த்திகேயன் said...

//சரியா சொன்னீங்க தலீவரே...போக்கிரி சினிமா விமர்சனம் பார்த்திட்டு இதேதான் நானும் நினைச்சேன்//

நான் படம் பார்த்துட்டு கொடுமைன்னு நினச்சேன் நாட்டாமை