Thursday, February 08, 2007

நடுங்கியபடி நான், நாணியபடி அவள் - காதலர் தின ஸ்பெஷல் 1

மற்றவர் முன்
கபடியாடும் எனது
உதடுகள்
உந்தன் முன்னே
பேசப் பழகும் குழந்தை..

நேர் பார்வையில்
நோக்கியே
உலகம் பார்க்க
பழகிய நான்
உன்னைக் கண்டதும்
பூமி பார்த்து
பள்ளம் பறிக்கிறேன்..

ஆற்றில் மீன் பிடித்து
ஆட்டம் போட்ட நான்
உன் கயல்விழிகளில்
சிறை பட்டு
நீந்த மறந்தேன்..

ஆயிரம் பேர் கொண்ட
கூட்டத்தோடு
குலாவிக் கிடந்த நான்
உன் கூந்தல் காடுகளில்
கூடு கட்டுகிறேன்..

இப்படி நிறம்
கொண்ட ஆப்பிளை
எந்த கடையிலும்
பார்த்ததில்லை..
கடிக்கச் சொல்லும்
உன் சிவந்த
கன்னம் மட்டுமே
எனக்குத் தெரியும்..

என்னை
கடந்து போன போது
நீ
நடந்து சென்ற
உன் ஒவ்வொரு
பாதச் சுவடுகளிலும்
மறுபடியும்
நடந்து பார்க்கிறேன்..
யாரெங்கே
ரோஜாக்களை
மலர விட்டது..

இப்படியெல்லாம்
தமிழின் முதுகேறி
கவிதை என்று
பல
கிறுக்கி வைத்திருக்கிறேன்

இந்த
காதலர் தினத்திலாவது
காதல் குதிரையேற
காதலி
கிடைப்பார்களா..

நடுங்கியபடியே
நான் கொடுக்க
நாணியபடியே
இந்த கவிதையை
வாங்க..

இருந்து
விட்டு போகட்டும்
என்று
இப்போது தான்
பிள்ளையாரை
சுற்றி வருகிறேன்..

காதலிக்க
ஒரு தேவதை
அனுப்பச் சொல்லி
காதில்
சொல்லி வந்திருக்கிறேன்

கிடைத்தாளா
என்று
நாளை
சொல்கிறேன்..

அப்படி
அவள் கிடைத்தாலும்
அவளின் முதல்
பார்வையிலே
என்
இதயமும் ஈரலும்
இடம் மாறியதா
என்று
இங்கு
எழுதியும் வைக்கிறேன்..

காதலர் தின ஸ்பெசல் பதிவுகள் எல்லாம் மொத்தமாய் ஒரு கதையாகச் சொல்லப் போகிறேன்.. இது தன் நிழல் அமர்ந்த இடத்தில் ஒரு நிஜம் அமராதா என்று ஏங்கும் ஒருவனின் இதய இசைக் கோலத்தின் முதல் புள்ளியே..

[நாளை மறுபடியும்]

87 பின்னூட்டங்கள்:

said...

hayyaa pharsshhhttt

said...

அட ஆமா மாமு.. இந்தாப் பிடிங்க பாரசீக ரோஜா, முதலிடத்துக்கு பரிசா.. காதலர் தினத்திற்காக பயன்படுத்துங்கள் ;-)

said...

//மற்றவர் முன்
கபடியாடும் எனது
உதடுகள்
உந்தன் முன்னே
பேசப் பழகும் குழந்தை..//

aarambamae semma punch

//ஆற்றில் மீன் பிடித்து
ஆட்டம் போட்ட நான்
உன் கயல்விழிகளில்
சிறை பட்டு
நீந்த மறந்தேன்..//

super

//இந்த
காதலர் தினத்திலாவது
காதல் குதிரையேற
காதலி
கிடைப்பார்களா..//

maamu...paathu yaerunga maamu..sila kudharai, beach kudharai maari
thaalida poadhu :-)

//இது தன் நிழல் அமர்ந்த இடத்தில் ஒரு நிஜம் அமராதா என்று ஏங்கும் ஒருவனின் இதய இசைக் கோலத்தின் முதல் புள்ளியே//

semma gumm lines....kaadhal special aarambamae kalakkals....poattu thaakunga...

said...

kabaddiya? aadum aadum :)

said...

//காதல் குதிரையேற காதலி கிடைப்பார்களா//

எத்தன வேணும்ங்கறீங்க மு.கா? முதல் அமைச்சர்னு இப்படி எல்லாம் கேக்க கூடாது! :)

//உன் கயல்விழிகளில்
சிறை பட்டு//

கண்டுபிடிச்சுட்டேன்! உங்க ஆட்கள்ல ஒருத்தங்க பேரு கயல்விழி! சரியா :))

said...

அப்புறம் ஒரு டவுட்டு. சிறைப் பட்டா சிறை பட்டா?! உங்களுக்கு இந்த வகை இலக்கணம் எல்லாம் தெரியுமா?? :-/

Anonymous said...

Arumai ;)

said...

//கிடைத்தாளா
என்று
நாளை
சொல்கிறேன்..
//

Waiting for the good news Thalaivare!! ;-)

Anonymous said...

adraa! adraaa! eley karthi! enna matter..?
onnum illa! onnum illa!nu pathungara. hhhhhhmm. let me see. :p

said...

kavidai...kavidai...Maams...engayo poiteenga....aarambhame alambala iruku :)

said...

//உந்தன் முன்னே
பேசப் பழகும் குழந்தை..//...eppadi eppdi idhellam...

//என்னை
கடந்து போன போது
நீ
நடந்து சென்ற
உன் ஒவ்வொரு
பாதச் சுவடுகளிலும்
மறுபடியும்
நடந்து பார்க்கிறேன்..
யாரெங்கே
ரோஜாக்களை
மலர விட்டது//....super Maams..

said...

//கிடைத்தாளா
என்று
நாளை
சொல்கிறேன்..//..idhu enna idaivelaya...ore suspenseappa :)

//அப்படி
அவள் கிடைத்தாலும்
அவளின் முதல்
பார்வையிலே
என்
இதயமும் ஈரலும்
இடம் மாறியதா
என்று
இங்கு
எழுதியும் வைக்கிறேன்///....ezhudunga ezhudunga....padikaradhuku ready-a irukom...

said...

ennaku instant kavidai ellam ezhudha varadhu maams...super post..avlodhaan solla mudiyum :)

said...

Each and every words stand really beautiful:)

Apple colors a- kandipa red/green dhan eruku. Kadalku endha color o...

said...

@porkodi...//கண்டுபிடிச்சுட்டேன்! உங்க ஆட்கள்ல ஒருத்தங்க பேரு கயல்விழி//....LOL :)

pointers padikaradha vitut idhu enna chinna pullathanama :)

said...

அட்ரா சக்கை....
எங்க பாத்தாலும் காதல் மயம்...
சூப்பரா கலக்குறீங்க...

said...

கட்டுரையையே கவிதையா எழுதுற ஆள் நீங்க.. கவிதைனா கேட்கவா வேணும்.. சும்ம ஆயிரம் வாளாவா ஆரம்பிச்சிருக்கீங்க...

தொடரட்டும் உங்கள் திருப்பணி....

Anonymous said...

Really Super. I like it very much.

said...

அட அடா கவித கவித...
சூப்பரு..

said...

கிளம்பிவிட்டான் மன்மதன்

வில் ஏந்தி புறப்பட்டுவிட்டான்

மயக்கும் கண்களோடு மயங்கி போக
வழி நெடுகும் பெண்களாம் ..
வழிகாட்டி பிள்ளையார் சொல்லிவிட்டு போனார் என் வேண்டுதலில்..

இதயமோ ஈரலோ மாறிவிடட்டும் சீக்கிரம் ,

உன் முன் நெற்றி
காத்து கொண்டு இருக்கிறது அவள் இதழ் பட...


மன்மத கார்த்திகேயா
சென்று வா, வென்று வா

காதலாய் கசிந்துருகி உலகம் அறி...

said...

//
உந்தன் முன்னே
பேசப் பழகும் குழந்தை...
//
ஆரம்பமே அசத்தல்

//
மறுபடியும்
நடந்து பார்க்கிறேன்..
யாரெங்கே
ரோஜாக்களை
மலர விட்டது..
//

என்னமா சிந்திக்கிறீங்க மாம்ஸ் :)

said...

@பொற்கொடி.


//சிறைப் பட்டா/சிறை பட்டா?//

சிறை பட்டு தான் சரி என்று நினைக்கிறேன்..

ஆமா நீங்க பாயிண்டர்ஸ் படிக்கல..?

said...

//
இப்போது தான்
பிள்ளையாரை
சுற்றி வருகிறேன்..
//

பிள்ளையாரா? நல்ல சாமிய சுத்தினீங்க போங்க.. அவுங்க அண்ணன சுத்துனீங்கனா ஒத்தையா இல்லாம ரெட்டையா கிடைக்கும்ல...

நீங்க வேற பொற்கொடி சொன்ன மாதிரி "காதலி கிடைப்பார்களா" னு ஏங்குறீங்க !!!

said...

//
கண்டுபிடிச்சுட்டேன்! உங்க ஆட்கள்ல ஒருத்தங்க பேரு கயல்விழி! சரியா :))
//

LOL அட் "பாய்ண்டர் பொற்கொடி"ஸ் கமெண்ட் :)

said...

//semma gumm lines....kaadhal special aarambamae kalakkals....poattu thaakunga...//

மாமு, இப்போ தான் பிள்ளையாரை வேண்டி இந்த காதல் தொடரை ஆரம்பிச்சிருக்கேன்..
உங்க உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி மாமு

said...

//kabaddiya? aadum aadum :) //

ஹிஹி..

said...

//எத்தன வேணும்ங்கறீங்க மு.கா? முதல் அமைச்சர்னு இப்படி எல்லாம் கேக்க கூடாது! :)//
அய்யோ பொற்கொட்.. இது எனக்காக இல்லை..

//கண்டுபிடிச்சுட்டேன்! உங்க ஆட்கள்ல ஒருத்தங்க பேரு கயல்விழி! சரியா :)) //
தோடா.. பொற்கொடி..பாயிண்டர்ஸ் படிக்கச் சொன்னா இப்படியா பாயின்ட் போட்டு பேசுறது..

said...

//அப்புறம் ஒரு டவுட்டு. சிறைப் பட்டா சிறை பட்டா?! உங்களுக்கு இந்த வகை இலக்கணம் எல்லாம் தெரியுமா?? :-/ //


சிறைபட்டு தான் பொற்கொடி.. சிறைப் பட்டு என்றால் பட்டு (புடவையில் இருப்பது) போன்ற சிறை என்று அர்த்தமாகிப் போகும். சில சமயம் இந்த மாதிரி சந்திகள் அர்த்ததை மாற்றிவிடும்

said...

//Arumai ;) //

நன்றி ஹனிஃப்

said...

/Waiting for the good news Thalaivare!! /

கட்டாயம் நல்ல சேதி கிடைக்கும் மை பிரண்ட்... காதலர் தினம் வருகிறதல்லவா..

said...

//adraa! adraaa! eley karthi! enna matter..?
onnum illa! onnum illa!nu pathungara. hhhhhhmm. let me see. :p //

அம்பி, மேட்டர் எல்லாம் ஒண்ணும் இல்லபா.. இது பக்கத்து இருக்கையில் ஒருவனின் இதயம் துடித்ததில் கேட்ட கதைகள் தான்..

உன் அளவுக்கு வருமா.. இந்த விஷயத்தில் நீ வானத்து சூரியன்.. நான் எட்டிவிடும் தூரத்தில் ஒளிரும் விளக்கு..

said...

//kavidai...kavidai...Maams...engayo poiteenga....aarambhame alambala iruku :) //

மாப்ள.. உன்னை விடவா..

said...

//ezhudunga ezhudunga....padikaradhuku ready-a irukom... //

மாப்ள.. நீங்க எல்லாம் இருக்க நம்பிக்கைல தான் ஏதேதோ கிறுக்குறேன்

said...

// பிள்ளையாரா? நல்ல சாமிய சுத்தினீங்க போங்க.. அவுங்க அண்ணன சுத்துனீங்கனா ஒத்தையா இல்லாம ரெட்டையா கிடைக்கும்ல... //

இதுதான் இன்னைக்கு கலக்கல் பின்னூட்டம்.. :-)

said...

//ennaku instant kavidai ellam ezhudha varadhu maams...super post..avlodhaan solla mudiyum /

மாப்ள.. ஆண்டவன் கொடுத்த வரம்னு நினைக்கிறேன்.. அப்புறம் நீங்க எல்லாம் கொடுத்த உற்சாகத்துல இன்னும் வெட்டப்பட்டது இந்த கிணறு.. இப்போ ஊறுகிறது கவிதை

said...

//கபடியாடும் எனது
உதடுகள்
உந்தன் முன்னே
பேசப் பழகும் குழந்தை//
super super super...nijama eppadi solradhney theriyalanga...

nan ellam ezhudharadhu, i mean kirukaradhu verum oru time pass madiri, adhu chumma vilayattu thanama irukkum, but ur words r so powerfulll...

said...

vairathirku meendum merugetra, urasina vaarthaigal....asathal postunga..

said...

//என்னை
கடந்து போன போது
நீ
நடந்து சென்ற
உன் ஒவ்வொரு
பாதச் சுவடுகளிலும்
மறுபடியும்
நடந்து பார்க்கிறேன்..
யாரெங்கே
ரோஜாக்களை
மலர விட்டது..//
ultimate...idhellam eppadi varudhu ungaluku mattum...

kaadhal varadhavargalukku kooda unga kavidhaigal kaadhalikum thoondum vidhathil amaiyudhunga karthik...

said...

//காதல் குதிரையேற
காதலி
கிடைப்பார்களா..//
neenga manasula ninaikaradhu unga kooraiya pichitu tharanumnu andha kadavul kitta kettukaren..i mean unga manakooraiyai than solren, ponnum, pennum....

said...

/Each and every words stand really beautiful:)

Apple colors a- kandipa red/green dhan eruku. Kadalku endha color o...//

நன்றி ப்ரியா..

காதலி கலரே ஆப்பிள் கலர், ப்ரியா :-)

said...

/pointers padikaradha vitut idhu enna chinna pullathanama //

பொற்கொடி, ரங்கமணி கிட்ட போட்டுகொடுப்போம்ல

said...

//அட்ரா சக்கை....
எங்க பாத்தாலும் காதல் மயம்...
சூப்பரா கலக்குறீங்க... //


பிப்ரவரி மாதம் எல்லோருக்கும் காதல் சட்டை உடுத்துகிறது, ஜி

said...

/கட்டுரையையே கவிதையா எழுதுற ஆள் நீங்க.. கவிதைனா கேட்கவா வேணும்.. சும்ம ஆயிரம் வாளாவா ஆரம்பிச்சிருக்கீங்க...
//

நான் மனதுக்குள் தான் சிரிக்கிறேன்.. அது சந்திரன் வரை கேட்கிறது..
எல்லாம் இந்த கற்பனைகள் செய்யும் அட்டகாசங்கள் ஜி

said...

//Really Super. I like it very much. //

நன்றி அனான்

said...

//மன்மத கார்த்திகேயா
சென்று வா, வென்று வா

காதலாய் கசிந்துருகி உலகம் அறி... /


மணி,

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி
காலணி அடி வாங்காமல் நான் இருந்தால் சரி..

நல்லா இருக்கும் எனக்காய் எழுதிய கவிதை..

அடுத்த காலென்டர் கவிதை எப்போ

said...

//என்னமா சிந்திக்கிறீங்க மாம்ஸ்//

ஹிஹி, அருண், எல்லாமே உங்களை போல காதலிப்பவர்கள் தந்த தெம்பு தான் :-)

அப்பாடா, என்னால முடிஞ்சதை கொளுத்தி போட்டு இருக்கேன்

said...

/சிறை பட்டு தான் சரி என்று நினைக்கிறேன்..

ஆமா நீங்க பாயிண்டர்ஸ் படிக்கல..? //

அட.. பொற்கொடி பாயின்டர்ஸ் படிக்கிறேன்னு படிக்காதது ஊருக்கே தெரிஞ்சிருக்குப்பா..

ரங்கமணிக்கு மட்டும் தெரியாது போல இருக்கே..

said...

/பிள்ளையாரா? நல்ல சாமிய சுத்தினீங்க போங்க.. அவுங்க அண்ணன சுத்துனீங்கனா ஒத்தையா இல்லாம ரெட்டையா கிடைக்கும்ல...
//

அருண்.. சொன்ன மாதிரி உனக்கு காதல் பித்து தலைகேறிடுச்சு போல..

பிள்ளையாருக்கு முருகன் தம்பிப்பா தம்பி

said...

//LOL அட் "பாய்ண்டர் பொற்கொடி"ஸ் கமெண்ட் //

அட.. பொற்கொடி பொண்ணு பாயின்டர்ஸ் படிக்குதோ இல்லியோ..பேரை மாத்திட்டாங்கப்பா பேரை மாத்திட்டாங்க

said...

//super super super...nijama eppadi solradhney theriyalanga...

nan ellam ezhudharadhu, i mean kirukaradhu verum oru time pass madiri, adhu chumma vilayattu thanama irukkum, but ur words r so powerfulll... //

நன்றி ரம்யா.. எல்லாம் ஆண்டவன் அருள்

said...

/kaadhal varadhavargalukku kooda unga kavidhaigal kaadhalikum thoondum vidhathil amaiyudhunga karthik... //

அப்படியா.. அப்படி யாருக்காவது வந்தா சொல்லுங்கப்பா.. ஹிஹிஹி..

இன்னொரு கதையா போடலாம் அதையும்

said...

//neenga manasula ninaikaradhu unga kooraiya pichitu tharanumnu andha kadavul kitta kettukaren..i mean unga manakooraiyai than solren, ponnum, pennum.... //

இதுக்குதான்யா இப்படி ஒரு தோழி வேணும்கிறது.. நமக்காக வேண்டிக்க.. :-)

said...

அவசரத்துல ரிலேஷன மாத்திட்டேன் தலிவா... மன்னிச்சிருங்க

said...

ரொம்ப நல்லாயிருக்கு கார்த்தி.

உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோவ பார்த்தா கவிதையோட தலைப்பை "நடுங்கியபடி அவள்"னு மாத்தனும் போல இருக்கு :))

நல்லா ரொமான்டிக்கா ஒரு படத்தை போடுங்க..

said...

MK,கவிதை அருமை அருமை.
kavidhai analysis pannara alavukku enakku theriyadhu.I liked it very much.
ஆனால் பக்கத்தில் இப்படி காதலி பயப்படும் அளவுக்கு ஒரு experiment photo எல்லாம் போட்டா எப்படி அவ தைரியமா காதலைச் சொல்வது?கண்டிப்பா கூடிய விரைவில் காதலியும் வருவாள் என வாழ்த்துகிறோம். தயவு செய்து படத்தை மாற்றுங்கள்,please MK.

said...

கார்த்தி,

கவிதை சூப்பர். முயற்சி திருவினையாகட்டும்.

Cheers
SLN

said...

/அவசரத்துல ரிலேஷன மாத்திட்டேன் தலிவா... மன்னிச்சிருங்க //

அருண், இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்புபா..

பாசத்தோடு எப்படி கூப்பிட்டாலும் சரி தானே :-)

said...

//உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோவ பார்த்தா கவிதையோட தலைப்பை "நடுங்கியபடி அவள்"னு மாத்தனும் போல இருக்கு :))

நல்லா ரொமான்டிக்கா ஒரு படத்தை போடுங்க..//


மணிகண்டன், கவிதைப்பா.. என்னமோ நானே நேர்ல போய் ஏதோ ஒரு பொண்ணுகிட்ட சொல்ற மாதிரி சொல்றீங்களேப்பா..

இருந்தாலும் நண்பன் உனக்காக படத்தை மாத்திட்டேன்..

said...

//ஆனால் பக்கத்தில் இப்படி காதலி பயப்படும் அளவுக்கு ஒரு experiment photo எல்லாம் போட்டா எப்படி அவ தைரியமா காதலைச் சொல்வது?கண்டிப்பா கூடிய விரைவில் காதலியும் வருவாள் என வாழ்த்துகிறோம். தயவு செய்து படத்தை மாற்றுங்கள்,please MK.
//


SKM, நான் வெறும் கவிதை மட்டுமே எழுதினேன்.. காதலி தேடவில்லை.. இருந்தாலும் பெரியவங்க நீங்க சொல்றீங்கன்னு படத்தை இதோ இப்பவே மாத்திட்டேன்

said...

/கவிதை சூப்பர். முயற்சி திருவினையாகட்டும்.
//

SLN, நான் முயற்சி எல்லாம் பண்ணலைங்க.. இது வெறும் கதை கவிதைங்க..

எல்லோரும் சொன்ன கேளுங்கப்பா.. இது கவிதை தான்.. என்னை அழவிடாதீங்க.. :-)

said...

//இருந்தாலும் நண்பன் உனக்காக படத்தை மாத்திட்டேன்..//

இத இதத்தான் எதிர்பார்த்தேன் :))

said...

அதுக்குள்ள 61 பின்னூட்டமா? உள்ளேன் ஐயா. அடுத்த வாரம் தான் வாசிக்கமுடியும் :(

said...

தலைவா

எல்லாம் அருமை...

\\
கிடைத்தாளா
என்று
நாளை
சொல்கிறேன்..\\

இதுக்கு தான் வெயிட்டிங்...

said...

தலீவரே பிரிச்சு மேயரீங்க....:-)

said...

//கிடைத்தாளா
என்று
நாளை
சொல்கிறேன்..//

ஒரு ஒரு வரியும் சூப்பர்...காத்திருக்கிறோம் :-)

said...

எல்லோரும் வந்து கும்மி அடிச்சிட்டு போய்டாங்களா...நான் தான் லாஸ்ட்டு
:-)

said...

kaarththi கவிதை அசத்தல்! இறுதியில ஒரு bita போட்ட்டு, tension வேற ஏத்திட்டீங்க! சீக்கிரம் சொல்லுங்க்க!

said...

//காதலிக்க
ஒரு தேவதை
அனுப்பச் சொல்லி
காதில்
சொல்லி வந்திருக்கிறேன்//

நீங்க அங்க சொன்னது, எனக்கு இங்க கேட்குது! உங்க காதலிக்கும் கேட்கும்!

said...

////இது தன் நிழல் அமர்ந்த இடத்தில் ஒரு நிஜம் அமராதா என்று ஏங்கும் ஒருவனின் இதய இசைக் கோலத்தின் முதல் புள்ளியே////

வார்த்தைகளில் சரளமா விளையாடறீங்க! சூப்பர்!

said...

//@porkodi...//கண்டுபிடிச்சுட்டேன்! உங்க ஆட்கள்ல ஒருத்தங்க பேரு கயல்விழி//

ROFL! ஆளாளுக்கு தனிதனியா கோஒடு பொடறான்கப்பா! எனக்கு கண்ணு கட்டுது!

said...

கார்த்திகேயன்.உங்க கவிதை காதலர்தினத்தன்று ஒரு சிறப்படையப் போகிறதுஆமாம் விவரங்களுக்கு எனக்கு மடல் செய்யுங்க! மின் முகவரி தெரியவில்லை ஆகவே இங்கு எழுதினேன்
ஷைலஜாs

said...

//இத இதத்தான் எதிர்பார்த்தேன் //

நண்பா, உன் உள்ளம் தொட்டது ரொம்ப சந்தோசம்

said...

//அதுக்குள்ள 61 பின்னூட்டமா? உள்ளேன் ஐயா. அடுத்த வாரம் தான் வாசிக்கமுடியும் //

அரசி, உங்கள் வருகையை குறித்துகொண்டேன்.. ரொம்ப பிசியோ.. அடுத்த வாரம் சந்திப்போம் அரசி :-)

said...

/இதுக்கு தான் வெயிட்டிங்... //

கோபி, உங்களை ரொம்ப நேரம் காக்க வைக்க மாட்டேன்.. வந்துகிட்டே இருக்கு!!!

said...

//கிறுக்கி வைத்ததே
கிறங்க வைக்கின்றனவே
எழுதி வைத்தவை
எவள் உயிரை பறிக்கப் போகிறதோ?:) //

வேதா,
எழுதி வைத்தவை பறிக்கப் போவது
தன் பார்வையில் என் உயிரைப் பறித்தவளின் உயிரை பறிக்கத் தான் :-)

said...

//ஒரு சின்ன டவுட்,) அதென்ன கிடைப்பார்களா என்று பன்மையில்?;)
//

எல்லா பூவையும் தன்னுள்ளே வைத்திருப்பள் பெண் என்பதால், அத்தனை பூக்களும் கிடைக்குமா என்பதை திணை மாற்றி கிடைப்பார்களா என்று சொல்ல முயன்றிருக்கிறேன்..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... எப்படி சமாளிக்கிறேன் பார்த்தீர்களா கொ.ப.செ..

அது என் கவனக் குறைவால் வந்தது.. இருந்தாலும் எழுதியது அப்படியே இருக்கட்டுமே என்று விட்டுவிட்டேன்

said...

//தலைவா தபூ சங்கரின் கவிதைகளை படித்த மாதிரி இருக்கிறது//

கொ.ப.செ.. உங்கள் வார்த்தைகள் என் மனதுக்கு உற்சாக ஊற்றை தட்டி எழுப்பியது.. நன்றிங்க வேதா

said...

//யப்பாடி இப்பவாவது உங்க ப்ரொபைல் படத்தை மாத்தினீங்களே//

ஓ வேதா.. அந்த படம் பல பேரை பயமுறுத்தி இருக்குன்னு நினைக்கிறேன்

said...

//தலீவரே பிரிச்சு மேயரீங்க....:-)//


//ஒரு ஒரு வரியும் சூப்பர்...காத்திருக்கிறோம் :-)//

நன்றி நாட்டாமை..

said...

/எல்லோரும் வந்து கும்மி அடிச்சிட்டு போய்டாங்களா...நான் தான் லாஸ்ட்டு
//

நிறைய ஆணிகள் இருந்ததோ நாட்டாமை

said...

//kaarththi கவிதை அசத்தல்! இறுதியில ஒரு bita போட்ட்டு, tension வேற ஏத்திட்டீங்க! சீக்கிரம் சொல்லுங்க்க//

ட்ரீம்ஸ், நன்றி பா.. இதோ அடுத்த படைப்பு ரெடி ஆகுது

said...

//நீங்க அங்க சொன்னது, எனக்கு இங்க கேட்குது! உங்க காதலிக்கும் கேட்கும்!
//

எங்கே எனக்காக காத்திருக்கிறாளோ.. பார்ப்போம் ட்ரீம்ஸ்.. :-)

said...

//வார்த்தைகளில் சரளமா விளையாடறீங்க! சூப்பர்! //

முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் ட்ரீம்ஸ்.. இப்போ கொஞ்சம் பழகப் பழக தானா வருது.. என்னை வளர்த்தது நண்பர்கள் நீங்கள் தான்

said...

//ROFL! ஆளாளுக்கு தனிதனியா கோஒடு பொடறான்கப்பா! எனக்கு கண்ணு கட்டுது!
//

:-)

said...

kavidhai sooper'nga...

//நேர் பார்வையில்
நோக்கியே
உலகம் பார்க்க
பழகிய நான்
உன்னைக் கண்டதும்
பூமி பார்த்து
பள்ளம் பறிக்கிறேன்..//
chance'ey illa....




//இந்த
காதலர் தினத்திலாவது
காதல் குதிரையேற
காதலி
கிடைப்பார்களா../
nambikai thaan vaazhkai'ey....

//கிடைத்தாளா
என்று
நாளை
சொல்கிறேன்..//
sollunga sollunga., appadi'ey andha பிள்ளையா'r enga irrukaarnu address'aium serthu sollunga...

said...

// appadi'ey andha பிள்ளையா'r enga irrukaarnu address'aium serthu sollunga...
//

hehe.. pillaiyar aththangaraila irukkar gops.. neengalum konjam suththi paarunga

said...

கொஞ்ச நாள் பொறு தலைவா... ;-)