Tuesday, February 13, 2007

காதல் கவிதை கேளுங்கள் ஒலி FM-இல்

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக இன்று இரவு ஈஸ்டர்ன் நேரப்படி இரவு 7:30 மணிக்கும், 12 மணிக்கும், கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒலி FM-இல், பதிவர்களின் கவிதைகள் தேன் குரல் (சும்மா சொல்லக்கூடாது.. இவங்க குரல் இனிமையை.. ஒரு முறை தான் பேசினாங்க.. தேன்கூடு கட்ற அளவு தேன்ங்க காதுல) ஷைலஜாவால் வாசிக்கப்படுகிறது. இவரும் ஒரு பதிவர் தான். பதிவர்கள் அண்ணாகண்ணன் , மதுமிதா, சிலம்பூர்யுகா,ப்ரியன். உதய்குமார், , ரிஷிசேது, மு.கார்த்திகேயன், ஆசாத், சிறில் அலெக்ஸ் போன்றவர்களின் கவிதைகள் வாசிக்கப்படுகிறது. ஆங்.. சரியா கண்டுபிடிச்சுட்டீங்க போல..

ஆமாம். இங்கே காதலர் தின ஸ்பெஷலா முதன் முதலாய் எழுதிய நடுங்கியபடி நான், நாணியபடி அவள் என்ற கவிதை வாசிக்கப்படுகிறது.

இந்த கவிதையை தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கப்போற ஷைலஜாவுக்கும் ஒலி FM குழுவினருக்கும் நன்றி!

அன்றும் இன்றும் என்றும் எனக்கு உற்சாகம் தரும் பானமாய், பின்னூட்டங்களை தந்து ஆதரவளித்து வரும் இனிய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

காதல் கடலில் மூழ்கி முத்தங்கள் எடுக்கும் காதலர்களுக்கும், தேடுதல் வேட்டையில் இருப்பவர்களுக்கும்.. இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

33 பின்னூட்டங்கள்:

said...

திடீர்னு டைம் மாறிடிச்சுன்னு சொல்லி குழப்பிட்டாங்க..

நீங்க சொல்றதுதான் சரியான டைம்னு நினைக்கிறேன்.

said...

நானும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன், அலெக்ஸ்

said...

துவங்கிடுச்சு நேரம் 9EST

8:30 IST

said...

appada 2nd place! :)

said...

illa adhuvum illiya? :(

said...

வாழ்த்துக்கள் தல உங்களுக்கும் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் :)

said...

காத்து இருக்கிறேன். இப்போதுதான் அண்ணா கண்ணனின் கவிதையினை கேட்டேன்..

நண்பா.. வாழ்த்துகள்.

said...

kettukitte commentaren :) shailaja enna then ellam tadavi padikranga! ungluku oru peria thanks, olifm pathi teria paduthinadukku and indhaanga poochendu- radiola ellam vandhutinga!! minsara thurai nammala marandudadinga :)

said...

வாழ்த்துக்கள் கார்த்தி! போன வருசம் என் கவிதை வந்தது ஒலி எஃப் எம்மில் :-) இந்த வருசம் விட்டடிச்சிட்டேன்...

said...

yenga en comment vandhuda?? :-/

said...

wow! kalakkitta po! FM la ellam message anuppa arambichitiya un aaluku? :p

//yenga en comment vandhuda?? //
@kodi, LOL :)
eley, intha kavithai, kathrikai ellam namakku varathu. venaam, asapadathaa. :p

said...

Maams...Kalakal...Kadal kadandhu FM-la ellam unga kavidhai...super...keep rocking :)

said...

Aang..Congrats Maams :)

said...

வாழ்த்துக்கள் தலைவரே!

பிப்ரவரி 14-இலும் ஒரு சாதனை.. :-D

said...

congrats anna.. anga poy innum kalakuringa.kaathalar thina vaalthukkal anbu annanukku!
nan US varumbodhu solgirain, mudinthaal paarkalam.

said...

வாழ்த்துக்கள் கார்த்திக், கலக்குங்க, காதல் ங்கிற தலைப்பிலே நம்பிக்கைக் குழு வச்சிருக்கிற போட்டிக்குக் கூட அனுப்பலாமே உங்க கவிதைகளை?

said...

//appada 2nd place! :)
illa adhuvum illiya?
//

என்னோட பதில் பின்னூட்டத்தை தவிர்த்து, சிறில் அலெக்ஸ் ஒரு ஆள் தான்னும் கணக்கு எடுத்துகொண்டால், பொற்கொடி, நீ தான் இரண்டாவது ஆள்.. ஓகே யா..

said...

//வாழ்த்துக்கள் தல உங்களுக்கும் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் //

நன்றி கிளீவ்லேண்ட் மன்னரே!!!

said...

//காத்து இருக்கிறேன். இப்போதுதான் அண்ணா கண்ணனின் கவிதையினை கேட்டேன்..

நண்பா.. வாழ்த்துகள்.

//

ம்ம்..நன்றி மணி.. இந்நேரம் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்னு நினைக்கிறேன்.எப்படி இருந்தது மணி

said...

//olifm pathi teria paduthinadukku and indhaanga poochendu- radiola ellam vandhutinga!! minsara thurai nammala marandudadinga//

ஓ..நன்றி பொற்கொடி.. எனக்கும் இப்போ தான் இந்த FM பத்தி தெரியவந்தது.. மின்சார துறை உனக்குத் தான் பொற்கொடி!

said...

//வாழ்த்துக்கள் கார்த்தி! போன வருசம் என் கவிதை வந்தது ஒலி எஃப் எம்மில் :-) இந்த வருசம் விட்டடிச்சிட்டேன்... //


நன்றிங்க அரசி.. வாவ்.. நீங்க நமக்கு முன்னாடி அமெரிக்கவுல கொடி நாட்டிட்டீங்க.. கலக்குங்க போங்க

said...

//yenga en comment vandhuda?? :-/ //

வந்ததே பின்னூட்டம் வந்ததே

said...

/wow! kalakkitta po! FM la ellam message anuppa arambichitiya un aaluku? :p//

thoda.. ambi.. eriyira neruppula petrol ooththaathappaa.. unakkenna maharasan, adichchu thool kilappuva

//eley, intha kavithai, kathrikai ellam namakku varathu. venaam, asapadathaa. :p
//
hahaha

said...

//Maams...Kalakal...Kadal kadandhu FM-la ellam unga kavidhai...super...keep rocking //

நன்றிடா மாப்ள..

said...

//வாழ்த்துக்கள் தலைவரே!

பிப்ரவரி 14-இலும் ஒரு சாதனை..//

நன்றி மை பிரண்ட்

said...

/congrats anna.. anga poy innum kalakuringa.kaathalar thina vaalthukkal anbu annanukku!//

thanks deeksh..


//nan US varumbodhu solgirain, mudinthaal paarkalam. //

Wow.. great news.. eppO?

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக், கலக்குங்க, காதல் ங்கிற தலைப்பிலே நம்பிக்கைக் குழு வச்சிருக்கிற போட்டிக்குக் கூட அனுப்பலாமே உங்க கவிதைகளை? //

வாழ்த்துக்கள் மேடம்.. நம்பிக்கைக் குழு.. ரொம்ப நம்பிக்கையா இருக்கே.. அவர்கள் முகவரி?

said...

FM kettuttu commentaren maamu !

kadhalar dhina vaazthukkal !

காதல் கடலில் மூழ்கி முத்தங்கள் எடுக்கும் காதலர்களுக்கும், தேடுதல் வேட்டையில் இருப்பவர்களுக்கும்

neenga enna category, firsta seconda ??

said...

/neenga enna category, firsta seconda //

second thaan maamu :-)

said...

//
தல கலக்கறீங்க வாழ்த்துக்கள்:)
//

நன்றிங்க வேதா..

said...

சரியாப் போச்சு போங்க, நம்பிக்கைக் குழுவின் போட்டியும் விலாசமும் ஒரு பதிவாவே போட்டிருக்கேனே? இதானா நீங்க என்னோட பதிவுகளைப் படிக்கிற லட்சணம்? கவுத்துட்டீங்களே கார்த்திக்? ஒரு தலைவிக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு என்ன செய்யறது? :D

said...

//சரியாப் போச்சு போங்க, நம்பிக்கைக் குழுவின் போட்டியும் விலாசமும் ஒரு பதிவாவே போட்டிருக்கேனே? இதானா நீங்க என்னோட பதிவுகளைப் படிக்கிற லட்சணம்? கவுத்துட்டீங்களே கார்த்திக்? ஒரு தலைவிக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு என்ன செய்யறது? :D //


தொண்டனை மன்னியுங்கள் தலைவியே.. தலைவி நிறைய விஷயங்கள் பற்றி பேசுவதால் தொண்டன் மறந்து போயிருக்க வாய்ப்புன்டு அல்லவ.. பொறுத்தருளுங்கள் தலைவியே!

Anonymous said...

Good for people to know.